ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2012

சாகாக்கலை, வேகாநிலை,போகாப்புனல்


1 சாகாக்கலை, வேகாநிலை
நிறையப் பேர் சொல்லுவார்கள். நாங்கள், சாகாக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு சாகாக்கலை தெரியுமா? என்று எம்மிடமே கேட்கின்றார்கள்.

போகர் சொன்னாராம், சாகாக் கலையைப்பற்றி. சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு, அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில்,  சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன். ஆகையால், அந்த மருந்தெல்லாம் போட்டு, மந்திரங்களைச் சொல்லி, போகர் காட்டிய வழியில், நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன். உங்களுக்கு என்ன தெரியும்?

இவ்வாறு,  நான் சாகமாட்டேன் என்று சொன்னவர், சீக்கிரம் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால், என்னமோ, எதிலோ குறையாகி விட்டது, எனக்கு இப்படி வந்துவிட்டது என்பார்கள். இது சாகாக் கலை.

இப்பொழுது, யார் இதை உணர்த்தினாரோ, அவர் இறந்த பிற்பாடு, இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு, இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வில் எண்ணிவிட்டு, அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு, இவர் போவார்.

அங்கு போனவுடன், சாகாக் கலையில் அவரும் இதே கதியா, அதைச் செய்தேன், இப்படியாகி விட்டதே என்று பைத்தியம் பிடித்த மாதிரி, இரண்டு உணர்வும் சேர்ந்தவுடனே, இருக்கின்றவனைப் பைத்தியமாக்கி விடும்.

அவர்களிடம், மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் என்ன ஆவார்கள்? இதைக் கண்டுபிடித்தேன் என்று கடைசியில், நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில், மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக,  நீயும் வாயேன் என்று இழுத்துக் கொண்டு போகும். இது சாகாக் கலை.

யாம் இப்பொழுது உபதேசிப்பது, “விஜய தசமி  என்பது, பத்தாவது நிலை. அடுத்து ஒளியாகி விட்டது. இனிப் பிறவி இல்லை. இது வேகாக்கலை

ஒரு மனிதன், எவ்வளவு முழுமையாக இருக்கட்டும். தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது? அணுகுண்டு போட்டுக்கூட வெடிக்கச் செய்கின்றான். ஒரு அணுவின் ஆற்றல் கதிரியக்கம்.  பாறைக்குள்ளிருந்து கதிரியக்கம், கதிரியக்கத்தினால்தான், தன் சக்தி, எந்தப் பாறை மண்ணுக்குள் இருக்கின்றதோ, எண்ணி இழுத்து, தன் இனமான சத்து, எதனுடன் கலந்து இருக்கின்றதோ, அந்த உணர்வைத் தனக்குள் எடுத்துப் பாறையாக விளைகின்றது.

அதற்குள், தன் இயக்கத்தின் வலுக்கொண்டு, அதனுடன் எது விளைந்து உருவானதோ, அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரும்பு உலோகமும் உருவாகின்றது. இதுவே, அந்த நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய மற்ற பொருட்களுடன் கலந்து, மற்ற பொருள் உருவாக்கப்படும் பொழுது, அந்த அணுவின் தன்மையைப் பிளந்து, கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டவன் விஞ்ஞானி.

அந்தக் கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துச் சேமித்து, மீண்டும் வெடிக்கச் செய்யப்படும்பொழுது, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, தன் இனமான நிலைகள் எதுவோ, அதிலெல்லாம் மோதும். அது மோதியபின், புயலைப் போன்று, தான் எதனை உருவாக்கியதோ, அதனுள் இருக்கும் உணர்வைக் கரியாக்கிவிட்டு, தன் கதிரியக்கச் சக்தியுடன் இணைந்து, சத்தை ஒளியாக எடுத்துக்கொள்ளும். ஆக, இது கதிரியக்கச் சக்தி.

இதைப் போன்றே அணுவைப் பிளந்து, அணுவின் தன்மை கொண்டு வந்தாலும். இதைப்போலத்தான் மெய்ஞானிகளின் உணர்வலைகளைக் கொண்டு வரப்படும் பொழுது, உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்துவிட்டு, அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றி, எத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் வந்தாலும், இந்த உணர்வின் தன்மை பிளந்து, உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது, இதுவேவேகாக்கலை”.

இப்பொழுது, தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால், தீயிலே கருகிவிட்டாலும், அணுகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்து, அதனின் உணர்வு, தசைகளைக் கருகச் செய்தாலும்,  அந்த உடலில் இருக்கும், உயிரை ஒன்றும் செய்யமுடியாது.  ஆக, “உயிர்வேகாக் கலை பெற்றது.

