ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2012

தாய்தான் நம்மைக் காக்கும் ஒரே தெய்வம்

1. தாய்தான் நம்மைக் காக்கும் ஒரே தெய்வம்
இந்தச் சாமியார் காப்பாற்றுவார், அந்தச் சாமியார் காப்பாற்றுவார் என்று சொல்கின்றார்கள்என்று நீங்கள் எந்தச் சாமியாரையும் தேடிச் செல்ல வேண்டாம். 

நீங்கள், உங்கள் அம்மாவை மட்டும் தினமும் பாத நமஸ்காரம் செய்து, “அம்மாஉங்களுடைய அருளாசி வேண்டும், நல்லது நடக்கவேண்டும் என்று ஆசி வாங்கிப் பாருங்கள்.

பின் நீங்கள் காட்டிற்குள்ளேயே சென்று பாருங்கள். புலியோ, யானையோ, ஏதோ உங்களைத் தாக்க வரட்டும். அப்பொழுது, “அம்மா….” என்று அழைத்துப் பாருங்கள், அந்த மிருகங்கள் உங்களைத் தாக்காது.

யாம் உங்களிடம் சவால் விடுகின்றோம்.  தாயின் உணர்வுகள், நம்முள்ளே பதிவாகியிருக்கின்றது.  நம்முடைய தாய், “நாம் நல்லவராக வர வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும்என்று சதா நினைத்துக் கொண்டிருப்பவர்.

நாம் குறும்புத்தனம் செய்யும் பொழுது, திட்டாமலா இருப்பார்கள். தாய், தான் பட்டினியாக இருந்தாலும், பரவாயில்லை. தன் பையனைக் காக்க வேண்டும் என்று மகனுக்கு உணவைக் கொடுக்கின்றார். தனக்கு வயிற்றுக்கு இல்லை என்றாலும் கூட, தன் மகனைக் காக்க வேண்டும் என்று பெரும் சிரமத்தையும் தாங்கிக் கொள்கின்றார். ஆனால், நாம் தாயை மதிக்கின்றோமோ? தாயை மதிப்பதில்லை.

நாம், நம் தாயை எப்படி மதிக்க வேண்டும்?  நாம் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், “என்னுடைய அம்மாவிற்கு அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும்.  எனக்காக எத்தனை கஷ்டங்கள் அனுபவித்தார்களோ, அதெல்லாம் நீங்க வேண்டும். என்னுடைய அம்மா, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்,  அவர்களுடைய அருள் சொல், எனக்குள் எப்பொழுதும் இருக்க வேண்டும்என்று எண்ண வேண்டும்.

உங்களுக்கு, ஒரு பெரிய சிரமமே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தொழில் வகையில் எவ்வளவோ கஷ்டம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்,  நீங்கள், உங்களுடைய அம்மாவை நினைத்து, தியானம் செய்யுங்கள். காக்கும் உணர்வு வந்து, உங்களுக்குள் சிந்தனை பிறக்கும். உங்களுக்கு நல்ல வழி காண்பிக்கும். இதை, நீங்கள் உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

யாம் சித்தாகி இருந்த புதிது. அந்தச் சமயத்தில், பழனி அருகே பாப்பம்பட்டியில் உள்ள ஒரு பையன், அவன் மலைப்பகுதிக்கு சென்று விறகு பொறுக்கி வருபவன். தினமும் விறகு பொறுக்கச் செல்பவன். விறகு பொறுக்கி வந்தபின், வீட்டிலிருக்கும் நேரமெல்லாம், எப்பொழுது பார்த்தாலும் அவனுக்கும் அவனுடைய அம்மாவிற்கும் சண்டையாக இருக்கும்.

யாம் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பொழுது, இந்தப் பையனும் அவனுடைய அம்மாவும் எம்மைப் பார்க்க வந்தார்கள். அவனுடைய அம்மா சொன்னதன் பேரில், “ஏன் உனது அம்மாவை திட்டுகின்றாய்?என்று வந்திருந்த பையனைப் பார்த்து, யாம் கேட்டோம்.

அதற்கு அவன், “என்னுடைய அம்மா என்னைப் பார்த்து, சும்மா அது, இது என்று, ஏதாவது ஒன்றை எப்பொழுது பார்த்தாலும் சொல்லிக் கொண்டே இருக்கும்என்றான்.

நீ அம்மாவிடம் திட்டுகளை வாங்கிய பிறகு, எங்கேயாவது வெளியே சென்றால் அடிபடுகின்றதாஎன்று கேட்டோம்.

ஆமாம், காலில் அடிபட்டது என்று கூறினான்.

உன் அம்மா மனம் நொந்து சொன்ன பிறகு, நீ விறகு பொறுக்கச் சென்றால், “கீழே விழுவாய், கை காலில் அடிபடும்., நீ விறகு வெட்டும் பொழுது, தவறி நீ உனது கையை வெட்டிக் கொண்டிருக்கின்றாயா?என்று கேட்டோம்.

ஆமாம்என்று சொன்னான்.

ஆகவே, இங்கே உன் அம்மா சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பிறகு உனக்கு எப்படி இருக்கும்? என்று கேட்டோம்.

பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருப்பார்கள். அடுத்தாற் போன்று பையன் குறும்புத்தனம் செய்யும் பொழுது, “இப்படிச் செய்கின்றானே, இப்படிச் செய்கின்றானேஎன்று நினைக்கின்றார்கள்.

அதனின் வேதனையின் உணர்வு பையனைத் தாக்கப்படும் பொழுது, அவனுடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து, அவனை மேலும் கெட்டவனாக மாற்ற முடிகின்றதே தவிர, அவனை நல்லவனாக மாற்ற முடிவதில்லை.

