ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2012

அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் இரகசியங்கள்

1 அகஸ்தியன் எப்படி உருவானான்? 
பல லட்சம் ஆண்டுகளுக்குமுன், அதாவது காட்டு மனிதர்களாக வாழ்ந்து வந்த புலஸ்தியர்கள், பல மிருகங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், விஷச் ஜந்துக்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், அதாவது பாம்பு, பல விஷக் கிருமிகள் இது போன்ற நிலைகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, அதற்கு எதிர் நிலையான பச்சிலையை அரைத்து, தன் உடல்களில் பூசிக் கொள்வார்கள்.

அவ்வாறு பூசிக் கொண்டால், அதனின் மணத்தைக் கண்டு, அவர் அருகிலே அந்த விஷப் பிராணிகள் வருவதில்லை. இதைப் போன்ற புலி போன்ற மிருகமோ, யானை போன்ற மிருகங்களோ, இவர்கள் அருகில் வராதபடி, அந்தந்தக் காலங்களில், அவர்கள் உடல்களில், இந்தப் பச்சிலைகளை அரைத்துப் பூசிக் கொள்வார்கள்.

அவ்வாறு பூசிக் கொண்டால், அவர்களிடமிருந்து வெளிப்படும் இம் மணத்தை, சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து, அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கும்.

ஆனால், மற்ற உயிரினங்கள், நுகர்ந்தறிந்தே இரை தேட வரும். அப்பொழுது அவர்கள் உடல்களில் பூசியுள்ள பச்சிலையின் வாசனை வெளிவரும்பொழுது, அந்த மணத்தைக் கண்டு அஞ்சி, மற்ற பூச்சிகளோ, யானைகளோ, புலிகளோ, இவர் அருகில் வராதபடி, விலகிச் செல்லும்.

ஆகவே, தனது பாதுகாப்புக்காக தங்களின் உடலில், அவர்கள் பூசிக் கொண்ட அந்த பச்சிலையின் மணங்களை நுகர நேர்கின்றது, அவர்களும் நுகரப்படும் பொழுது, அவர் உடல்களிலேயும், சில விஷத்தன்மையான கிருமிகளை, அவர்கள் அழித்திடும் சக்தியைப் பெறுகின்றார்கள்.

இதன் வழிகளில், அவர்களது வாழ்க்கையில் காலை எழுந்தபின், சூரியனின் உதயத்தைக் கண்டு, கடவுள் நம்மைக் காக்க வருகிறார் என்று,
சூரியனை உற்றுப் பார்த்து, அவர்கள் வழிபடுவது வழக்கம்.
அவ்வாறு, சூரியனை உற்றுப் பார்த்து அவர்கள் வழிபடும் பொழுது,
சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மைகளை
இவர்கள் பார்த்தாலும், இவர்களைப் பாதிப்பதில்லை.

சூரியனின் இயக்கமும், சூரியன் வெளிப்படுத்தும் அந்தச் சக்தியினை, தான் நுகரும் வாயிலில், எதிர்நிலை கொண்டு, அது விஷத்தை எவ்வாறு பிரிக்கின்றது என்ற நிலையும், அவர்கள் உணர்கின்றார்கள்.

இவ்வாறு தங்களது வாழ்க்கையில் உணர்ந்தறிந்து, சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்து, தீமை கொண்ட மற்ற உயிரினங்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு, பல உபாயங்கள் தோன்றிக் கொண்டே உள்ளது.

இதன்படி, அவர்கள் கற்றுணர்ந்த உணர்வுகளை, அக்காலங்களில், தங்கள் அருகிலே வாழும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், அந்தக் கால மக்கள் இவர்கள் எடுத்துச் சொல்வதை, அவர்கள் உடல்களிலே பதிவாக்குகின்றனர்.

இவர்கள் சொல்லிக்கொண்டிருப்பது அனைத்தையும், சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து, அலைகளாக மாற்றிக் கொண்டிருப்பதும், இவ்வாறு மாற்றிக் கொண்டிருந்த அச்சக்திகள், இன்றும், நாம், நம் குரு காட்டிய அருள்வழியில், அக்காலங்களில் எவர் பெற்றார்கள் என்ற நிலையை, நாமும் உணர முடியும்.

இவ்வாறு எப்படியெல்லாம் இந்த சக்திகள், அது வெளிப்படுகின்றது, அதை, சூரியனின் காந்த சக்தி எவ்வாறு கவர்ந்து கொண்டிருக்கின்றது என்பதனை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், அத்தகைய விஷத்தை முறித்திடும் உணர்வின் சத்தை, எம்மை நுகரச் செய்து, அக்கால மக்களின் உருவங்களையும், அக்காட்டுப் பகுதியின் நிலைகளையும்,  என்னை அறியும்படி செய்கின்றார்.

அவர்கள் வெளிப்படுத்திய உணர்வின் சத்துக்கள், எவ்வாறு இப்பூமியில் பரவிக் கொண்டுள்ளது? சாமான்ய மக்களும் அதைப் பெற முடியும் என்பதனை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக உபதேசித்து, அதனை என் உடலிலே பதிவாக்குகின்றார்.
இவ்வாறு எமக்குள் பதிவான நிலை கொண்டுதான்,
இன்றும் எம் குருநாதர் பேசிய உணர்வின் தன்மையும்,
உபதேசித்த உணர்வும், இன்றும்
அதாவது, உணர்வுகளாகப் பரவிக் கொண்டுள்ளது.

அதனை நீங்கள் அனைவரும் நுகர்ந்தறிந்து, உங்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

அவ்வாறு, அவர்கள் பூசிக் கொண்ட பச்சிலைகளின் மணங்களையும், நஞ்சினை வென்றிடும் அந்தச் சக்திகளையும் நீங்கள் அனைவரும் பெற்று, அவர்கள் நஞ்சினை வென்றது போன்று, நீங்களும் வெல்வதற்கே இதை யாம் உபதேசிக்கின்றோம்.
  
அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் என்று சொல்லும், அவர்கள் கருவுற்றிருக்கும் பொழுது, இவர்கள் பூசிய முலாம்கள் விஷத்தை அடக்கிடும், விஷத்தை வென்றிடும் அத்தகைய பச்சிலையின் வாசனைகளை அவர்கள் சுவாசிக்கும் பொழுது, அவர்கள் கருவில் வளரும் சிசுவிற்கும் இது இணைகின்றது.

ஆகவே கருவுற்ற காலங்களிலிருந்து,
அந்த 10 மாதங்களில், இவர்கள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சக்திகளையும்,
ஒவ்வொரு ஆற்றல்களையும் அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதும், அந்த உணர்வுகள், கருவிலே வளரும் இந்த சிசுவிற்கு, பதிவாகிக் கொண்டே இருக்கின்றது.

