ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2012

தீமைகளைக் கூர்மையாகப் பிளக்கும் பேராற்றல்


1 வராக அவதாரம் - நாற்றத்தைப் பிளத்தல்
வராகன், தான் எவ்வாறு கெட்டதை நீக்கி நீக்கி, நாற்றத்தை நீக்கி, நல்ல உணர்வினைத் தனக்குள் எடுத்தது? என்று ஞானியர்கள் சொன்னார்களோ, அதைப்போல,  இப்பொழுது உங்கள் எண்ணங்களை, மகரிஷிகள் காட்டிய மெய் உணர்வுகளைக்  கூர்மையாகக் கவர, உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கிச் செலுத்துவதற்கே, இந்த உபதேசம்.

ஆகவே, இந்தக் கூர்மை அவதாரம் என்பது, நாற்றத்தைப் பிளந்துவிட்டு, சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருளைப்  பன்றி  நுகர்ந்து எடுக்கின்றது. மண்ணைப் பிளந்துவிட்டு, தன் உணவின் தன்மையைத் தன் நுகரும் ஆற்றலால், அது எடுத்து உணவாக உட்கொள்கின்றது. அப்படித் தீமையை நீக்கி, நல்லதை உட்கொண்ட உணர்வின் சத்து, அதே ஞானமாக அதை எண்ணிய நிலைகள் கொண்டு,  எதை எண்ணியதோ, அது  காந்தம் லட்சுமி,  இதைக் கவருகின்றது.

தன் உடலிலிருந்து கெட்டதை நீக்கிவிட்டு, நல்லதைப் பெற வேண்டுமென்ற ஞானத்தின்  எண்ணங்கள் அங்கே அது கவருகின்றது. இவையனைத்தையும், எடுத்துக் கொண்ட தன் உணர்வான வெப்ப காந்தங்கள்  படைக்கின்றது என்ற இந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குத்தான்,  இந்த மூன்று உணர்வுகளின் நிலைகள், ஆயுதங்களாக ஒவ்வொரு உடலிலும் இயங்கியதை,  அதை உணர்த்த, ஆயுத பூஜை என்று வைத்தது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்து, உபதேசித்தார். இப்பொழுது, நீங்கள் சாக்கடையில் உட்காரவில்லை. நல்ல இடத்தில் மகிழ்ச்சியான இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள். எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்துத்தான், உபதேசம் கொடுத்தார்.

அந்த மகிழ்ச்சியான எண்ணங்களில், இந்த உணர்வை எண்ணி, நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக யாம் சொல்லுகின்றோம்.  அன்று பைத்தியத்திடம் சேர்ந்து, சாக்கடையில் உட்கார்ந்து இருக்கின்றேன், என்று எம்மைக் கிண்டல், கேலி செய்தார்கள்

சாக்கடை உபதேசத்தில், எம்மை டீ, காபி வாங்கிவரச் சொல்லி, சாக்கடையில் இருந்த கழிவைப் போட்டுக் குடிஎன்கிறார் குருநாதர்.

அய்யய்யஎன்று யாம் மறுக்கின்றோம்.

இந்தக் கூர்மை அவதாரம், வராக அவதாரம் எவ்வாறு இருக்கும்? நீ கூர்மையாக நாற்றத்தை எண்ணுகின்றாய். அந்த உணர்வின் சத்து, உனக்கு நாற்றமாகின்றது. அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்? என்று எண்ணுகின்றாய், அந்த உணர்வின் சத்து உனக்குள் வருகின்றது.

ஆக, இந்தப் பன்றியானது என்ன செய்கின்றது? நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது. அது நாற்றத்தை எண்ணவில்லை. நீ நாற்றத்தை எண்ணுகின்றாய். அடுத்தவன் என்ன சொல்லுகின்றான்? என்று எண்ணுகின்றாய்.

இப்போது இதைச் சேர்த்துக் கொள்கிறாயா? அல்லது அதைச் சேர்த்துக் கொள்கிறாயா? நீ உயர்ந்த நிலையைச் சேர்த்துக் கொள்கின்றாயா? அல்லது நாற்றத்தை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயா? நாற்றத்தை எண்ணியவுடனே, நீ எதை எண்ணுகின்றாயோ,  அதை உன் உயிர் படைக்கின்றது, அதுவாகின்றாய்.

கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்என்று உணர்த்தப்பட்டுள்ளது. அய்யய்யஎன்று கண்ணில் பார்க்கின்றேன். நாற்றம் என்று எண்ணுகின்றேன். அப்பொழுது எந்த எண்ணம் வரப்படும் பொழுது, கண்ணன் என்ன சொல்கிறான்?

நாற்றம் என்கிற பொழுது, நாற்றத்தை ஈர்த்துப் பார்க்கச் செய்கின்றது.  அதை (என் கண்கள்) இழுத்தவுடனே, நாற்றம் என்றவுடனே அதிகமாகிவிடுகின்றது. அந்த நாற்றம், உடலினுள்ளே சென்றவுடன் விளைந்து விடுகின்றது.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”. இந்த நாற்றத்தை நீக்கி, நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று எண்ணினால், நீ அதுவாகின்றாய். இதைத்தான் கண்ணன் கீதையிலே சொன்னது.

அதைப் போல,  என்னைக் கேவலமாகப் பேசுவார்களோ? என்று அவர்களைப் பார்க்கின்றேன்,  நாற்றத்தில் எவ்வாறு இருக்கும்? என்று எம்மைச் சாக்கடையில் வைத்துத்தான், நமது குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

சாக்கடை அருகில் உட்கார்ந்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? “பாரு, எல்லாம் காசு ஆசை பிடித்துப் போய், சாமியாரிடம் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காக வேண்டிச் செல்கின்றார்கள். ஏனென்றால், அந்தச் சித்து, இந்தச் சித்து, தங்கம் செய்வது, வெள்ளி செய்வது, என்றுதான், சாமியார் பின்னால் போகின்றார்கள்.

மனிதனுடைய வாழ்க்கையில் இப்பொழுது, கூர்மை என்ன செய்கின்றது? அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவர்கள் என்ன நினைப்பார்கள்?  என்று அதை வலுவாக எடுக்கும் பொழுது, வராக அவதாரமாக மாறிவிடுகின்றது.  இந்த நாற்றத்தை எனக்குள் சேர்த்து விடுகின்றது.

வராகன் என்ன செய்கின்றது? என்று இவ்வாறு, பல நிலைகளில் என்னை அல்லல்பட வைத்து, எண்ணங்கள் உருவாகி, உன் உடலுக்குள் உணர்வுகள் எதைக் காட்டுகின்றது? அந்த உணர்வை எடுத்தவுடன் உனது ஆன்மாவாக எவ்வாறு மாறுகின்றது? ஆன்மாவிலிருந்து சுவாசித்தவுடன், உயிரில் எவ்வாறு படுகின்றது? அந்த உயிர், நீ சுவாசித்ததை இயக்கி, “அய்யய்ய நாற்றம்என்று இந்த உடலை அழைத்துச் செல்கின்றது. இது கூர்ம அவதாரம்.

ஆக அதே சமயத்தில், கூர்மையாக நாற்றத்தைப் பார்க்கின்றோம். அதனின் உணர்வு வலுவாகச் சுவாசித்தால், வராக அவதாரம். அதனுடைய வலிமை கொண்டு, நாற்றம் நாற்றம் என்று நீ போகின்றாய்.

அவ்வாறு சென்று, கூர்மை அவதாரத்திற்கும், வராக அவதாரத்திற்கும், இரண்டுக்கும் இணை சேர்த்து, அதிலே நீ எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ, அதனின் உணர்வு உனக்குள் சென்றவுடன், ஈசனான உயிர், அதை வலுவாக்கி, அதனின் நிலைகள் கொண்டு, அதே எண்ணத்தை எண்ணும் பொழுது, இந்தக் கண் என்ன செய்கின்றது? இதையே எடுத்து, நுகர்ந்து, “அய்யய்யஎன்கிற பொழுது, விலக்கிச் செல்லும்.

நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய்.  இந்தச் சாக்கடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றாய். ஆனால், எடுத்துக் கொண்ட உணர்வே, இங்கே சாக்கடையாக உள்ளே நுகர்கின்றது, என்ற இந்த நிலையை அங்கே பக்குவப்படுத்துவதற்காக, அந்தச் சாக்கடைப் பக்கமே,  இவ்வளவு உபதேசம் கொடுக்கின்றார் குருதேவர்.

