ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2012

நாரதன் கொடுக்கும் ஞானக்கனி - நம் உயிரைப் பற்றிய பேருண்மைகள்

1 நாரதன் கொடுக்கும் ஞானக்கனி விளக்கம்
ஒரு மாங்கனி அது இனிப்பாக இருக்கும்பொழுது, அந்தச் சுவையின் மணத்தையே வெளிப்படுத்தும். காயாக இருக்கும் பொழுது, புளிப்பின் உணர்ச்சியைத் தூண்டும். இதைப் போல, மனிதனாக இருக்கும் நாம் காயின் பருவத்தில் இருக்கும்பொழுது, கனியாகும் உணர்வின் தன்மையை நாம் கவர்ந்தால், கனியும் தன்மையை அடைகின்றோம்.

ஆனால், கனியாவதற்கு முன் வெப்பத்தின் தணல் அதிகமாக இருந்தால், வெம்பி மரத்திலிருந்து விழுந்து விடும். வெம்பிய நிலைகள் கொண்டு, வித்து உருவாகாது. ஆனால், அதனுடைய சத்தும் நமக்குள் நல்லது ஆகாது.

ஆகவே,  கனியின் தன்மையை அடைந்த கனியைப் போல, உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு, வெம்பாத நிலைகள் கொண்டு, மெய்ஞானியின் உணர்வைத் தனக்குள் வளர்த்து, உணர்வுகள் அனைத்தும் கனியாகி, உயிருடன் ஒன்றிய கனியின் தத்துவமாக, ஏழாவது நிலையின் ஒளிச்சரீரமாக அடைய வேண்டும்..
      
இதைத்தான், கந்தபுராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது. நாரதன் கனியைக் கொண்டு வந்து, சிவனிடம் கொடுக்கின்றான்.  

சிவன் யார்?  நமது சரீரமே. நாரதன், கனியை சிவன் கையில் கொடுத்து, ‘உலகை, எவர் ஒருவர் முதலில் வலம் வந்துவிடுகின்றாரோ, அவருக்கு இந்தக் கனியைக் கொடுத்துவிடுஎன்று சொல்லுகின்றான்.

அப்பொழுது, இந்த ஆறாவது அறிவின் தன்மை, உலகை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு, எண்ணத்தில் விரிவடைந்து, புற உலகத்தை எண்ணுவோமேயானால், உலகைச் சுற்றத்தான் அந்த உணர்வு செல்லும், என்ற நிலைகளை சிவன் கண்டவுடனே, இந்த ஆறாவது அறிவு தெரிந்துகொண்டேன் என்ற நிலை வரப்பபடும் பொழுது, எனக்கு வசதி இருக்கிறது, என்று எண்ணத்தால் எண்ணினாலும், ஒன்றை மறந்து விடுகின்றான். 

எவ்வாறு மறந்து விடுகின்றான்? என்பதைத் தெளிவாக காட்டுவதற்கு, அந்த ஆறாவது அறிவின் தன்மையை, ஞானம் இருந்தும், தான் உணரமுடியாத நிலைகள் எவ்வாறு ஆகுகின்றது? என்று காட்டுவதற்கு, இந்த ஆறாவது அறிவைக் கேட்டவுடன், நான் ஒரு நொடியில் உலகை வலம் வந்துவிடுகின்றேன்என்று எண்ணத்தால் வேகமாகச் சென்று விடுகின்றான் முருகன் (ஆறாவது அறிவு).
.
அதே சமயம், சிவன் அருகில் விநாயகன் இருக்கும்பொழுது, அவன் காட்டுகின்றான்,  பேரண்டமும் பெரு உலகமும், உன் அன்னை தந்தைதான். பேரண்டத்தையும், அது சுழல்வதற்கும்,  பேரண்டத்தின் ஆற்றல் உன் அன்னை தந்தைக்குள் இருக்கின்றது. இதுதான் உனக்கு உலகம்.  