தாய் என்ன செய்ய வேண்டும்? “என் பையன் உயர்ந்த நிலை பெறவேண்டும். அவனுக்கு நல்ல அறிவு வரவேண்டும், சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்என்கிற வகையில், அவனை எண்ணும் பொழுதெல்லாம் இது போன்று செய்து பாருங்கள்.

பையன் தன் அருகில் இருக்கிற போதும், இல்லாத போதும் முன் சொன்ன மாதிரி எண்ணுங்கள்.  உங்களுடைய உணர்வுகளால், பையனை மாற்ற முடியும், நல்லவனாக உருவாக்க முடியும்.  இந்த அருள் உணர்வுகளை, அவர்களுக்கு உபதேசித்தோம்.

அதன்பின், தாயும் மகனும் சென்று விட்டார்கள். ஒரு முறை, விறகு பொறுக்குவதற்காக இந்தப் பையனும், அவனுடைய நண்பர்களுமாகச் சேர்ந்து, ஏழெட்டுப் பேர் பாப்பம்பட்டி காட்டிற்குள் சென்றார்கள். இவர்கள், காட்டிற்குள் விறகு சேகரித்துக் கொண்டிருக்கும் பொழுது, இவர்கள் இருந்த இடத்திற்கு, யானைக் கூட்டம் ஒன்று வந்துவிட்டது.

யானைக் கூட்டத்தைப் பார்த்ததும் அவர்கள் சேகரித்து வைத்திருந்த விறகுக் கட்டுகளைப் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஓடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரையும் யானைகள் துரத்திக் கொண்டு வந்தன.

யானைகள் துரத்திக் கொண்டு வந்ததும், எம்மிடம் உபதேசம் பெற்ற பையன், மேலும் ஓடமுடியாமல் தன் தலையில் இருந்த விறகுக் கட்டுகளை தன் முன்னால் நிறுத்தி, “அம்மா…. அம்மா…” என்று கூறிக்கொண்டே இருந்தான். இவனை விரட்டி கொண்டு வந்த யானை, அப்படியே நின்று விட்டது.

ரொம்ப நேரம் வரையிலும் அப்படியே நின்று கொண்டிருந்து. பார்த்துவிட்டு பிறகு, அங்கிருந்து நகர்ந்து போய்விட்டது. அதன் பிறகு, “தப்பித்தோம், பிழைத்தோம்என்று ஓடி வந்துவிட்டான். பிறகு எம்மை வந்து பார்த்து,  சாமி, அம்மாவிற்கும் சக்தி இருக்கின்றதுஎன்று கூறினான். 

எப்படி சக்தி இருக்கிறதுஎன்று கேட்டோம்.

யானைகள் எங்களை விரட்டி வந்தன வேறு ஒன்றும் சொல்லவில்லை. அம்மாஎன்றுதான் கூறினேன். துரத்தி வந்த யானை நின்றுவிட்டது. சிறிது நேரம் பார்த்துவிட்டு, அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டது. எங்களில் ஒருவன் யானையிடம் இருந்து தப்புவதற்காக, பள்ளத்தில் குதித்துக் காலை ஒடித்துக் கொண்டான், என்று கூறினான்.

இதன் மூலம், நாம் தாயிற்குஎவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்பதை அறியலாம்.  நமது தாயிடம் உள்ள சக்திகளை, நாம் உணர்தல் வேண்டும். ஏனென்றால், நம்மை மனிதராக உருவாக்கியதும், நம் தாய்தான். தெய்வமாக இருந்து காப்பாற்றியதும் நம் தாய்தான்.

ஆகவே, நாம் தாயை மதித்துப் பழகுதல் வேண்டும். நம் தாயின் அருளால், அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியான, துருவ நட்சத்திரமான, அதனின்று வரும் பேராற்றலை நாம் அனைவரும் பெறுவோம். இந்த வாழ்க்கையில் வரும் அனைத்து இருளையும் அகற்றுவோம். வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறுவோம். மகிழ்ந்து வாழ்வோம், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.
 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
யாம் பத்ரிநாத் போகும் வழியில், மும்பைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் நடந்து சென்று கொண்டிருந்தோம். யாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்த பொழுது, குருநாதர் ஒரு திசையைக் காண்பித்து, “இந்த பக்கம் செல்என்று கூறினார்.

குருநாதர் சொல்லிய திசையில் யாம் சென்றோம். அப்பொழுது, சிலரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பிராமண ஆட்கள். அவர், அஸ்ஸாம் காட்டில் வன அதிகாரியாக இருந்தார். ஒரு பெரிய ஆபீஸர் என்ற நிலையில் இருந்தார். அவர்களிடம், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அது சமயம், அவர்களிடையே தாய்க்கு உண்டான முக்கியத்துவத்தைப் பற்றி பேசினோம்.

அப்பொழுது, அந்தக் காட்டிலாகா அதிகாரி எம்மைப் பார்த்து, “என்னங்க எத்தனை கடவுள் இருக்கின்றது, பெரிய சாதுக்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் தாயை உயர்த்திப் பேசுகின்றீர்களேஎன்று கேட்டார்.

மேலும், தாய் இன்று என்ன செய்கின்றது? பிள்ளைகளை எத்தனை திட்டுகளைத் திட்டுகின்றார்கள், என்னவெல்லாம் பேசுகின்றார்கள்? என்று கேட்டார்.

எம்மிடம் பேசிக் கொண்டிருந்த அதிகாரியின் குடும்பத்தில், பாகம் பிரிப்பதில் அண்ணன், தம்பிகளிடையே தகராறு இருந்திருக்கின்றது. ஆகையினால், இந்த அதிகாரிக்கு, தன் தாயின் மீது கொஞ்சம் வெறுப்பு. ஆகையினால், யாம் சொன்னதை மறுத்துப் பேசினார். ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போன்று இருக்கின்றது, உங்கள் பேச்சுஎன்று சொன்னார்.

