ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2012

வீட்டைச் சொர்க்கமாக்கும் நிலை

1 வீட்டைச் சொர்க்கமாக்கும் நிலை
மிருகங்களில் ஆண், பெண் என்ற நிலை இருக்கப்படும்பொழுது, ஆணுக்கு, ஆணே போர் செய்கின்றன. பெண் மிருகங்களை, போரில் இணைப்பதில்லை. 

மிருகங்களில் ஆணுக்கு, ஆண்தான் மோதுகின்றதே தவிர பெண்பாலை அரவணைத்தே செல்கின்றது. ஆனால், மனிதர்களாக இருக்கும் நாம்,  பெண்களைத் துன்புறுத்தும் நிலையே இருக்கின்றது. 

பெண்களைத் துன்புறுத்தும் நிலையில், வேதனை என்ற உணர்வுகள் கலந்தால், ஆண், பெண் என்று இருவருடைய உணர்வுகளிலும், வேதனை என்ற விஷத்தின் தன்மை கலக்கின்றது என்பதை, உணர்வதில்லை.

காரணம், பெண்பாலில் உருவாகும் வேதனை என்ற விஷத்தின் தன்மையினை, ஆண்பால் நுகர நேர்ந்தால், வெறுப்பாகவோ, வேதனையாகவோ இருந்து, அதனின் விஷத்தன்மை அதிகரித்து அங்கே படர்கின்றது. பெண்பால் வேதனை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது, கேட்போர், மற்றும் வேடிக்கை பார்ப்போரின் உணர்வுகளிலும்கூடஅது பதிவாகின்றது.

ஆகவே, பெண்களைத் துன்புறுத்தும் நிலையினை விடுத்துப் பழகவேண்டும். ஏனென்றால்,  பெண்பால் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றதோ, அதன் உணர்வின் தன்மையினை வெளிப்படுத்தும் பொழுது, இந்த வேதனையின் உணர்வுகள் புவியின் காற்றில் பரவுகின்றது.

பெண்களைத்  துன்புறுத்தும் உணர்வுகள் அதிகரித்தால், ஆண்களும் நரகவேதனை என்ற நிலைகளை, அனுபவிக்க நேரும். 

ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்கள் திருமணமானபின், எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்கள் விடும் மூச்சலைகளெல்லாம், காற்று மண்டலத்தில் படர்கின்றன.

சோகமும், வேதனையும், கொண்ட இத்தகைய உணர்வுகள் காற்றில் படரும்பொழுது, நம் பூமியின் நிலைகளில் மாற்றங்களே ஏற்படும். 

இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலுமே, பெண் இனத்தைத் துன்புறுத்தும் நிலை இருக்கின்றது. மற்ற உயிரினங்களில், பெண்பாலை அரவணைத்துச் செல்லும் தன்மை இருக்கின்றது. அதனில், அன்பு கலந்த சந்தோஷமும் பெறுகின்றன.

மனிதனானபின், பெண்களைத் துன்புறுத்தும் நிலை அதிகரிக்கும் பொழுது, இதனின் உணர்வுகள் நமது உடலில் மட்டுமல்ல, வேடிக்கை பார்ப்போரின் உடல்களிலும் கூட, வேதனையும், சோகமும் உருவாக்கப்படுகின்றது. ஆகையால், இணைத்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கேற்ப, இப்படி மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாதபடி, புவியின் காற்று மண்டலத்திலும் கலந்திருக்கும் நிலையில், இதனைச் சாப அலைகள் என்று சொல்வார்கள்.

துன்புறுத்தும் உணர்வுகளும் சரி, வேடிக்கை பார்க்கும் உணர்வுகளும் சரி, இன்று மனிதருக்குள் தீய உணர்வின் தன்மை அதிகரிக்கும் நிலைகளில், மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் நிலையே வருகின்றது.

இவைகள் அனைத்தையும் நாம் சிந்தித்து, பெண்பால் என்ற உணர்வினை அரவணைத்து,  அன்பு கலந்த உணர்வினைச் சேர்த்து, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி,  இருளை அகற்றி, நம்மையும், நம் நாட்டு மக்களையும், இனிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச்  செய்வோம்.

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. இரும்பு உலோகத்தில், தென் துருவம், வட துருவம் என்பது,  வட துருவத்தில் இருக்கக் கூடிய காந்தப்புலன், ஈர்க்கும் சக்தி பெற்றது, தென் துருவத்தில் இருக்கக்கூடிய காந்தப்புலன், ஒதுக்கும் சக்தி பெற்றது. சூரியனின் நிலைகள் வரப்படும் பொழுது, இதனுடைய அளவுகோல்படி, மிதக்கும் தன்மை வருகின்றது. 

