ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2012

சப்தரிஷி மண்டலமும் ஒளி சரீரமும்


                                  

1. பௌர்ணமி தியானத்தின் முக்கியத்துவம்
இந்த பௌர்ணமி தியானம் மிகவும் முக்கியம். இதை ஏன் சொல்லுகின்றோம் என்றால் நாம் எங்கிருந்தாலும் நம்முடைய எண்ண அலைகள் விண்ணை நோக்கிக் குவிகின்றது. அப்படி குவிக்கப்படும் பொழுது, மனித உடலில் இருந்து ஒளியின் உணர்வுகளைப் பெற்று,  நமது குருநாதர் ஆரம்பத்தில் விண் சென்ற உணர்வுகளைப் பெற முடிகின்றது. அந்த ஒளியின் உடலிலிருந்து வந்த, ஒளி அலை நம் பூமியில் படரப்பட்டு, அந்த உணர்ச்சிகள் தூண்டி, மீண்டும் இங்கே எழுகின்றது.

            எழுந்த நிலைகளில், அந்த வித்தின் சத்துதான் எனக்கும் அது கிடைத்தது. எமது குருநாதர், அருள் வழி கொண்டு எமக்கு அவர் கொடுத்த வித்தினை, அவர் காட்டிய வழிகளில் வளர்த்து, அதை உங்களுக்குள்ளும் பல வித்தாக விளையச் செய்வது. 

            ஒரு நெல் பசியைப் போக்காது. பல நெல்கள்  ஒன்று சேர்ந்து, ஆக்கப் பணிகளுக்கு பயன்பட்டு, அதை எப்படி உணவாக உட்கொள்கின்றோமோ, அதைப் போன்று, நாமெல்லம் இந்த நிலைகளைச் செய்தால், துரித நிலைகளில் பெறலாம்.

            பல ஆண்டுகள் நான் தனித்துச் செய்தாலும், அந்த உணர்வின் தன்மையைப் பல ஆயிரமாகச் சத்து சேர்ப்பது, மிகக் கடினம். நாம் எல்லோரும் சேர்ந்து, மெய் ஒளியின் தன்மையை நம் குருநாதர் காட்டிய நிலைகளில், ஒவ்வொரு உடலிலும் சேர்த்து, துன்பத்தை நீக்கி இன்பத்தின் நிலைகள் பெறுவதற்கு, ஆத்ம சுத்தி வழி கொண்டு, அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் பொழுது, உங்களுக்குள்ளும் அந்த சத்து விளைகின்றது.

            நமக்குள் ஒருவருக்கொருவர் கலந்து, அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றால்தான் முடியுமே தவிர,  தனியே ஒருவர் செல்ல முடியாது. 

            நாம் அனைத்தும் ஒன்று சேர்க்கும் பொழுது, எவர் ஒன்றுகின்றனரோ அவர் பலன் பெறுகின்றார். நாம் இந்த வழிகளில், நமக்குள் உறுதுணையான நிலைகளை ஏற்படுத்திக் கொண்டால்தான், நாம் உருப்பெற முடியும்.
     
      இந்தக் கூட்டு தியானங்களில், உங்கள் ஒவ்வொருவரையும் ஐக்கியப்படுத்தி, பௌர்ணமி தியானங்களில் எண்ணங்களைக் குவிக்கச் செய்து, நாம் நண்பர்கள் என்ற நிலைகளில் சென்றாலும், இந்த உயிராத்மா இந்த   உடலை விட்டுச் செல்லும்பொழுது, சப்தரிஷி மண்டலங்களில் உயிராத்மாவை உந்தித்தள்ள வேண்டும்.   

            எந்தக் குடும்பத்திலிருந்து அந்த உயிராத்மா செல்லுகின்றதோ, அந்தக் குடும்பத்தார் மெய் ஒளியைப் பெறுவது, சுலபமாகின்றது.

நமது குருநாதர் காட்டிய முறைப்படி, பௌர்ணமி தியானமிருக்கும், அனைத்து ஆத்ம ஐக்கிய அன்பர்களின் எண்ணங்களையெல்லாம், ஒன்று சேர்த்துக் குவித்து, ஒரு இலட்சம் பேர் தியானிக்கின்றோம் என்றால், தியானித்த ஒவ்வொருவருக்கும், அந்த ஒரு இலட்சம் பேருடைய சக்தி கிடைக்கின்றது. அச்சமயம், நமக்கு சக்தி, அதீத நிலைகளில் கூடுகிறது.

நமது குருநாதர் காட்டிய முறைப்படி, நீங்கள் அனைவரும் தியானமிருக்கும் பொழுது, யாம் (ஞானகுரு) அச்சமயம் தியானமிருக்கிறோம். அந்த நேரத்தில் உங்களுக்கு சக்தி கூட, நமது குருநாதர் காட்டிய நெறிப்படி, உங்கள் உயிராத்மாவைப் பிரார்த்தித்து, அந்த சக்தியை நீங்கள் பெற, எம்மால் உதவ முடிகின்றது.