ஆனால், யாம் உங்கள் தாயினால்தான் ஆபீஸராக வந்தீர்கள். ஆனால், உங்கள் தாயை வெறுக்கின்றீர்கள்என்று இரண்டு மூன்று மணி நேரம் பேசி, சில உண்மைகளை உணர்த்தியபின், யாம் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்,  உங்களுக்கு எப்பொழுது ஆபத்து வருகின்றதோ, அப்பொழுது  அம்மா  என்று அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று கூறினோம்.

உடனே அவர், “நீங்கள் பேசுவது வித்தியாசமாக இருக்கின்றது, நாங்கள் எவ்வளவு படித்திருக்கின்றோம், என்னவெல்லாம் செய்திருக்கின்றோம், “அம்மா என்று கூப்பிட்டவுடனே வந்து காப்பாற்றுமா?” என்று கேட்டார்.

எம்மைச் சந்தித்த சிறிது நாள் கழித்து, ஒரு சமயம், அவர் அஸ்ஸாம் காட்டிற்குப் போயிருந்தார். அந்தக் காட்டைச் சுற்றிக் காண்பிப்பதற்காக, தனது மனைவியையும், தனது இரண்டு குழந்தைகளையும், ஜீப்பில் அழைத்துப் போயிருந்தார்.

ஜீப்பை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அங்கே யானை ஒன்று மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்ததை, யாரும் கவனிக்கவில்லை.

இவர் காட்டிலாகா அதிகாரியாக இருந்ததால், தமக்குக் காட்டைப் பற்றி தெரியும் என்பதால், எதைப் பற்றியும் பயம் இல்லாமல் இருந்தார். இருந்தாலும், இவர்களுடைய ஆர்வத்தால், பக்கத்தில் யானை இருந்ததைக் கவனிக்கவில்லை.

யானை, திடீரென்று மரத்தின் பின்னால் இருந்து வெளிப்பட்டு, அதிகாரியைத் தன் துதிக்கையினால் தூக்கிவிட்டது. அன்று யாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் அல்லவா? இதன் உணர்வுகள் இவரிடத்தில் தூண்டி, யானையின் துதிக்கையில் இருந்த அதிகாரி, “அம்மாஎன்று கத்தியிருக்கின்றார். ஜீப்பில் இருந்த அவருடைய மனைவியும், குழந்தைகளும் அம்மாஅம்மா…” என்று கத்தியிருக்கின்றார்கள்.

யானை, அதிகாரியைத் தூக்கியவாறு அப்படியே வைத்திருந்தது. அவரை அடிக்கவுமில்லை, அதற்கு மேல் ஒன்றும் செய்யவுமில்லை. குழந்தைகள் அம்மா, அம்மாஎன்று சொல்லிக் கொண்டே அழுதனர். யானை, அதிகாரியைக் கீழே இறக்கிவிட்டது.

யானை, தன் துதிக்கையிலிருந்த அதிகாரியை இறக்கிவிட்ட பின், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. குழந்தைகள் எல்லாம், “அம்மாஅம்மா…” என்று அதே நிலையில் கூறிக் கொண்டிருந்தனர். பிறகு, சிறிது நேரம் கழித்து, யானை அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டது.

யாம் பத்ரிநாத், கேதார்நாத் போன்ற பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, திரும்பும் சமயத்தில் அங்கே ஆபீஸரைத் திரும்பவும் சந்தித்தோம். 

சாமி…. நாங்கள் என்ன பூர்வ புண்ணியம் செய்தோமோ? தெரியவில்லை. நீங்கள் சொல்லித் தந்த மந்திரம், எங்களைக் காப்பாற்றியது. நாங்கள், எத்தனையோ மந்திரங்களைக் கற்றிருக்கின்றோம். ஆனால், தாங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரத்திற்குண்டான சக்தி, வேறெதற்கும் இல்லைஎன்று கூறினார்.

எந்த மந்திரம் அது?” என்று யாம் அவரிடம் கேட்டோம்.

அம்மாஎன்ற மந்திரம் தான் அது என்றார். அம்மா என்று சொன்னதால்தான், யானை எங்களைத் தாக்கவில்லை. நாங்களும் தப்பிப் பிழைத்தோம் என்று கூறினார்.

உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது. இது போன்று, யாம் பல பேருக்கு அனுபவரீதியிலேயே, உண்மைகளை உணர வைத்திருக்கின்றோம்.

நம் தொழில், நன்றாக நடக்கவேண்டும் என்று ஆசை இருக்கும். நாம் செய்யும் தொழிலில் சிறிது நஷ்டம் வந்தால், “இப்படி வந்துவிட்டதே, இப்படி ஆகிவிட்டதேஎன்று எண்ணுவோம்.

அது சமயம், தொழிலைப் பற்றிச் சிந்தித்து, தொழிலை மேம்படுத்துவதற்கான வழி முறைகளை எண்ணுவதில்லை. தொழிலில் வரும் இடைஞ்சலைச் சமாளிக்க முடியாது என்று எண்ணி, உடனே ஜோசியரை நாடுவார்கள். இப்படி, ஒரு தவறுக்குப் பல தவறுகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

ஆகவே, இத்தகைய தவறுகளிலிருந்து மீள வேண்டுமா? இல்லையா?  நீங்கள், உங்களுடைய தவறுகளிலிருந்து மீள வேண்டும் என்பதற்காகத்தான், யாம் உங்களுக்கு அருள் உணர்வுகளைக் கொடுக்கின்றோம்.  சும்மா இல்லை. அருள் உணர்வுகளுடன், அருள் சக்திகளையும் கொடுக்கின்றோம்.  எமக்கு, எமது குருநாதர் எப்படிச் சக்தி கொடுத்தாரோ, அதைப் போன்றுதான், உங்களுக்கும் சக்தி கொடுக்கின்றோம்.