இன்று, காந்தத்தின் துருவங்கள் ஒன்றைக்  கண்டு, ஒன்று அழுத்தங்களாக இருக்கின்றன. ஒரு காந்தப்புலனுக்குள் மறைந்துள்ள, இத்தகைய ஆற்றலை மனிதர்கள் கண்டுணர்ந்து, அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்குகின்றனர்.

நமது பூமி, மற்ற பொருள் தனக்கு கிடைக்கும் நிலையில், தன் வெப்பத்தின் துணை கொண்டு, அதனைத் தன்னில் இணைத்து வாழும் தன்மை கொண்டுள்ளது. ஆண், பெண் என்ற நிலைகளில், பெண்களும் ஆண்களை மதித்து, அவர் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கொண்டால், ஆண்கள் உயரந்த நிலைகள் பெறுகின்றனர், தொழில் வளம் பெறுகின்றனர், குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற நிலை உருவாகின்றது.

மகரிஷிகள் என்பவர்கள், தாங்கள் காட்டிற்குள் வசித்தாலும், கணவனும், மனைவியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து, உணர்வின் சக்தியினை வளர்த்தனர்.  அதன் தொடர் கொண்டே, நமக்கு காவியத் தொகுப்புகள் கிடைத்தன.

ஆனால். பிற்காலத்தவர்களோ, இந்தக் காவியத் தொகுப்புகளை அவரவர் நலன்களுக்கேற்ப மாற்றியமைத்து, உண்மைகளை மறைத்துவிட்டனர். இதன் நிலையாக, இன்று மனித இனமே அழிந்து போகும் நிலைக்கு, பிரபஞ்சம் முழுவதும் விஷத் தன்மை கொண்டதாக, மாறிவிட்டது.

தான் சுகமாக வாழவேண்டும், என்ற உணர்வின் அறிவுகள் வளர்ந்து, தீமைகளை அடக்கி, உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனிதச் சரீரத்தில், நாட்டாசையும், உடலாசையும், பொன்னாசையும், பெண்ணாசையும் கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்து, மனித குலத்தைச் சீர்குலைத்து அழிக்கச்  செய்யும் நிலைகளையே, வளர்த்துள்ளனர். மனித குலத்தையே கூண்டோடு அழிக்கச் செய்யும் மிருக உணர்வுகள், புவியில்  துரித நிலைகளில் இயங்கிக் கொண்டுள்ளது.

இந்தச் சந்ததிக்குப்பின், பெரும் புயல்களைப் போன்று, சூறாவளிகளைப் போன்று, பெரும் நில நடுக்கங்களைப் போன்று உருவாகி, பெரும், பெரும் கட்டிடங்களே நொறுங்குவது போன்று, மனித உணர்வின் தன்மை சீர்குலைந்து, மனிதனுக்கு மனிதன் நொறுங்கி மடியும் தன்மையும், மனித இனமே கூண்டோடு அழியும் தன்மையும், வந்துகொண்டே இருக்கின்றது.

இது போன்ற தீமைகளிலிருந்து, நாம் அனைவரும் மீளவேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், ஒவ்வொரு குடும்பத்திலும், கணவனும், மனைவியும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து, உயர்ந்த நிலைகளைத் தங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 

இதற்காகத் தான், குருநாதர் நமக்கு நல்வழியைக் காண்பித்தார். ஆகவே, ஒவ்வொரு நிமிடமும், பெண்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணி, நாமும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணினால், நமக்குள் உயர்வு தரும்.

ஏனென்றால், குறுகிய காலமே நமக்கு இருக்கின்றது. இராமாயணத்தில், இராமன் நேரமாகிவிட்டது என்று, இராமேஸ்வரத்தில், இதுவே கடைசி நிலை என்று மணலைக் குவித்து, சிவலிங்கம் அமைத்து பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது. ஏனென்றால், இராமன் என்ற எண்ணங்கள், இந்த மனித உடலில் கடைசி நிலையில் இருக்கின்றது.

ஆகவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்  என்ற உணர்வை நமக்குள் கலந்துவிட்டால், கடைசி என்ற நிலைகள் வரும், “தனுஸ்கோடி”. ஆக, நம்முடைய கடைசி எண்ணத்தின் நிலைகளாக, துருவ நட்சத்திரத்தின் உணர்வை, தனுசாக நமக்குள் உட்செலுத்தி,  தீமை என்ற நிலைகளை அகற்றி, உணர்வை ஒளி என்ற நிலைகளில் மாற்றிஇனிப் பிறவி இல்லை என்ற நிலைக்கு, நாம் அனைவரும் செல்ல வேண்டும்.