அவர்களைச் சுற்றி, நீ இந்த வினையாகச் சுற்றி, நிலைக்கு வந்து சேர். அந்தக் கனியின் தன்மையை நீ பருகலாம்.  இது உதாரணமாக, நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

கனி, நாரதன் என்று உணர்த்தப்படுவது என்ன?  அந்த ரிஷியின் மகன் நாரதன். மனிதனின் உயர்வின் தன்மை, கனியாக்கியவன். அந்தக் கனியின் தன்மை கொண்டு, அங்கிருந்து வரப்படும் பொழுதுதான், நாரதனைக் கனியாக்கி, கனியின் மணத்தை சிவனிடம் கொடுக்கப்படும்பொழுது, பேரண்டமும் பேருலகமும், அன்னை தந்தை, அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு, நீ அந்தக் கனியைப் பெறு.

அதனுடைய கனியைக் கொண்டு, நீ கனியாகு.  நம் ஆறாவது அறிவு கொண்டு, “எங்கே இருக்கும்?” என்றும் எங்கோ இருக்கும்!” என்றும் கடவுளைத் தேடாதே. 

உனக்குள், உயிரான நிலைகள் அன்னையாகவும், தந்தையாகவும், அதனின் உணர்வின் சத்து உனக்குள் தாயாகவும், சிவசக்தியாகவும், இயங்கிக்கொண்டு இருக்கும் இந்த உடலை மறவாதே. 

சிவனையும், நமக்குள் இருக்கும் சக்தியையும், நமக்கு எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள். எதை வினையாகச் சேர்க்கவேண்டும்?  விநாயகன் யார்?  அந்த ஞானியின் உணர்வை உனக்குள் வினையாக்கி, அதை நீ கனியாக்கு. கனியானவன் அவன், என்று  தெளிவாக எடுத்துரைத்தான்  அந்த மகாஞானி.

நாம் இங்கே என்ன செய்கின்றோம்? அந்த உட்பொருளைக் காணாதவாறு, கதையைக் கதையாகத்தான் காணுகின்றோமே தவிர, மெய்ப்பொருளைக் கண்டுணரும் ஆறாவது அறிவைத் தனக்குள் செலுத்தி, உட்பொருளைக் கண்டுணரும் நிலைகள் இல்லை.

மெய்ப்பொருளைக் கண்டுணரவேண்டும் என்று கவிப்புலமை கொண்டு, உணர்வின் வேட்கை கொண்டு, நாதங்களின் சுருதியாக அதற்குள் பிரித்தாலும், கவிப்புலமைகள் பல வந்தாலும், புலமை பெற்றவர், அவர் ஒருவருக்கே தெரியும்.

அருணகிரிநாதர், “நாத விந்துகள் ஆதிநமோநமோ” என்று பாடினார். நமது உடலுக்குள், எந்த உணர்வின் தன்மை எடுத்தோமோ, அது நமது உயிருக்குள் சேர்க்கப்படும் பொழுது, அது ஆவியாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமது உடலாகும் பொழுது, “நாத விந்துகள் ஆதிநமோநமோ!”

நாம் எதையெல்லாம் எடுக்கின்றோமோ, எந்த குணத்தை எடுக்கின்றோமோ, அந்த உணர்வின் சத்து, உடலுக்குள் சேர்க்கும் பொழுது, “ஆதி”.

உடலாகச் சேர்க்கும் பொழுது, “நமோ நமோ”. பாடலின் உட்பொருள் தெரியாமல் பாடிக்கொண்டு போய்விடுகின்றோம். இவையெல்லாம் நமது ஞானிகள் கண்ட பேருண்மைகள். நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது, மிகவும் நலம். எமது அருளாசிகள்.
2 ஓம் ஈஸ்வரா குருதேவா – புருவ மத்தியில் எண்ணும் நிலை
நமது உயிரை ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று ஞானிகள் அழைத்தார்கள். நாம்,  ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று சொல்லும் பொழுது, வெறும் சொல்லாக இல்லாமல், புருவமத்தியில் நினைவைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அவ்வாறு பழகிக் கொண்டால், நமது உயிரை குருவாகவும்,  நாம் எண்ணியதை, ஈசனாக உருவாக்கக் கூடிய நிலையை,  நாம் உணரமுடியும். நாம் எதை எண்ணுகின்றோமோ, அது உடலுக்குள் ஊடுருவது, நமக்குத் தெரிய வரும்.