அதனின் உணர்வு கொண்டு, நமது உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை, அணுவைப் பிளந்து அணுவின் தன்மை ஒன்று சேர்த்து, அதனை வெடிக்கச் செய்யும் பொழுது, தன் இனத்தைப் பெருக்குவது போல, அந்த மெய்ஞானி தன் உணர்வின் சக்தியை, உணர்வின் எண்ணங்களை மாய்க்கச் செய்து, உணர்வின் தன்மையை தன் ஒளியாக மாற்றி, இந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு, வேகாக்கலையாக இன்றும், எதனின் நிலையாக நஞ்சுகள் வந்தாலும், அதனைப் பிளந்து, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி, என்றும் பதினாறு என்ற நிலையில், வேகாநிலை அடைந்து, சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அணுகுண்டை வெடித்தபின், எந்த உலோகத்திற்குள் இருந்தாலும் அதை பிளக்கச் செய்து, தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது. இதைப்போலத்தான், அந்த மெய்ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை, இந்த உணர்வுக்குள் இருப்பதைப் பிளந்து, உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து, அணுவின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.

மெய்ஞானிகள் அனைவரும், உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து, வேகாக்கலை என்ற நிலையை அடைந்தவர்கள். எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது, எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும், தீயில் இட்டாலும், அவர்களைப் பாதிக்காது.

அவ்வாறு, உணர்வின் தன்மை ஒளிச்சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும், அதனின் துணை கொண்டு, நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற, நினைவு கூறும் அந்த நன்னாள்தான் விஜயதசமி.

பத்தாவது நிலை பெறுவதை, நினைவு படுத்தும் நன்னாள், எதனையும் பிளந்து, வேகாக்கலையான நிலைகள் பெறும் நன்னாளே. நினைவு கூறும் நன்னாள்தான் விஜயதசமி. ஒவ்வொருவரும் இந்த மனித உடலில் இருந்துதான், பத்தாவது நிலை அடையமுடியும்.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர், எமக்கு உபதேசித்து அருளியதை,  யாம் உங்களுக்கு உபதேசித்து, இந்த உணர்வைக் கேட்டறிந்த அனைவரும்,  அடுத்து நாம் கூட்டுத் தியானங்கள் இருந்து, இந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும், தகுதி பெற்றவர்கள் ஆகின்றோம்.

அதாவது, இந்த விஜயதசமி உபதேசத்தைக் கேட்டுணர்ந்து, நாம் அனைவரும் சேர்ந்து கூட்டு தியானங்கள் இருந்து, துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் நிலை அடைகின்றோம்.

2 வேகாநிலை, போகாப்புனல்
நாம் எண்ணிய எண்ணங்கள் கூர்மையாக விண்ணை நோக்கி ஏகி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் நாம் அடிக்கடி சேர்க்கப்படும் பொழுது, அது நன்கு வலுப்பெறுகின்றது.

இவ்வாறு, நமக்குள் வலுப்பெறச் செய்வதைத்தான், விண்ணை நோக்கி ஏகுவதைக் கூர்மை என்றும், “கூர்மை அவதாரம், வராக அவதாரம்என்பது. அந்த வலுப்பெற்றச் சக்தியின் துணை கொண்டு, அந்த ஞானிகள் எவ்வாறு  ஒளிச் சரீரம் பெற்றார்களோ, அதே போல நமக்குள் வலுப்பெறச் செய்து, வராக அவதாரமாக, நாம் எதைக் கூர்மையாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ, அதன் நிலையாக, நாம் கல்கியின் பத்தாவது அவதாரமாக, ஒளிச்சரீரம் பெற முடியும்.

இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து, விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாம் பருகினால்தான், விண் செல்ல முடியுமே தவிர, இல்லையென்றால், இன்று, நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி, இந்தத் தெய்வம் செய்யும், அந்தத் தெய்வம் செய்யும், இந்த மனிதர் செய்வார், அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை நம் எண்ணத்தில் வளர்த்துக் கொண்டால், நாம் உடலுக்குள் இது சாகாக கலையாக, இந்தப் பூமியிலேதான் சுழல முடியும்.

ஆனால், இன்று வள்ளலார் கூறியது போல, வேகாக்கலை என்றும், போகாப்புனல் என்ற நிலையை அடைய வேண்டுமென்று, வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார். ஆக, அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினைநமக்குள் செலுத்தினால், “வேகாக்கலை  அடைந்து, னி, பிறவியில்லா  போகாப்புனல்இன்னொரு பிறவியில், நாம் பிறக்காத நிலையை அடைய முடியும்.