இவர்கள், காலையில் சூரியன் உதயமாகும் பொழுது, சூரியனை உற்றுப் பார்த்து, கடவுள் என்ற நிலைகளில்,
அவர்கள் வணங்கி வந்ததும், அதன் உணர்வை நுகர்ந்ததும்,
சூரியன் கவரும் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் சக்தியும், 
மற்ற கோள்கள் எவ்வாறு கவர்கின்றது என்ற நிலையும்,
இவர்கள் நுகர்கின்றார்கள்.
அந்த உணர்வுகள், கருவிலே வளரும் சிசுவிற்கும் பதிவாகின்றது.

அவ்வாறு 10 மாதங்களில், அந்தக் கருவில் இருந்து வெளிப்பட்ட இந்தச் சக்திதான், குழந்தையாக அது பிறந்தபின், அவன் உடலிலிருந்து வெளிப்படும் மணத்தைக் கண்டு, மற்ற பாம்பினங்களோ, கொசு போன்ற விஷ ஜந்துக்களோ, மற்ற மிருகங்களோ, இவன் இருக்கும் பக்கம் வருவதில்லை. இந்த மணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.

அதைக் கண்ணுற்ற, அந்த அகஸ்தியன் என்று பின்கூறும், அவனது தாய் தந்தையர்கள் “அகஸ்தியனைக்” கடவுளால் கொடுக்கப்பட்ட குழந்தை என்று, அதை இவர்கள் போற்றித் துதிக்கும்நிலை வருகின்றது.
2  அகஸ்தியன் 5வது வயதில் கண்ட  துருவத்தின் ஆற்றல்  
ஆனால் அவன் இருக்கும் பக்கம், மற்ற விஷப் பிராணிகளோ, விஷ ஜந்துக்களோ, மற்ற  கொசு போன்ற தொல்லை கொடுக்கும் மற்ற உயிரினங்களோ, வருவதில்லை.

இதைப்போல இவர்கள் வணங்குவது போன்று,
அந்தக் குழந்தை படுத்திருக்கும் போது,
வானை நோக்கிப் பார்த்து
இவர்கள் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்தனரோ,
அதையெல்லாம் அவனும் நுகரும் சக்தி பெறுகின்றான்.
அந்த உணர்வுகள் அந்த பச்சிளம் குழந்தையிடம் வளருகின்றது, வளர்ச்சி பெறுகின்றது.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற அக்குழந்தையோ, தனது வயது வளர்ச்சியில் ஒவ்வொரு வருடம் கூடக் கூட, அவனில் கண்டுணர்ந்த உணர்வுகள், சொல் வடிவில் வெளிப்படுவதும், வெளிப்படுத்துவதும், இதை மற்றவர்கள் தன் அருகிலே இருப்பவர்கள் கேட்டறிவதும், அவர்கள் ஒவ்வொருவரும், அவனைக் கடவுள் பிள்ளை என்று, அந்தக் காடுகளில் வாழ்ந்து வந்த அக்கால மக்கள், போற்றித் துதிப்பதும் வருகின்றது.

இதன் வழிப்படி வளர்ந்த அகஸ்தியன், தன் ஐந்தாவது வயதில், துருவத்தை நுகர்ந்தறியும் ஆற்றல் பெறுகின்றான். மற்ற பிரபஞ்சத்தில், நட்சத்திரங்களும், கோள்களும், அது உமிழ்த்தும் சக்தியை, அது பூமி, தன் சுழற்சியில் துருவ பகுதியில் கவரும் அச்சக்தியினை, இவன் உணரும் பருவம் பெறுகின்றான்.

அவ்வாறு தான் கண்டுணர்ந்த உணர்வினை, இவன் எதை நுகர்ந்து அறிகின்றானோ, அவையனைத்தையும், அவன் உயிர் ”ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்” என்று அவன் உடலாக மாற்றிக் கொண்டேதான் உள்ளது.

அதாவது, தான்  பிறந்ததிலிருந்து, கண் கொண்டு உற்றுப் பார்த்து, உணர்வினை நுகர்ந்தறியும் போது, இவை அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றி, “ம்” என்று அவன் உடலாக மாற்றிக் கொண்டேதான் உள்ளது.

இவ்வாறு வானவியில் உணர்வை, தனக்குள் வளர்த்துக் கொண்ட இச்சக்தியின் துணை கொண்டு, தான் வளர்ச்சி பெற்றாலும், இவனை ஈன்ற தாய் தந்தையர்கள், தன்னைக் காத்துக் கொள்ள கடும் விஷத்தைக் கொல்லும் பச்சிலைகளைத் தங்களுக்குள் பூசிக்கொண்ட இந்த நிலைகள், தங்கள் உடலிலே பரவி, அவர்கள் இருவரது உடலையும் விட்டு, அந்த ஆன்மாக்கள் பிரிகின்றது.

பிரிவதற்குமுன், தன் ஐந்து வயதுக் குழந்தையின் எண்ணங்களை ஏங்கி, அவன் தனித்திருப்பானே, அவனை எப்படிக் காப்பது? யார் காப்பது என்ற நிலை கொண்டு, அந்த இரண்டு உயிரான்மாக்களும், இவன் நினைவாகவே, வெளியில் வருகின்றது.

இதைப்போன்று, இன்றைய நிலைகளிலும் பார்க்கலாம். நோயுற்றவரிடம் பற்று கொண்டு, அந்த உணர்வைப் பதிய வைத்திருந்தால், யாரிடம் இந்த உணர்வுகள் அதிகமாக உள்ளதோ, அவருடைய உடலில், அந்த உடலைவிட்டு பிரிந்த ஆன்மா சென்று, அதே உணர்வை இயக்கத் தொடங்கும். அவர்கள் எதையெல்லாம் செயல்படுத்தினார்களோ, அதை அனைத்தையும், அவர்கள் புகுந்த உடல்களில் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றார்கள். அப்பொழுது அவர்கள் உடலில் இருந்த நோய்கள், இவர் உடல்களிலும் மாறிவிடுகின்றது.

இதைப் போன்றுதான். அன்று அகஸ்தியனின் தாய் தந்தையர்கள், தன் குழந்தை மேல் உள்ள பற்று அதிகரித்து, இந்த உடலை விட்டு அகன்ற அந்த இரு ஆன்மாக்களும், அகஸ்தியனின் உடலுக்குள் அது புகுந்தது.

புகுந்தபின், அந்த உணர்வின் தன்மை வலிமை பெற, அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அனைத்தையும், அகஸ்தியன், இந்த 5 வயதில் வானவியல், புவியியலை உணர்ந்தறிந்து, துருவப் பகுதியில் நமது பூமிக்கு, ஈர்த்து வரும் இந்தச் சக்தியினை உணரும் பருவம் பெறுகின்றான்.