ஆகவே, பௌர்ணமி தியானத்திலே உங்களுக்கு இந்த சக்தி கூட, யாம் உதவுவதால், அந்த நேரத்தை விரயம் செய்யாது, நீங்கள் தியானமிருந்து பயனடையுங்கள். இந்த பௌர்ணமி தியானத்திலே, உங்களுக்கு வாழ்க்கையில், வழியறிந்து செயல்பட ஞானம் கிடைக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவதால், நமது உயிராத்மாவில், ஒளி பெறும் அணுக்களும் வளர்கின்றன.

நம் முன்னோர்கள், மூதாதையர்களின், உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள், ஒளி சரீரம் பெற உதவுகின்றோம். அதே சமயம், சப்தரிஷி மண்டலங்களின் பேரருளையும் பேரொளியையும், நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.
லேசர் (LASER) மூலம், இராக்கெட் விண் செல்லும். முன்னோர்களை, சப்தரிஷி மண்டல ஒளியலைகள் ஒளிப்படுத்தும்
பௌர்ணமி தியானத்தில், நாம் சரியான முறையில் தியானமிருந்தால்தான். நம் மூதாதையர்களுடைய உயிராத்மாக்களை, விண் செலுத்த முடியும். அவ்வாறு, விண் செலுத்துவதற்குண்டான பக்குவமான நிலைகளை, நாம் கூட்டுத் தியானங்களில் இருந்து பெறவேண்டும்.

இதற்கு முன்பு இறந்தவர்கள், அவர்கள் வேறு உடலிலே சென்றிருந்தாலும், அந்த உயிராத்மாவின் உணர்வுகள்தான் உங்கள் உடல். ஆக, இதை வளர்த்துக் கொண்டு, விண் செலுத்தும் நிலைகளைச் செயல்படுத்தும் பொழுது, உங்களுக்கு இரட்டிப்பு லாபம். உணர்ச்சியின் தன்மை கொண்டு, விண் செலுத்தும்போது, அங்கிருந்து பெற முடியும்.

இன்று கம்ப்யூட்டர் என்ற நிலைகளில், இயந்திரத்தை இங்கே வைத்து, லேசர் என்ற ஆயுதத்தைக் கொண்டு, அந்த ஒளிக்கதிரினுடைய ஒளிக்கற்றையினுடைய நிலைகள் கொண்டு, இன்று விண்ணிலே இராக்கெட்டை அனுப்புகின்றார்கள்.

அந்த இராக்கெட்டிற்குள் இருக்கக் கூடிய அலைவரிசை கொண்டு, எந்த உணர்வின் தன்மையை அங்கே பதியச் செய்து வைத்திருக்கின்றார்களோ, அதன் வழியில் விண்ணிலே அதை மிதக்கச் செய்து, உணர்வின் அலையை ஆற்றல் மிக்க அலைவரிசை கொண்டு, இங்கே தரையிலிருந்தே எடுக்கின்றார்கள்.

மூதாதையர்களின் உணர்வுகள் எடையற்றது. ஆனால், உணர்வின் இயக்கம் உண்டு. நமக்குள் உணர்வின் இயக்கம் உண்டு. இயந்திரத்தைப் போன்று, இயக்கச் சக்தியும் நமக்குள் உண்டு.

அதற்குள் (உயிராத்மாவுக்குள்) இயங்கும் ஆற்றல்தான் உண்டு. இன்னொரு இயந்திரத்திற்குள் போனால்தான், அது வேலை செய்யும். ஆக, நாம் இந்த உணர்வின் அலையை மாற்ற முடியும்.

இதைப் போன்றுதான், நாம் ஒவ்வொருவரும் ஆற்றல்மிக்க சப்தரிஷி மண்டல ஒளிச் சக்தியை நமக்குள் பெருக்கி, இறந்தோர்களுடைய உயிராத்மாக்களை, விண் செலுத்திப் பழக வேண்டும்.

அதற்கு இந்த தியானம் இருக்க வேண்டும். நீங்கள் ஜெபமிருந்து எடுத்தாலும் அது பயனில்லை. விண்ணின் ஆற்றலை, மெய் ஒளியை நமக்குள் சேர்த்தால்தான், அதை மாற்ற முடியுமே தவிர, அது அல்லாதபடி செயல்படுத்த முடியாது.


நம் உணர்வுகள் விண்ணை எட்டும் வழி
பிறர் எண்ணம் நம்மை இயக்காவண்ணம், ஒளியின் சிகரமாக மாற்றிய அந்த மெய்ஞானிகளின் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், திரும்பத் திரும்பச் சொல்லி, இந்த உணர்வின் ஆற்றலை, உங்களுக்குள் பதிய வேண்டி உபதேசிப்பது. ஆக, மகரிஷிகளின் அருள் ஆற்றல்மிக்க இந்த நிலையை, நீங்கள் பூரணமாக அடைவதே  மெய்.

