ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2013

பூமி வெப்பமாதல் - GLOBAL WARMING

1. பூமியின் நிலைகள் வயது அடைந்துவிட்டது
பல காலம் ஆகியே வந்த நிலைகள் கொண்டு, இன்று உலகம் முழுவதற்கும் நஞ்சு கொண்ட உணர்வாக விளையப்படும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
விஞ்ஞானக் கருவிகளை இயக்க முடியாத நிலை அடைந்து,
சேர்த்துக் கொண்ட நிலைகள் வெடித்துச் சிதறி
உலகம் முழுவதற்கும் நஞ்சாக மாறும்.

இந்த பூமியின் நிலைகள் வயது அடைந்துவிட்டது. விஞ்ஞான முன்னேற்றத்தின் சில செயல்களால், உலகில் வெப்பத்தின் நிலைகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது,

வெப்பம் அதிகமாகக் கூட, இன்று இருக்கக்கூடிய நிலைகள், விஞ்ஞான அறிவால் வெடிக்கப்பட்ட உணர்வுகள், அணுவின் கதிரியக்கங்கள் அனைத்தும் பூமியின் நடுவிட்டம் அடையும் பருவம் வந்துவிட்டது.

ஆக, கொதிகலனாக மாறும் நிலை அடையப்போகின்றது.
அப்பொழுது வடதுருவம் உருகப் போகின்றது.
நீர் நிலைகள் பெருகப்போகின்றது.
கடலில் பெருக்கம் ஆகி நிலத்தின் தன்மை குறுகப்போகின்றது.
2. மகரிஷிகளின் அருள் வட்டம் ஒன்றுதான் நமக்குப் பாதுகாப்பு
உணவுக்கு இல்லத நிலையில் மனிதனுக்கு மனிதனே உணவாக உட்கொள்ளும் காலங்கள் வந்துவிடும்.
இரக்கமற்ற நிலைகளில் இன்று மனிதன் எத்தனையோ செயல்களைச் செய்வதைக் காணுகின்றோம். பாதுகாப்பு இருந்தாலும், நாம் நம்பிக்கையுடன் செல்ல முடியவில்லை. உணவுக்கு இல்லாத நிலையில் மனிதனுக்கு மனிதனே உணவாக உட்கொள்ளும் காலங்கள் வந்துவிடும்.
     
இரக்கமற்ற நிலைகளில் இன்று மனிதன் எத்தனையோ செயல்களைச் செய்வதைக் காணுகின்றோம். பாதுகாப்பு இருந்தாலும், நாம் நம்பிக்கையுடன் செல்ல முடியவில்லை.

தனது பொருள் என்று நம்ப முடியவில்லை. நாம் எங்கு சென்றாலும், கண்டவன் கண்ணுக்கு அது சிக்கப்படும் பொழுது, வலுகொண்ட அவனின் பொருளாகின்றது. வலு இழந்தவன் பொருளை இழக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

இதைப் போல மாறிக் கொண்டேயிருக்கும் இந்த நிலையில் நிலையில்லாத இந்த உடல் வாழ்க்கைக்காக வேண்டி, வீண் வாதம் செய்யாதபடி, என்றும் நிலையான ஓளிச்சரீரம் பெற விண்ணை நோக்கி ஏகி, மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும் என்று ங்கித் தியானிப்போம்.

அதன் வழி கொண்டு, நமக்குள் வரும் துன்பத்தைத் துடைத்து அந்த உணர்வின் தன்மை ஆற்றலாக விளைந்து கொண்டால், அந்தத் துன்பப்படும் உணர்வுகள் நம்மை அணுகாது.

நமக்குத் துன்பத்தை ஊட்டும் நிலைகளை
யார் எண்ணினாலும் அதைத் தடைப்படுத்தி,
நம்மைக் காத்திடும் உணர்வாக விளையச் செய்யும்.

இப்பொழுது எப்படி, எலக்ட்ரானிக் பொருத்தப்பட்ட நிலைகள் சில செயல்களைச் செய்வதுபோல, மகாஞானியின் சக்திவாய்ந்த உணர்வலைகளை நமக்குள் பதிவு செய்துவிட்டால்,
நல்ல உணர்வைக் காத்திடும் நிலையாக 
அது ஒவ்வொரு சமயத்திலும்
நமக்கு நல்வழி காட்டும்.
அதை பெறச் செய்வதற்கே இதை உபதேசிக்கின்றோம்.
ஆக, நாம் இன்று மனிதனாக இருக்கும் இந்த நிலையிலே மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து, அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

இந்த எண்ண வலுகொண்டு நம் எண்ணத்தின் நிலைகளைக் கூர்மையாக்கி மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது, இந்த உடலிலிருந்து நாம் எப்பொழுது சென்றாலும், அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய முடியும்.

அழியா ஒளிச் சரீரமாக பெருவீடு பெருநிலை என்ற நிலையை அடைய முடியும். இதுதான் வேகாக்கலை. எமது அருளாசிகள்.