 பின், இவன் அறிந்த உணர்வின் துணை கொண்டு, வானை நோக்கி உற்றுப் பார்க்கும் பொழுது, நமது பூமியின் சுழற்சியின் ஈர்ப்பிற்குள், துருவப் பகுதியில், இந்த சூரிய குடும்பத்திற்குள் விளைந்த உணர்வினை, இது போகும் பாதையில், துருவப் பகுதியில் கவர்ந்து, நமது பூமிக்குள், அணுக்கள் அலைகளாக மாறிக்கொண்டு இருப்பதையும், உணர்கின்றான்.

இவ்வாறு, உணர்ந்த உணர்வுகளை அவன் நுகரப்படும் பொழுது,
எதை உற்று நோக்கி, துருவப் பகுதியில்
கூர்மையாக உணர்வைச் செலுத்துகின்றானோ,
அந்த உணர்வை, அவன் நுகரும் பருவம் பெறுகின்றான்.
நுகர்ந்த உணர்வுகள் அவன் உடலுக்குள் கலக்கின்றது. மற்ற தாவர இனங்களுக்குச் சத்தாகச் செல்லும் அந்தச் சத்தை, “தாவர இனச் சத்தை உணவாக உட்கொண்டு அணுக்களாக விளைந்த அணுக்களுக்கு”, இதை உணவாகக் கொடுக்கின்றான்.

அவனுடைய சந்தர்ப்பம், அவ்வழியில் நுகரும்படி செய்கின்றது. அவனுக்கு அது கிடைக்கின்றது. அவ்வழியில் நுகர்ந்து, அந்த உணர்வின் துணை கொண்டு, சூரியக் குடும்பத்தின் நிலைகளை அறியும் பருவம் வரும்பொழுது, அகஸ்தியன் துருவனாகிறான். அவ்வாறு துருவனாகி, அவன் வாழ்க்கையில் இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை, உணர்வின் ரூபமாக அறியும் ஆற்றலை, அவன் பெறுகின்றான்.

அந்த அறிவு அவனுக்குள் விளைகின்றது. உதாரணமாக, ஒன்றுமறியாத ஒரு புழு, எந்தச் செடியின்மேல் அந்த உயிரணு பட்டு, புழுவாக ரூபம் பெற்றதோ, அந்தச் செடியின் மணத்தை உணர்வின் அறிவாக இயக்கி, அதே செடியைத் தன் ஞானமாக, அதை உணவாக உட்கொண்டு வளர்கின்றது.

இதைப் போன்றுதான், வானுலக உணர்வுகள்  துருவப் பகுதியில் வெளிவரும் பொழுது, அகஸ்தியன், தனக்குள் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அந்த உணர்ச்சிகள் ரூபமாக உணர்ந்தறியும் தன்மை பெறுகின்றான்.

அவன் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும், தன் நினைவாற்றலால் வெளிபடுத்துகிறான். வெளிப்படுத்திய உணர்வுகளை, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, இந்தப் புவியில் பரவச் செய்துள்ளது. அவ்வாறு பரவி இருப்பதைத்தான், நமது குருநாதர் காணும்படிச் செய்தார்.

அகஸ்தியனாக இருக்கும்பொழுது, அவன் கண்டுணர்ந்த உணர்வும், அவன் துருவனானபின், அவனின்று விளைந்த உணர்வின் ஒளி அலைகளை, சூரியன் கவர்ந்து வைப்பதும், அதன் வழியில் பிரபஞ்சத்தின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிப் பெருக்கி, இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை  உணர்கின்றான், அகஸ்தியன்.

அப்பொழுதுதான், 5வது வயதில் துருவன் என்ற நிலை அடைகின்றான். துருவன் என்ற பெயர் வந்தபின் தன் வளர்ச்சியில், இன்று நட்சத்திரங்கள் எவ்வாறு உரு பெற்றது? நமது கோள்கள் எவ்வாறு உருவானது? சூரியன் எவ்வாறு உருவானது? என்ற நிலையை,
இவனுக்குள் விளைந்த உணர்வின் நிலை கொண்டு,
அவனுக்குள் அறிவின் உணர்வுகள்,
உணரும் பருவம் வருகின்றது.

அவ்வாறு உணரும் பருவங்கள் வரும்பொழுதுதான், தனக்குள் இருக்கும் இயக்கமும், வானியல் இயக்கமும், புவியியல் இயக்கமும் தன்னுள் கண்டுனர்ந்தபின், இந்தத் தாவர இனச் சத்துகள் எவ்வாறு உருவானது, அந்த உணர்வின் சத்தினை உயிரணுக்கள் எவ்வாறு நுகர்ந்தது? என்ற உணர்வுகள், அவனுக்குள் உருப்பெறத் தொடங்குகின்றது.

இவ்வாறு, கேள்விகளின் உணர்வுகள் விளைந்து, விளைந்து, இந்த அண்டங்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையை, அறியும் உணர்வினைச் செலுத்துகின்றான், இந்தத் துருவன்.

அதாவது, தன் உடலிலே பதிவு செய்து, ஒவ்வொன்றும் அவனுக்குள் இணைந்தே வளர்ச்சி பெற்று வருவதையும், அவன் அவனுக்குள் உணரும் சக்தி பெறுகின்றான்.

அவ்வாறு சக்தி பெற்ற உணர்வின் துணை கொண்டு,  நமது சூரியப் பிரபஞ்சம் எப்படி உருவானது? இதைப் போல, பேரண்டத்தில் எப்படி இத்தகைய நட்சத்திரங்களும், கோள்களும் உருவானது? என்று அறியும் உணர்வினை, விண்ணை நோக்கிச் செலுத்துகின்றான். பின், ஆதியில் அகண்ட அண்டம் எவ்வாறு இருண்ட நிலைகள் கொண்டிருந்தது என்ற மூலத்தையே அறிகின்றான்

நமது குரு அருளால், அந்தத் துருவன் பெற்ற, அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின், அனைத்து சக்திகளையும், நீங்கள் அனைவரும் பெற எமது அருளாசிகள்.
அகஸ்தியன் கண்ட பிரபஞ்சத்தின் இரகசியங்கள் 
ஒவ்வொரு உணர்வு கொண்ட அணுக்கள், இன்று வான் வீதியில் பரவிக்கொண்டிருக்கும்போது, தனக்குள் வலிமை கொண்ட உணர்வுகள் வலிமையற்றதைத் தாக்கும்போது, அது வெப்பமாகி, அதன் நிலைகள் இரண்டறக் கலந்து, அதிலிருந்து வெளிப்படும் ஆவி, எடையற்றதாக மாறுகின்றது.

இவ்வாறு எடையற்றதாக மாறும்போது, அது மேகங்களாக ஒரு அடர்த்தி அடைகின்றது. இவ்வாறு அணுக்களில் மோதிய உணர்வுகள், பல மேகக் கூட்டங்களாக அமைந்து, இம்மாற்றம் ஏற்படும் போது, இந்த அணுக்கள் இந்த மேகக் கூட்டத்துக்குள், ஒன்றுடன் ஒன்று மோதும் போது நீராக மாறுகின்றது.