ஆகவே, இதைப் பருகும் பாதை, ஒரே பாதைதான். நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு தியானிப்போம். உங்களுடன் வாழ்ந்து வளர்ந்த அன்னை தந்தையோ, தாத்தா பாட்டியோ, அத்தனை பேரும் நாம் மக்களாகப் பிறந்தபின், குழந்தைகளை வளர்க்க வேண்டுமே என்ற எண்ணம் கொண்டு, குழந்தைகள் உயர்ந்த நிலைகளில் இருக்க வேண்டுமென்று பல வேதனைகளை அனுபவித்து, அதனால், நோயாகி சாகப் போகும் பொழுது, “அய்யோ, இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றேனே?”, “என்ன பண்ணப் போகின்றானோ?” என்ற வேதனை கொண்டு, யார் மேல் அந்த ஏக்கத்தைக் கொண்டார்களோ, அந்த வேதனையை உருவாக்கிக் கொண்டு, உடலை விட்டுப் போன போன பின்பு, யார் மேல் எண்ணம் கொண்டார்களோ, அவர்கள் உடலிலே இந்த ஆன்மாக்கள் போய்விடும்.

மீண்டும், இந்த பூமியின் ஈர்ப்புக்குள் சென்று, நாம் எடுத்துக் கொண்ட நிலையை அங்கே மறைக்கச் செய்து, இந்த மனித உடலுக்குள்ளேயே, “சாகாக்கலைஎன்ற நிலையில் இங்கே வந்துவிடுகின்றோம். விஷம் சாவதே இல்லை, எதிலேயும் கலந்து, அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஒவ்வொன்றிலும் வேகாக்கலை என்ற நிலையைப் பெற, ஒவ்வொரு நிமிடமும், மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து, நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலைவிட்டுப் பிரிந்து சென்ற, அந்த முன்னோர்களின் உயிரான்மாக்களை, விண் உலகமான சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன், கலக்கச் செய்ய வேண்டும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதே சமயத்தில், விண்ணிலே இராக்கெட்டை உந்தி ஏவுகின்றனர். அந்த விண்வெளியின் உணர்வின் தன்மைதான், நமக்குள் எடுத்து சக்திவாய்ந்த எண்ணங்களாக மாறி, நாம் அந்த உணர்வின் வலுக் கொண்டு, நம்முடன் வாழ்ந்து வளர்ந்த இந்த உயிரான்மாக்களை, இராக்கெட்டை ஏவுவது போல, அந்த உணர்வின் தன்மை கொண்டு, விண் செலுத்த வேண்டும்.

      இன்று, இராக்கெட்டை ஏவியபின், “ஆண்டெனா” T.Vக்களில் சாதாரணமாக வைத்துள்ளார்கள். இராக்கெட்டில் செலுத்திய, "இயந்திரத்தில் பதிவு செய்து", அங்கே ஏவிய அந்த உணர்வுகள், மற்ற கோள்களின் நிலைகளை உணர்ந்து, கவர்ந்து கொண்டாலும், இயந்திரத்திற்குள் அது, பதிவு செய்கின்றது.

      அது அலைகளை ஒளிபரப்புச் செய்யும் பொழுது, தரையில் இருக்கும் இயந்திரத்திற்குள், “ஆண்டெனா பவர்வெகு தொலைவில் இருப்பதை, அது கவர்ந்து, உணர்ந்து, இங்கே தரையில் இருக்கக் கூடிய இயந்திரத்திற்குள் பாய்ச்சியபின், மனிதன் விஞ்ஞான அறிவால், தான் கணக்கிட்ட வழிப்படி அவன் எடுத்து, விண்ணின் ஆற்றலை அறிகின்றான்.

நம்மை உருவாக்கிய முன்னோர்கள், எத்தனையோ வேதனைகள் எடுத்து, அந்த உடல்கள் அழுகினாலும், அவர்கள் உடலுக்குள் நம்மைக் காத்திடும் உணர்வுகள் உண்டு. 

நாம் மெய்ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து, நாம் இதைப் போல உணர்வின் நிலை வலுக்கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, அந்த ஞானிகளின் உணர்வின் வலுக்கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிராத்மாக்கள், "சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்", என்று சக்தி வாய்ந்த எண்ணத்தைக் கொண்டு, உந்தித் தள்ளுவதே பௌர்ணமி தியானம்.

அவ்வாறு உந்தித் தள்ளியபின், உங்களுடன் வாழ்ந்து வளர்ந்து, உங்களைக் காத்திட்ட நல்ல உணர்வுகள், அங்கே விண்ணிலே சென்றபின்,  இன்னொரு உடலாகப் பெறும் உணர்வுகள்,  நஞ்சினை வென்ற மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்றவுடனே, அது பஸ்பமாகி, அந்த ஒளிக் கடலிலே, ஒளிச் சரீரமாக மாறிவிடுகின்றது.

அவ்வாறு நம் முன்னோர்கள் அங்கே ஒளியின் சரீரமாக ஆனபின், இங்கு உடலிலே இருக்கும் நாம், மீண்டும் அங்கே விண்ணை நோக்கி எண்ணங்களைச் செலுத்தும் பொழுது, நம் நினைவின் அலைகளுக்கு, கண்களின் உணர்வுகளுக்கு, சக்திவாய்ந்த ஆண்டெனா பவர் கிடைக்கின்றது.

இதைப் பல ஆயிரம் பேர் கூடி, உணர்வின் தன்மை பெறவேண்டும் என்று நாம் கூட்டுத் தியானங்களில் ஒருங்கிணைந்து, இந்த எண்ணங்களை ஒலிபரப்புச் செய்யும் பொழுது, சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து, அந்த உணர்வின், சக்தி வாய்ந்த நிலைகள், அணுவின் ஆற்றலாக பெருகுகின்றது.