நம் உடலில், ஜீவ அணுக்களை இயக்கும் “உயிர்”, நம் நெற்றியின் புருவ மத்தியில், உட்புறமாக இருந்துகொண்டு, உடலை இயக்கும் மூலக்கருவாக, குருவாக, உயிர் இருக்கும் நிலையில், உடலில் விளைந்த அனைத்துக் குணங்களின் உணர்வலைகளை, உயிரின் ஈர்ப்பில் அணைத்துக் கொண்டு, மறு உடல் உருப்பெறச் செய்யும், கருவினையாகச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றது.

நமது கண்கள் ஒன்றைப் பார்க்கின்றது, என்று வைத்துக் கொள்வோம். அதிலிருக்கும் உணர்வுகளைக் கண்கள் கவர்ந்து, நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. நமது மூக்கு வழியாக சுவாசித்த பின், உயிரில் பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிகின்றோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா  என்று சொல்லுகின்ற போதெல்லாம், புருவ மத்தியில் உயிரை எண்ணி, அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோமென்றால்,  நாம் அதன்வழி, உணர்வுகளை உடலுக்குள் செலுத்தலாம்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது, மூக்கு வழி சுவாசித்து, உணர்வுகளை உடலுக்குள் செலுத்துவது. இதை அறிந்து கொண்டாலும், தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் செல்லாதபடி, அடுத்த நிமிடம், ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி,  இதை இடை மறிக்க வேண்டும்.

நம்முடன் எவ்வளவு நல்லவர்கள் பேசினாலும், அந்த உணர்வில், அவர்கள் குடும்பக் கஷ்டம், உடல் நோய்கள் போன்ற உணர்வுகள் கலந்து சொல்லாக வரும்.

அவர்களைக் கண்ணால் பார்க்கும் பொழுது, நமது ஆன்மாவில் கலந்துவிடும். அவர்கள் பேசும் பொழுது, இந்த உணர்வுகள் கலந்தே வரும். இருந்தாலும், அந்த நிலையிலும் ஈஸ்வராஎன்று சொல்லி உணர்வை இடைமறித்து, அதைப் பலவீனப் படுத்த வேண்டும்.

அவ்வாறு  ஈஸ்வராஎன்று சொல்லும் நிலைகள் வலுப் பெறும் பொழுது, தீமையை, அது மாற்றும்.  அவர் பலவீனமான நிலைகளைச் சொல்லும் பொழுது,  மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும், என்று எண்ண வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சமைத்து, அதை எடுத்துப் போட்டால்தான், அது ருசியாக இருக்கும். கஷ்டம், என்று ஒருவர் சொல்லும் பொழுது, “அடடா, உங்களுக்கு கஷ்டமாக போய்விட்டதா?”, என்று சொன்னோமென்றால், அதையேதான் சமைத்து, மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம். அதனால், இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ன்று பெரும்பாலோனோர்   ஏதோ ஒரு தெய்வம்தான், நமக்கு அனைத்தையும் செய்கின்றது”, என்று கருதுகின்றனர். ஆனால், நம் செயல்கள் நிகழ்வதனைத்தும்,   நம் உயிரான கடவுளால்தான், என்பதை அறிய வேண்டும்.

மகரிஷிகளின் அருளசக்தி நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று தியானித்திடும் பொழுதும் சரி, அல்லது ஐயோ…, என் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா?, எனது கஷ்டங்கள் தீராதா….” என்று வேதனைப்பட்டாலும் சரி, அங்கே  சாதனைகளையும், அல்லது சோதனைகளையும் உண்டாக்கிக் கொடுக்கின்ற குருவாக இருப்பது, நமது உயிர்தான் என்று அறிய வேண்டும்.
3 என்றும் 16 - மார்க்கண்டேயன்
எமன் என்பது என்ன? எமன் என்பது நமது எண்ணம்தான், அதாவது வேதனையான உணர்வை, நாம் தொடர்ந்து சுவாசித்தோமானால், அது நமக்குள் பாசக்கயிறாக மாறுகின்றது. 