நீருக்குள் சிக்குண்ட இந்த அணுக்கள் எடைகூடி,
அகண்ட அண்டத்தில் ஓடுகின்றது.
ஓடும் வேகத்தில் அதனுடைய உராய்வால்,
அது ஆவியாக மாற்றப்பட்டு,
இந்த அணுக்கள் ஒன்றாக இணைத்து,
ஒரு திடப்பொருளாக உருவாகின்றது.

அவ்வாறு உருபெற்ற பொருளைத்தான் “பரம்பொருள்” என்று அன்றைய துருவன், தனக்குள் கண்டறிந்த உணர்வினை, காரணப் பெயரை வைத்து, வெளிப்படுத்துகின்றான். அவனில் விளையப்பட்ட அந்த உணர்வுகள், இன்றும் இதே சூரியனின் காந்தப் புலனறிவில் கவரப்பட்டு, இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டுள்ளது.

இவ்வாறு அவன் கண்ட பேருண்மையை, “பரம்பொருள்” அதாவது எல்லையே இல்லாதே அகண்ட உலகில். பரம் என்பது ஒரு எல்லை. அது ஒரு பொருளாக, ரூபமாக அமைந்துள்ளது என்பதனை, “பரம்பொருள்” என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றான் “துருவன்”.

ஆகவே இதன்வழி வளர்ச்சி பெற்று, ஒரு ரூபமாக ஆனபின், அதன் ஓடு பாதையில் ஓடப்படும் பொழுது,
மற்ற அணுக்களுடன் மோதப்படும் பொழுது,
சுழற்சி ஏற்பட்டு,
உராயப்படும்போது வெப்பமும்,
தான் துருவப் பகுதியில், தன் ஓடுபாதையில்,
இத்தகைய அணுக்களை ஈர்த்து,
இதற்குள் உருவாகும் வெப்பமும்,
இந்த அணுக்களும் இரண்டறக் கலந்து,
மற்ற பாறைகளாகவும், மற்ற உலோகங்களாகவும் உருமாறுகின்றது.

இப்படி தன் வளர்ச்சியில் சுழற்சியின் தன்மை பெரும் பொருளாக மாறும் போது, அதனுடைய சுழற்சி வேகமும் கூடி, சுழற்சி வேகம் கூடும் பொழுது வெப்பமும் கூடி, ஈர்க்கும் சக்தியும் கூடி, இவை அனைத்தும் இந்த பரம் பொருளுக்குள், வெப்பம்  அதிகரித்து தன் அருகிலே இருக்கும் பொருள்களை உருமாற்றிக் கொண்டே உள்ளது.

அதிலே உருவாகும் ஆவியின் தன்மை வெளிப்படுத்துவதும், அதற்குள் பல உருமாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது இந்தப் பரம்பொருள். இதை நாம் உணர்வதற்காகத்தான், அன்று துருவன் “சிவலிங்கம்” என்று காரணப் பெயர் வைத்தான்..

இவ்வாறு  சிவலிங்கமாகி, அது உருப்பெற்று, அதன் உணர்வின் வளர்ச்சியில், அது வளர்ச்சியாகி, பெரும் கோளாக உருமாறுகின்றது. பெரும் கோளாக உருமாறும்பொழுது, இதனுடைய சுழற்சியின் தன்மையால், வெப்பத்தின் தன்மை அதிகரித்து, அதிகரித்து அமிலச் சக்தியாக மாறுகின்றது.

இவ்வாறு அமிலச் சக்தியாக மாறுபடும் இந்த சக்திகள், அது நட்சத்திரமாக மாறுகின்றது. அதிலிருந்து வெளிப்படும் அமிலங்கள், அதன் ஈர்ப்புவட்டத்தில் துகள்களாக மாறுகின்றது. அது, தான் உமிழ்த்தும் அந்த அமிலங்களில், தான் ஓடு பாதையில் செல்லும் போது, பல தூசுகள் அதனில் ஈர்க்கப்பட்டு, அதனின் உணர்வின் தன்மை வளர்ச்சி அடையும் பொழுதுதான், “பால்வெளி மண்டலம்” என்ற நிலை அடைகின்றது.

அவ்வாறு அடைந்தாலும், அதனுடைய ஓட்டத்தில், இதனுடைய ஈர்ப்பு சுழற்சியில் சுழலும்பொழுது, தூசிகளாக மாறுகின்றது. அந்த தூசிகளாக மாறுபட்ட இந்த உணர்வினை, சுழற்சியின் ஈர்ப்பில் தனக்குள் உணவாக எடுத்துக் கொள்கின்றது.

தான் வளர்ச்சியில் வெளிப்பட்ட இவைகள் அனைத்தும், உதாரணமாக, நூலாம்படைப் பூச்சி, எப்படி தன் உடலிலிருந்து வெளிப்படும் அமிலத்தை நூலாம்படையாகத் தனக்குள் ஒரு கூட்டாக அமைத்து, அந்த வலைக்குள் சிக்கும் மற்ற உயிரினங்களைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொள்வதும், அதே சமயத்தில் தன் உடலில் உருவான அமிலத்தை, மற்றொன்றின் மேல் பாய்ச்சப்படும் போது, அதைத் தனது இனமாக உருபெறச் செய்கின்றது.

இதைப் போன்றுதான், நட்சத்திரம் தான் உமிழ்த்தும் அமிலங்களை, நூலாம்படை போன்று வலை விரித்து, அது போகும் பாதையில் சிக்கும் மற்ற உணர்வுகளைத் தன்னுடன் இணைத்து, பால்வெளி மண்டலங்களாக அது உருபெற்று, இதன் சுழற்சியின் வேகத்தில் தூசியாகி, தனக்குள், உணவாக  எடுத்துக் கொள்வதும், இதன் ஈர்ப்ப்பு வட்டத்தில் சுழற்சி பெறும், இவைகள் கோள்களாக உருபெறுவதும், இதைப் போன்று ஒரு பிரபஞ்சமாக உருப்பெறுகின்றது.
இப்பொழுது நட்சத்திரம் எவ்வாறு உருவானதோ, இதைப் போன்றே இது ஈர்ப்பு வட்டத்தில் வருவதை,
மற்ற பிற மண்டலங்களில் இருந்து வரும் சத்தினை,
நட்சத்திரங்கள் எடுப்பதும்,
அந்த நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலங்களை அமைப்பதும்,
அதிலிருந்து தூசிகளாக வருவதை சூரியன் தனக்குள் இழுத்து,
மற்ற கோள்கள் உருபெற்று, 
ஒரு பிரபஞ்சமாக உருப்பெறுகின்றது.

இவ்வாறு உருபெற்றதுதான், நமது சூரியக் குடும்பம் என்றும், அதற்குள்தான் இந்த உயிரணு தோன்றியது என்ற உணர்வினை, தனக்குள் தன்னை அறிகின்றான்.