2 குடும்பத்தை நலமாக்கும் நிலை
ஜாதகம், ஜோசியம் பார்த்து மணமக்களுக்கு எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றதா என்று பார்த்து, நல்ல நேரம் பார்த்துதான் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

ஆனாலும், திருமணம் முடிந்து வந்தவுடன், இல்லற வாழ்க்கை தொடங்கும் காலத்தில், இல்லத்தில் பல இன்னல்கள் வந்து சேர்கின்றன. இதனால், கணவன், மனைவிக்குள் வேறுபட்ட உணர்வுகள் தோன்றுகின்றன. இப்படி வேறுபட்ட உணர்வுகள் வரும் பொழுது, பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளாலும், வேதனைகளாலும் வெளிப்படும் உணர்வுகள், எல்லோரையும்தான் சாரும்.

ஏனென்றால், பெண்கள் வெளிப்படுத்தும் வேதனையின் உணர்வுகளை, சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன. நாம் இவ்வேதனையின் உணர்வுகளை கேட்டறிய நேரும் பொழுது, இவ்வேதனையின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகின்றது.

பதிவின் நிலைகொண்டு, நாம் நுகர்கின்றோம். ஆகவே, நம்மை அறியாமலே அவர்களுடைய வேதனைகளை நுகர்ந்து, நமக்குள்ளும் வேதனையான உணர்வுகளாகவே மாற்றிவிடுகின்றோம். அதனின் உணர்ச்சியும் நம்முள் அதிகரித்து விடுகின்றது.

கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்பவர்களாக இருந்தால், அது சமயம், வெறுப்பு என்ற நிலைகளோ, வேதனை என்ற உணர்வுகளோ இல்லாதபடி,  காலையில் துருவ தியானத்தில் அமர்ந்து, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும், என் கணவர் / மனைவி பெறவேண்டும், எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும், எங்கள் வாழ்க்கையில், இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறவேண்டும்என்ற உணர்வினை இருவரும் பெருக்குதல் வேண்டும்.

ஆக, இது போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தங்களுக்குள் பெருக்கி, இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள். நாம் நமது வாழ்க்கையில், இயற்கையின் உண்மைகளை, அறிந்து கொள்தல் வேண்டும்.

வெப்பம், காந்தம், விஷம் என்று இந்த மூன்று நிலைகளும் இணைந்து, ஒரு அணுத் தன்மை அடைகின்றது. காந்தம் ஆதிலஷ்மி”,  எதையும் ஈர்க்கும் சக்தி கொண்டு, எதனையும் தன்னுள் இழுத்து வளர்க்கும் தன்மை என்றும், வெப்பம் ஆதிபராசக்தி”,  அனைத்தையும் உருவாக்கும் தன்மை பெற்றது என்றும், விஷம் ஆதிசக்தி”,  எதனிலும் மோதலாகி, அது இயக்க உணர்வுகளை இயக்கும் என்றும், நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

அதாவது, பெண்பால் ஆகித்தான், ஆண்பால் ஆகின்றது.  ஆகவே பெண்பால் என்னும் பொழுது, அது தாயாகின்றது. பெண்பால், தான் தாய் என்னும் நிலையில், தன் குழந்தைகளையோ, மற்ற நிலைகளையோ, சீர்படுத்தி வளர்க்கும் நிலையில் செயல்படுகின்றது. ஆகவே,  நாம் பெண்களைத்  தாயாகவும், நம்மை ஒரு சேயாகவும், மதித்துப் பழகுதல் வேண்டும்.

இது போன்று,  பெண்கள் ஒவ்வொருவரும், தான் ஒரு தாயாகவும், தான் ஒரு சேயாகவும் இருந்து பழகுதல் வேண்டும்  என்பதைத்தான், இராமாயணமும் மற்ற காவியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. 

ஆகவே, நம்முடைய எண்ணங்களை ஒன்று சேர்த்து, இணைத்த உணர்வின் தன்மை கொண்டுதான், நாம் விண் செல்ல வேண்டும்.

    ஆகவே, நாம் தினமும் அதிகாலையில் சிறிது நேரமாவது, துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டு வருவோமேயானால், நமக்குள் அருள் உணர்வுகள் பெருகும். நம்மையறியாது சேர்ந்த இருளை நீக்கி, இல்லத்தில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உருவாகும். அங்கே மகிழ்ந்து வாழச் செய்யும், உணர்வுகள் படரும்.

ஒரு இல்லத்தில், பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது, அந்த இல்லம் சொர்க்கலோகமாக மாறுகின்றது. 