உதாரணமாக, பாடகர் ஒருவர் இருக்கின்றார். அவர் பாடல்கள் பாடும் பொழுது, பக்க வாத்தியங்கள் இசைக்கின்றனர். இவையனைத்தும் ஒருங்கிணைந்து சேர்ந்து, அந்த உணர்வின் ஒருங்கிணைந்த ஆற்றல், அது சூரியனின் காந்த சக்தி கவருகின்றது. அதை நுகர்ந்து, நம் செவிப்புலனில் தாக்கப்படும் பொழுது, அங்கு ஒலிபரப்பாகும் உணர்வின் நிலைகள், நமக்குள் மகிழ்ச்சியூட்டும் நிலைகளாக, இயங்குகின்றது.

இதைப் போலத்தான், அந்த மெய்ஞானியின் உணர்வின் சக்தியைத் தூண்டச் செய்யும் பொழுது, இந்த உணர்வின் தன்மை, புலனறிவால் கண்ணின் நினைவலைகளுக்கு அது ஓட்டச் செய்து, விண்ணுலகம், உங்கள் நினைவுகளுக்கு எட்டச் செய்வது. ஆனால், அவர்களை உந்தித் தள்ளியபின், அவர்களுடைய உணர்வுகளே, நாம். இதே நினைவினை, விண்ணை நோக்கிச் செலுத்தும் பொழுது, அந்த உணர்வின் ஆற்றலை நாம் நுகர நேருகின்றது.

அந்த உணர்வின் தன்மை, நமக்குள் நினைவலைகளால் இயக்கும் பொழுது, இந்த பூமியிலே வாழ்ந்த அந்த மகரிஷிகள், அவர்கள் உடலிலே தீமையை விலக்கிடும் உணர்வுகள் விளைந்து, இந்த உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்திருப்பதால், இங்கு படர்ந்திருப்பதையெல்லாம், நாம் நுகரும் தன்மை வருகின்றது.

அந்த மகரிஷிகள் அவர்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்ற நிலைகளும், வாழ்க்கையைச் சீராக ஓட்டிய நிலைகளும், இந்த உணர்வுக்குள் வந்தபின், அந்த ஆற்றல்மிக்க சக்தியை நாம் நுகர நேருகின்றது. அதன்வழி நாம் விண் செல்வது எளிதாகின்றது. எமது அருளாசிகள்.

4 சப்தரிஷி மண்டல காந்த அலைத் தொடர்பு
மூதாதையர்களுடைய உணர்வின் அலைகளின், தொடர்பு கொண்டவர்கள் நாம். அவர்கள் இறந்தபின், அந்த உயிராத்மாவில் அந்த உணர்வின் அலைகள் உண்டு. ஆனால், அந்த உணர்வின் மணங்களேதான் உண்டே தவிர, அதன் செயலாக்கம் இல்லை. 

இன்னொரு சரீரத்திற்குள் பட்டால்தான் அது இயங்கும். ஏனென்றால், அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வு, இன்னொரு மனித உடலுக்குள் போனால், அங்கேயும் துன்பத்தை உண்டாக்கும். அதன் வழி அங்கே இயக்கும். ஆனால், அதிலிருந்து விஷத்தன்மைகள் மாறி, மீண்டும் வேறொரு சரீரங்கள்தான் பெற முடியும். அந்த உணர்வுக்குத் தக்கவாறு, உடல் பெற்று விடுகின்றனர்.

இதைப் போன்ற உயிராத்மாக்களை, நாம் சரீரத்திலிருந்து ஜெபமெடுத்தவர்கள், இவ்வாறு தியானித்தவர்கள் அனைவருமே இறந்தவர்களுடைய உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அவர்கள் ஒளி சரீரம் பெறவேண்டுமென்றுநாம் சொல்லும்போது, அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடுகின்றது. ஆக, இன்னோரு உடல் பெறும் நிலைகள், அங்கே கருகிவிடுகின்றது. இன்னொரு சரீரம் பெறும் உணர்வுக்குள், அது இயக்கி, ஒளி நிலை பெறுகின்றது.

ஆக, அந்த உயிராத்மாக்கள் ஒளிநிலை பெற்று, அங்கே சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய, ஆற்றல் மிக்க சக்தியை அது சுவாசித்து, அந்த உணர்வின் நிலைகளில் அது ஒளிச் சரீரமாக வளர்கின்றது. 

இன்று இராக்கெட்டை விண்ணிலே ஏவி, அதன் அலைவரிசையில், தரையிலிருந்து அந்தச் செய்திகளை அறிந்து, அந்த உண்மைகளை அறிவது போன்று,  அந்த உயிராத்மாக்கள் அங்கே வளர, நாம் அடிக்கடி எண்ணும்போது, அந்த உணர்வின் சக்தியை நாமும் பெறுகின்றோம்.

ஆக, இதை நாம் முறைப்படி செய்தால், நாம் இந்த பூமியின் நிலையை விட்டு, அடுத்து நாம் இந்த சரீரத்தை விட்டுச் சென்றபின், அவர்கள் உணர்வலைகளுடன் தொடர்பு கொண்டு, அந்தக் காந்த அலைகள், முன் சென்றிருக்கின்றது. நம் உணர்வின் நிலைகளில் இந்தப் புவியின் நிலைகளிலே, தொடர்பு கொள்ளும். மறந்து விடவேண்டாம்.