இந்த விஜய தசமி உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும், குரு காட்டிய  அருள் உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெற்று, இன்று எந்த நிமிடமும், ஓம் ஈஸ்வராஎன்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி, விண்ணிலே நினைவைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்என்று ஏங்கி,  அதை உயிர்வழி கவர்ந்து, அவ்வாறு கவர்ந்த உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் செலுத்தும் பொழுது, இதற்கு ஆத்மசுத்தி”  என்று பெயர்.  அதே சமயம், அந்த எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை, நம் உடலுக்குள் சேர்ப்பிக்கும் நிலை.

ஆகவே, இதைக் கவனமாக வைத்து, இந்த நூல்களைப் படிப்போர் அனைவருமே, உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துயரங்களோ, வேதனையோ, சலிப்போ, சஞ்சலமோ, சங்கடமோ, வெறுப்போ, பயமோ, ஆத்திரமோ, அவசரமோ, இதைப் போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம், நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, முதலில் சொன்ன மாதிரி விண்ணை நோக்கி ஏகி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்,  நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்களிலும், உணர்வுகளிலும்  அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை, சக்தி வாய்ந்த அந்த உணர்வுகளை, நாம் அடிக்கடி, சேர்த்து வரவேண்டும்.

அப்படி அடிக்கடி சேர்த்து வந்தோமென்றால், வாடிய பயிருக்குள் உரம் சேர்த்தால், அது எவ்வாறு காற்றிலிருந்து தன் சக்தியைச் சேர்த்து, எவ்வாறு மணிமுத்துக்களை விளையச் செய்கின்றதோ, அதைப் போன்று, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அறியாது சேரும் தீமைகள் அனைத்தையும் நீக்கி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் எண்ணத்தால் எடுத்துச் சேர்த்து, நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு, நீங்கள் அந்த நல்ல எண்ணங்ககளுக்கு, மகரிஷிகளின் அருள் சக்திகளை உரமாகச் சேர்த்தீர்கள் என்றால், அது வலுப் பெற்று, அந்த ஒளியின் முத்தாக, உங்கள் உணர்வுகள் விளைந்து, உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாகப்பெருவீடு பெருநிலைஎன்ற நிலையடைந்து, அதாவது கல்கி அவதாரம், பத்தாவது நிலையை அடைவது, திண்ணம்.

ஆகவே, இன்று அழியா ஒளிச்சரீரம் பெறும் மார்க்கமாக, வேகாக்கலை என்ற நிலையும், போகாப்புனல் என்று வள்ளலார் பாடியது போல, நீங்கள் அனைவரும் அடைய முடியும், என்று உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவருமே, அடுத்து தபோவனம் வருபவர்கள், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குள் எத்தகைய குறைகள் நேரினும், இதற்குமுன், உங்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட கடும் நோயோ, மனக்கவலையோ, மனவேதனையோ, இதைப் போன்ற நிலைகளிலிருப்போர், இந்தத் தியான மண்டபத்தில் ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் படரவேண்டும்என்ற இந்த உரத்தினை நீங்கள் செலுத்துங்கள்.

ஆக, இது வலுப் பெற்றதாகி, இதைப் போல உங்கள் வீட்டிலும் நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய, உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் அனைத்தும், உங்களை விட்டு விலகிவிடும்.

நீங்கள் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து, உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் வலுவான எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி, உங்கள் எண்ணமே நற்செயலாகச் செயல்படும் நிலையும், உங்கள் வாழ்க்கையை உயர்த்திடும் நிலையாக அடைய முடியும். அந்த நிலையை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்வதற்குத்தான், இந்த தியான மண்டபத்தை அமைத்தது.

நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில், அவர் இத்தகைய நிலைகளை உருவாக்கும்படி, எமக்கிட்ட அந்த ஆணைப்படித்தான் இதைச் செய்திருக்கின்றோம். அவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படித்தான், உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.

ஆகவே,  நாம் கூட்டமைப்பாக இருந்து, கூட்டுத்தியானங்கள் செய்யும்பொழுது, அதன் வழியாகத்தான்  அனைத்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றோம்.

எல்லா மகரிஷிகளின் அருள்சக்தி, உங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்,  யாம் தவம் இருக்கின்றோம். எமது அருளாசிகள்.
3 ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்
அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று, அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து, ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார், அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி, நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி, இதனுடன் சுழன்று, உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது,  அகண்ட அண்டத்தில் வருவதையும்,  உங்கள் உணர்வுக்குள், அது பெறும் உணர்ச்சியின் நிலையை, அணுவாக மாற்றும் நிலை கொண்டு,  அது உருப்பெற்று விட்டால்,  தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.