இன்று, காற்று மண்டலமே மிகுந்த நச்சுத் தன்மையாக இருக்கின்றது. எங்கே பார்த்தாலும் தீவிரவாதம், மதத்திற்குள்ளும், இனத்திற்குள்ளும், மொழிக்குள்ளும், தீவிரவாதம் என்று, இன்று எல்லா நிலைகளிலும் தீவிரவாதங்கள் வளர்ந்துள்ளன. அந்த நிலைகளை நாம் பார்த்து, கேட்டு அறிய நேரும்பொழுது, அந்த உணர்வுகள் நமது உடலுக்குள்ளும் வந்துவிடுகின்றது. அது நமக்குள் வலுவாக ஆகும் பொழுது, நம்முள் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது. நல்லவைகளை, நாம் நுகர முடியாதபடி தடையேற்படுகின்றது.

ஆகவே,  இத்தகைய தீமைகளையெல்லாம் மாற்றியமைக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான்,  யாம் மணிக்கணக்கில் உபதேசித்து, உங்களிடத்தில் அருள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

யாம் உங்களிடத்தில் பதிவு செய்த அருள் உணர்வுகளை, நீங்கள் மனதில் எண்ணி,  ஈஸ்வரா…” என்று உங்களுடைய புருவ மத்தியில்  துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால், தீமைகள் வராது உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம். 

இதன் உண்மைகளை உணர்ந்து, அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று, தங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்த்த இருளை நீக்கி, மெய்பொருள் காணும் திறன் பெற்று, உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக்கும் திறன் பெற்று, என்றும் பதினாறு என்று, பெரு வீடு பெருநிலையை அடையும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.

ஊசி முனை தவம் வேண்டாம்.
காடு, மலை தேடி போக வேண்டாம்.
அன்னை, தந்தை அருள் இருந்தால் போதும்.
குருவின் அனுக்கிரகம் எளிதில் கிட்டும்.

2 தாய் தந்தையரை நாம் எப்படி மதிக்க வேண்டும்

தாய், தந்தை நம்மைப் பேணிக் காக்கின்றனர். நமக்கு வேண்டிய நல்ல புத்திகளைச் சொல்கின்றார்கள். நாம், நமது காரியத்தில் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணி, துரித நிலைகள் கொண்டு செயல்படுகின்றோம்.

அது சமயம்,  குடும்பத்தில் பெரியவர்கள், அனுபவப்பட்டவர்கள் நம்மைப் பார்த்து, சிந்தித்துச் செயல்படு  என்று கூறுகின்றார்கள். 

எதனால்? நம்முடைய அவசர கோலத்தைப் பார்த்து, நாம் சிந்தனையற்றுச் செயல்படுகின்றோம் என்று அவர்களால் உணர முடிகின்றது. இது அவர்களது அனுபவம்.

ஏதாவது ஒரு காரியம் தொடங்க முற்படும்போது, பெரியவர்கள் அறிவுரைகள் கூறினால், சிலர், சரியென்று ஏற்றுக் கொண்டு விடுவதுண்டு. ஒரு சிலர், பெரியவர்களின் அறிவரைகளை ஏற்காமல், பெரியவர்களைப் பார்த்து, இவர்கள் சனியன்கள் மாதிரி, ஏதாவது ஒன்று சொல்லித் தடைப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்என்று சொல்வது உண்டு.

சந்தர்ப்பம், பெரியவர்கள் நம்முடைய காரியங்களைத் தடைப்படுத்துகிறார்கள், என்று எண்ணப்படும் பொழுது, நம்முடைய சிந்தனையைச் செயல்படுத்த முடியவில்லையே என்று எண்ணப்படும் பொழுது, வேதனை என்ற நிலைகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இது போன்ற சமயங்களில், அறிவுரை கூறிய தாய், தந்தையர் மீதோ, மற்றவர்கள் மீதோ, வெறுப்பு வருகின்றது.

எல்லாவற்றையும் பார்த்துத்தான், நான் செய்து கொண்டிருக்கின்றேன். ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள், என்று கோபத்துடன் பதில் சொல்ல நேருகின்றது. சிந்தித்து, மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிலை இல்லை. இதனால் என்னவாகின்றது?

சந்தர்ப்பத்தால், நமது வாழ்க்கையில் நம்மிடத்தில் மோதும் தீய உணர்வுகள், நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது. ஆகவே, நாம் நம்முடைய நல்ல குணங்களை மறைக்கும் தீமைகளை நீக்கிவிட்டு, அருள்ஞானத்தை நமக்குள் பெருக்கும் சக்தி பெறவேண்டும்.

நமது தாய், தந்தை, பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, ஒரு நிமிடம் சிந்தித்தோமானால், நமது அவசரத்தால் பெரும் நஷ்டம் ஏற்படுவதிலிருந்துநம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். 

ஆகவே, சுற்றுப்புறச் சூழ்நிலையும் நாம் செயல்படும் தன்மையும் சரியில்லை என்றால், நாம் எடுத்துக் கொண்ட காரியங்கள் தோல்வியைத் தழுவும். நமது ஆரம்பமே தோல்வியைத் தழுவினால், நமது மனம் இருண்டு விடுகின்றது.