இப்பொழுது, நாம் எப்படி ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகளில் எண்ணி இறந்தவுடன், அவர் உடலுக்குள் போய்ச் சேர்ந்து, அவரைத் துன்புறுத்துகின்றோம். அதே உணர்வை, அங்கே பெருக்குகின்றோம்.

ஆக, இந்த உயிராத்மாவுக்குச் செயலில்லை. அந்த உணர்வுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டுதான், ஈர்ப்பின் சக்தி அங்கே போய்ச் செயல்படுவது.

ஆக இந்த உடலில் இருக்கும்போது, ஆற்றல் மிக்க சக்தியை நாம் இந்த வழிமுறைப்படி, நம் உயிராத்மாவுக்குள் செலுத்தி, நாம் விண்ணை நோக்கி நம் எண்ணங்களைச் செலுத்தி மூதாதையர்களை செலுத்தச் செய்து, அந்த உணர்வின் எண்ணங்களை, அங்கே சுழலவிடவேண்டும்.

இந்த உடலைவிட்டு இந்த உயிராத்மா சென்றபின், அந்த உணர்வுடன் நாம் ஒளியாக பெறவேண்டும். அதை, நாம் இப்போதிருந்தே பழகிக் கொள்ள வேண்டும்.

தாய் தந்தை மூதாதையர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்தினால், அந்த உயிராத்மா விண்ணிலே இருக்கும்போது, நம் உடல் இங்கிருந்தாலும், நம் மேலே இருக்கக்கூடிய, இந்தப் பாசம் விண்ணிலே இருக்கக்கூடிய நிலைகளை, நாம் பெறமுடியும். 

நாம் இப்போதிருந்தே செய்து கொண்டால்தான், நாம் உடலை விட்டுச் சென்றபின்,  தாயின் ஈர்ப்பின் அணைப்பிலே, ஒளியின் சரீரமாக அங்கே போய்ச் சேருவோம்.

அம்மா அப்பா, சொத்து கொடுத்தார்கள், நன்றாக இருக்கிறோம் என்போம். அதன்பின், ஏதாவது சொன்னால், எவ்வளவு ஏசுகிறோம். எத்தனை பேசுகிறோம், எப்படா தொலைந்து போகும், என்று எண்ணுவோம்.

செத்தபின், நல்ல ஆடம்பரமாகச் செய்வோம். ஊர், புகழுக்காக வேண்டி எல்லாத்தையும் செய்வோம். அம்மா அப்பாவை மட்டும் உதைப்போம், திட்டுவோம், எனக்கு என்ன சொத்து வைத்திருக்கின்றாய்? என்று கேட்போம். இதைத்தான், நாம் பேசக் கற்றுக் கொண்டுள்ளோம். ஏனென்றால், நாமும் அப்படி, நமக்கு முன்பும் அப்படித்தான்,

நம்மையறியாமலேயே, எல்லாம் தெய்வம் செய்யும்! சாமி செய்யும்! சாமியார் செய்யும்! ஜோசியம் செய்யும்! யாகம் செய்யும்! இயந்திரம் செய்யும்! மந்திரம் செய்யும்! என்ற எண்ணத்திலே செய்கிறோம்.

ஏதாவது குறை வந்துவிட்டால், இப்படித்தான் செய்கின்றோமே தவிர, நம் உயிரைக் கடவுளாக மதித்து, நாம் எண்ணிய உணர்வுகளை ஆற்றல் மிக்க உணர்வின் சக்தியாக வளர்த்து, நம் சொல்லுக்குள் அந்த செயலாக வேண்டும், என்று  மெய்ஞானிகள் காட்டிய நிலையை, யாரும் பின்பற்றவில்லை.

அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி, மெய்ஞானிகள் உணர்த்திய ஆற்றல்கள் காற்றிலே உண்டு. நீங்கள் சுவாசித்து எடுக்க முடியும், என்று ஞானியர்கள் காட்டியிருந்தாலும், காலத்தால் அவை அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது. மறைந்தாலும், இன்று நினைவுபடுத்தி எடுக்கச் சொன்னால், எங்களுக்கு நேரமில்லை என்று சொல்கிறீர்கள், இதுதான் இன்று நாம் சொல்லும் நேரம்.

ஏனென்றால், விஞ்ஞான அறிவின் நிலைகள் கொண்டு, துரித நிலைகளுக்கு கொண்டு வரப்படும்போது, யாராவது அதிகமாகச் சொன்னால், “விஞ்ஞானத்தில் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள்என்கிறார்கள். சிலர். 

ஏட்டிலே படித்துக் கொள்வோம். அதை மனதிலே இருத்திக் கொள்வோம். எண்ணங்களைச் சிதற விடுவோம். மெய்ப்பொருளை நாம் அறிய மாட்டோம். ஆனால், அதை வியாக்யானப்படுத்துவோம். உட்பொருளை நினைவில் கொண்டு, சுவாசிக்கும் நிலையை இழந்து விடுவோம்.  இவைகள்தான், இன்றைய பாடநிலைகளின் தன்மைகள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம், நம்மை மீட்டுக் கொள்வதற்கு, உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உயிரை ஈசனாகக் கருதுங்கள். நீங்கள் எண்ணும் உணர்வுகள் அனைத்தையுமே, பிரம்மமாக சிருஷ்டித்துவிடுகின்றது, உங்கள் உயிர்.