ஆகையினால்தான், ஆரம்பத்தில் தாயின் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள், அவனுக்கு “அகஸ்தியன்” என்று காரணப் பெயரைச் சூட்டினார்கள்.

பின் அவனுடைய வளர்ச்சியில் துருவத்தை நுகர்ந்து, துருவத்தின் வழியில் வரும் உணர்வினை, அது எவ்வாறு உருபெற்றது என்ற நிலையைத் தனக்குள் அறிந்துணர்ந்து, அதன்வழி அவனில் விளையவைத்த உணர்வுகள், இன்றும் நம் பூமியில், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு பரவிக் கொண்டுள்ளது.

இவ்வாறு உருவான பிரபஞ்சத்தை, அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்களும், துருவனின் உணர்வுகளில் விளைந்த உணர்வுகளும், நம் பூமியில் பரவிக் கொண்டிருப்பதும், பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும், அதனை நாம் அவர்கள் வழியில் நுகர்ந்தறிய வேண்டும்.

அவ்வாறு நுகர்ந்தறிந்து, நமக்குள்ளும் அதை வளர்த்துக் கொண்டு, துருவன் எவ்வாறு இன்று துருவ நட்சத்திரமானானோ, அவனின் ஈர்ப்பு வட்டத்தில் வந்தோர்கள் வாழ்ந்தும் இன்று சப்தரிஷி மண்டலங்களாக, வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதனை நாமும் பெறமுடியும் என்று, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், உங்களுக்குள் பதிவாக்கி, உங்கள் நினைவின் ஆற்றலின் துணை கொண்டு, மனிதன் என்ற முழுமை நீங்கள் அனைவரும் அடைய முடியும். எமது அருளாசிகள்.
4 அகஸ்தியன் கண்ட அண்டத்தின் ஆற்றல் 
தனது ஐந்து வயதிற்குள், ஒவ்வொரு தாவர இனத்தின் மணங்களை நுகர்ந்தறிந்து, அதன் இயற்கை நிலைகளை உணரும் பருவம் வருகின்றது. அவ்வாறு உணரும் பருவம் வரும்பொழுது, நுகர்ந்தறியும் உணர்வுகள் அவனுக்குள் சேர்ந்து, அந்த உணர்வுகளின் இயக்கம் எவ்வாறு? என்று வெளிப்படுத்துகின்றான், அந்தப் பிஞ்சு உள்ளத்தில்.

ஆகவே, அக்கால மக்கள் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றனர். அணுவின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து அவன் வெளிப்படுத்துவதால், மற்ற மக்கள் இவ்வாறு காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

அவன், இந்தப் புவியின் தாவர இனச் சத்தை நுகரப்படும் பொழுது, அதை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்கள், அதன் மணத்தை நுகர்ந்தறிந்து, அதை உணவாக உட்கொள்வதும், இப்படிப் பல நிலைகளை அவன் கண்ணுற்றுப் பார்த்து, அறியும் ஆற்றலைப் பெறுகின்றான்.

பின் ஒன்றை ஒன்று விழுங்கி, மாறுபட்ட உடல்கள் பெறுவதையும் உணர்கின்றான். இன்று ஒரு புழுவை, குருவி கொத்தி உட்கொண்டால், அந்தப் புழுவின் உயிரான்மா குருவியாகப் பிறப்பதும், அதைக் காக்கை உட்கொண்டால் காக்கையாகவும் பிறக்கின்றது.

இதைப் போன்று, எது எதை விழுங்குகின்றதோ, அந்த உயிரான்மா அதற்குள் சென்று இப்படி ரூபங்கள் மாறிக் கொண்டே செல்கின்றது. இதைப் போன்று, மானை ஓநாய் தின்றால் ஓநாயாகப் பிறக்கின்றது. இப்படி எத்தனையோ வகையாக, மானை அடித்துக் கொல்லும் விலங்குகளுக்குத்தக்க, மானின் உயிரான்மா உருமாற்றம் பெறுகின்றது.

இதைப் போன்று மற்ற உயிரினங்கள் எவை எவை அடித்துக் கொல்லுகின்றதோ, அடித்துக் கொல்லும்போது,
அதனின்று வெளிப்படும் உயிரான்மாக்கள்
அடித்துக் கொன்ற உடலுக்குள் புகுந்து,
அதன் உணர்வைக் கருவாக்கி,
பரிணாம வளர்ச்சி அடைவதை
தனது ஐந்து வயதிற்குள் தெளிவாக்குகின்றான், அகஸ்தியன்.

ஒவ்வொரு செடியையும் நுகர்ந்தறிந்து, அதனுடைய இயக்க நிலைகளை அறிந்து கொண்டு வருகின்றான். அறிந்தபின், காய்கறிகளை வேகவைத்து, ருசியாகச் சாப்பிடப் பழகினான்.

அப்புறம் கனிகளைச் சாப்பிட்டான். கனிகளின் உணர்வினை அதிகமாகச் சாப்பிட்டாலும், அதன் உணர்வு கொண்டு, உணர்வுகளின் அணுக்கள் மாறி, அந்த கனியைச் சாப்பிட்ட உயிர் அங்கே சென்றபின், அதனைக் கவர்ந்து மாறிவிடும் (தனித்துச் சாப்பிட்டால்).

இதையெல்லாம் உணர்ந்தபின், இன்று புல் இருக்கின்றது. பயிராகி வருகின்றது. அதில், இதைப் போல எடுத்து உணவாக உட்கொள்ளவும், பல செடிகளை இணைத்து, புதுப் புதுச் செடிகளை உருவாக்கினார் அகஸ்தியர். ராகி, சோளம், அரிசி, அவைகளையெல்லாம், மற்ற புல் பூண்டிலிருந்து எடுத்து, உருவாக்கினார்.

இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ வகையான சோளம், இதெல்லாம் மாற்றுவதுபோல் மாற்றி, அதனை வேக வைத்து, மனிதன், கலவையாகச் சாப்பிடுவதும், தாவர இனங்களில் உருவாவதைச் சேர்த்து ருசியாக சாப்பிடப் பழகினார்.

என்று நெருப்பைக் கண்டுபிடித்தானோ,
அதன் தன்மை கொண்டு,
வேக வைக்கும் உணர்வுகள் மாறுகின்றது.
இப்படி மாற்றியமைத்தவர் அகஸ்தியர்.
ஆக, இந்த உண்மையின் உணர்வை அறியப்படும் பொழுது,
இந்தச் செடி எப்படி உருவாகின்றது
என்று சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்பொழுதுதான், நமது பூமி துருவப்பகுதியில் இருந்து, அதனைக் கவருவதை உணர்கின்றார். இந்த விஷத்தை அடக்கக்கூடிய சக்தி இவனிடம் இருந்ததனாலே, எதையுமே தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது. மற்ற மனிதனைக் காட்டிலும், இவன் அந்த அறிவில் வளர்ச்சி உள்ளனவாக, வருகின்றான். 

