ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2016

“கலகப் பிரியன்” - நாரதன்

ரிஷியின் மகன், நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் “அதோ வருகின்றான்...,” அவனிடம் அணுகுவோம். அவனுக்கு அனைத்துமே தெரியும் என்று கண்கள் சொல்வதாக வியாசகர் உணர்த்தியுள்ளார்.

 ரிஷியாக்கியது யாரை?

அந்த வசிஷ்டரும் அருந்ததியும் அவர்கள் இருவரும் ஒன்றாகி அந்த உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகி நிலை கொண்டவர்கள். அதிலிருந்து வெளிப்படும் உணர்வினை சூரியன் காந்த சக்தி கவர்கின்றது அலைகளாக மாற்றுகின்றது. அது தான் ரிஷியின் மகன் நாரதன் என்பது.

 மனிதர்களாக இருக்கும்போது தன் இச்சைக்காகத் தான் எண்ணும்போது தன் இன விருத்தியை (புத்திரர்களாக) உருவாக்குகின்றது.

ஆனால், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து தீமைகளை வென்று இரு உயிரும் ஒன்றாகி உணர்வின் தன்மை ஒளியாகி ஒளியின் சரீரமாக வாழ்பவர்கள் தனக்குள் “ஒளியின் அணுக்களாக” மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

அதனால்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.

ஒன்றும் ஆகாத தாவர இனச் செடியின் சத்தாக இருந்தாலும் சூரியன் அதைத் தனக்குள் கவர்ந்து வைத்து கொள்கின்றது. அதிலே விளைந்த வித்துக்களை நிலத்தில் ஊண்றிய பின் அதன் அறிவாக அது இயக்கி அதைச் செடியாக வளர்த்துத் தன் இனத்தின் வித்தாக உருவாக்குகின்றது.

அதைப் போன்று தான் மனிதனானபின் கணவனும் மனைவியும் இரு மணமும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி துருவ நட்சத்திரமாக ஆகியுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டுள்ளது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து விளைந்து கொண்டிருக்கும் உணர்வுகள் இந்த பிரபஞ்சத்தில் விளையும் நஞ்சினை ஒடுக்கி ஒடுக்கி ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது.

அவ்வாறு உணர்வின் அலைகளாக மாற்றி கொண்டிருக்கும் அந்த அலைகளை கண்களால் நாம் உற்றுப் பார்த்து அந்த வானுலக ஆற்றலை நுகர்தல் வேண்டும்.

அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அதைத்தான் நாரதன் என்றும் கலகப்பிரியன் என்று சொல்லுகின்றார்கள்.

நாம் பாசத்தால் அன்பால் ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்வு நமக்குள் வந்தபின் நாம் என்ன செய்கின்றோம்?

“அடப் பாவமே..., இப்படி இருக்கின்றதே..,” என்றுதான் நாம் எண்ணுகின்றோம்.

ஆனால், அதை நீக்குகின்றோமா என்றால் இல்லை.

ஏனென்றால், சூரியனின் வேலை எதனை நுகர்கின்றோமோ அதன் அறிவாகத் தான் அது இயக்கும். எதன் அறிவை நமக்குள் பதிவு செய்கின்றோமோ அதன் உணர்வின் இயக்கமாக இயக்கி அந்த வேதனையை நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

தாவர இனச் செடிகளை எப்படி உருவாக்குகின்றதோ இதைப் போன்று நமக்குள் வேதனைகளை உருவாக்குகின்றது.

இப்படித் தனது வாழ்க்கையில் இவ்வாறு இருப்பதை அறிந்து வருகின்றார் ரிஷியின் மகன் நாரதன், அவர் ஒரு கலகப் பிரியன். கலகமோ நன்மையில்தானே முடியும் என்று காட்டுகின்றார்கள்.

நாம் ஒரு நோயாளியின் தன்மையைப் பிடித்துக் கொண்டபின் திரும்பத் திரும்ப அவன் நோயினைப் பற்றித் தான் பேசுவோம். அப்பொழுது அந்த உணர்வின் தன்மையை நாம் நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று இந்த உணர்வினை நமக்குள் அதிகமாகச் சேர்த்துவிட்டால் அவர் படும் வேதனையைப் பற்றிய சிந்தனைகளை நமக்குள் சிந்திக்க விடாது அதை அடக்கும்.

ஆகவே, அதுதான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன், அதாவது கலகப் பிரியன்.

நமக்குள் விடாப்பிடியாக வரும் தீமைகளை நீக்கிவிட்டு நமக்குள் தெளிந்த மனதை அது உருவாக்கும் என்பதனை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காவியமாகப் படைத்துள்ளார் வியாசகர்.