ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2012

நமக்கு நோய் எப்படி வருகிறது...?

நாம் ஒவ்வொன்றும், நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணுகிறோம். அந்தக் காரியங்கள் தடைப்பட்டால், வேதனை அடைகின்றோம்.

வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, நம் உடலில் எப்படிக் கடுகடுப்பு தோன்றுகிறது; சோர்வடைகின்றது. ஏதாவது சாப்பிட்டால் ருசி இருப்பதில்லை. சந்தோஷமாக யார் பேசினாலும், கேட்பதற்கு முடிவதில்லை.

நாம் அரும்பாடுபட்டு, பொருள்களை அதிகப் பணம் கொடுத்து, வாங்கி, அதைச் சேர்த்துச் சுவையான நிலைகளில் நாம் சமையல் செய்திருந்தாலும், வேதனையான உணர்ச்சியின் தன்மைகள், நாம் சுவாசித்த இந்த உணர்வுகள், நம் உமிழ்நீராக இருக்கும்போது, எவ்வளவுதான் சுவையான ஆகாரமாக அது இருந்தாலும், நாம் சாப்பிட்டால் உள் செல்லாது;

ஏனென்றால், அதற்கு எதிர்நிலை, காரமான உணர்வுகள் நமக்கு முன் நிற்கும்போது, இந்தக் காரமான உணர்வுகள் நமக்கு எதிர்மறையாகின்றது. அப்பொழுது, சாப்பிட்டாலே நமக்கு எரிச்சலாகும்.

அப்படியே கஷ்டப்பட்டு விழுங்கினாலும்,
இந்த உணர்வின் சத்து,
நாம் எடுத்துக் கொண்ட உமிழ்நீர் அது விஷமாகும்போது,
நாம் எடுத்துக் கொண்ட இந்தக் குணத்தின் சத்துடன் சேர்த்து,
நாம் உட்கொண்ட ஆகாரம் சத்தாக இருந்தாலும்,
அந்த உணர்வின் சத்து, நமக்குள் விஷமாக மாறுகின்றது.

அவ்வாறு, கடும் வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்து, நாம் சாப்பிட்ட சத்தான ஆகாரத்திற்குள், அந்தச் சத்தின் தன்மை, நமக்குள் உமிழ்நீரின் தன்மை உருவாக்கக்கூடிய அந்த உணர்வின் நிலைகள், நம் உடலுக்குள், விஷமான அணுத் திசுக்களாக மாற்றிவிடுகின்றது.

ஆக, அது இரத்தத்தோடு கலக்கப்படும்போது, அந்த ஆற்றல் மிக்க நிலைகள், நம் உடல்களில் அந்த அணுக்களாக, இரத்தங்களிலேயே அணுத்திசுவாக மாற ஆரம்பித்து விடுகின்றது.

ஒன்று, நம் இரத்தத்திற்குள் கலக்கும் பொழுது, “இரத்தக் கேன்சர்” அதாவது அதிகமாகச் சேர்ந்துவிட்டால், அணுத்திசுக்களாக இரத்தத்திற்குள்ளேயே விளைய ஆரம்பித்துவிடுகிறது.

ஆனால் அதே சமயம், கடும் வேதனையினுடைய நிலைகளை நாம் எடுத்துக் கொண்டு, அதீதமான நிலையில் ஒரே நிலையான எண்ணங்கள் கொண்டு, அதிகமான நிலைகளில் நாம் சத்தான ஆகாரத்தைப் புசித்திருப்போம் என்றால், இந்த வேதனையின் உணர்வின் சத்துக்கள், உடலில் உபத்திரவம் செய்து, இந்த உடலின் நிலைகள், இரத்தத்தில் அணுத்திசுக்களாக மாறிவிடும்.

அப்படி மாறிவிட்டால், இது சுழலும் வேகம் கொண்டு,
அங்கே அது முடங்கி,
நாம் அமர்ந்திருக்கும் நிலையில் சாய்ந்தோ, அல்லது உராய்ந்தோ,
அல்லது நாம் தொழில் செய்யும் பொழுது, (ஒரே நிலையில்)
நாம் மடக்கும் நிலைகள் கொண்டு,
மூச்சை அதிகமாக மடக்கும்போது,
அந்த அணுவின் தன்மை அங்கே தேங்குகின்றது.

அப்படி அங்கே தேங்கி, ஆழமாகப் பதிந்து அந்த அணு தன்னிச்சையாகவே, தன் உணர்வின் சத்துக்களை, நாம் எப்படி வேதனைப்பட்டோமோ, அதைப்போன்று தேங்கிய நிலைகள் கொண்டு, அது உருப்பெற்று, அதனில் தன் வளர்ச்சி கொண்டு, அங்கே விஷமான தன்மைகள் கொண்ட அணுத்திசுக்கள், வளர்ச்சிப் பெற தொடங்கிவிடும்.