எருமை எவ்வாறு அறிவில்லாமல் இருக்கின்றதோ, அதனின் அறிவில்லாத செயலைப் போன்று,  நாம் எடுக்கும் வேதனையான உணர்வால், நமது எண்ணங்கள் சிந்தித்துச் செயல்படும் திறனை இழந்து விடுகின்றன.

நாம் சிந்திக்கும் திறனை இழந்து, அறியாமையால் உழலப்படும் பொழுது, நமது எண்ணங்கள் வலுவிழந்து, நம் வாழ்வில் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொள்கின்றன.

அதாவது, எருமை எனும் அறியாமையை வாகனமாகக் கொண்டு, எமன் எனும் எண்ணம், நமக்குத் தண்டனை கொடுக்கின்றது என்பதை நமக்கு உணர்த்தவே, அன்று மகரிஷிகள் எமனுக்கு, எருமையை வாகனமாக வைத்து, எமன், சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம் மனிதருக்குத் தண்டனை வழங்குகின்றான், என்று காண்பித்தருளினார்கள்.

அருள் ஞானிகளுடைய உணர்வுகளை நாம் எண்ணி, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது, அந்த எண்ணம் நமக்குள் சித்திர புத்திரனாக இயக்கம் பெறுகின்றது. 

இந்தச் சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம், நம்முடைய எண்ணம் இருளைப் போக்கும் எமனாக நின்று, தீமையை அகற்றிடும் செயலாக, அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் மலர்கின்றது.

நாம் உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது, அவைகள் நமக்குள் சித்திர புத்திரனாகின்றன. கண்களால் நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ, அவை நமக்குள் புகுந்து, புத்திரனாக விளைகின்றன.

நாம் ஈர்க்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள், நம்மிடத்தில் உள்ள இருள் சூழ்ந்த அசுரத்தனமான நிலைகளைக் கொல்கின்றன. தீமையை அகற்றுகின்றன. 

தீமையில்லாத உலகத்திற்கு,  உயிர் நம்மை அழைத்துச் சென்று, என்றும் ஒளிச்சுடராக நிலைத்திருக்கும் பெருவீடு பெருநிலைஎன்ற நிலையை அடையச் செய்கின்றது. ஆக, நாம் அங்கே பிறவா நிலைஎன்பதை அடைகின்றோம்.

மார்க்கண்டேயனை  நோக்கி, எமன் பாசக்கயிறை வீசுகின்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைஅணைத்துக் கொள்கின்றான். இதில் லிங்கம்என்பது உயிர்,  ஆவுடை என்பது உடல்.

அங்கே,  மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடித்துக் கொள்ளாது, லிங்கத்தை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்.  அதாவது, உயிரை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்.

ஆகவே, நமக்கு இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும், நாம் எண்ணியது அனைத்தையும் இந்த உயிர்தான் இயக்குகின்றது என்றும், ஆகவே நாம் எண்ண வேண்டியது எது? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒளியாக நின்று, நாம் எண்ணியது அனைத்தையும், அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டி, அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணரச் செய்வதும், இயக்குவதும், அதை நமக்குள் அடையச் செய்வதுமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது உயிரில், மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை எண்ணி,  நம் கண்ணின் நினைவு கொண்டு பார்த்து, அதை ஏங்கி எடுத்தோமென்றால், அது சித்திர புத்திரனாக செயல் படுகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்கின்ற பொழுது, அருள் ஞானிகள் அவர்களுக்குள் இருந்த தீமையை அகற்றிய, அதே உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.

ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும்என்ற நினைவை உங்கள் உடலுடன் இணைக்கப்படும் பொழுது,  என்றும் பதினாறு  என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தை நீங்கள் அடைய முடியும். 