அந்த இல்லத்தில் உள்ள பெண்களில், யாரேனும் வாட நேர்ந்தாலும் அந்த இல்லமே, குடும்பமே நரகலோகமாக மாறிவிடும். ஆகவே, நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலைகளிலிருந்து விடுபட்டு, பெண்களை உயர்வாக எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஆகவே, இல்லத்தில் பெண்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கச் செய்கின்றோமோ, பெண்களிடத்தில் அன்பு கலந்த உணர்வுகளைச் செலுத்துகின்றோமோ, இதனின் உணர்வுகள் கொண்டு, அங்கே ஒன்று சேர்ந்து வாழும் தன்மையும், இருளை அகற்றும் சக்தியும், அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும், குடும்பத்தைச் சீர்படச் செய்யும் பண்புகள் வளரவும், அன்பின் உணர்வுகள் நமக்குள் பெருகவும், மகிழ்ந்து வாழ செய்யும் உணர்ச்சிகள் வளரவும், பிறவியில்லா நிலை என்ற நிலைக்கு அழைத்து செல்லும் சக்தியும், பெண்களுக்கு உண்டு. ஆகவே, நீங்கள் பெண்களை மதித்து நடங்கள், ஆதிசக்தி அதுதான்.

இந்தச் சக்தியின் தன்மை வரும் பொழுதுதான், உடல் சிவமாகின்றது. நுகர்ந்த உணர்வுகள் பிரம்மமாகின்றது. பிரம்மத்தின் தன்மை உடலாகின்றது. எந்த குணத்தின் தன்மை உடலானதோ,  அதனின் உணர்ச்சியாக,  ஞானமான சரஸ்வதி, நம்மை வழிநடத்திச் செல்லும்  என்பதை, நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு குடும்பத்தில், தாய்மார்கள் சில நிலைகளில் வெறுப்படைந்து விட்டால், அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள், குறைகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், வீட்டிற்கு ஒரு மருமகள் வருகிறாள் என்றால், அந்த வீட்டிலிருக்கும் முதியவர்கள், மருமகளாக வந்த பெண்ணிடத்தில் குறைகளைக் கண்டு, குறை கூறும் நிலையில், அங்கே குறையின் உணர்வுகளே வந்துவிடுகின்றது.

முதியவர்களாக இருப்பவர்கள் அனைவரும்,  இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, எதைக் கொண்டு செல்லுகின்றோம்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.  முதுமை நிலையில் இருக்கும் நாம், நமக்குள் தெளிந்துணர்ந்து வளர்ந்த நாம், காலையில் துருவ தியானத்திலிருந்து, “தன் மகன், மருமகளுடன், இருமனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழவேண்டும், தெளிந்த மனம் பெறவேண்டும், தெளிவான வாழ்க்கை வாழவேண்டும்என்று முதியவர்கள், இதனின் உணர்வுகளை பாய்ச்சிப்  பழகுதல் வேண்டும்.

ஏனெனில், ஒரு குடும்பத்தில், பெண்கள் வாடிய நிலைகளிலிருந்தால், அவர்கள் எத்தகைய பயிர் செய்தாலும், அது வாடியே போகும். நல்ல பலன் இருக்காது. பெண்கள் வாடிய முகத்துடன் இருக்கும் பொழுது, செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்காது, அந்தத் தொழிலும் குன்றிவிடும்.

ஆகவே,  அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து, நமக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலையும், வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வுகளையும், நமக்குள் எடுத்துப் பழகுதல் வேண்டும். 

இது போன்று செய்து வரும் பொழுது, நமது இல்லத்தில் செய்வினைகள் இருந்தாலும் சரி, தோஷங்கள் ஆகிவிட்டது அல்லது நம்மை றியாமலேயே சாப வினைகள் ஆகிவிட்டது, என்பது போன்ற,  எத்தனை பெரிய நிலைகள் இருந்தாலும் சரி, அருள் மகரிஷிகளின் அருள் துணை கொண்டு, இத்தகைய தீய நிலைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும், “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்என்ற உணர்வினை தினமும் எடுத்து பழகுதல் வேண்டும். இது உங்களிடத்தில் எத்தனையோ நற்பயன்களை விளைவிக்கும்.

ண்மையான யாகம் எதுவென்றால், அந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும்,  துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வைப் பெறவேண்டும்”  என்ற உணர்வை, நமது உயிரான நெருப்பினுள் போட்டு, இதனின் உணர்வின் அலைகளை நமது வீடு முழுவதும் பரப்பினால்,  வீட்டினுள் எத்தகைய சாப நிலைகள் இருந்தாலும், எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் அவையனைத்தும் அகன்றுவிடும்.

கணவன், மனைவிக்கிடையே, எத்தனையோ வேறுபட்ட உணர்வுகளும், மனஸ்தாபங்களும் இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்கள் நரக வேதனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிடும் வேதனையின் உணர்வலைகள், இங்கே புவியில் படர்கின்றது.

