ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2013

இன்று அதிக அளவில் KIDNEY சம்பந்தப்பட்ட நோய்கள் ஏன் வருகின்றது?

1. இன்று அதிக அளவில் KIDNEY சம்பந்தப்பட்ட நோய்கள் ஏன் வருகின்றது?
இன்று கம்ப்யூட்டரின் துணை கொண்டு ஸ்கேன் (SCAN) வைத்து உடலிலே பரிசோதனை செய்யும் நிலைகள் கொண்டு கருவிலே இருக்கக்கூடிய குழந்தை ஆணா, அல்லது பெண்ணா என்று பார்க்கின்றார்கள்.

அதே சமயத்தில், ஒரு மனிதனுக்குள் இருக்கும் உறுப்பின் இயக்கமும், தில் நோய் எவ்வாறு வந்தது என்ற நிலையையும் ஸ்கேன் எடுத்துப் பார்க்கின்றார்கள். அதாவது,
காந்தப் புலனறிவின் அறிவை (SCAN)
உடலுக்குள் பதிவு செய்யும் பொழுது
அந்த உடலிலே உள்ள நோயைக் கண்டுணருகின்றான்.

ஆனாலும், சோதனை செய்து பார்க்கும் நேரத்தில் யார் உடலிலே நோய் இருக்கின்றதோ. தன் நோயின் உணர்வின் நிலையை உணர்ந்து, இனி வாழ்க்கை தன் எதிர்காலம் சிதறுண்டு போகுமே என்று எண்ணி வேதனைப்படுவார்கள்.

அப்பொழுது, தன் குடும்பப் பாசத்தின் பற்றைக் கொண்டு மிகவும் வேதனையான உணர்வை அவன் சுவாசிக்கப்படும் பொழுது, அந்த உணர்வலைகள் உடலுக்குள் ஊடுருவுகின்றது.

அப்படி அது ஊடுருவி, எங்கே நோய் வருகின்றதோ அதன் அலைக்குள் இந்த அலைகள் கலந்துவிட்டால், ஸ்கேன் வைத்துப் பார்க்கும் பொழுது,
எந்த வேதனையான உணர்வு பட்டதோ,
அந்த அலையின் தன்மையை
இங்கே நிழல் படமாகக் காட்டப்பெற்று
அந்த றுப்பின் இயக்கத்ததைப் பெரியதாகக் காட்டி
அந்த உறுப்பு மிகவும் பலவீனமாகிவிட்டது என்று
ஸ்கேனின் நிலையை (தவறாக) அது காட்டும்.

அதற்குத்தக்கவாறு கடின மருந்துகளை இவன் கொடுப்பான் என்றால், அதனின் தன்மை உடலுக்குள் ஊடுருவுகின்றது. நம் உடலில் கிட்னி (Kidney) என்ற உறுப்பு, ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களை நீராகப் பிரித்து, அது தெளிவுபடுத்தும் வேலையைச் செய்கின்றது.

இவன் கொடுக்கும்  இந்தக் கடினமான மருந்து, கிட்னி சரியாக இயங்காவண்ணம் அந்த மருந்தின் விஷத்தின் தன்மை இதை மாற்றிவிடுகின்றது. இது விஞ்ஞானம்.

ஆகையினால்தான், மருத்துவர்கள் கொடுக்கும் heavy dose காரணத்தால், இன்று பெரும்பகுதியானவர்களுக்கு கிட்னி (Kidney) சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கின்றது.
2. அன்றைய மெய்ஞானி எப்படி கொடிய நோயையும் நீக்கினான்?
அன்று மெய்ஞானி தன் உணர்வின் சக்தி கொண்டு, ஒருவருக்கு நோயின் தன்மையிருந்தால் தான் எடுத்துக் கொண்ட உணர்வலைகளை நேர்முகமாகப் பார்க்கச் செய்து, அவருக்கு வாக்கினைக் கொடுக்கின்றார்கள்.

மகரிஷியின் அருள் ஒளி இங்கே படரவேண்டும்.
அவருக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
இருளால் வந்த வினைகள் நீங்க வேண்டும்.
அவர் மெய் உணர்வு பெறவேண்டும்.
அவர் உடல் உறுப்புக்கள் நலம் பெறவேண்டும் என்று
ந்த வாக்கினை மெய்ஞானி கொடுக்கின்றான்.

அந்த வாக்கினைப் பெற்றவரகள் அதை எண்ணி ஏங்கும் பொழுது, வாக்கின் உணர்வின் வித்து அங்கே விளைந்து, அந்த உணர்வின் சத்து அங்கே வளர்ந்து, அந்த உணர்வால் அவர் உடலிலுள்ள எத்தகைய கொடிய நோய்களையும் அது மாய்க்கச் செய்கின்றது. இது மெய்ஞானிகள் செய்த நிலைகள்.