வாழ்வில் சஞ்சலம், சலிப்பு, வெறுப்பு, கோபம், போன்ற உணர்வுகள் உங்களிடத்தில் தோன்றும் பொழுது, உங்கள் உயிரை எண்ணி, ஆத்ம சுத்தி செய்து தீமைகள் அருகில் வராது, உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடிக்கவில்லை, லிங்கத்தை அதாவது உயிரை இறுகப் பிடித்துக் கொண்டான். அது போன்றே, நீங்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, ஒளியின் சரீரமான அந்த உணர்வின் தன்மையை, நீங்கள் எடுக்கும் பொழுது, உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக, ஒளியின் சுடராக விளைகின்றது.

இத்தகைய நிலைகள் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்காக, எமது அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம். நீங்கள் எந்த அளவிற்கு, இந்த உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ,  அந்த அளவுக்கு ஆழமாக, யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள், உங்களிடத்தில் பதிவாகின்றன. 

யாம் கொடுக்கும் உபதேசங்களை, அடிக்கடி நினைவு கூர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்து, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வராஎன்று  உயிரை எண்ணி ஏங்கும்போது, அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து, உங்களிடத்தில் தீமையின் தன்மைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

ஆகவே, இந்த உபதேசத்தைப் படித்து, தெரிந்து கொள்ளும் அனபர்கள் அனைவரும், இருள் சூழ்ந்த இவ்வுலகில், நஞ்சான நிலையை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக, துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும், மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து,  மார்க்கண்டேயனைப் போன்று, “என்றும் பதினாறுஎன்ற நிலைத்த ஒளிச் சரீரத்தைப் பெறவேண்டும் என்று நெஞ்சில் அவா கொண்டு,  ம் குருநாதர் காட்டிய,  மெய்வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும், எமது அருளாற்றலை பூரணமாக வழங்குகின்றோம்.
4 துருவ நட்சத்திரத்தின் அருளை நுகரும் முறை
நம் உயிரான ஈசனை வணங்கி,  தாய் தந்தையரை வணங்கி,  ஞானகுரு,  சற்குரு,  சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி,  ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கிகண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி,  நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும். 

அவ்வாறு, வலுக்கூட்டிய  இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால்,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து, உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி நுகர வேண்டும். 

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து,  என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா,  ஜீவ அணுக்கள்,  என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என எண்ணி, நம் உடலுக்குள்,  அலை அலையாகப் படரச் செய்யவேண்டும், இதுவே ஆத்ம சுத்தி.
5 உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக்கும் நிலை
பாம்பினங்கள், தன் உணவிற்காக மற்றொன்றின் மீது விஷத்தினைப் பாய்ச்சி உணவாக எடுத்தாலும், மற்றதிலுள்ள விஷங்கள் இதனுடன் கலந்து, அது பலவித வண்ணங்களாகி, றையப்படும் பொழுது, நாகரத்தினமாக மாறுகின்றது.  அது கல் மயமாக மாறுகின்றது. நமது உயிரின் துடிப்பு, மின் மயமாக இருக்கின்றது. அதைப் போன்று,  நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும், உயிரைப் போன்று மின் மயமாக்க வேண்டும்.

எப்படி, தேனீக்கள் ஒன்றாகச் சேர்த்து, தேனை உருவாக்கி, ஒரு கூட்டினை அமைத்துக் கொள்கின்றதோ, இதைப் போன்று நமது உயிரும், இந்த உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் தேனைப் போன்று இணைந்து, திடப் பொருளாகி விட்டால், அது கல்லாக மாறிவிடும், வைரங்களாகிவிடும்,

கோள்களைப் போன்று பாறைகளாகிவிடும். மின் இயக்கத் துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும்பொழுது, கோள்கள் தன் சுழற்சியில் நடு மையம் வெப்பமாகி, அதன் உணர்வினை கவர்ந்து கொண்டு வருகின்றது.

ஆனால், உயிரணு தோன்றி, நட்சத்திரமாக்கப்படும் பொழுது, தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை, ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து, ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது. 