இது போன்ற வேதனையின் உணர்வுகளை, நாம் நுகர்ந்து அறியும் பொழுது, நம்மிடத்தில் இருள் சூழும் நிலைகள் வருகின்றது என்பதை அறிந்த நாம்இனியாவது, நமது குடும்பம், நமது குழந்தைகள், நமது ஊர், நமது நாடு என்ற நிலைகளில் ஒருங்கிணைந்த நிலை பெறவேண்டும்,  அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நமது குடும்பமும், நமது ஊரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது, இதனின் உணர்வுகள் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ உதவும். ஆகவே, நாம் ஒவ்வொரு நாளும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், ங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், ங்கள் ஜீவ ஆன்மாஜீவ அணுக்கள் பெறவேண்டும், என் கணவர் பெறவேண்டும், ங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும், ங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெறவேண்டும், ங்கள் நாட்டு மக்கள் அனைவரும் பெறவேண்டும். இந்த உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்று இதனின் உணர்வுகளை,  நாம் எல்லோரும் பரப்புவோம்.

இதனின் தொடர் கொண்டு, நமது குடும்பத்திலும், நமது ஊரிலும் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும், இருளை அகற்றும் வல்லமையும், மகிழ்ந்து வாழும் தன்மையும் உருவாகும். 

குடும்பமும், ஊரும், நலமாகும் பொழுது நமது உணர்வுகள் அடுத்திருக்கும் ஊரிலும் படர்ந்து, அவர்களையும் பண்படச் செய்து, மகிழ்ச்சியுடன் வாழ செய்கின்றது.

மனிதர்களான நாம், கோடிக்கரை (மனித உடல்) எனும் கடைசி நிலையிலிருக்கிறோம் என்று ணர்ந்து, தனுஸ்கோடி என்னும் கடைசி எண்ணத்தின் நிலைகளாக,   அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மை கொண்டு, தம் உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக்கி, இனிப் பிறவியில்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.

இதனின் உணர்வு கொண்டு, மகரிஷிகள் காண்பித்த அருள்வழியில் செயல்படும் அனைவரும், அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, இருளை வென்று, மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று, ஒன்றுபட்டு வாழும் நிலை பெற்று, மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று, பிறவியில்லா நிலை என்னும் அருள் சக்தி பெற்று, பெரு வீடு பெரு நிலை எனும் நிலையைப் பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக, வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

3 சத்தியவான் சாவித்திரி
வீட்டில், கணவன் மனைவி வாழுகின்றார்கள். கணவனுக்கு, அலுவலகத்தில் யாராவது இடைஞ்சல் செய்யும் நிலைகள் அதிகமாகி விட்டால், வீட்டில் மனைவி என்ன செய்யவேண்டும்?

மனைவி, இந்த மாதிரி நேரங்களில், “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், என் இரத்தத்தில் கலந்து, என் உடல் முழுவதும் படர்ந்து, ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டுமென்று எண்ண வேண்டும்.

பின், துருவ மகரிஷிகளின் அருள் சக்தி, என் கணவர் பெறவேண்டும். அவர் உடல் முழுவதும் படரவேண்டும், அவரைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும், நல்ல எண்ணங்கள் வரவேண்டும், என்று இதைச் சமைத்து, கணவரிடம், நல்லது நடக்கும் என்று சொல்லிப் பாருங்கள்.      

அவரால், இதை எண்ண முடியவில்லை. அதனால், மனைவி இதைச் செய்யவேண்டும். இதுதான், எமனிடமிருந்து, சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்  என்பது.

இரண்டு உயிரும் ஒன்றானால், இரு மனமும் ஒன்றி, இரு உணர்வும் ஒன்றாகின்றது.  உணர்வு ஒன்றியபின்,  கணவரைப் பாதுகாக்கும் உணர்வை, மனைவி செய்யவேண்டும்.

சங்கடம் வேதனை, என்ற உணர்வுகள் வரும்பொழுது, அது நோயாக மாறி, மனிதனை முடித்துவிடும் எமனாக மாறுகின்றது. இதை மாற்றவேண்டும். எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழவேண்டும்.

அப்படியென்றால், கணவனும் மனைவியும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக், கவரவேண்டும்.  நளாயினி போன்று, என்கின்றபோது, கணவருக்கு ஒரு சங்கடம் வரும்பொழுது,  அதை நிவர்த்திக்கக் கூடிய சக்தியாக, அவர் உயர்ந்த ஞானம் பெறவேண்டும், என்ற உணர்வை, மனைவி எடுக்க வேண்டும்.

