ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2016

இன்று LASER கதிரியக்கங்களைக் கருவிற்குள் உபயோகிப்பதால் எப்படிப்பட்ட குழந்தைகள் உருவாகின்றது?

சில பேர் தாயின் கருவில் உருவாகும் சிசுவிற்கு மூன்றாவது மாதத்திற்கு மேல் தான் உயிரே வருகின்றது என்றும், எட்டாவது மாதத்திற்கு மேல் தான் உயிர் வருகின்றது என்றும் அதற்குள் கரு வளர்கின்றது என்று இப்படிப் பிழை கொண்ட நிலைகளில் அர்த்தங்களை அனர்த்தங்களாக்கிக் கொண்டு வருகின்றார்கள்.

ஆனால், இன்று விஞ்ஞான அறிவுப்படி செய்கின்றார்கள். கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு அதனின் உணர்வுகளில் பாய்ச்சப்படும் பொழுது அது துள்ளுவதும் துடிப்பதும் எவ்வாறு இருக்கின்றது என்று பார்க்கின்றார்கள்.

எவ்வாறு?

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஊசியின் (LASER) நிலைகள் கொண்டு நோகச் செய்யப்படும் பொழுது அது எப்படித் துள்ளுகின்றது என்றும் பார்க்கின்றார்கள்.

கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை மாற்றியமைப்பதற்காக விஞ்ஞானிகள் அந்தக் கருவிற்குள் எலெக்ட்ரானிக் அல்லது கதிரியக்க லேசர் (LASER) மூலம் பாய்ச்சப்பட்டு அது துடிப்பின் நிலைகள் அடைந்து அந்தக் கரு எவ்வாறு விளைகின்றது என்று காணுகின்றார்கள்.

விஞ்ஞானம் இவ்வாறு நிரூபிக்கின்றது.

ஆக, இன்று இயந்திரத்தின் துணை கொண்டு கதிரியக்கச் சக்தியைக் கருவில் இருக்கும் சிசுக்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை பரிட்சாந்திரமானால் அவன் நஞ்சு கொண்ட நிலைகளில் மற்றவரைக் கொன்றிடும் நிலைக்கே வருவான். இன்றைய உலகில் அதுதான் நடந்து கொண்டுள்ளது.

ஆனால், மெய்ஞானி தன் உணர்வைத் தன்மையைத் தன் எண்ணத்தால் பாய்ச்சிக் கருவில் வளரக்கூடிய குழந்தையை இப்படித்தான் அருள் வழியில் வளர்க்க வேண்டும் என்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ளான்.

மெய்ஞானிகள் மனிதனின் உணர்வின் தன்மையை அறிந்து தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வைத் தனக்குள் எடுத்து இந்தச் சிருஷ்டியின் நிலையாக ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறவேண்டும் என்றால் அடுத்து வரும் சந்ததியர்களுக்கு நாம் இதைச் செய்யவேண்டும்.

என்னுடைய உபதேசங்களைக் கேட்கும் பொழுதெல்லாம் நன்றாக இருக்கிறது என்பார்கள். நன்றாக இருக்கின்றது என்று சொல்லிவிட்டு என்ன செய்கின்றார்கள்?

சாமி சொல்கின்றார்.., அவருக்கு என்ன? அவர் பெரிய மகான் ஆகிவிட்டார். அவரால் முடியும் நம்மால் முடியுமா..,? இப்படித்தான் திசை மாற்றிவிடுகின்றனரே தவிர “பெறும் தகுதி நமக்கும் உண்டு” என்ற எண்ணத்தை மறந்துவிட்டார்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் நீங்கள் சேர்த்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் கருவிலே வளரும் குழந்தைக்கு அது கிடைக்க வேண்டும் என்று சேர்த்துப் பாருங்கள்.

போகன் ஒரு சிலையை வைத்து அந்தத் தீமையை அகற்றும் நிலைகளை அதனுடன் இணைத்து அதன் மேல் சொட்டும் நீர் விழும்படி செய்தான்.

அந்த முருகனின் சிலையிலிருந்து வரும் மணத்தை மக்களை நுகரச் செய்து மனிதனின் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றும்படி செய்தான்.

அதே முறைப்படி நாம் உணர்வால் எடுத்து கருவிலே விளையும் அந்தக் குழந்தைகளுக்கு அந்தச் சிசுக்களுக்குள் மெய்ஞானிகளின் உணர்வைச் செருகேற்றுங்கள்.

அந்தக் குழந்தைக்குள் அருள் உணர்வுகள் வளர வளர அது வளர வளர குழந்தை தவழத் தவழ அது தவழ்ந்து ஓடும் பொழுது அதனின் செயலாக்கத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை மாய்த்துவிடும்.

உங்களுக்குள் அது பேரானந்தம் என்ற இன்பத்தையும் வளர்த்துவிடும். உங்களில் இதைப் பார்க்கலாம். 

சிசு என்று நினைக்க வேண்டாம். கருவிலேயே பெரிய தத்துவ ஞானியாக அருள் ஞானியாக அது வளரும்.

ஆகவே, அந்த ஞானத்தின் நிலைகள் அது உமிழ்த்தும் உணர்வுகளை நுகர்ந்தால் மணத்தால் நுகர்ந்தால் நமக்குள் உயர்ந்த நிலைகளைப் பெறச் செய்யும்.

அந்தக் குழந்தைகள் மூலமாக நம்மையும் நம் உலகையும் நிச்சயம் காக்க முடியும்.