இதே மாதிரிப் பார்த்துவிட்டு, எனக்குக் காபி, அவருக்கு டீ, இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து, அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட, குப்பை இரண்டைப் போட்டு, என்னைக் குடிஎன்கின்றார் குருதேவர்.

அப்பொழுது, என்னுடைய பார்வை என்ன செய்கின்றது? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன், ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது? என்றும் என்ணுகின்றேன்.

இதைத்தான் கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய் என்றது. இப்பொழுது, அவர் சாக்கடையைக் குடி என்கிறார். அதை எண்ணியவுடனே, எவ்வாறு குடிப்பது என்று விலக்கிச் செல்கின்றது.

ஆக இந்த எண்ணத்தால், அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை. எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள், பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.

அப்பொழுது, நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக, இந்தப் பக்கம் போகலாமா? அந்தப் பக்கம் போகலாமா? இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அப்பொழுதுதான், உணர்வின் இயக்கங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ, அதை உயிர் இயக்கி, உடல் முழுவதும் பரவச் செய்து, தன் இனத்தை எவ்வாறு எண்ணுகின்றோமோ, அதே இனம் நமக்குள் நின்று, அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார், குருதேவர்.

அப்பொழுது, அந்த நிலையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்று பார்த்தேன், முடியவில்லை.

சரி, நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வாஎன்றார் குருதேவர்.

கடையில் கொண்டு போய்க் கொடுத்தால், வாங்கவா செய்வார்கள்? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள்.  டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.

அப்பொழுது, நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா, என்றார் குருநாதர். மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன். சாக்கடை அருகில், ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார். முதலில், பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக, முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக, நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.

அங்கிருந்து பன்றி வருகின்றது வந்தவுடனே, ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. அப்பொழுது, பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.

அடுத்து, முருக்கு, வேகமாக எணணெய் வாசனை வருகின்றது.  நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்துப் போகின்றது.  அந்த முறுக்கை எடுக்கின்றது.

அடுத்து, எண்ணெய் வாசனை இருக்கின்றது. கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி, அந்த வாசனையைத்தான் நுகர்ந்து எடுக்கின்றது.

சாக்கடைக்குள் பார்த்தாயா? என்றார் குருநாதர். அது நாற்றத்தை எடுக்கவில்லை, நீ எதை எடுக்கின்றாய்?  என்றார். காபி இருக்கின்றது, நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை, உன் உடல், நீ ஆகாரம் சாப்பிட்டவுடனே, சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை, உன் உடல் பிரித்துவிடுகின்றது.

உன் உடலிலிருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு, இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது. நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை? என்று கேட்கின்றார் குருநாதர். நான் என்ன பதில் சொல்வது?

 நமது குருநாதர், சாக்கடைக்குள் அமர்ந்து, உண்மை நிலையை எமக்கு எடுத்துக் காட்டினார். சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருள்களை, பன்றி எப்படி நுகர்ந்து எடுத்து, நல்ல உணர்வைத் தனக்குள் எடுத்து, நாற்றமான உடலில் கலந்து, நாற்றத்தை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்ததோ, அதே போல, பல சரீரங்களைத் தனக்குள் எடுத்து, இதே உயிர்தான்,  நம்மை மனிதனாக ஆக்கியிருக்கின்றது.

மனிதனாக ஆனபின், சந்தர்ப்பத்தால் ஏற்படும் உணர்வின் நஞ்சு கொண்ட நிலைகளும், உணர்வின் எண்ணத்தால் ஈர்க்கும் செயல்களையும், இதை நீ எவ்வாறு மாற்றுவது? என்றும் மாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலைகளையும், தெளிவாக எடுத்துக் கூறினார், குருநாதர்.

இதனின் உணர்வின் ஆற்றலை, நீ எண்ணத்தால் எப்படிப் பன்றி, சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து, நல்ல உணர்வை நுகர்ந்த மாதிரி, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும், சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து, நல்லவற்றை எடுக்கக் கற்றுக் கொடுத்தார், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இதிலே, நாம் எந்தக் குணத்தைக் கொண்டு எடுக்கின்றோமோ, அதே குணம், அந்தக் குணத்தின் உணர்வின் தன்மையாக இயங்கி, நமக்குள் எடுத்துக் கொள்ளும்.

