ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2016

கணவன் மனைவி உடல் இரண்டானாலும் ஞானிகள் உணர்வை ஒன்றாக்கி விட்டால் “இரு உயிரும் ஒன்றாகிவிடும்”

ஒருவருக்கொருவர் தொடர்பில்லாது நாம் யாரும் இல்லை.

ஒருவர் நம்மைத் திட்டியிருந்தால் அந்த உணர்வு நமக்குள் பதிவாகி விட்டால் அவரை நினைக்கும் பொழுதெல்லாம் நமக்குள் அந்தத் திட்டும் உணர்வுகள் வரும்.

அவர் மேல் கோபமும் வெறுப்பும் ஊட்டும் உணர்ச்சிகளைச் சுவாசிக்க நேரும்.

அதே சமயம் அந்தத் தீய அணுக்களின் தன்மை எதை வைத்து அவர்கள் திட்டினார்களோ அதன்படி நமக்குள் அந்த உணர்வுகள் வளர்ந்து நம்மை நசுங்கச் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு இந்தத் துருவ தியான நேரங்களில் நம்மைப் பரிசுத்தப்படுத்தும் படி அன்று விநாய தத்துவத்தை காட்டினார்கள் ஞானியர்கள்.

அந்த விநாயகரைத் “தான் யார்...,? இந்தப் பிள்ளை யார்...,?” என்று சிந்திக்கச் செய்து உயிரால் வளர்க்கப்பட்ட நிலையும் அந்த வளர்ந்த நிலைகள் துருவ மகரிஷிகளின் ஆற்றலை நாம் எல்லோரும் பெறவேண்டும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார்கள்.

ஆகவே, கணவனும் மனைவியும் இந்த மனித உடல் இரண்டாக இருப்பினும் அந்த ஞானிகள் காட்டிய உணர்வை ஒன்றாக்கிவிட்டால் இரு உயிரும் ஒன்றாகி இரு உடலின் உணர்வுகள் ஒன்றாகிவிடுகின்றது.

இந்த உடலை விட்டுச் சென்றால் அந்தத் துருவ நட்சத்திரம் எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் தீமைகள் அனைத்தையும் வென்று ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்கின்றார்களோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ முடியும்.

இப்பொழுது மனிதனாக நாம் இருக்கும் பொழுது தன் இனத்தை விருத்தி செய்கின்றோம்.

அந்த ஒளியின் சுடராகத் தனக்குள் உருவாக்க வேண்டும் என்று கணவனும் மனைவியும் எண்ணி இந்த உணர்வின் தன்மையை வளர்க்கப்படும் பொழுது ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

ஆகவே, இந்த நிலையைப் பெறச் செய்வதற்குத்தான் நாம் இந்தத் துருவ தியானத்தை வலியுறுத்துகின்றோம்.

துருவ தியானத்தின் மூலம் இந்த வாழ்க்கையில் மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை நாமும் கண்டு அந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்றி பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

தெய்வீகக் குடும்பமாக வளர்வோம், வாழ்வோம். தெய்வீக சக்திகளை நமக்குள் வளர்ப்போம். பேரானந்த நிலை அடைவோம்.

ஆகவே, ஞானிகள் கொடுத்த விநாயகர் தத்துவத்தை நமது வாழ்க்கையில் நாம் சீராகப் பயன்படுத்தி என்றும் பிறவியில்லா நிலையை அடைவோம். எமது அருளாசிகள்.