நமது தாய் தந்தை, அறிவுரை சொல்வது நமக்கு எதிர் நிலையாகும் பொழுதும், நமது முயற்சிகள் தோல்வியடையப்படும் பொழுதும், நாம் நல்லதைச் சிந்திக்கும் தன்மை இழந்துவிடுகின்றோம். இது போன்ற சில சந்தர்ப்பங்கள், நமது நல்ல குணங்களை மறைத்து விடுகின்றன.

இவைகளிலிருந்தெல்லாம் மீள்வது எங்ஙனம்? விஞ்ஞானிகள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்பதன் அடிப்படையில், மனிதர் போன்ற  ரோபாட்  என்ற இயந்திரங்களை உருவாக்குகின்றனர். தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கொப்ப, மாறுதல்களுக்கேற்ப, செயல்படும் வண்ணம் ரோபாட்டுகளை உருவாக்குகின்றனர். ஒரு வீட்டிற்கு வேண்டியவர், வேண்டாதவர் போன்றவர்களை அறிந்து இயங்கும் வண்ணம் உள்ள, ரோபாட்டுகளையும் உருவாக்கியுள்ளனர்.

ஒரு வீட்டிற்குள், திருட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு நபர் வந்தால், இந்த ரோபாட் உடனே கண்டறிந்து, ஓலமிடும். ஏனெனில், மனித உணர்வு மாறுபட்டு வரும் பொழுது, இந்த ரோபாட் இயந்திரம் உடனே கண்டறிகின்றது.

உடனே அந்தத் திருடன்மீது, மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொன்று விடுகின்றது. இது போன்றுதான், நமது உயிர் எலக்ட்ரிக்காக இயங்குகின்றது, நாம் நுகரும் உணர்வுகள், எலக்ட்ரான்களாக நம்மை இயக்குகின்றன.

விண்ணிற்கு அனுப்பிய விண்கலம், அது, தான் கவர்ந்த உணர்வுகளை அலைகளாக மாற்றி, விண்ணில் பரப்பும்பொழுது, விஞ்ஞானிகள் இங்கிருந்து இயந்திரங்கள் மூலம் கவர்ந்து, விண்ணின் நிலைகளை அறிகின்றனர்.

விண்ணின் நிலைகளைப் படமெடுத்து, அறிந்து, அலைகளாகப் புவியில் பரவச் செய்யும் விண்கலத்தின் ஒரு பகுதி, பழுதாகிப் போனால், விஞ்ஞானிகள் விண்கலத்திலிருந்து வரும் தகவல்களை அறிய முடியாமல் போகின்றது. இதனால், விண்கலம் காணாமல் போய்விட்டது என்று விஞ்ஞானிகள் கூறிவிடுகின்றனர். ஆனால், அது அண்டவெளியில் பறந்து கொண்டுதான் இருக்கும்.

இன்று மனிதர்கள், தங்களுடைய குழந்தைகளோ, உறவினர்களோ காணவில்லை என்றால் பதட்டமடைகின்றனர். அவர்களுடைய இருப்பிடத்தை அறிய முடியவில்லை. இதனால். அவர்களுடைய நிலைபற்றி அறிய முடியாமல், பயம் வருகின்றது.

ஆனால், நாம் பயத்தைத் தவிர்த்து, காணாமல் போனவர் வீடு திரும்ப வேண்டும்என்ற உணர்வை வலுவாக்கினால், அவருடைய இயக்கங்களை மாற்றி, வீடு திரும்பும்படி செய்யலாம். அவர்கள் வீட்டை வெறுத்து, வெறுப்பாகச் செல்லப்படும்பொழுது, அவர்களுடைய உணர்வை நாம் காண முடிவதில்லை.

அன்பு கொண்டு வாழும் பொழுது, “வெளியூர் சென்ற என் பையன் ஒரு மாதமாகியும் தபால் போடவில்லையே, எப்படி இருக்கிறானோ?” என்ற  வேதனையின் உணர்வை எடுக்கும் பொழுது, உணர்வுகள் வலிமையடைகின்றன.

அந்தப் பையன் அமெரிக்காவில் இருந்தாலும், அந்த பையனின் உணர்வில் மோதி,  சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்து, பணியில் தவறை ஏற்படுத்தி விடுகின்றன. சாலையில் நடந்து கொண்டு சென்று கொண்டிருக்கும் பொழுது, சிந்தனை மறைக்கப்பட்டு, மேடு, பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து, காயங்கள் ஆகிவிடுகின்றன.

இவைகளெல்லாம் நாம் உணர்ந்து,  எப்படி விஞ்ஞானிகள், மாறுபட்ட உணர்வுகள் கொண்ட ஒருவன் உள்ளே நுழைகையில், ஓலமிட்டு, அவனைத் தாக்கிக் கொல்வதற்கு, ரோபாட் என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளனரோ, இது போன்றுதான், நாம் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை, நமக்குள் பெருக்கி வலுவாக்கும் பொழுது, அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள், நஞ்சான உணர்வுகளை அருகில் விடுவதில்லை. 

இதை உணர்ந்து, அருள் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருளளுணர்வுகளை தம்முள் பெருக்கி வரும் அன்பர்கள் அனைவரும், தம்முள் இருளை விலக்கி, மெய்ப் பொருள் காணும் திறன் பெற்று, உயிரைப் போன்றே உணர்வனைத்தையும் ஒளியாக்கி, ஏகாந்த நிலை பெற்று, பிறவியில்லாப் பெருநிலை பெறும் நிலையாக, வேகா நிலை பெறும் நிலையாக வாழ்ந்து, இவ்வாழ்வில் உடல் நலத்துடன், மன நலத்துடன், மன வளத்துடன், வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.
3 ஞானகுரு - தம் தாய் தந்தையரை விண் செலுத்திய நிலை

யாம், நமது குருநாதர் காண்பித்த அருள்வழி கொண்டு, பல ஊர்களுக்கும் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம், எமது தாய், வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்து கொண்டிருந்த பொழுது, குருநாதர் அதை எமக்கு உணர்த்தி, “உனது அம்மாவைப் பழைய நிலைகளுக்குச் செல்லும்படி விட்டுவிடாதே,  அவர்களை முதலில் விண் செலுத்த வேண்டும், அதன் பிறகுதான், நீ விண்ணுக்குப் போக முடியும்என்று நினைவுபடுத்தினார்.