அப்படிப் பெற்றவன், வான் வீதியில் உற்றுப் பார்க்கும் பொழுது, இந்த 27 நட்சத்திரங்களும், ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது, மின்னலாக மாறுகின்றது என்பதைக் காண்கின்றான்.

நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும், பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மை நம் பூமிக்குள் வந்தால், மிகவும் தீங்கு செய்கின்றது என்பதனை, இவன் உடலுக்குள் தீங்கினை மாற்றும் சக்தி இருந்ததனால், உணர்வை நுகர்ந்து, கொஞ்சம், கொஞ்சமாக இரத்தத்தில் கலந்தது. மின் கதிர்களை ஜீரணிக்க கூடிய சக்தி, அவனுக்கு இருந்தது. அவைகள் வளர்ச்சி அடைந்தது.

இவ்வாறு, இந்த உயிரைப் போலவே இந்த அணுக்களின் தன்மை, அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ச்சியடைகின்றது.

27 நட்சத்திரங்களும், 27 விதமான நிலைகளில் மோதும் பொழுது, மின் கதிர்களை அவன் சுவாசித்து, அவன் வாழ்க்கையில், அதனை அடக்கும் வல்லமை இருந்ததனால்,
சூரியன் தனக்குள் எப்படி பாதரசமாக மாற்றி,
அது வெளிப்படுத்தும் உணர்வுகள்
உலகிற்கே ஒளி தருவது போல்,
அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி
ஒளியின் அறிவாக
அகண்ட அண்டத்தையும் அறியும் உணர்வுகள்
அகஸ்தியனுக்குள் வந்து சேர்கின்றது.
5  அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் ஆற்றல்களை, குரு வழியில் அனைவரும் பெரும் வழி 
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, பல மைல் உயரத்தில் விமானத்தில் சென்று, காந்தப்புலனறிவை உயரத்திலிருந்து பாய்ச்சி, நீர் எங்கு அதிமாக உள்ளது? எந்தப் பாறை உள்ளது? என்று கண்டுணருகின்றனர், விஞ்ஞானிகள். அவர்கள், பூமி தன் ஆத்மாவாக எடுப்பதைத்தான் அவ்வாறு கண்டுணர்ந்து, அதன் மூலமாகத்தான், இதையெல்லாம் அறியும் நிலை பெறுகின்றனர்.

மகரிஷிகள் பண்டைய காலங்களில், அவர்களது நுகரும் சக்தியால், இப்பூமிக்குள் இருக்கும் வெப்ப நிலையையும், அது அனைத்தும் ஆவியாக மாறி, தாவர இனங்களாக மாறி, பரமாத்மாவில், தாவர இனச்சத்து, சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டுக் கலப்பதை அறிந்துணர்ந்தார்கள்.

தம் உடலில் உள்ள, உணர்வின் இயக்கத்தைக் கண்டறிந்த அம்மகரிஷிகள், தம் எண்ணத்தைப் பூமிக்குள் செலுத்தி, அதற்குள் இருக்கும் தாவர இனச்சத்தையும் பாறைகளின் நிலையையும் நுகர்ந்தறிந்தார்கள்.

இன்றைய விஞ்ஞானிகள், இயந்திரத்தின் துணைக் கொண்டு கண்டுணர்கின்றனர். அன்றைய நிலையில், மகரிஷிகள் பூமிக்குள்ளிருக்கும் வெப்ப நிலைகளையும், மாற்றங்களையும், காடுகள் உருவாகின்றதையும், தம் உணர்வின்  ஆற்றலால், கண்டுணர்ந்தார்கள்.

ஒரு உயிரணு, தனக்குள் நுகர்ந்து, உணர்ந்து உடலாகும் நிலையும்,
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையும்,
மனிதனானபின், தன் ஆற்றல்மிக்கச் சக்தியால்,
தாம் கண்டுணரும் சக்தி பெற்று,
இந்த பூமிக்குள் இருக்கும் செயலாக்கத்தை
தன் உடலில் இருக்கும் உணர்வலைகளைச் செலுத்தி,
அதையெல்லாம் அறிந்து கொண்டனர்.

அகத்தியர் என்பவர், முதல் மனிதனாக
இயற்கையின் மாற்றம் எவ்வாறு ஆகின்றது?
இயற்கையின் அணுவின் ஆற்றல்,
எவ்வாறு ஆகின்றது?
அணுவின் வளர்ச்சி எவ்வாறு ஆகின்றது?
என்ற நிலைகளைக் கண்டுணர்ந்தார்.

பூமிக்குள் நடக்கும் செயல்களையும், உறைந்த நிலைகளும், விண்ணின் ஆற்றல்களையும், வேறு பிரபஞ்சத்தில் ஏற்படும் சில நிலைகளையும், அவர் அறிந்துணர்ந்தார்.

நமது பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களையும், பூமியிலிருந்து வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் பரமாத்மாவாக மாறுகிறது என்ற நிலையையும் அவர் தெளிவாகக் கண்டுணர்ந்து, அவர் உடலில் வளர்த்துக் கொண்ட, உணர்வின் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, இன்றும் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.

விண்ணுலகின் ஆற்றலைக் கண்டுணர்ந்த, முதல் முதல் மனிதனான அகத்தியர், புழுவிலிருந்து மனிதனாக மாறி, பேரண்டத்தின் சக்தியையும், பூமிக்குள் இருக்கின்ற சக்தியையும், பூமிக்குள் இருக்கும் உணர்வலைகளையும், கண்டுணர்ந்தார்.

தனக்குள் (மனித உணர்வுக்குள்) கண்டுணர்ந்ததைச் சக்தி வாய்ந்ததாக மாற்றி, தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி, எதனையும் அறிந்திடும் ஆற்றல்மிக்க உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு, தனக்குள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டவர், அகத்தியர்.

அவர் அணுவின் ஆற்றலை அறிந்தவர் என்று சொல்வார்கள். இன்று கதைகளில் வரும் அகத்தியர் இவரல்ல. அன்று, பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன், முதல் மனிதனாக, விண்ணின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவரே, அகத்தியர்.
சந்தர்ப்பவசத்தால், அவருக்கு இத்தகைய ஆற்றல் கிடைக்கின்றது.
அவர் கற்றுணர்ந்த இந்த உணர்வுகள்,
அவர் உடலிலே விளைந்த
ஆற்றல்மிக்க சக்திகள், இன்றும், பூமியிலே பரமாத்மாவில் கலந்து, படர்ந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் நுகரவே இந்த உபதேசம்.
அகண்ட அண்டத்தில் சூரியன், எத்தனையோ மைல் பரப்பளவு கொண்டது என்று சொன்னாலும், நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, நமது நெற்றியில் பொட்டு வைப்பது போன்றுதான், காண முடிகின்றது. ஆனால், நமது பிரபஞ்சத்தில் வியாழன் கோள் மிகவும் பெரிதானது. அதை நாம் பார்க்க முடிகிறதா என்றால், இல்லை.