இதுதான் “கேன்சர்”. அது வளர்ச்சி பெற்றபின், தன் இனத்தின் தன்மையைக்கூட்டி வளர்க்கச் செய்துவிடும். அதைத் தடைப்படுத்துவதற்கு மருந்தே இல்லை.

நாம் பார்க்கின்றோம், மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ஆனால், இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தூண்டிவிடும். இதைத்தான்,
1.சில பேர், அதீதமான மகிழ்ச்சி கொண்டிருந்தும்,
2.மகிழ்வான நிலைகளில் அதிக ஆகாரங்கள் சாப்பிட்டுச் சத்தான நிலைகள் இருக்கும்போது,
3.எதிர்பாராத பாசத்தினால் ஒருவர்பால் அன்பை அதிகமாகச் செலுத்திக் கொண்டிருக்கும்போது,
4.அவர்படும் துயரமான எண்ணத்தையும் அந்த உணர்வுடன் கலந்து,
5.துயரமான எண்ணங்களை எடுத்து வேதனையாகச் சுவாசிக்கும்போது
6.சுவாசித்த அந்த வேதனையான உணர்வுகள் முதலிலே நமக்கு ஒன்றும் தெரியாது.
7.ஆனால், அந்த உணர்வின் சத்துக்கள் நம் ஆகாரத்துடன் கலந்து அது “கேன்சராக” மாறுகின்றது. 

இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் வேதனையால் இருக்கப்படும்போது, அவர் சுவாசித்தது வாத நோயாக இருக்கலாம் அல்லது வாத முடக்கமாக இருக்கலாம். ஆனால், பித்த விஷ நீராக அதிகமாகக் கவர்ந்ததனாலே, அதனுடைய தன்மைகள் மற்ற உணர்வின் உறுப்புக்களை இயக்கக்கூடிய நிலை வரும்போது, அது பட்டவுடன் அது செயலிழக்கச் செய்து, கை, கால்களை முடக்கச் செய்கிறது.

அவர் முடங்கியிருப்பதை இன்னொரு திடமானவர், பாசமான நிலைகளில் எண்ணிப் பார்க்கப்படும்போது, அதனின் உணர்வுகள், இவன் மகிழ்ச்சியான ஆகாரங்களின் சத்தை எடுத்துக் கொண்டாலும், தொழிலின் நிமித்தம் இவர் வேதனையான நிலைகள் செயல்பட்டு, இந்த வேதனையான மூச்சின் திணறல் கொண்டு, இந்த வியாபாரத்தில் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும், இந்த உணர்வுகள் மற்றொருவருடன் கலக்கப்படும்போது, அங்கே அந்த வேதனையை உருவாக்கிவிடும்.

ஏனென்றால், இவர் சங்கடமாக இருக்கும்போது, ஒரு பொருளை எடுத்து, அதை விலை பேசிச் சொல்லி, கொடுத்தால் போதும். இந்தச் சங்கட உணர்வுகள் கேட்போருடைய செவிகளில் கேட்கப்பட்டு, இதே உணர்ச்சிகள் உந்தி, அந்த உணர்வின் அலைகள் அவர் புலனறிவிலே படும் பொழுது, அவர் கொடுக்கும் சரக்கை நீங்கள் பார்த்தவுடன், அச்சமயம் மட்டரகமாகத் தெரியும்.

அப்பொழுது, அந்த  உணர்வுகள் மாறுபடும் பொழுது, இந்தச் சரக்கு நல்லதாக இருந்தாலும் அது வியாபரமாகவில்லை என்றால், அங்கே வேதனை. இங்கே யார் மேல் பாசத்தால் இருந்தோமோ, அந்தப் பாசத்தில், அவர் எடுத்துக் கொண்ட இந்த வேதனையும் விஷமே.

இந்த விஷத்தின் தன்மையுடைய நிலைகள், அவர் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் ஆற்றல்தான், இவர் உடலில் சேர்க்கப்படும் பொழுது, இந்த உணர்வின் தன்மைகள் அங்கே நஞ்சாக மாறி, இவருக்குக் கேன்சராக வருகின்றது.

இதைத்தான், நம் ஊர்களிலே “மாரித்தாய்” என்று சொல்வது. மாரியம்மன் என்ற நிலைகளில் ஒவ்வொரு இடங்களிலும் வைத்து, நாம் பூஜிப்பதைக் காணலாம். 

ஆகவே, நாம் பிறர் மேல் எந்தப் பாசத்தின் நிலைகள் தொடங்குகின்றோமோ, அந்தப் பாசத்தால் ஈர்த்துக் கொண்ட உணர்வுகள், பிறர் உடலிலே இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் நம் உடல்களிலே சேர்க்கப்பட்டு, அந்த உணர்வின் தன்மைகள் நமக்குள் மாறுகின்றது (மாரி)

மாறிய நிலைகள் கொண்டு, நாம் எந்தெந்த குணங்கள் எடுக்கின்றோமோ, அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் விளைகின்றது என்ற இந்தப் பேருண்மையினுடைய நிலைகளை உணர்த்துகின்றனர் ஞானிகள்.