சாவித்திரி போன்று இருமனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்ற வேண்டும். கணவர் அருள் உணர்வு பெறவேண்டுமென்றும், அவருக்கு, நல்ல எண்னம் வரவேண்டுமென்றும், அவர் பார்ப்பது எல்லாம், நலமும் வளமும் பெறவேண்டும் என்றும், அவர் சொல்லைக் கேட்போரெல்லாம், இனிமை பெறவேண்டுமென்றும், பெண்கள் எண்ண வேண்டும்.

அப்பொழுது, அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டே இருக்கும். நல்ல சிந்திக்கும் தன்மை வரும்.

கணவன் மனைவி வேதனைப்படும் பொழுது, அந்த வேதனை என்ற உணர்வுகள், இருவரையும் சிந்திக்க முடியாமல் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் எல்லாம், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், என் உடல் முழுவதும் படர்ந்து, உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும், என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணி, உடலுக்குள் சேர்த்தவுடன், கணவருக்கு, அதைப் பாய்ச்ச வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருளால், அவர் சொல்வதெல்லாம் நலம் பெறவேண்டும், அவர், பிறர் போற்றும் நிலைகள் பெறவேண்டும், என்று மனைவி எண்ண வேண்டும். அந்தப் பழக்கத்திற்கு வரவேண்டும்.

தியானம் என்பது, இதுதான் தியானம். உட்கார்ந்து சதா எண்ணுவது, தியானமல்ல. அந்த அருள்சக்தி பெறுவதும், அதை இயக்குவதும்தான், தியானம்.

நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் ஆனபின், சிக்கலென்ற உணர்வு வருகின்றது. நுகரும் உணர்வுதான், நம்மை இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைதான் கூடும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், என்ற நிலைகளில், விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.

மெய்ஞானிகள் காட்டியது, பிறரின் உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது, நம் நல்ல உணர்வுகளை உடைத்து, உள்ளுக்குள் சென்று விடுகின்றது. ஆகையால், அந்த வேகமான உணர்வுகள், நமக்குள் வராதபடித் தடுக்க வேண்டுமென்றால், அந்த அருள் உணர்வை, நாம் அடிக்கடி சேர்த்து, இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாம் பெறவேண்டுமென்று, செருகேற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுது, நமக்குப் பாதுகாப்பான நிலைகள் வரும். நமது தியான வழி அன்பர்கள், நமக்குள் தீமை வராது, தடுத்துப்  பழகுவதுதான் தியானம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நமக்குள், எல்லா அணுக்களுக்குள்ளும் சேர்த்துவிட வேண்டும்.

நாம் புழுவிலிருந்து வரப்படும் பொழுது, தீமையிலிருந்து விடுபடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து, வந்தோம். தீமையை நீக்கிய, துருவ நட்சத்திரத்தின் உணர்வை, உங்களிடம் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவு கொண்டு, துருவ நட்சத்திரத்தை எண்ணி, காற்றில் கலந்துள்ள, துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பயன்படுத்தும் பொழுது, நாம் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச், சேருகின்றோம்.

அந்த ஆயுள் கால மெம்பர் குடும்பத்தில், யாம் சொன்ன மாதிரி கடைப்பிடிக்க வேண்டும். குழந்தை சுட்டித்தனமாக இருந்தால், உடனே, துருவ நட்சத்திரத்தை எண்ணி, மாற்ற வேண்டும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும், உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணினால், அதை எப்படிச் செய்ய வேண்டுமென்ற சிந்தனை வரும்.

கணவனும் மனைவியும், இந்த தியானத்தை எடுத்து, கணவருக்கு, உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் கிடைக்க வேண்டும், தொழிலில், நல்ல வீரிய சக்தி பெறக்கூடிய, உணர்வு வரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அவர் மனம், வலிமையாக இருக்க வேண்டும், எண்ணங்கள், சீராக இருக்க வேண்டும், அவர் செயல்களை, அனைவரும் போற்றும் நிலைகள் வரவேண்டுமென்று, எண்ணிப் பாருங்கள். எந்த வியாபாரமானாலும், அவரிடத்தில் பொருள் வாங்குவோர் எல்லாம், நன்றாக இருக்க வேண்டுமென்று, எண்ணிப் பாருங்கள். 

மனைவி இப்படி எண்ணினால்,  வேறு யாரிடத்திலும் யோசனை கேட்க வேண்டியதில்லை.  இந்த உணர்வுடன், கணவர் எங்கு சென்றாலும்,  எல்லாக்  காரியத்திலும், வெற்றி பெறலாம். நாம், இந்த மாதிரி வாழ்ந்து காட்டவேண்டும். அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும். அப்பொழுது, வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.

