ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2013

நிறைய மனிதர்கள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்து, அடர்த்தியாகப் பெருக்க வேண்டும்

1. உலகில் போர் மூளும் நிலை இருக்கின்றது
இப்பொழுது, உங்களுக்கு மிகவும் துரிதமாக உபதேசிப்பதன் காரணம்  நம் எல்லைப்பகுதியில் போர் மூளும் நிலைமை இருக்கின்றது.

யாம் சொல்லும் முறைப்படி இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை அதிகமாக எடுத்துக்கொண்டால், நம் எல்லைப்பகுதியில் இந்தப் போர் வராமல் தடுக்க முடியும்.

ஆனால், வேறொரு பக்கம் இந்தப் போர் நடந்தால், அணுக்கதிரியக்கங்களானால், அந்தப் பக்கம் அந்த பூமி குடை சாயும். நாம் மேலே வருகின்றோம். நம் பக்கம் ஒன்றும் வராது.

இல்லையென்றால், நம் பக்கம் அணுக்கதிரியக்கங்களானால், நாம் கீழே போய்விடுவோம். ஆனால், மற்ற நாடுகளில் கதிரியக்கம் ஆகும் பொழுது, அந்த நாடுகளெல்லாம் கீழே கடலுக்கடியில் போய்விடும்.

முதலிலே கடலிலிருந்து தான் உயிரணுக்கள் தோன்றி நில வாழ் நிலைக்கு வந்தது. மீண்டும் இந்த நிலையானால், கடலுக்கடியில் சென்றால், அதற்குத்தக்க உணர்வெடுத்து நண்டாகவோ, மீனாகவோ, நத்தையாகவோ, பிறக்க வேண்டியது வரும்.
இப்படி இந்த உயிர் எதை நுகர்கின்றதோ,
அதற்குத்தக்க உடல் பெற்றே தீரும்.
2. “துருவ நட்சத்திரத்திற்குத்தான்” கதிரியக்கச் சக்தியைத் தணிக்கும் ஆற்றல் உண்டு
நாம் இந்த உடலில் ஆறாவது அறிவின் துணை கொண்டு கார்த்திகேயா, துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கப்படும் பொழுது, நாம் எப்படியும் ஒளியின் உடலாகப் பெறுகின்றோம்.

மனிதராகப் பிறந்து, நஞ்சை வென்றவர் அகஸ்தியர். அகஸ்தியர், துருவனாகி,  துருவ மகரிஷியாகி,  துருவ நட்சத்திரமானார். 

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை, நாம் நுகர்ந்து நமது உடலில் உருவாக்கி விட்டால், இந்த உடலில் தீமையை நீக்கிடும் சக்தியினை  நாம் பெறுகின்றோம்.

நமது பிரபஞ்சத்திலிருந்து மட்டுமல்ல, அகண்ட அண்டத்திலிருந்து, எங்கிருந்து நஞ்சு வந்தாலும், ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது, துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரம் தன் அருகில் எது வந்தாலும், அதை ஒளியாக மாற்றிக் கொள்கின்றது.

அதைப் போன்று, நம் பக்கத்தில்
எத்தகைய கதிரியக்கம் வந்தாலும்,
அது நமக்குள் வராதபடி தடுக்கலாம்.
இதை நாம் பெருக்கிக் கொண்டால், அந்த யுக்திகள் நம் உடலிலே மிக வலிமை பெறும்.
ஏனென்றால்,துருவ நட்சத்திரத்திற்குத்தான்” கதிரியக்கச் சக்தியைத் தணிக்கும் ஆற்றல் உண்டு.
3. நிறைய மனிதர்கள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்து, அடர்த்தியாகப் பெருக்க வேண்டும்
ஒரு செடி வளர்வதற்கு எப்படி வித்து போடுகின்றோமோ, அதைப் போல யாம் உங்களுக்குள் பதிய வைத்த அருள் ஞான வித்தினை வளர்ப்பதற்கு, ஆத்ம சுத்தி, மற்றும் கூட்டு தியானம் நீங்கள் செய்து வந்தால், மிக சக்தி வாய்ந்த உணர்வுகளை வளர்க்க முடியும்.
ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நிறைய மனிதர்கள் எடுத்துத் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டால், அது அடர்த்தியாகப் பெருகுகின்றது.

அப்பொழுது, நம் நாட்டுக்குள்ளும், நம் ஊருக்குள்ளும், நாம் எங்கே ஜாஸ்தி நடமாடுகின்றோமோ, அங்கே எந்த அணுக்கதிரியக்கமும் வராதபடி, நம்மைத் தாக்காதபடி, தடுக்க முடியும். இதை நாம் செய்து பழக வேண்டும்.
இதைப் போன்றே மழை வேண்டுமென்றால், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த மழையை வரவழைக்கலாம், வறட்சிகளையும் மாற்றமுடியும்.
எமது அருளும், குரு அருளும்
உங்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும்.