ஆகையால், எமது தாயைச் சந்திக்கச் சென்றோம். அங்கு அவர்களைப் பார்க்கும் பொழுது, அவர்களால் சாப்பிட முடியவில்லை, கண் பார்வை முழுவதும் மங்கிவிட்டது, உடல் வீங்கியிருந்தது, எழுந்திருப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள்.

யாம் அது சமயம், சாமியம்மா அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஆகையால், எமது தாய், சாமியம்மாவை, ‘வீரம்மா’… என்று பெயர் சொல்லி அழைத்து, “ஒரு முட்டையை எடுத்து வேக வைத்து, இரண்டு மிளகு, சிறிது உப்பு வைத்து என் நாக்கில் வைவீரம்மாஎன்றார்கள்.

ஏனென்றால், எமது தாய் முட்டை, கோழிக்கறி போன்றவைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். யாமும், முன்பு முட்டை, கோழி என்றெல்லாம் சாப்பிட்டோம்.

எமது தாயால், அந்த இறுதிக் கட்டத்தில் சாப்பிடவே முடியாது. ஆனால், “வேகவைத்த கோழி முட்டையில், இரண்டு மிளகும், சிறிது உப்பும் வைத்துக் கொண்டுவாஎன்றால், எமது தாயின் நினைவு எங்கிருக்கிறது? கோழியின் மேல்தான் இருக்கின்றது.

இதைத்தான், குருநாதர், “உனது அம்மா முட்டையும், கோழிக் கறியும் நிறையச் சாப்பிட்டிருப்பார்கள், அதனின் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்திருக்கின்றதுஎன்று கூறினார்.

எமது தாய்க்கு உதவியாக, சாமியம்மாவை இருக்கச் செய்துவிட்டு, யாம் தாரமங்கலம் வந்துவிட்டோம். ஏனென்றால், யாம் தாரமங்கலம் வருவதாக உரைத்து, ஊர் முழுவதும் விளம்பரமும் செய்துவிட்டார்கள். இதனால், தாரமங்கலத்திற்குத் தவிர்க்க முடியாமல் வரவேண்டியதாகி விட்டது. சேலத்தில் உள்ள அன்பர்களிடம் இந்தச் சூழ்நிலையைச் சொல்லிவிட்டுத்  தாரமங்கலம் வந்துவிட்டோம்.

சேலத்து அன்பர்கள் தாரமங்கலம் அன்பர்களிடம், “ஞானகுரு அவர்களின் தாயின் உடல்நிலை மிகவும் குன்றியிருக்கிறது, ஆகவே, ஏதேனும் தகவல் வந்தால், ஞானகுரு அவர்களை உடனே வழியனுப்பி வையுங்கள்”  என்று கூறியிருந்தார்கள்.

தாரமங்கலத்தில், யாம் கூட்டத்தில் உபதேசம் கொடுத்து முடித்து, தியானத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது, எமது தாயின் ஆன்மா வெளிவருகின்றது.

அது சமயம், எமது குருநாதர் சொன்னது போன்று, எமது தாயை மனதில் நினைத்து, தியானம் செய்தோம். அப்பொழுது, அதனின் உணர்வின் நிலைகள் அங்கே தெரிந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள், யாரோ ஒரு பெரியம்மா போகின்றார்கள் என்றார்கள்.

இது, தாரமங்கலத்தில் நடந்த சம்பவம். அம்மாவின் உருவம், அதனின் உடைகள், அதனின் உணர்வுகள் அங்கே தெரிந்தது. அப்பொழுது, எமது தாயின் உயிரான்மாவை, சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.

எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்தபின்தான்,  அந்த உணர்வின் சக்தியின் துணை கொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியினை, யாம் பெற முடிந்தது. அது வரையிலும், எம்மால் பெற முடியவில்லை.

அதுவரையிலும், எந்த ஒரு உயிரான்மாவையும் விண்ணிற்கு ஏற்ற முடியவில்லை. அன்னை, தந்தையின் உணர்வுகள் உனது உடலில் இருப்பதனால், அவர்களின் உயிரான்மாக்களை முதலில் விண்ணிற்கு ஏற்றவேண்டும், என்பதை எமது குருநாதர் எமக்கு உரைத்தார்.

நான் உனக்குக் குருவாக இருக்கலாம், அருள்ஞான உணர்வின் தன்மையை வளர்க்கலாம். அதனால், உன் அன்னை, தந்தையை விண்ணிற்குச் செலுத்த முடியும். அதன் உணர்வின் தன்மை கொண்டுதான், என்னையும் அங்கே அழைத்துச் செல்லமுடியும்என்று குருநாதர் உபதேசித்தார்.

குரு வாக்கு தப்புவதில்லை, நாம் சாதாரண மனிதராக இருக்கின்றோம், என்று நினைக்கின்றோம்.. அது சமயம்தான், எமது தாயின் உயிரான்மாவை விண்ணிற்கு ஏற்றினோம். எமது தந்தையின் இறப்பின் பொழுதுகூட, யாம் அவர் அருகில் இல்லை.