மற்றவரிடத்தில் இதைச் சொல்லும் பொழுது, இந்த உணர்வு, அங்கே விளைய வேண்டும். அவர்கள் குடும்பமும், நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் உடலில் விளையும் மூச்சு, நல் உணர்வாகப் படரவேண்டும்.

நம் தெருவிற்குள், நல்ல உணர்வலைகள் பரவவேண்டும். அப்பொழுது, ஒன்றுபட்டு வாழும் நிலை வரும். நாம் ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும், துருவ நட்சத்திரத்தை எண்ணிப் பழகவேண்டும்.

நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளினார். அவர் வழியில், அவர் காட்டிய நெறிப்படி, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நாம் எடுக்க வேண்டும். 

அவர் துருவ நட்சத்திரத்தின் அங்கத்தினர். அவர் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி பட, இருள் நீங்கும். அதன் அருளைப் பெற. இருளை அகற்றும் சக்தி பெறலாம். இதையெல்லாம் நாம் பெற்றுப் பழகவேண்டும். இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

4 வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழும் நிலை
அகஸ்தியன், அவன் வளர்ச்சியில் பதினாறு வருடங்கள் வளர்ச்சி பெறுகின்றான். அவனுக்குப் பதினாறாவது வயதில், அக்கால மக்கள் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். அத்திருமணத்தைச் செய்து வைக்கும் பொழுது, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி, அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றார்கள்.

துருவன், தான் கண்ட உண்மைகளைத் தன் மனைவி பெற வேண்டும் என்று உணர்வுப் பூர்வமாகச் சொல்லுகின்றான். அவனுடைய மனைவி கேட்கின்றது. தனக்குள் பதிவு கொண்ட உணர்வின் துணை கொண்டு, விண்ணை நோக்கி ஏங்குகின்றது. இவன் கண்ட பேருண்மைகளை அவளும் காணுகின்றாள். அந்த உணர்வின் அறிவுப் பூர்வமாக அறிகின்றாள்.

தன் கணவனால் பெற்ற சக்தியால், பேரின்பப் பேரானந்த நிலைகள் அடைகின்றாள். இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணரும் பருவமும், அதை நுகர்ந்தறிந்து, தனக்குள் மகிழ்வுறும் உணர்வுகள் வெளிபடுத்துவதையும், நஞ்சினை ஒடுக்கும் ஆற்றலும், தான் நுகரும் உணர்வு, ஒளிக் கற்றைகளாகத் தன் உடலில் இருந்து வெளிப்படுவதையும் உணர்கின்றாள்.

இவ்வாறு, தன் கணவனால் பெற்ற இந்தச் சக்தியால், இந்தப் பிரபஞ்சத்தை அறிந்திடும் உணர்வுகள், நுகர்ந்திடும் உணர்வுகள் தனக்குள் வளரும் தன்மை பெற்று, கணவன் அந்த உயர்ந்த நிலைகளை, மேலும், மேலும், பெற வேண்டும் என்ற, ஏக்க உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றாள்.

துருவனோ, தான் உபதேசித்த உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து, அதன்வழி தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கண்டு, அவனும் பேரானந்தப் படுகின்றான். அப்பொழுது, இருமனமும் ஒன்றாகி, ஒருவரை ஒருவர் உயர்த்தி எண்ணும் நிலை வருகின்றது.

ஒருவர் சொல்லை, ஒருவர் உயர்த்தும் நிலை வரும் பொழுதுதான், அதற்கு நளாயினி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள். தன் கணவன் சொல்லை சிரமேல் கொண்டு, அதன் வழி நடப்பதை நாமெல்லாம் புரிந்து கொள்வதற்காக, நளாயினி என்று காரணப்பெயரை வைக்கின்றார்கள்.

தன் கணவன் சொன்ன சொல்லைத் தனக்குள் உயர்த்தி, அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து, இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணர்வதோடு மட்டுமல்லாது, அகண்ட உலகில் நட்சத்திரங்கள் எவ்வாறு உணவை உட்கொள்கின்றது? என்பதை அறியும் பருவம் வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள், உணவாக உட்கொண்ட உணர்வுகள், நமது பிரபஞ்சத்தில் பரவும் பொழுது, சூரியன் அதை உணவாக உட்கொள்வதையும், அதன்வழி அது வளர்ச்சி பெற்று வெளிப்படும் உணர்வுகள், கோள்களும் அணுக்களும் எப்படி உருப்பெறுகின்றது? என்ற நிலையையும் அவள் அறிகின்றாள். தான் கண்ட உண்மையை, தன் கணவருடன் ஒன்றி, அந்த உண்மையின் தன்மைகளைச் சொல்வதும், இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு, அகஸ்தியன், தன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும், உயர்ந்த சக்தி பெறுகிறதென்றும் உணர்கின்றான். அந்த உணர்வுகள் அனைத்தும், அவர்கள் உடல்களில் விளையப்பட்டு, இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை பெறுகின்றது.