இன்று கழிவுப் பொருள்களை எடுப்பவர்கள், கழிவுப் பொருள்களின் நிலைகளில் இருந்தாலும், கழிவுப் பொருளை நுகர்வது இல்லை. அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இருக்கும் பொழுது, கழிவுப் பொருளின் மணம், அவர்களுக்கு வருவதில்லை.

கழிவுப் பொருளை எடுத்ததை நாம் பார்த்தவுடன், “ஐய்யய்யோ நாற்றமாகின்றது” என்று சொல்லி, இந்த நாற்றத்தை உடலுக்குள் கலக்கவிட்டு, கழிவுப் பொருளின் சத்தையெல்லாம் நமக்குள் சேர்த்துக் கொள்கிறோம்.

ஆக, எதனின் உணர்வை நாம் சேர்க்கின்றோமோ, அந்த உணர்வின் தன்மை நமக்குள் சென்று, நமக்குள் நாற்றமாகும் நிலையும், நாற்றத்தைக் கண்டு, வெறுப்பின் நிலையில் எண்ணங்கள் உருவாகும் பொழுது, யாரைப் பார்த்தாலும், அசிங்கமாகத் தெரியும். “இது சுத்தம் இல்லை, அது சுத்தம் இல்லை” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் உடலில் பாருங்கள். நாற்றம் வந்து கொண்டே இருக்கும். சட்டைத் துணியினை, நுகர்ந்து பாருங்கள், நாற்றம் இருக்கும்.

நாற்றத்தைப் பிடிக்கவில்லை என்று, நாற்றத்தைத்தான் நுகருகின்றார்கள். இதுவெல்லாம், நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் இயக்கங்கள், 

அப்பொழுதுதான்,  வராக அவதாரமும், கூர்மை அவதாரமும், எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ, அதனின் வலுக்கொண்டு,  அதனின் வலிமையாக,  அடுத்த உருவை உருவாக்குகின்றது  என்ற நிலையை அங்கே காட்டுகின்றார் குருதேவர்.

2 வாலி, சுக்ரீவன்

ஒரு நோயாளியையோ, தீமை செய்பவரையோ பார்க்க நேர்ந்தாலும், அது வாலியாக, வலிமை மிக்க சக்தியாக நமக்குள் வந்து, நல்ல குணங்களை அடக்குவதை, அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால், தடுக்க முடியும்.



அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர்ந்தோம் என்றால், அந்த உணர்வுகள் நமக்குள் தீயதை அடக்கும் நிலையாக வரும். இதைத்தான் இராமாயணத்தில், இராமன் வாலியை, சுக்ரீவன் துணைகொண்டு அடக்கினான், என்று நமது காவியத் தொகுப்புகளில் காண்பித்திருப்பார்கள்.

அதாவது, அருள்ஞானியின் உணர்வுகளை, மனிதனில் தீமைகளை வென்ற, அந்த வலிமையான சக்தியை நாம் எடுப்பதற்கு வேண்டித்தான், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை நாம் நுகர்ந்து, இந்த வலிமைமிக்க விஷத்தை, வாலியை அடக்குதல் வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை, நாம் எண்ணத்தால் நுகர்ந்தால், சுக்ரீவன்.

அவன் உணர்வின் தன்மை கொண்டு, அந்த உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி, நஞ்சு கொண்ட உணர்வை நமக்குள் அடக்குகின்றது. இதைத்தான், சுக்ரீவன் துணைகொண்டு, வாலியை  இராமன்  அடக்கினான் என்பார்கள்.

இதில் வாலி அண்ணன், சுக்ரீவன் தம்பி. (ஆதியில்) விஷத்தின் இயக்கத்தால், தொடர்ந்து வந்தவன் தான் அண்ணன், வாலி.

மனிதனாக ஆனபின், உணர்வின் தன்மையை ஒளியாக்கும் நிலை, சுக்ரீவன். ஆக, பின்னால் பிறந்ததுதான் ஒளி, இவ்வளவு தெளிவாகக்  காட்டுகின்றார்கள்.