சனிக் கோளைப் பார்க்க முடிகின்றதா என்றால், முடியவில்லை. அது நுகர்ந்து எடுக்கும் உணர்வுகள், அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் வெளி வரும்பொழுது, இரண்டும் மோதலில் உறைந்து, வளையம் போல் சுழன்று, அது தனக்குள் இத்தகைய நிலைகளை உருவாக்கும் நிலைகள் பெற்றது. 

அது கரைந்து வரும் உணர்வின் நிலைகளை, சூரியன் காந்தப் புலனறிவு கவர்ந்து, மற்ற நட்சத்திரங்களின் உணர்வுகளுடன் கலக்கின்றது.  அவ்வாறு இணைந்து இருந்தால்தான், ஒன்றுடன் ஒன்று இணைந்து கலக்கும் சக்தியும், வளரும் பருவமும், உருவாகும் தன்மையும் பெறுகின்றது.

ஆகவே சனி, அனைத்தையும் பெருக்கும் சக்தி பெற்றது. சனிக்கோள் செயலிழந்து விட்டால், நமது பூமியில் நீர் நிலைகளே இல்லாது போய்விடும். நீர் நிலைகள் இல்லையென்றால், நம் பூமியில் உயிரினங்கள் வாழமுடியாது.

வான் வீதியில், மற்ற கோள்களில் நீருடன் கலந்திருக்கும் பொழுது பாறைகள் உருவாகின்றது. அது இணைந்திடும் நிலைகள் கொண்டு, நடு மையம் ஏற்படும் வெப்பத்தால், தன் அருகில் இருப்பதை உருக்குகின்றது.
அவ்வாறு உருக்குவதும், ஆவியாக மாற்றுவதும்,
கோள்கள் அதை வெளித் தள்ளுவதும்,
பல வித்தியாசமான பொருள்கள் உருமாறுவதும்,
நமது பூமியிலும் சரி, மற்ற கோள்களிலும் சரி,
இவ்வாறு வருகின்றது,
இதுவெல்லாம் துருவன் கண்டுணர்ந்தவை.  அவனில் கண்டுணர்ந்து வெளிப்பட்ட முச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு, நம் பூமியிலும் பரவியுள்ளது.  இதைத்தான் நமது குருநாதர் நுகரும்படி செய்தார்.

பிரபஞ்சத்தின் இரகசியமும், பேரண்டத்தின் அகண்ட நிலையையும், உணர்வுப் பூர்வமாக உணர்ச்சிகள் எப்படி இயக்குகின்றது? உணர்ச்சிகள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார் நமது குரு. அந்தத் தெளிவான உணர்வின் தன்மையைத்தான், சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள், சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
உங்களுடைய நினைவுகள்
கூர்மையாக நினைவாற்றலைச் செலுத்தும் பொழுது,
உணர்வுகள், உங்களுக்குள் பதிவாவதும்,
பதிவான பின், ஈர்க்கும் சக்தி வருவதும்,
நுகரும் சக்தி பெறுவதும்,
உயிருடன் ஒன்றி, உடலுக்குள் பரப்பும் சக்தி பெறுவதும்,
இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

அதன்வழி உங்களுக்குள் வரும் சக்தியின் நிலைகளை, நீங்கள் நுகருவதற்கு, உங்களில் பதிவாகி, பதிவான உணர்வின் துணை கொண்டு, அகண்ட அண்டத்தின் நிலைகளை, நீங்கள் அறியும் பருவம் பெறுகிறீர்கள்.

அகண்ட அண்டத்திலிருந்து வரும் உணர்வுகளைக் கவர்ந்து,என்றும் மரணமில்லாப் பெருவாழ்வுஎன்ற நிலையை அடைந்திடும் நிலையும், “ஒளியின் சரீரமாக உருப்பெறும் சக்தியும்”,  நீங்கள் பெறும் தகுதியை, இப்பொழுது உபதேசிக்கும் வாயிலாக, உங்களுக்குள் அருள்ஞான வித்தாகப் பதிவாக்கப்படுகின்றது. 

எமது குருநாதர் எமக்கு உருவாக்கியது போன்று, உங்களுக்குள்ளும் இதை உருவாக்கி, நினைவினை வலுக்கொண்டு நுகரப்படும் பொழுது, அதனைப் பெறும் நிலையும், உருவாக்கும் நிலையும், நீங்கள் பெறுகின்றீர்கள்.

நம் உடலை உருவாக்கிய  அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரொளியை உணவாகக் கொடுக்கும் வழி 

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும், நாம் பெறவேண்டும் என்ற ஆசையுடன், நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறும் வண்ணம், தியானித்து வருகின்றோம். 

தினம் தினம், அதிகாலை  4.00 – 6.00  மணிக்குள், ஒரு அரை மணி நேரமாவது உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற, நீங்கள் தியானித்துப் பழக வேண்டும். இதை நீங்கள் தலையாயக் கடமையாகப் பழக வேண்டும்.

நம் உடலுக்கு, நாம் எப்படி ஆகாரத்தைச் சாப்பிடுகின்றோமோ, அதைப் போன்று, நம் உடலில் உள்ள அணுக்களுக்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய வேண்டும். 

நம் பூமியில், 27 நட்சத்திரங்களில் இருந்து வரும் உணர்வுகள், புவி ஈர்ப்பின் துணை கொண்டு, கவர்ந்து, அது மின்னலாகப் படருகின்றது. சில நட்சத்திரங்களின் உணர்வுகள், எப்பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ, அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கு ஒப்ப, மண்ணுடன் கலந்து வைரங்களாக விளைகின்றது. இதைப் போன்று,
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்,
நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு, 
சிறுகச் சிறுகச் சேர்க்க, அந்த ஜீவ அணுக்கள்
உயிரைப் போலவே, உயிரணுவாக மாறிவிடும். 

