சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால், சுட்டுப் பொசுக்கிவிடுவான்
இன்று மனிதனாக இருக்கும் நாம், நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக்
கேட்டுணர்ந்த, அந்தத் துயரமான உணர்வுகள்
வந்தபின், அந்த உணர்வுகள் இரண்டறக்
கலந்து, அது ஓங்கி வளர்ந்து, உடலை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை, அது செயல்படாது தடுத்து, உடல் நலிந்து, உணர்வுகள் குறைந்து எண்ணங்கள் நலிந்து, நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்யமுடியாத
நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.
இதிலிருந்து நம்மைக் காத்திட, இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு, நமது குரு காட்டிய அருள் வழியில், நாம் ஆத்ம சுத்தி செய்வோம் என்றால், நாம் நம்மைக் காத்திட முடியும் என்பதற்குத்தான் அருள்
ஞானிகள் கண்டுணர்ந்த இந்த உணர்வின் சாரத்தை, உங்களுக்குள், காத்திடும்
எண்ண உணர்வுகளுக்குள், இணைத்து, அதை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான், இதை உபதேசிப்பது.
இதனின் நிலைகொண்டு, வியாசர் காட்டிய அருள் வழியில், கண்ணன் காட்டிய வழி, நமது கண்கள், நமக்குள் இதை நினைவு கூர்ந்து எண்ணும்போது, அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற வேண்டும்; அருள்ஞானிகளின் உணர்வுகளை நுகர வேண்டும்; உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க வேண்டும்; அருள்ஞானிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும், என்ற இந்த நிலைக்குத்தான், இதை உங்களுக்கு உபதேசிப்பது.
ஆகவே, மற்றவர்களுடைய
துயரைக் கேட்டறிந்த நிலைகள், உங்கள்
உணர்வின் நல்ல குணங்களை நலியச் செய்தது போன்று, நலிந்த உணர்வின் தன்மையை, மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து, நலிந்ததை மீட்டு, நல்லுணர்வாக வளர்த்து, உயிருடன் ஒன்றும் உணர்வை, அனைத்தும் ஒளியாக மாற்றிய, அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து, உணர்வை ஒளியாக மாற்றும் திறன், நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில், அந்த மாமகரிஷி காட்டிய, அந்த உணர்வின் சாரத்தை, உங்களுக்குள்ளும் தெளிவு
பெறக் காட்டும்
நிலைகள் வந்தது.
ஆகவே இதைப் போன்று, கண்ணன்
(நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, “அதோ வருகின்றான் நாரதன்” என்று
நாம் எண்ணும்போது, புற நிலைகள்
கொண்டு, நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.
இதைப் போன்று, நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி, இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை
கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள்
சக்தியை நாம் பெற வேண்டும் என்று, கண்ணின்
நினைவை உயிரோடு ஒன்றப்படும்போது, “உயிரான
கண் அகக்கண்”, “நம்முடய கண் புறக்கண்”,
ஆக புறக்கண்ணால், அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு,. அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெறவேண்டும்
என்று, நாம் ஏங்கும்பொழுதுதான், “சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால், சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.
நம் உடலான சிவத்திற்குள், உயிர், அகக்கண்ணாக
இயக்கும் நிலையில், புறக்கண்ணின்
நினைவு கொண்டு, நினைவினை உயிருடன் ஒன்றி, “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஏங்கி, அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலிலுள்ள ஜீவஅணுக்கள், ஜீவாத்மாக்கள் பெற வேண்டும்” என்று, உள்
நினைவில் கண்களை மூடி “நம்
உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும்” என்று செய்வதே, கண்ணன் காட்டிய திருட்டு வழி.
ஆக கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு, இந்த உணர்வுகளை (மகரிஷிகளின் உணர்வுகளை) உள் செலுத்தும்போது, அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்”.
அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் செய்யப்படும்போது, ஜீவன் பெற்று வளர்ச்சியாகும் பொழுது, நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேகவைக்கும் பொழுது, அதனின் சத்து கொதித்து, அதனின் மணம் வெளிவருவதைப் போன்று, அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள்சக்தி) உள் நின்று வெளி வருவதை, நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை, இது பிளக்கின்றது.
அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் செய்யப்படும்போது, ஜீவன் பெற்று வளர்ச்சியாகும் பொழுது, நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேகவைக்கும் பொழுது, அதனின் சத்து கொதித்து, அதனின் மணம் வெளிவருவதைப் போன்று, அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள்சக்தி) உள் நின்று வெளி வருவதை, நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை, இது பிளக்கின்றது.
இப்போது, நாம்
பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி, நம் உடலுக்குள் சேர்க்கும்முன், நம் ஆன்மாவாக, மணமாக மாறுகின்றது.
அது மடிமேல் ஆன்மாவாக இருந்தாலும், வரும் மகரிஷிகளின் உணர்வுகளை கண்ணின் நினைவு கொண்டு, உயிருடன் ஒன்றி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்”, அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள் பெற வேண்டும்” என்று கண்ணான கண்ணின் நினைவுகளை, உள் செலுத்தப்படும்போது, நாம் எண்ணிய உணர்வுகள் “பிராணாயாமம்”.
அது ஜீவன் பெற்று, அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை, மடி மீது நம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது
பிளக்கின்றது.
நாராயணன் என்பது சூரியன், நரநாராயணன் என்பது உயிர். நமக்குள் பேரண்டத்தின் பெருநிலைகள்
இருந்தாலும், உணர்வின் எண்ணங்களாக இயக்கி, நம்மை ஆண்டு கொண்டிருப்பது, நரநாராயணன்.
ஆக, நமக்குள் இருக்கும்
சர்வத்தையும், விண்ணில் பிறந்த நிலையும், ஜீவ அணுக்களாக உருவாக்கி நம்மை உருப்பெறச் செய்து, அதனின்
உணர்வின் நிலையாக, நம்மை இயக்கிக் கொண்டிருப்பதும், நரநாராயணான உயிர்,
ஆகவே, உயிரான அவன்
வாசல்படி மீது அமர்ந்து, மடி மீது அமர்த்திய இரண்யனைப் பிளந்தான்,
என்று எடுத்துரைக்கப்பட்டது. இதுதான் கண்ணன் காட்டிய
நிலைகள் கொண்டு, அந்த அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் எண்ணும்போது,
உயிரான நிலைகள் “ஓ” பிரணவமாகி,
அந்த உணர்வின் சக்தி பிரம்மாவாக உடலுக்குள் அனைத்தையும் இணைத்து,
சிருஷ்டித்து, அதனின் ஜீவனாக ஓங்கி, விண்ணின் வீரிய சத்தாக, உள்நின்று வெளிப்படும்,
இந்த உணர்வின் துணை கொண்டு, நம் ஆன்மாவாக வளர்ந்திருக்கும்
இதைப் பிளந்து, தீமையை அகற்றி, நாம் மகா
ஞானிகளின் உணர்வை, நேர்முகமாக உள் சுவாசித்து, தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு, நமக்குள் அந்த உணர்வின்
தன்மையை ஓங்கி வளர்க்கும் தன்மையைத்தான், நரசிம்ம அவதாரம் என்பது.