இதனால்,  வாலி, சுக்ரீவன் என்று காரணப் பெயர்களை வைத்து, சகோதரர்கள் என்றும், ஆகவே,  சுக்ரீவனின் துணை கொண்டு, வாலியை அடக்கப்படும் பொழுது, இது இணைந்து, நமக்குள்   நன்மை செய்யும் சக்தியாக மாற்றுகின்றது,  என்பதையே நமது காவியத் தொகுப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

மெய்ஞானிகள், தம்முள் கண்டுணர்ந்த இயற்கையின் செயலாக்கங்கள் அனைத்திற்கும், காரணப் பெயர்களைச் சூட்டி,  தம் இன மக்கள் அனைவரும், விண்ணின் ஆற்றலை தம்முள் பெற்று, உணர்வினை ஒளிபெறும் உணர்வாக வளர்க்கும் நிலைக்காக, தாம் கண்டறிந்த பேருண்மையின் தன்மைகளை வெளிப்படுத்தினர். 

நாமும், மெய்ஞானிகள் வெளிப்படுத்திய,  உணர்வின் ஆற்றலைக் கவர்ந்து, நம்முள் நஞ்சான உணர்வுகளை ஒடுக்கி, மெய்ப் பொருளை பெறும் நிலையாக, நமது உணர்வினை வளர்ப்போம் என்று, மெய்ஞானிகள் காண்பித்த வழியினைக் கடைப்பிடிப்போர் அனைவரும், என்றும் பேரானந்த பெருநிலையைப் பெறுவதற்கு, எமது அருள் ஆசிகள்.
3 குரு உணர்த்திய அருள்வழி
குருதேவர், ஒருமுறை எம்மை ஆனைமலைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று, இத்தனாவது மைலில், இன்ன மரத்தில் இது போன்று இருக்கும் மச்சத்தை, (ஒரு அடையாளம்) எடுத்து வா என்று சொல்கிறார். அவர் சொன்ன நேரம், மாலை ஆறு மணி இருக்கும். அந்த நேரங்களில், காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆகவே, குருதேவர் சொன்னை இடத்திற்கு, எவ்வாறு செல்வது என்று பயந்தோம்.

நான் எது சொன்னாலும் செய்வேன் என்று சொன்னாயே, இபொழுது, “முடியாதுஎன்று சொல்கிறாயே, “மறுக்காதே, சென்று வாஎன்று கூறினார். யாமும் பயந்தபடி, சிறிது தூரம் நடந்தோம். பிறகு இங்கே வாஎன்று எம்மை அழைத்தார்.

அழைத்தவர் எம்மை அருகில் நிறுத்தி, சில ஆற்றல்களை யாம் பெறும் வண்ணம் உபதேசங்களைக் கொடுத்து, “இப்பொழுது நான் சொல்லிக் கொடுத்தவைகளை உபயோகப்படுத்து. எதிரே தெரியும் மரம் கீழே சாயும்என்றார்.

அவ்வாறே, அவர் சொல்லிக் கொடுத்தவைகளை எதிரே தெரியும் மரத்தின் முன் செய்ய, அந்த மரம் கீழே சாய்ந்தது. பிறகு குருதேவர், “இப்பொழுது காட்டினுள் செல், நான் சொன்னதை எடுத்து வாஎன்றார். எமக்கு, இப்பொழுது தைரியம் பிறந்தது, துணிவுடன் காட்டினுள் நடந்தோம்.

ஏற்கனவே, வேட்டைக்காக காடுகளுக்குள் சென்ற அனுபவம், எமக்கு உண்டு. யானைகள் அருகே நடமாடும் பொழுது, கீழே காற்று வராது, மரக்கிளைகள் அசையும் ஒலி கேட்கும். அந்த அறிகுறிகளை வைத்து, யானைகளின் நடமாட்டத்தின் தூரத்தைக் கணிப்போம். இதனை அடிப்படையாகக் கொண்டு, யாம் நாலாபுறமும் கவனித்தவாறே சென்று கொண்டிருந்தோம்.

உற்றுக் கவனிக்கும் பொழுது, தூரத்தில், யானைகள் காதை ஆட்டாமல், அசைவில்லாமல் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்க நேர்ந்தது. இருந்தாலும், எமக்கு நிறைய தைரியம் இருந்தது. ஏனென்றால், யாம் விரலை அசைத்தால் போதும், எதனையும் கீழே சாய்க்கும் வலிமை உள்ளதே என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் யாம் முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது, குருதேவர், “ஏய் தெலுங்கு ராஜ்ஜியம்என்று கூவி அழைத்தார்.