அது சமயம், கரூரில் கால் நடையாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். இராஜபாளையத்திலிருந்து, கரூருக்கு கால் நடையாக வந்திருந்தோம். அது சமயம்தான், எமது தந்தையின் உயிரான்மா, உடலை விட்டுப் பிரிகின்றது. அப்போது, அதனின் உணர்வுகள் காட்சிகளாகத் தெரிந்தது. அருகே, ஒரு இடத்தில் போய் அமர்ந்தோம்.

அங்கே, ஏற்கனவே அறிமுகமான ஒருவர் இருந்தார். அந்த நேரத்தில், அவருக்கும் காட்சி தெரிந்தது. ஐயோ, உங்கள் அப்பா போகிறாரேஎன்றார், அருகிலிருந்த இன்னொருவர், “யாரோ ஒரு பெரியவர் போகிறார்என்று சொன்னார். யாம் அங்கேயே அமர்ந்து, எமது தந்தையின் உயிரான்மாவை விண்ணிற்கு அனுப்பினோம்.

எம்மை ஈன்றெடுத்த தாய், தந்தைதான், எமக்குக் கடவுள். எம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள்தான், அதன் துணை கொண்டுதான், குருநாதர் காண்பித்த அருள்வழியில், அவர்களை விண் செலுத்தினோம்.

முதலில், எமது தந்தை விண் சென்றார். இருந்தாலும் எமது தாயையும் விண்ணிலே சேர்த்து, சிவசக்தியின் உணர்வுகளாக அங்கே வளர்க்கச் செய்யவேண்டும். அப்பொழுதுதான், ஒளியின் சரீரமாக வளர்க்க முடியும், என்று குருநாதர் உணர்த்தினார்.

அதன் பிறகு, இதன் உணர்வின் ஒளிகொண்டு, உன்னுடைய உணர்வுடனே வருகின்றேன். உணர்வின் ஒளியை உணர்த்துகின்றேன். என்னை விண்ணில் செலுத்திவிடு, உணர்வின் ஒளியாக இயக்கிவிடு என்று, குரு சொன்ன வாக்கின்படி, எம் அன்னை தந்தை விண் சென்றபின்தான், குருவின் உணர்வின் ஒலிகளை, அவர் காண்பித்த அறநெறிகள் கொண்டு, அவர்களையும் விண்ணிற்குச் செலுத்தும் நிலையாக, சில நிலைகளைச் செய்தோம்.

உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை, விண் செலுத்துவதற்காக, விண்ணின் ஆற்றலின் உணர்வின் தன்மையைப் பெறுவதற்கு, எம்மை கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்குப் போகுமாறு செய்தார் குருநாதர். 

அங்கே, கடும் தவம் இருந்த ஆன்மாக்கள் உணர்வின் தன்மை எடுத்து, தம் உணர்வுக்குள் ஒளியாக மாற்றியது எப்படி? என்பதை, எம் அன்னை தந்தையை விண்ணிற்கு உயர்த்தியபின்தான், யாம் பேருண்மையின் உணர்வுகளை அறிய முடிந்தது. ஆகவே,  இன்றைய நிலைகளில், யாம் உங்களுக்கு உபதேசிப்பது அனைத்தும்பேருண்மையின் உணர்வுகள்.

அருள் ஒளியின் உணர்வுகளை, உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னோரின் உயிரான்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும், பரவாயில்லை.

நீங்களும், உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஒன்றாக துருவ தியானத்திலும், பௌர்ணமி நாட்களிலும் தியானத்தில் அமர்ந்து, எங்களுடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலத் தெய்வங்களான முன்னோரின் உயிரான்மாக்கள், சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும் என்று எண்ணி, ஏங்கி தியானிக்க வேண்டும்.

முன்னோர்கள் பாசத்துடன் உங்களைக் காத்தார்கள். ஆகவே, அவர்களை விண் செலுத்தினால், அவர்களுடைய உணர்வின் தொடர், உங்களுக்குள்ளும் வரும்.

அவர்கள் விண்ணில் இருக்கப்படும் பொழுது, உங்களுடைய எண்ணத்தை அங்கே செலுத்தினால், சப்தரிஷிகளின் அருள் சக்தியை, ஆறாவது அறிவின் துணை கொண்டு, ஏழாவது நிலையை அடைந்தவர்களின் அருள் சக்தியை, நீங்கள் எளிதில் பெறமுடியும். 

உங்களை வளர்த்து, வழிகாட்டிய உணர்வுகள் நிலைக்கின்றது. இதனின் உனர்வின் தன்மை கொண்டு, உங்களுள் உணர்வின் ஒளியாக மாறுகின்றது. இதன் உணர்வின் தன்மையை, நீங்கள் எளிதில் பெறமுடியும். உங்களை நம்புங்கள். இதன் வழி செயல்படும் அனைவருக்கும், எமது அருள் ஆசிகள்.
4 முன்னோர்களை விண் செலுத்தும் கடமை
நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்  என்ற கீதையின் தத்துவப்படி,   நம் முன்னோர்கள்,  எதைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றோமோ, அதனை நாமும் பெறுகின்றோம். 

நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளிவட்டத்தில் கலந்து,  நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும்  என்று நாம் எண்ணி ஏங்குகிற பொழுது, நமது முன்னோர்களும் ஒளிச்சரீரம் பெறுகின்றனர்.