இந்த உடலில் உள்ள, பல கோடிக்கணக்கான ஜீவ அணுக்களையும், உயிரைப் போலவே, உயிரணுவாக மாற்றும் பொழுது, 
ஓர் ஒளியின் உடலாகவும்,
எத்தகைய விஷத்தன்மையும் ஒளியாக மாற்றும் திறனையும்,
நமது உயிர் பெறுகின்றது,  என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

ஈஸ்வராய குருதேவர் உற்று நோக்கிய  2000 சூரிய குடும்பத்தின் உணர்வுகள் 
எமது கண்ணின் நினைவாற்றலை
விண்ணிலே செலுத்தச் செய்து, நமது பிரபஞ்சம், எப்படி  2000 சூரிய குடும்பத்துடன் தொடர்பு கொண்டு வாழ்கிறது?  என்றும், அதன் கலவையின் நிலைகள், இந்த உடலின் நிலைகளுக்கு உண்டு என்றும், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்கள், நட்சத்திரங்கள் அதனுடைய தன்மையைக் கவர்ந்து, நட்சத்திரங்களுக்கு எப்படி வீரிய உணர்வு வருகிறது என்று காட்டினார். நட்சத்திரங்கள் கவர்ந்து வெளிப்படுத்துவது, தூசிகளாகப் பறக்கப்படும் பொழுது அதை சூரியனின் காந்த சக்திகள் கவருவதைக் காட்டினார்.

இவை இரண்டும் மோதும்பொழுது ஒளிக்கதிர்களாக ஓடுவதும், ஒளிக்கதிர்கள் மற்றொன்றோடு எப்படிச் சேருகின்றது என்றும், அதன் வழி மற்றதோடு சேர்ந்து, ஒன்றுடன் ஒன்று உராய்கின்றது என்று காட்டினார்.
ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது,
எப்படி வெப்பம் வருகின்றதோ
இதைப் போன்றுதான், மின் கதிரின் உணர்வுகள்
மற்றதுடன் கலந்து எவ்வாறு உருவாகின்றது?
என்ற நிலைகளை குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

பின், அகண்ட அண்டத்தையும்,
அதன் நிலைகளை நம் பிரபஞ்சம் நுகர்வதையும்,
பிரபஞ்சத்திற்குள் நுகர்ந்த உணர்வின் சக்தி, 
‘’நான் கண்ட உணர்வை
உனக்குள் பதிவு செய்கின்றேன், உற்று நோக்கு’’
என்று கூறினார்.


‘’இந்த  2000 சூரிய குடும்பத்தின் உணர்வுகளை, உன்னால் அறிய முடியும்,
உணர்வின் ஆற்றலை நீ பருக முடியும்,
அதன் தொடர்பு கொண்டுதான் நீ வாழுகின்றாய்”.
எண்ணத்தின் வலுகொண்டு,
அதைப் பெறவேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது,
2000  சூரிய குடும்பங்களிலிருந்து வரும் அனைத்திலும்,
உன் நினைவின் ஆற்றல் ஊடுருவி,
அதனுடன் கலந்து இணையும் சக்தி வருகின்றது.

அந்த இணைந்த உணர்வுகள் நீ பெறும் பொழுது,
உனக்குள் அறிவின் தெளிவும்,
உனக்குள் இருளை அகற்றிடும் ஆற்றல் மிக்க உணர்வுகளும், நீ பெறுகின்றாய்  என்று உணர்த்தினார்.

‘’நம் சூரியன், மற்ற பிரபஞ்சத்தின் உணர்வுகளின் தன்மை கொண்டு, ஒளியாகச் சுழன்று இந்தப் பிரபஞ்சத்தை வளர்க்கின்றது. இதைப் போன்று, அகண்ட அண்டத்திலிருந்து வரும், மற்ற கோள்களின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, உணர்வின் ஒளிகள்  வெளிப்பட்டு, உன் உடலுக்குள் ஊடுருவும் உணர்வின் தன்மையை உன்னுடைய உயிர் இயக்குகின்றது’’.

மற்ற மண்டலத்திலிருந்து வருவதை, சூரியன் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகின்றதோ, இதைப் போன்றுதான் உனது உடலிலும், உணர்வின் அறிவாக அறியும் சக்தியும், அதன் இயக்கத்தைத் தனக்குள் அடக்கிச் செயல்படுத்தும் நிலையும், வருகின்றது.

உனக்குள் பதிந்த நிலைகளை,
உன்னைப் பின்பற்றுபவரிடம் பதிவாக்கும் பொழுது,
எவர் இந்த உண்மையின் உணர்வைப் பின்பற்றுகின்றாரோ,
அவரும் அகண்ட அண்டத்தையும் அறியும்  தன்மை வருகின்றது’’.

அகண்ட அண்டத்தை அறிந்த அகஸ்தியர், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அந்த பேரொளியைப் பெற முடியும். அந்த ஒளியின் தன்மை பெறும்பொழுது, இருளென்ற நிலைகளை நீக்கி, அந்த வலுவின் தன்மை  கொண்டு, ஒளியின் சரீரமாக முடியும். 

அனைவரும் ஒளியின் சரீரம் பெற வேண்டும்,
என்ற உணர்வு உனக்குள் வரும்பொழுது,
அவரில் வரும் தீமையின் உணர்வை அடக்கி,
உனக்குள் ஒளியாக்கும் உணர்வின் தன்மையை,
வளரச் செய்யும் முறையே இது என்று குருநாதர் உபதேசித்தார்.
  
அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று, அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து, ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார், அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி, நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி, இதனுடன் சுழன்று, உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது,  அகண்ட அண்டத்தில் வருவதையும், உங்கள் உணர்வுக்குள், அது பெறும் உணர்ச்சியின் நிலையை அணுவாக மாற்றும் நிலை கொண்டு, அது உருப்பெற்று விட்டால்,  தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.

உங்களால் நினைத்த நேரத்தில், அகண்ட அண்டத்தினையும், அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.

அதில் வெளிப்படும் உணர்வில், அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்து, பகைமை உணர்வு உங்களுக்குள் வராது,  பேரின்ப உணர்வினை  உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது, எமது அருளாசிகள்.

நம் குரு, என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து, உங்கள் கண்ணின் நினைவை, என்னிடத்தில் செலுத்தினாலும், நீங்களும், அண்டத்தில் மிதக்கின்றீர்கள். அதனின் உணர்வை, நினைவை கொள்ளும் பொழுது, அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.
அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன், துருவனாகி, துருவ நட்சத்திரமானான்.
அவன், அகண்ட அண்டத்தில் வருவதை, ஒளியாக மாற்றுகின்றான்.
அதன் உணர்வின் தன்மை, இந்த பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது, 
அகண்ட அண்டத்தில் வருவதையும்,
ஒளியாக மாற்றிடும் திறன்,
நீங்கள் பெற வேண்டும். 

நீங்கள் சிறிதளவே இருப்பினும், இந்த உணர்வின் தன்மை, உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது.

ஆகவே, இந்த மனித உடலில் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி, இந்த வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட்டு, சர்வத்தையும் ஒளிமயமாக்கும் அருள் சக்தி பெறுவோம் என்று பிரார்த்தித்து, குரு அருள் உங்களுக்குள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்தியில் இருந்து மீண்டு, அருள் வாழ்க்கை வாழ்வோம். அனைவரும், தெளிந்த மனம் கொண்டு வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம், தியானிப்போம். எமது அருளாசிகள்.