உங்களால் நினைத்த நேரத்தில், அகண்ட அண்டத்தினையும், அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.

அதில் வெளிப்படும் உணர்வில், அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்து, பகைமை உணர்வு உங்களுக்குள் வராது, பேரின்ப உணர்வினை உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள், குரு அருளால் கிடைத்தது.  குரு அருள் பேரருளைக் கவர்ந்து, அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல், உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன். இதில், எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ, அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும், அடுத்து, சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும்இது உதவுகின்றது.

குறுகிய காலமே இருக்கும், இந்த உடலுக்கு, வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும், உயிருக்கு, அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.  இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஒளியின் உணர்வாக, நம் அணுக்களை, ஆறாவது அறிவின் துணை கொண்டு, உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான், பிரம்மாவை சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில், அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது,  உயிரைப் போன்றே, உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது, நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது. இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து, இது  தவறு, இது கெட்டது, என்று உணர்வினை நுகர்ந்து, நுகர்ந்து, இதனைக் கலந்து, கலந்து, இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

அவனே உருவாக்கினான். ஈசனாக இருந்து, உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான், கடவுள் என்ற நிலையில், நாம் எதனை நுகர்ந்தோமோ, அவை, நம்முள் நின்று அதனின் துணை கொண்டு, அங்கே இயக்குகின்றது.

அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை. அவன்தான் உருவாக்குகின்றான். ஆகவே, அமைதி கொண்டிருக்கும் நேரத்தில், உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குரு, என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து, உங்கள் கண்ணின் நினைவை, என்னிடத்தில் செலுத்தினாலும், நீங்களும், அண்டத்தில் மிதக்கின்றீர்கள்.  அதனின் உணர்வை, நினைவை கொள்ளும் பொழுது, அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன், துருவனாகி, துருவ நட்சத்திரமானான். அவன், அகண்ட அண்டத்தில் வருவதை, ஒளியாக மாற்றுகின்றான். அதன் உணர்வின் தன்மை, இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது,  அகண்ட அண்டத்தில் வருவதையும், ஒளியாக மாற்றிடும் திறன், நீங்கள் பெற வேண்டும். 

நீங்கள் சிறிதளவே இருப்பினும், இந்த உணர்வின் தன்மை, உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு, கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு, ஏழாவது ஒளி. இதைத்தான், சூரிய பகவான் வருகின்றான் என்று, வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது. அந்த, ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால், நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும்.

ஆகவே,  மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும்போது, ஏழாவதுஒளியின்  நிலைகள் அடைதல் வேண்டும். துதான்,  ஈரேழு லோகத்தை வென்றவன், விண்சென்றான்  என்பது. அவன் தனி உலகமாக, ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான்.  அவன், ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

அவன் தனி உலகமாக, ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன், ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள், ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து, ஒளியாக மாற்றுவது, ஏழு. காவியங்களில், ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன், என்று சொல்லுகின்றனர். மனிதனுக்குள், உணர்வுக்குள், இந்த ஏழு லோகத்திற்குள் தேடி, நாம் காணுதல் வேண்டும். மேலே ஏழு, என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு.  ஆக, நமக்குள் தேடினால் உண்டு. 

அகண்ட அண்டத்தின் நிலைகள், இந்தப் பிண்டத்தில் உண்டு. ஆகவே, நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று, உயிர் என்ற நிலை பெற்று, உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும், இருள் சூழும் நிலைகளிலிருந்து, மீள்தல் வேண்டும்.

ஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள், ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது, அந்த வர்ணத்தைத்தான் காட்டுகின்றது. நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ, அந்த வர்ணத்தின் செயலாகத்தான், இருள் சூழ்வதும், சிந்திப்பதும், சிந்தனையற்ற நிலைகளும், வருகின்றது.

ஆகவே, பேரருள் என்ற உணர்வினை எடுத்து, நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும். அந்த உணர்வின் தன்மையை, உங்களில் உருவாக்கத்தான், இந்த நிலை.

யாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல.  சந்தர்ப்பத்தால், நுகர்ந்த உணர்வே நம்மை, அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது, நமக்குள் விளையாது, அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு, இருளை நீக்கப் பழகவேண்டும்.

இதற்குத்தான் துருவ நேரத்தில், அதனின்று வரும் நிலைகளை நீங்கள் நுகர்ந்து, இருளை மாய்த்து, ஒளி என்ற உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்று, தியான நிலைகளிலேயே, உபதேசத்தைக் கொடுத்து, அழைத்துச் சென்றது. எமது அருளாசிகள்.