 தியானவழி அன்பர்கள் அனைவரும், நமது குருநாதர் அருளால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று, இந்த பிறவியில், பிறவியில்லா நிலை என்னும் "அழியா ஒளிச் சரீரம்" பெற எமது அருளாசிகள்.

விண் செல்லும் முன்னோர்களுக்கு ஆகாரம்
நாம் ஒவ்வொரு நிமிடமும் ஆத்மசுத்தி செய்து, நம் உடலிலே வரக்கூடிய பிணிகளை நீக்கி, மனக்கவலையை நீக்கி, நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை, உயிராத்மாவில் சேர்த்து, ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய எண்ணம், அந்த சப்தரிஷி மண்டலங்களோடு தொடர்பு கொண்டு இருக்கும்போது, இந்த உடலைவிட்டு நம்  உயிராத்மா வெளியே சென்றபின், நாம் எப்படி ஒரு ஐக்கியக் கூட்டுடன், அனைவருமே அந்த சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ, அதைப்போல, அந்த ஆத்மாவினுடைய நிலைகள் அங்கே பதிவாகியிருக்கின்றது.

அப்படி இறந்தவர்களுடைய உயிராத்மாக்களை, வாரத்தில் ஒருநாள் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து, பழகிக் கொண்டவர்கள், அந்த உணர்வுடன் சேர்த்து, அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டுமென்று நாம் எண்ணும்போது, அந்த ஒளிகளுடன் விண் செலுத்த முடியும். அவ்வாறு விண் செலுத்திவிட்டால், அந்த சப்தரிஷி மண்டலங்களிலிருந்து, இருக்கக்கூடிய ஒளியின் உணர்வலைகள், நாம் அனுப்பும் உயிராத்மாவுக்கு ஆகாரமாகின்றது.

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்என்று ஏங்கி இருங்கள். இதை நீங்கள் பெறுவதற்காகத்தான் இந்த உடலிலே வேதனைகள் கொண்டு பலவீனப்படுத்தினாலும், பிறர் நலம் பெற வேண்டுமென்று எண்ணத்தைத் தன்னுடைய உடலிலே ஓங்கி வளர்த்துக்கொண்ட, அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, பிறிதொரு மனிதன் எண்ணங்களைத் தனக்குள் கவரச் செய்து, அந்த அன்பு உள்ளமான பாசத்தின் உணர்வுகளைத் தனக்குள் ஏங்கச் செய்து, அதன் வழிகளிலேதான் இந்த உடலைவிட்டு சென்றபின், உயிராத்மா விண் செல்லுவதற்கு, மற்ற மக்களின் நிலைகளிலே, துன்புற்றிருப்போரை இன்பமான நிலைகள் வருவதற்கு, அவருடைய ஆற்றலின் சக்தியைப் பயன்படுத்திச் சென்றார்கள்.

இதே போன்று, நாம் குடும்ப வாழ்க்கையில் இருப்போர் அனைவரும் இந்த ஆத்மசுத்தி செய்து, இறந்தவரின் உயிராத்மாவினுடைய நிலைகளை, இன்னொரு கூட்டுக்குள் புகாதபடி, அந்த அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று, இன்று நமக்கு உணர்த்திய அந்த மகரிஷியின் அருள் ஒளி வட்டத்துடன் செலுத்தப்படும் போது, அந்த மகரிஷியின் அருளாலே சமைத்து அனுப்பப்படும் ஒளி உணர்வுகளின் சத்துக்கள், நாம் அனுப்பும் இந்த உயிராத்மாக்களுக்கு ஆகாரமாகச் சென்று, அது ஒளி சரீரம் பெறுவது. திண்ணம்.






அனைவரும் விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதி
தன்னுள் விளைந்த சக்தியை சூரியன் ஒளியாக மாற்றி, உலகை சிருஷ்டிப்பது போன்று, ஒரு குடும்பத்திற்குள் சகோதரர்களும், குழந்தைகளும் இதேமாதிரி, தாய் தந்தையருடைய நிலைகளில் எண்ணத்தைச் செலுத்தி,  எங்கள் தாய் தந்தையரின் அருளால், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். அதைப் போன்று தாய் தந்தையரும், குழந்தைகள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். 

குழந்தைகள் ஒவ்வொரு எண்ணங்கள் கொண்டு, ஒவ்வொரு நிலைகள் வாழ்க்கையில் இருந்தாலும், அதே தாய் தந்தையருடன் இணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு இணைந்து செயல்படும் போது, அந்த உணர்வின் சக்தியால், குடும்பத்திற்குள் தாய் தந்தையை சூரியனாகவும், அதே சமயம் நாம் அதற்குள் பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகவும், நம் வீட்டிற்குள் ஒரு பிரபஞ்சமாகச் சுழன்று, நம் எண்ணத்தினுடைய நிலைகள் தாய் தந்தையைப் பிரகாசிக்கச் செய்ய, அந்த ஒளியின் தன்மையை,  நாம் எங்கு சென்றாலும் இயக்கக் கூடிய சக்தியாகும். 