அதாவது, நம் உடலில் விளையும் சக்தியும், நாம் எடுத்துக் கொண்ட உணர்வாலே, நம் உடல்களில் எப்படி அந்தச் சக்திகள் இயங்குகிறது? என்ற நிலையைத்தான், நமக்குள் உள்ளிருந்து இயக்குவதை, புறத்தாலே காட்டுகின்றனர் மெய் ஞானிகள்.

அந்தச் சக்திகளின் இயக்கத்தை, தெய்வம் என்று பெயரை வைத்து, அந்த உணர்வின் குணங்களுக்கு, செயல்கள் எவ்வாறு இருக்கிறது என்று, அன்று மெய் ஞானிகள் காட்டினார்கள்.
நம் ஊர்களில், திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மன் கோவில் இருக்கும். மனித வாழ்க்கையில் அடிக்கடி சலிப்பு வருகிறது, சங்கடம் வருகிறது.

ஆனால், ஒருவர் தவறு செய்கின்றார் என்றால், அந்தத் தவறான நிலைகளைப் பார்க்கும்பொழுது, அந்த உணர்வு தனக்குள் மாறி, (மாரி) தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கின்றது. நிவர்த்திப்பதற்கு என்ன செய்கிறார்கள்? 

மாரியம்மன் கோவிலில்,  நெருப்புச் சட்டி வைத்திருப்பார்கள். அந்தச் சக்தியின் நிலைகளில் நெருப்பு என்ன செய்யும்...?  இந்தத் தீமைகள் அனைத்தையும் அதில் போட்டுச் சுட்டுப் பொசுக்க வேண்டும். 

நாம் எடுத்துக் கொண்டது விஷம், நமக்குள் வந்தால் பதறச் செய்கிறது. 
1.மாரியம்மனின் கோவிலில் அக்கினிச் சட்டியைக் கண்டு 
2.தீயதைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.

அந்த மாரியைத் தடுப்பதற்கு என்ன செய்கிறோம்?  நெருப்பு, யாராவது, அதைக் காட்டியிருக்கிறார்களா?  யாராவது சொல்லி இருக்கிறார்களா?  இல்லை.  
1.அந்த நெருப்பு யார்?  
2.இந்த மகரிஷிகள். 
3.இந்த மனித வாழ்க்கையில் வந்த இடைஞ்சல்களை, நீக்கிப் பழகியவர்கள்.

‘’ஓம் ஈஸ்வரா...’’ இந்த நெருப்பைக் கூட்டி ‘’மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு...!’’ மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள் பெறவேண்டும் என்று, ஏங்க வேண்டும்.

அவ்வாறு ஏங்கிவிட்டு
1.நமக்குத் தீங்கு செய்தவர்கள் நாளை அறியாமையிலிருந்து விடுபடவேண்டும். 
2.நல்லதைச் செய்யும் எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும் என்ற
3.இந்த உணர்வை நமக்குள் சுவாசிக்கும்போது தீமைகள் ஒடுங்குகின்றது.

மாரியம்மன் கோவிலில், மத்தியில் அக்கினிச் சட்டி  வைத்திருப்பார்கள். எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 
1.கோவில்களெல்லாம் தப்பல்ல
2.நாம் வழிப்படும் முறைதான் தப்பாக இருக்கும். 

அர்ச்சனை செய்துவிட்டு, காசைக் கொடுத்துவிட்டு நாம் என்ன செய்கிறோம்?  தியானிக்கவேண்டும், எதை?

இந்தத் தெய்வம் நல்லது செய்திருக்கிறது. இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும், நாங்கள் செய்வதனைத்தும் நல்லதாக இருக்கவேண்டும், எங்கள் பேச்செல்லாம், பிறருக்கு நல்லதாக இருக்கவேண்டும்.

இந்த தெய்வகுணத்தின் சக்தி, வளரவேண்டும். இதை உணர்த்திய மெய்ஞானிகளின் அருள் ஒளி வளரவேண்டும். அந்த அருள் ஒளியால் எல்லாம் நல்லதாக இருக்கவேண்டும் என்று தியானித்துப் பாருங்கள்.  இதுதான் அர்ச்சனை,

இதைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.  அத்வைதம், சூட்சுமமாக இருக்கக்கூடிய உணர்வை எடுத்து, சுவாசமாக்கு. இந்த சக்தியை உனக்குள் கூட்டு, என்று அன்றைக்கு ஆதிங்கரர் சொன்னார்.

ஆகவே, அவர் காட்டிய அருள்வழியில், காற்றில் மறைந்துள்ள அருள் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து, அனைவரும் மகிழ்ந்து வாழ்வோம், பிறவியில்லா நிலையெனும் அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறுவோம்