ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2016

அகஸ்தியன் கண்ட அண்டசராசரத்தின் பேராற்றலை உங்களுக்குள் அணுவாக உருவாக்குங்கள்

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன் சந்தர்ப்பத்தில் தாய் கருவிலே வளரப்படும் பொழுது அவர்கள் பல விஷ ஜெந்துக்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இயற்கையில் விளைந்த விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளைத் தன் உடலிக் பூசிக் கொண்டார்கள்.

அப்பொழுது இந்த உடலிலிருந்து வரக்கூடிய மூலிகைகளின் விஷ உணர்வுகள் விஷ ஜெந்துக்களைத் தாக்கப்படும் பொழுது விஷம் கொண்ட உயிரினங்களின் வலு இழந்துவிடுகின்றது.

அந்த வாசனையை நுகர்ந்து அவைகள் அஞ்சி ஓடிவிடுகின்றது. இவர்கள் இருக்கும் பக்கம் வருவதில்லை.

ஒரு புலியானாலும் யானையானாலும் மற்ற தேளானாலும் பாம்பானாலும் விஷத்தின் வலிமை கொண்டு தான் இயக்குகின்றது.

அந்த விஷத்தை முறிக்கும் பச்சிலைகளைத் தங்கள் உடலில் அதை முலாமாகப் பூசிக் கொள்ளும் பொழுது இந்த மணத்தின் தன்மை கொண்டு இவர்கள் அருகில் வருவதில்லை.

அகஸ்தியன் என்று சொல்லும் அவன் தாய் தந்தையர்கள் தங்களைக் காத்துக் கொள்ள இத்தகையை பாதுகாப்பை வைத்துக் கொண்டார்கள். ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இதைக் கூர்மையாகப் படித்தாலும் (பார்த்து) உணர்வை நுகர்ந்தாலும் உங்களுக்குள் உயிர் இதை அணுவாக மாற்றுகின்றது உங்கள் நினைவுடன். ஆகவே, இதனின் தன்மையை உங்களுக்குள் அணுவாக்குவதற்கே உபதேசிக்கின்றோம்.

அன்று அகஸ்தியன் பெற்ற சக்தியும் அவனின்று வெளிப்பட்ட சக்திகளும் இன்று உண்டு.

இதைப் போல விண்ணில் தோன்றிய உணர்வும் அது எவ்வாறு என்று இணைத்து ஆதி முதல் இந்த உணர்வுகள் மாற்றமடைந்து வரும் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது அண்டசராசரத்தையும் அது விளைந்த உணர்வும் உங்களுக்குள் நீங்கள் நுகர்வதற்கு ஏதுவாகின்றது.

அதே சமயத்தில் அண்டசராசரத்தை அறிந்த அகஸ்தியன் தனது வாழ்க்கையில் நஞ்சினை முறித்து உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெற்று இன்று துருவ நட்சத்திரமாக அமைந்த உணர்வுகளும் இப்பொழுது உங்களுக்குள் கலக்க நேரும்.

இந்த உணர்வின் அணுக்களாகிவிட்டால் அது அணு தனது இரைக்காக இந்த உணர்ச்சிகளை உந்தி அது பெறும் தகுதியும் பெறுகின்றது. அதன் துணை கொண்டு உங்களுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் சக்திகளை நீங்கள் பெற முடிகின்றது.

உதாரணமாக, ஒருவர் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் அது நமக்குள் அணுவாகிவிட்டால் அதையே தான் சுவாசிக்க நேரும்.

அப்பொழுது நம் உயிரிலே பட்டு அந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி “அம்மம்மா..,” என்று சொல்லும் பொழுது நமக்குள் வேதனை தெரிவதில்லை. ஆனால், வேதனை உணர்வுகள் அதைப் பெற்ற அணுக்கள் விளைந்துவிடும்.

பின் அமைதியாக இருக்கும் பொழுது அதனின் வேதனையின் துடிப்புகளை நாம் உணர முடிகின்றது.

இதைப் போன்று தான் அகஸ்தியனின் தாய் விஷ ஜெந்துக்களிடமிருந்து தப்பிக்க முலாம்களைப் பூசியது. ஆனால், விஷத்தை முறிக்கும் ஆற்றலை கருவிலிருக்கக் கூடிய குழந்தைக்கு அது சிறுகச் சிறுகப் பெருகும்படிச் செய்தது.

இவ்வாறு தாய் கருவில் பெற்ற இச்சக்தியால் எத்தகைய விஷத்தையும் அடக்கும் தன்மையும் விஷத்தை முறித்திடும் ஆற்றலும் கருவில் விளையும் பொழுதே அகஸ்தியனுக்குள் உருவாகின்றது.

அகஸ்தியன் பெற்ற அந்த ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெறுதல் வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு நிமிடமும் அகஸ்தியனின் உணர்வுகளை உங்களுக்குள் நினைவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நீங்கள் நுகரும் தருணத்தில் உங்கள் உடலுக்குள் அதனின் அணுவாக மாறுகின்றது. 

மீண்டும் நினைவாக்கும் பொழுது தன் இரைக்குத் தேடப்படும் பொழுது வானுலகில் உருவான உணர்வின் சத்தை நீங்கள் நுகரும் அந்த அணுவாக மாறும் நிலை உங்களுக்குள் உருவாகின்றது.

அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அகஸ்தியன் கண்ட அண்டசராசரத்தின் பேருண்மைகளை அறியும் ஆற்றல் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்காகத் தான் அடிக்கடி இதைக் கூறுவது.