குருதேவர் எம்மைத் திட்டவேண்டும் என்று கருதினால் தெலுங்கு ராஜ்ஜியம்என்றுதான் திட்டுவார். இப்பொழுதும் தெலுங்கு ராஜ்ஜியம்எங்கே போகிறாய்? என்று கேட்டார்.

நீங்கள் சொன்ன மச்சத்தை எடுக்கச் செல்கிறோம் என்றோம்யாம்.

இப்பொழுது நீ என்ன நினைத்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு யாம், நீங்கள் கொடுத்த ஆற்றலைக் கொண்டு, யானைகளைச் சாய்க்கப் போகிறேன்என்று பதில் கூறினோம்.

அதற்கு குருதேவர், நீ இப்பொழுது யார் வீட்டிற்குள் செல்கின்றாய் என்று தெரிகின்றதா?, நீ வாழும் வீட்டில், அந்நியன் ஒருவன் நுழைந்து விட்டால், உனக்குக் கோபம் வருமல்லவா, அதைப் போன்றுதான் யானைகளுக்கும், அது வாழும் காடுதான் அதற்கு வீடு.. அவ்வாறு இருக்கையில் அதனுடைய வீட்டிற்குள் சென்றால், அதற்குக் கோபம் வருமல்லவா?.

நீ உன்னுடைய காரியமாகச் செல்கின்றாய்,  உனக்குள் வலிமை இருக்கின்றது என்ற காரணத்தினால், பிறிதொன்றை வீழ்த்திவிடும், அழித்துவிடும் எண்ணம் கொள்வாயானால், அந்த எண்ணம் உனது உயிரான ஈசனால் இயக்கப்பட்டு, அந்த உணர்வின் சக்தி, உன் உடல் முழுவதும் படருகின்றது. இதனால், உனக்குள் உள்ள நல்ல சக்தியை இழக்கின்றாய்”. 

நீ யானையிடம் இருந்து தப்பித்தாலும், அதைக் கொன்று விடவேண்டும் என்று, அதன்மீது ஆற்றலை உபயோகப்படுத்திய உணர்வின் சத்து, உனக்குள் சென்று, உன்னுள் உள்ள நல்ல உணர்வுகளை, மாய்க்கும் விதத்தை அறிந்துகொள்  என்று அங்கே உணர்த்துகிறார்.

எமக்கு ஒன்றும் புரியவில்லை.  வலிமை இருக்கிறது என்று, மற்றொன்றைக் கொல்ல முற்படக்கூடாது. ஆனால், வருகின்ற ஆபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? என்று குழம்பினோம்.

அதற்கு குருதேவர், “இவ்வளவு பெரிய ஆற்றல், உனக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதனை, நீ, மற்றொன்றை மாய்த்திடும் நிலைக்கு பயன்படுத்துவேயானால், உன் உணர்வுகள் எங்கே போகும்?

எவ்வாறு, நீ உனக்கு உணர்த்திய உணர்வின் ஆற்றல்களை பெறப் போகின்றாய்?“ என்று அவர் கேட்கிறபொழுதுதான், என்ன செய்வது என்று தெரியாமல்,  குருவை மறந்துவிட்டது நினைவுக்கு வருகின்றது.

குரு அருளின் துணைகொண்டு, செயல்பட வேண்டிய நாம்,  குரு நமக்குப் பெரும் ஆற்றல் கொடுத்திருக்கிறார் என்று, அதைப் பெரிதாக எண்ணி, குருவை மறந்து, பிறிதொன்றை வீழ்த்திடும் அசுர உணர்வைத்தான் எண்ண முடிந்ததே தவிர, என்னால் நல்ல உணர்வை, அங்கே எண்ண முடியவில்லை,  என்பதை நிதர்சனமாகவே காட்டுகின்றார்.

யானையிடமிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்?  என்று எண்ணி கண்ணை மூடி தியானிக்கும் பொழுது, அதனின் உணர்வலைகளை அறிய நேரிடுகின்றது.

அதாவது, “யானையின் மணத்தை நுகர்,  அதனின் உணர்வின் சக்தி உனக்குள் சேரும். யானைக்கும்,ர்வின் ஆற்றலை உணரும் சக்தி உண்டு. அப்பொழுது, அதனின் மணத்தை நீ நுகரும்பொழுது, அதனின் சம எடையாக, வருகின்றாய்.  அதனால், யானை உன்னை ஒன்றும் செய்யாதுஎன்று கூறுகிறார். பிறகு யானையின்   மணத்தை, என்மீது பரவச் செய்கின்றார்.

யானைகள் காதை விடைத்துத் தூக்கி விட்டால், அது கோபத்தில் இருக்கிறது, ஆளைப் பிடித்துக் கொன்றுவிடும் என்பது பொருள். யாம், அதே சிந்தனையில் இருந்து கொண்டிருக்கின்ற பொழுது, எம்மை உரசியவாறே, சுமார்  13  யானைகள் எம்மைக் கடந்து செல்கின்றன.

அப்பொழுது குருதேவர் சொல்லுகின்றார், நீ எதை, எதனுடைய நிலைகளில் வலுப்பெறச் செய்ய வேண்டும்?  குரு காட்டிய வழி எது?

குருவினுடைய சக்தியை உணர்ந்து கொண்டாய் என்றால், அந்தக் குருவின் துணை கொண்டு, எப்படி இயங்க வேண்டும்? என்பதையெல்லாம் உணர்த்தி, குருவின் துணையுடன் நீ செயல்படும் பொழுது, அனைத்தையும் பெறும் தகுதி பெறுகின்றாய். 

ஆகவே, நீ இவைகளைப் பெற விரும்புகின்றாயா? அல்லது மற்றொன்றை வீழ்த்திவிட்டு, அதனால் உனக்குப் புகழ் தேடும் நிலையும், ஆணவம் பெறும் நிலையும் பெற விரும்புகின்றாயா? என்று கேட்டு, எதைப் பெற வேண்டும் என்று, உணர்த்தி அருளினார்.

பிறகு, குருதேவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, மச்சத்தை எடுத்து வர நடந்தோம். அவர் சொன்ன விதமே, இருந்த மச்சத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வருகின்ற பொழுது, எமக்கு எதிரே, மலைப்பம்பு ஒன்று ஊர்ந்து வரக் கண்டோம்.

அது சீறி வரும் நிலையைக் கண்டு, எமக்குள் இருந்த தைரியம் குறைவதை அறிகின்றோம். யானைக்கு ஒரு விதமாகத் தப்பித்தோம், இந்தப்  பாம்பிடம் இருந்து, எவ்வாறு தப்பிப்பது என்று சிந்தித்தோம்.

இதையும், குருவின் பலம் கொண்டுதான் சமாளிக்கவேண்டும் என்று எண்ணுகையில்குரு எக்குள், “அந்த பாம்பைக் கண் கொண்டு பார்த்து, நீ, எந்த உணர்வை அதன் மேல் செலுத்துகின்றாயோ, அந்த உணர்வின் அலைகள், அதன் பாதையைத் திசை மாறச் செய்யும்..

அப்பொழுது,  அதன்மீது பரிவின் எண்ணம் கொண்டு, அது நகர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைப் பாய்ச்சு  என்று உணர்த்துகிறார்.

அவ்வாறே, அதைக் கண் கொண்டு பார்த்து, உணர்வின் தன்மையை குருவழி கொண்டு, தன்மீது செலுத்துகின்ற பொழுது, அப்பாம்பானது விலகிச் செல்கின்றது. மச்சத்தை, இறுகப் பிடித்தவாறே வருகின்றோம்.

இவைகளெல்லாம் நம் குருதேவர் நம் அனுபவத்திற்குக் கொடுத்து,  மனிதருடைய எண்ணத்திற்கு உள்ள வலிமையையும், மனிதர் தாம் எடுத்துக் கொண்ட உணர்வை, உயிர்   இயக்கும் விதங்களையும், உணர்வின் தன்மை, நமக்குள் உணர்வின் வித்தாக விளைந்து. அதை எண்ணத்தால் எண்ணப்படும் பொழுது, அது நம்முடைய செயலாக ஆக்கம் பெறுகின்றது  என்பதை எமக்குத் தெளிவுபடுத்தவே, எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.