எப்படி, கோள்கள் வெகு தூரம் சென்றிருந்தாலும் சூரிய சக்தியால், இயங்குகின்றதோ, இதைப் போன்று, தாய் தந்தையரின் அன்பால், நாம் எங்கு சென்றாலும் அந்த இயக்கச் சக்தியின் நிலைகளில் தொடர்பு பெறலாம்.

இவ்வாறு, நாம் தொடர்பு கொண்டு வந்தால்தான், நாம் முன்பு சொன்ன மாதிரி, இந்த பூமியில் இந்த உயிராத்மா வெளியே செல்லும் போது, நமது குழந்தைகள் அம்மா, அப்பாவின், உயிராத்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி, ஏங்கி, அவர்களை உந்தித் தள்ளமுடியும்.

நாம் உடலுடன் இருக்கப்படும் போது, நமக்குள் ஒருவருக்கொருவர் அன்புடன் நாம் எண்ணும்போது, விக்கல் பாய்கின்றது. துரோகம் செய்தார்கள் என்று எண்ணினால், புரையோடுகின்றது.

நம் உடலையும் இயக்கக்கூடிய சக்தி, தாய் தந்தையரின் நிலைகளிலும், அதே உணர்வுகள் கொண்ட அவர்கள் கருவிலே உருவாகிய, குழந்தைகளிடமும் உள்ளது.

இம்முறைப்படி தியானம் செய்யும் குழந்தைகள், அவர்களின் தாய் தந்தையர்கள் இறந்தபின். அந்த உயிராத்மாக்களை, சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று எண்ணி, அவர்களை உந்திச் செலுத்தி, அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு இணையச் செய்யும் பொழுது, சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய உயர்ந்த ஒளியின் உணர்வுகளை,  தாய் தந்தையரின் உடலை விட்டுப்பிரிந்த உயிராத்மாக்களை சுவாசிக்கச் செய்து, அதன் வழிகளில்  அவர்களுக்கு ஆகாரமாக, சப்தரிஷி மண்டலங்களின் சக்தி கிடைக்கும்.

அவர்களுடைய உடலாக நாம் இருப்பதனாலே, வானை நோக்கி எண்ணி, அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும். சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டுமென்று எண்ண வேண்டும்.

உடலுடன் இருக்கும் நாம், அவ்வாறு ஏங்கி எண்ணும்போது, சப்தரிஷி மண்டலங்களுடன் ஐக்கியமான அந்த உணர்வுகள் மூலமாக, அங்கிருந்து  நாம் பல சக்திகளை நாம் இந்தப் புவியிலேயும் பெற்று, இந்தப் புவியின் ஈர்ப்பிலே சிக்கியிருந்தாலும், நம் வாழ்க்கையில் வரக்கூடிய பல இன்னல்களையும் துரித நிலைகளில் மாய்த்து, நாம் அடுத்து இந்தச் சரீரத்தை விட்டுச் சென்றவுடன், ஒளி நிலை பெறும் தகுதியைப் பெறுவோம். இவைகளெல்லாம் அன்று மெய்ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

அவர்கள் ஒளி சரீரம் பெறும்போது,  நாம் இங்கிருந்து எண்ணத்தால் இயக்கப்படும்  இந்த உணர்வின் சத்துக்களை, நம் தாய் தந்தை பெற்று,  இந்த மனிதனின் எண்ண உணர்வுகளின் ஆற்றல்கள் அங்கே பெருகி, தன் நினைவின் ஆற்றலை, நாம் குழந்தைப் பருவமாக எவ்வாறு இங்கே பெறுகின்றோமோ, அதைச் சிறுகச் சிறுக வளர்ந்து, நம் எண்ண அலைகள் பெறுவது போன்று, கடும் தவம் இருந்து, இந்த உயிராத்மாக்கள் விண்ணிலே சென்றாலும், சப்தரிஷியின் உணர்வுகளை அங்கே பெற்று, அது வளர்ச்சி அடையும்.

அவ்வாறு வளர்ச்சி அடையும் பக்குவத்திலே, விண்ணின் ஆற்றலைத்  தான் நினைவு கொண்டு ஈர்த்து, மரம், செடி கொடிகள், எப்படித் தன் சத்தின் தன்மையை இருந்த இடத்திலிருந்து பெறுகின்றதோ, இது போன்று, விண்ணில் இருக்கக் கூடிய இந்த உயிராத்மாக்கள், விண்ணிலே எங்கு வேண்டுமானாலும் நினைவைச் செலுத்தி, அந்த ஆற்றல் மிக்க நிலைகளை ஆகாரமாக எடுத்து, தன் இருப்பிடத்தில் இருந்து கொண்டு, உயர்ந்த சக்தியினுடைய நிலைகள் பெற்று, என்றும் 16 என்ற நிலைகளாக, “பெரு நிலைகள் பெறும் தகுதியே, அது. 