நாம் தேனை எடுத்து உணவாக உட்கொள்ளும் பொழுது, எப்படி சுவை மிக்கதாக உள்ளதோ, அதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் நுகர்ந்து, நம் உடலில் உள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்த்து, அதன் உணர்வினை வளர்ச்சி செய்யப்படும் பொழுது, இந்த உடலில் உள்ள விஷத்தை மாற்றி, இனிமை என்ற உணர்வை ஊட்டும். இந்த உணர்வினை வளர்த்துக் கொள்வதுதான், ஆறாவது அறிவின் தன்மை.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள்தான், பரிணாம வளர்ச்சிக்கே காரணமாக இருந்தது. ஆனால், ஆறாவது அறிவான பின், தீமைகளை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி, நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை, உயிரணுக்களாக மாற்றி, இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு உலக இருளை நீக்கி, ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருங்கிணைந்து இயக்கும் தன்மை பெறுகின்றது. அப்படிப் பெறச் செய்வதுதான், இந்த ஆறாவது அறிவின் நோக்கம்.

இந்த உயிர், உடலுக்குள் உணர்வின் அறிவாக இந்த உடலை இயக்குகின்றது. ஆனால் இந்த உடலிலே, உயிரைப் போலவே, ஒளியின் உடலாக மாற்றிச் சென்றவர்கள் மகரிஷிகள்.

அவர்கள்,  இந்த பிரபஞ்சத்தில் சூரியனே அழிந்தாலும், சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மையைக் கூட, ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள்.

2000  சூரிய குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றது, நமது சூரியன். இதைப் போன்று,  2000 சூரிய குடும்பங்களும் அகண்ட அண்டத்தில், மற்ற கோள்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கின்றது. ஒன்றில்லையேல் ஒன்று இல்லை,  ஒன்று என்றுமே தனித்து இருந்ததே இல்லை.

விஷம் தாக்கும் பொழுதுதான், வெப்பம் உருவாகின்றது. வெப்பம் உருவாகும் பொழுதுதான், ஈர்க்கும் சக்தியாக, இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

ஒவ்வொரு நொடியும், உபதேசிப்பதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது, நீங்கள் நுகர்ந்த உணர்வுகள், உங்கள் உடல் உறுப்புகளிலுள்ள ஜீவ அணுக்களின் முகப்பில் உயிரில் மோதுவது போன்று, அந்த அணுக்களும், இந்த உணர்வினைப் பெறும் தகுதி பெறுகின்றது. இதைப் பெறச் செய்வதற்குத்தான்,  இந்த உபதேசம். 

எனக்கு குரு, எப்படி என் நினைவினை அழைத்துச் சென்றாரோ,  அதைப் போன்று, துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வினைத் தொடர்பு கொண்டு, அதனின் உணர்வுகளை, உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்,  அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு,  ஈர்க்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே, இந்த உபதேசம்.

இதை ஏன் நீங்கள் முன்பெல்லாம், எங்களுக்குச் சொல்லவில்லை என்று கேட்பீர்கள். விதையைப் போட்ட பின்பு அது வளர வளர, அதன் நிலை வேறுவிதமாக இருக்கும். அது வளர்ந்த பின்பு, அதனுடைய வளர்ச்சியில் வரும் பொழுது எந்த வித்தோ, அதைப் போன்று, பின் தான் உருவாகின்றது.

இதைப்போன்று முதலில் ஏன் சொல்லவல்லை என்று கேட்டால், செடி ஓரளவிற்கு வளர்ந்தபின், உரம் போட்டால், தாங்கும். செடி சிறிதாக இருக்கும் பொழுது, உரம் போட்டால் கருகிவிடும்.

ஆகவே, விஷத்தை ஒளியாக மாற்றும் இந்த உணர்வுகள், சரியான பருவம் வரவில்லை என்றால், நீங்கள் வளரும் பருவத்தை மாற்றிக் கருக்கி விடும், செயலற்றதாக்கி விடும்.

ஆகவே,  அந்தந்தக் காலப் பருவங்களுக்கொப்ப குருநாதர்க்கு எந்தெந்தப் பருவத்தில், எதெனெதன் சந்தர்ப்பங்களில், எப்படிக் கொடுத்தாரோ,  அதைப் போன்று, உங்களுக்குள் மனப்பக்குவமும், உங்கள் வளர்ச்சிக்குத் தகுந்தவாறும், இந்த உணர்வினை வெளிப்படுத்துவது.