இரு உயிரும் எதைக் கவர்ந்ததோ, அதைக் கருவாக உருவாக்கும் திறன் பெறுகின்றார்கள். துருவனின் உடலில் விளையும் உணர்வுகள், துருவ மகரிஷியின், மனைவியின் உடலிலும் விளைகின்றது.

அதற்கு அருந்ததி என்று, காரணப் பெயரை வைக்கின்றார்கள். தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி, அதனுடன் இணைந்து வாழ்ந்திடும் நிலையை அருந்ததி என்று, பெயரை வைக்கின்றார்கள். வசிஸ்டரும் அருந்ததியும் என்றால், வசிஸ்டர் ஆண்பால், அருந்ததி,  தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள். இருவரும் ஒன்றாக இணைந்து, அந்த உணர்வின் தன்மையை இரண்டறக் கலந்து, ஒன்றாக உயிருடன் இணைக்கும் பருவம் பெறுகின்றார்கள்.

உயிருக்குள் வெப்பம் என்ற நிலைகள் இருப்பினும், ஈர்க்கும் காந்தம், பெண்பால் அருந்ததி என்றும், தன்னுடன் இயக்கும் உணர்வுகளை வசிஸ்டர் என்றும், காரணப் பெயரை வைக்கின்றார்கள். இவ்வாறு வளர்ந்த உணர்வுகள் “சத்தியவான் சாவித்திரி”. உயிருடன் ஒன்றிய உணர்வாக, மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் தகுதி பெறுகின்றார்கள்.

இதைத்தான், நமது ஞானிகள் நாமெல்லாம் கண்டுணர்வதற்கு, சந்தர்ப்பத்தால் ஏற்படும் இணைப்பும், அதனால் உருப்பெறும் சக்தியும், அவைகளுக்குக் காரணப் பெயர்களை வைத்து அழைத்து, அகஸ்தியன் தொடர்களை, நாமும் கண்டுணரும்படி செய்கின்றார்கள்.

அவ்வழியில் வளர்ந்தவர்கள்தான், இன்று எதைக் கூர்மையாக எண்ணி, அந்த உணர்வினை இருவரும் ஒன்றாக இணைந்து பெற்றனரோ, இணைந்து, இன்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள். துருவ நட்சத்திரமாக வாழ்ந்தாலும், அகண்ட உலகின் தன்மையைத் தன் உணர்வுக்குள் பெறும், தகுதியும் பெறுகின்றனர்.

நட்சத்திரங்கள், பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் வரும் நிலையைக் கவர்ந்து, அது உமிழ்த்தும் உணர்வலைகள் பால்வெளி மண்டலங்களாகப் படர்கின்றது. அணுக்களின் தன்மைகள் சுழற்சியில் வரப்படும் பொழுது, தூசிகளாக மாறுகின்றது. இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு பொருளைக் காற்று அழுத்ததால், அழுத்தப்படும் பொழுது மிகவும் தூசிகளாக மாற்றுகின்றார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும், துருவ நட்சத்திரமாகும் பொழுது, பிற மண்டலங்கள், அகண்ட உலகில் அது பெறும் உணர்வுகள் தூசுகளாக வருவதையும், பிரபஞ்சத்தில் பரவுவதையும், பிரபஞ்சத்தில் பரவுவதை நமது பூமி துருவப் பகுதியில் ஈர்க்கப்படும் பொழுது, இடைமறித்து, அந்த உணர்வின் தன்மையை, (எப்படி, நமது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும், துருவப் பகுதியில் இடைமறித்து, அதன் உணர்வாக எடுத்து, தான் வளர்க்கின்றதோ அதைப் போன்று,) நமது பூமியில் விளைந்த, இவர்கள் இருவரும் ஒன்றானபின், இந்த உணர்வின் நிலையைக் கருவாக்கும் நிலைகள் பெற்று, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும், இருவரும், இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வை, ஒளியின் அணுவாக மாற்றியது போன்று, அக்காலங்களில் பெற்ற, மற்ற மக்கள் ஆறாவது அறிவு ஏழாவது நிலைகள் பெற்று, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள். “என்றும் பதினாறு” என்ற நிலையை, அடைந்து விட்டார்கள்.

ஆகவே, நாம் அனவரும் இதே வழியில், அதை உற்று நோக்கி அந்த உணர்வினைக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால், நாமும் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து, ஒளியின் சரீரமாவது திண்ணம். எமது அருளாசிகள்.