அவ்வாறு, என்றும் 16 என்ற அந்த நிலையை, நீங்கள் அனைவரும் அடைய எமது அருளாசிகள்,

சப்தரிஷி மண்டல ஆற்றலைப் பெற்று பூமியில் விஷத்தை நீக்கும் நிலை

      இன்று இருக்கக்கூடிய விஷ உலகத்திற்குள், ஒவ்வொரு நாளும் மறவாது இந்த ஆத்மசுத்தியைக் கடைப்பிடியுங்கள். ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியபடி வாரத்தில் ஒரு நாள், தாய் தந்தையுடன் குழந்தைகளைக் கூட்டு தியானமிருக்கச் சொல்லிப் பழக்குங்கள்.

      அவ்வாறு, கூட்டு தியானமிருந்து பழகியபின், அந்த வீட்டிலே, நமக்காக பல இன்னல்கள் பட்டு, எவ்வழியிலும், நம்மைக் காப்பாற்ற உணர்வைக்கூட்டி அதற்காக வேண்டி, பல இன்னல்களையும் அவர்கள் சுவாசிக்க நேர்ந்து, அதன் வழி வியாதிகள் பட்டு, அந்த உடலை விட்டுச் சென்ற,  நமது முன்னோர்களின் உயிராத்மாக்களை, நீங்கள் இந்த தியானம் எடுத்துக் கொண்ட முறைப்படி, “சப்தரிஷி மண்டலத்துடன்இணைய வேண்டுமென்று விண் செலுத்துங்கள்.

அப்படி விண் செலுத்துவதற்கு,  நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி,  நாம் அனைவருடைய எண்ணங்களும் துணை இருக்கின்றது. யார் இறந்தார்களோ, சூட்சமமடைந்த  அந்த சரீரம் இலகுவானது,  அந்த உணர்வின் ஆற்றல்தான் இருக்கும்.

இறந்தவர்களுடைய நிலைகளில், அந்த உணர்வுகள் மணமாகத்தான் இருக்கும். ஆனால்,  நமக்குள் அந்த உயிரின் நிலைகொண்டு, உணர்வுகள் எடை கூடி, இயக்கும் சக்தி உண்டு.

ஆகையினாலே, உங்கள் உணர்வின் சக்தியை, நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த சக்தி வாய்ந்த உணர்வுகளின் வலிமை கொண்டு, எளிதில் அந்த உயிராத்மாக்களை, சப்தரிஷி மண்டலங்களோடு இணைத்துவிடலாம்.

எனவே,  இந்த மெய் ஒளியின் தன்மையை நாம் எடுத்து,  இந்த முறைப்படி தியானமிருந்தவர்கள்,  இறந்தவர்களுடைய உயிராத்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று ஏங்கி விண் செலுத்துங்கள். 

அவ்வாறு, அவர்களை முதலில் விண் செலுத்துகின்றீர்கள்,  அவர்கள் மெய் ஒளியுடன் கலந்தவுடன், உங்கள் உணர்வுடன் கலந்த அவர்கள், அங்கே வளர்ச்சி பெறும்போது, நீங்கள் சப்தரிஷி மண்டலத்தை எண்ணும்போது. அங்கிருக்கக்கூடிய ஆற்றலை நீங்கள் இலகுவாகப் பெற முடியும்.

நாம் இப்படி வழித் தொடர்ந்து செய்வோமேயானால், இந்தக் குறுகிய காலத்திற்குள் விஷ ஆற்றல்கள் இந்த உலகில் பரவி, நம் எண்ணங்களை அழிப்பதற்குமுன்,  நாம் இப்பொழுதிலிருந்தே தயாரானால்தான்,  நம் எண்ணத்தை அழிக்கச் செய்யும் அந்த ஆற்றலின் உணர்வுகளை நாம் அழித்துவிட்டு,  இந்த உடலை விட்டுச் சென்றால், நாம் அனைவரும் விண் செல்ல முடியும்.

ஆக காலம்,  இதையெல்லாம் சாத்தியப்படுமோ என்று எண்ணாதபடி, ஒவ்வொரு நிமிடத்திலும், நாம் இதை  இலகுவான நிலைகளில் பெறக்கூடிய,  அந்த மெய்ஞானிகள் சென்ற வழிகளிலே நாம் செல்லுகின்றோம். 

அதன் வழிகளில் நிச்சயமாக, உறுதியான வழிகளில் நாம் பெறுகின்றோம் என்ற இந்த தன்னம்பிக்கையுடன், நம் உயிராத்மா, இந்த உடலில் இருந்தே, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, நம் உயிராத்மா ஒளியாகும் நிலைகளில்,  நம் மூச்சும் பேச்சும் எதிர்மறையான உணர்வுகளில் இருந்தாலும், வழிகாட்டியான எண்ணங்களாக அறிந்துணர்ந்து செயல்படும்  நம் வாழ்க்கையிலே, இந்த உடலை விட்டுச் சென்றபின், அந்த உயிரின் ஒளியான நிலைகளுக்கு நாம் செல்வோம் என்று, இன்று உறுதியான நிலைகள் கொண்டு, “நாம் ஒளி வழி செல்வோம்,

மகரிஷிகளின் அருள் வழி செல்வோம், அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே, நமக்குள். மெய் ஒளியின் அலைகளை நமக்குள் பெறுவோம்”.