இவ்வாறு மனப்பக்குவமான பின், இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால், உங்களுடன் பழகும் நண்பர்களுக்கும், உங்களில் விளைந்த உணர்வுகள், நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.  இனி வருவோர்க்கு, உங்கள் மூலமாக, அவர்களுக்கும் கிடைக்கும். ஏனென்றால், வளர்ச்சி பெற்ற பருவம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, அது விளைகின்றது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

நாம் இவ்வளவு காலம்,  15  வருட காலமாக சாமியிடம் தொடர்பு கொண்டு இருந்தோமே, நமக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்றே, என்று இருக்கலாம். 

உங்களில் விளைந்ததுதான், இன்று வருவோர்க்கு, அதன் உணர்வின் சக்தி கொண்டு, அவர்கள் உடலில் விளையச் செய்கின்றோம். 

ஆகவே,  நீங்கள் குருவுடன் தொடர்பு கொண்ட, உங்களில் விளைந்த உணர்வுகள்தான்,  பிந்தி வருவோர்க்கு, இந்த உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது, என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.
6 நமது கடமைகள்

நாம் எதைச் சொந்தமாக்க வேண்டும்? நமது உயிருடன் ஒன்றி வாழ்ந்து, இந்த உயிருடன் ஒன்றி வாழும் அந்த ஒளியின் சரீரத்தை நாம் நமக்கு சொந்தமாக்க வேண்டும். ஆகையால், நம் தியான வழி அன்பர்கள், ஒவ்வொருவரும், உலகுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நமது கடமைகளிலிருந்து தவறக் கூடாது.


அருள் ஒளி என்ற உணர்வுகளை, நமது உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுத்து, துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குருவழியில் பாய்ச்சி, அது கடமையாக அமைத்து, அந்த அருள் வழியில் ளியாக மாற்றும், இந்த உணர்வு பெறவேண்டும்.

இந்த உடல் நமக்கு சொந்தமல்ல. இந்த உயிர்தான் நமக்கு சொந்தம். அவன் உணர்வை, எல்லாமே ஒளியாக மாற்றிவிட்டால், “தனுஷ்கோடி”. இதை நமக்குள் எடுத்து, லட்சம் என்கிற பொழுது அந்த லட்சம், இந்த லட்சம் என்றும், ஒன்று, இரண்டு, மூன்று என்ற நிலைகள் வரும்போது, பல லட்சம் ஆகிறது. அப்பொழுது,  எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்கும் போது, கோடி என்ற நிலைகளில் தனுஷ்கோடியாகின்றது.  எவ்வளவு அழகாக இராமாயாணத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆகையால், நாம் அனைவரும் இதனுடைய உணர்வுகளை வளர்த்து, அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து, அதனுடன் சேர்த்த உணர்வின் தன்மை ஒன்றாக இணைத்து, வரும் விஷ உணர்வுகளை, நீங்கள் விடும் மூச்சலைகளால் மாற்றியமைத்து, நாளை வரும் விஞ்ஞான அழிவிலிருந்து, நீங்கள் எல்லாம் காக்கப்படவேண்டும்.

நியூட்ரான் என்ற நிலைகள் வரப்படும் பொழுது, எப்படி எல்லாவற்றையும் விரட்டுகின்றதோ, இதே போல், அருள் உணர்வை நீங்கள் அனைவரும் பரப்பி, ஒரு கிராமத்தில் இருக்கின்றோம் என்றால், அங்கே கொள்ளை நோயோ, கலவரங்களோ, இதைப் போன்ற சில நிலைகள் இருந்தால், அனைவரும் கூட்டுத் தியானமிருந்து, அந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்திகளைக் கவர்ந்து, உங்கள் மூச்சலைகளை அங்கே பரப்புங்கள். அப்பொழுது, அந்த கிராமத்தில் உள்ள, தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.

சில ஊர்களில் விவசாயம் மிக மோசமாக இருக்கிறது என்று தெரிந்தால், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று கூட்டுத் தியானமிருந்து, இந்தப் பயிரினங்களில், இந்தச் சக்தி படரவேண்டும் என்றும், இதில் உருவாகும் அணுக்கள், தாவர இனத்தை வளர்க்கும் அணுவாக வளர வேண்டும் என்றும், அந்த அருள் உணர்வுகளைப் பரப்ப வேண்டும்.

எனென்றால், காற்றிலிருந்து விஷத்தின் தன்மையை நுகர்ந்து, அது அணுவாகி அதைச் சாப்பிடுகிறது. அதே சமயத்தில், நாம் எடுக்கும் உணர்வு கொண்டு, அந்த விஷத்தன்மையை எடுத்தாலும், இது காற்றிலிருந்து வெளிப்படும் செடியின் சத்தை நுகர்ந்து, அந்த உணர்வின் மலத்தை இடும்போது, அது உரச் சத்தாக மாறும். அந்த அணுவும் வளரும், சொல்வது அர்த்தமாகிறதல்லவா. 

ஆக, நீங்கள் விட்ட மூச்சலைகள் நல்ல அணுக்களாகின்றது. எனவே, இதைப் போன்ற நிலைகளில், நாம் நம்மைக் காக்கவேண்டும். நாம் ஊரைக் காக்க வேண்டும், நம் குடும்பத்தைக் காத்தால்தான், ஊரையே காக்க முடியும்.  இதைப் போல் நாம் அனைவரும் செயல்படவேண்டும்.

நாம் உலகுக்கே எடுத்துக் காட்டும் நிலைகளில், நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகளைப் பெறச் செய்து, இதற்கு முன்னால், அறியாமல் சேர்ந்த நிலைகள் நம்மை இயக்கச் செய்தாலும், தடுத்துப் பழக வேண்டும். ஏனென்றால்,  ஒரு பொருள் கெட்டுப் போய்விட்டதென்றால், மறுபடியும் அதை திருப்பிச் செய்கிறோம்.  ஒரு கட்டத்தில் குறையானால், அதை நிறுத்தி, நாம் செயல்படவேண்டும்.

ஒரு செடியின் தன்மையில் அதன் வளர்ச்சி குன்றினால், அதற்கு என்ன பக்குவம் வேண்டும் என்று வளர்க்கச் செய்கின்றோம். இதைப் போல,  நாம் ஒவ்வொன்றிலும், நம் வாழ்க்கையில் இப்படிச் செய்தேனே, இப்படி இருந்தேனே, என்பதை மறந்துவிடுங்கள்.

நாம் எப்படி இருக்க வேண்டும்? நல்ல உணர்வுகளை வளர்க்க வேண்டும். இருளை அகற்றும் அருள் சக்தி பெறவேண்டும். நம் குரு அருளால், அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலையும் நமக்குள் வரவேண்டும். அனைவரும் அந்த மெய்ப்பொருள் கண்டு, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெறவேண்டும். எனவே, இதை உங்களுக்கு சொந்தமாக்குங்கள்.

இன்றைய உலகில் விஞ்ஞான நிலைகள் கொண்டு, எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை, நாம் காண, சுவாசிக்க நேருகின்றது. விஞ்ஞான அறிவால், உலகைக் காக்கவேண்டும் என்ற நிலை இல்லாமல், தன்னைக் காக்க, தன் நாட்டைக் காக்க என்று, பிழை கொண்ட உணர்வுகளைத்தான், இன்று செய்கின்றார்கள்.

ஆகவே, இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும், நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும், நாம் நல்லதை எண்ணும் போது, இதனுடைய (விஷதன்மைகளின்) அழுத்தம் நல்ல குணங்களை சிந்திக்கும்படி செய்வதோ, நல்ல குணங்களை செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.

அப்போது, நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால், நல்ல உணர்வுகளைத் தூண்டும், அந்த அணுக்களின் தன்மையைத் தடைப்படுத்தும். 

இதை மாற்ற வேண்டுமென்றால்,  திசை திருப்புவது போல,  சக்தி வாய்ந்த நிலைகளில், நமது குருநாதர், எமக்குக் கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை, அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு நொடியிலும், நீங்கள் இதை வளர்க்க வேண்டும், எமது அருளாசிகள்.