அதனின் பயனாக,   நாம், நம் உணர்வின் சக்தியை,  விண்ணை நோக்கிச் செலுத்தினோமானால், ம் முன்னோர்களின்  உயிரான்மாக்களை விண் செலுத்த உதவிய,   நம்முடைய நினைவுகள், துரித நிலையில் இயங்கி,  அங்கே செல்லவும், மகா ஞானிகளின் உணர்வை,  துரித நிலையில் நாம் ஈர்க்கவும், நம்மிடத்தில் வருகின்ற தீமைகளை, அந்த விநாடியே அகற்றவும், நமக்குள் உணர்வின் சக்தியைப் பழக்கவும், மெய்ஞானிகளின் உணர்வை நம்மிடத்தில் வளர்க்கவும், அந்த உணர்வுகள்,  ஒளியின் சரீரமாக வளரவும் உதவி செய்கின்றன.

மேலும், ஒளி கண்டு இருள் விலகுவது போன்று,  அங்கே இருளுக்குள் இருக்கக்கூடிய பொருள் தெரிவது போன்று,  நமது வாழ்வில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுகின்றோம்.

சப்தரிஷி என்பவர் யார்?  ஆறாவது அறிவின் துணை கொண்டு,  தீயவுணர்வுகளை மாய்த்து,  நல் உணர்வுகளை வளர்க்கச் செய்யும் தன்மை வாய்ந்த,  ஏழாவது அறிவினை தன்னிடத்தில் பெற்றவர்களை, சப்தரிஷி என்று நாம் அறிந்துணர முடியும்.

அத்தகைய தன்மை வாய்ந்த சப்தரிஷிகளின் சிறப்பை,  நம் முன்னோர்கள் பெற வேண்டும் என்று,  நாம் தியானிக்கும் பொழுது, நாமும் அத்தகைய ரிஷியின் தன்மையைப் பெறுகின்றோம். சிறிது காலத்திற்காவது,  நமது முன்னோர்களை எண்ணி தியானித்திடும் பொழுது, அவர்கள் சப்தரிஷி தன்மை பெற்று விடுகின்றனர்.

அதைத் தொடர்ந்து, நீங்களும் ரிஷித்தன்மையைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ரிஷியாக வேண்டும் என்றால், முதலில், உங்கள் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்என்பதை உணரவேண்டும்.

விஞ்ஞானி, ஒரு இராக்கெட் மூலம், செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்புகின்றார். பின், அந்த செயற்கைக் கோளின் துணைக் கொண்டு, விண்ணின் நிலையை, பூமியில் பெறுகிறார்.

அது போன்று, நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து, உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை,  நமது எண்ணத்தின் வலுக் கொண்டு, விண்ணிற்கு அனுப்பும் பொழுது, அந்த ஆன்மாக்கள் பெறும் ஆற்றலை, நாம் பெறமுடியும்.

நாம் சிறு வயதினராக இருக்கும் பொழுது, நமது முன்னோர்கள், நாம் அனைத்துத் துறையிலும் சிறந்து இருக்க வேண்டும் என எண்ணி, நமக்கு பல வகைகளிலும் பாசத்தைக் காட்டி, நல் அறிவினை ஊட்டி வளர்க்கின்றனர்.

ஆனால் நமது முன்னோர்கள், நமக்கு எடுத்துச் சொல்லும் உயர்ந்த, சிறந்த, அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு, மாற்றுக் கருத்துக்களில் நாட்டம் செலுத்தி, அதன் வழி செல்லும் பொழுது, நமது முன்னோர்கள் வேதனை அடைகின்றனர்.

நாம் சொன்னபடி செய்யவில்லை, தவறான பாதையில் செல்லுகின்றானே, உருப்படுவானா?” என்று கோபமும், வேதனையும் கலந்த சொற்கள், அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

நாம் எல்லா நிலைகளிலும் உயர்ந்து சிறப்புற வேண்டும் என்ற, அவர்களுடைய பாச உணர்வுகளும், நம்மிடத்தில் பதிவாகின்றன.

அதே சமயத்தில், அவர்கள் சொல்லை மதிக்காது செயல்பட்ட நிலைகளில், அவர்கள் வெளிப்படுத்திய கோப உணர்வுகளும், நம்மிடத்தில் பதிவாகின்றன.

ஒரு செடி, எதிர்மறையான சூழ்நிலையைச் சந்திக்கின்ற பொழுது, தன்னுடைய வளர்ச்சியை இழக்கின்றது. அது போன்றே, நமது முன்னோர்கள் நம் மீது பற்று, பாசத்துடன் இருந்தாலும், அவர்களுடைய அறிவுரைகளை மறுத்து இயங்குகின்ற பொழுது, அவர்கள் கோப உணர்வு கொண்டுநம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம்சலிப்புவேதனைவெறுப்பு, கோபம், ஆத்திரம் போன்ற உணர்வுகள், அவர்களிடம் உருவாகின்றன.

இவ்வாறு நம் மீது, பாசமாக இருக்கும், அவர்களின் உணர்வின் எண்ண உணர்ச்சியின் அணுத்தன்மையில், இப்படி பாசம், கோபம், ஆத்திரம் என உணர்வுகள் மாறி, மாறி அமைவது என்பது, அவர்களின் உடலில் சீரற்ற நிலைகளை உருவாக்கி, நோய்களை அவர்களிடத்தில் உண்டாக்கிவிடுகின்றது.

மேலும்,  அவர்களுடைய ஆன்மா சீரற்ற நிலையில், நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் கலக்கம், வேதனை, சஞ்சலம் என்ற உணர்வுகளை, அவர்கள் சுவாசிக்க நேர்ந்து, அவர்களுடைய சரீரத்தில் இத்தகைய எண்ண அலைகளே, அதிகமாக விளைகின்றது. நல்ல உணர்வுகள் விளைவதே இல்லை.

உதாரணமாக, நல்ல வயலைப் பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றினாலும், அதனிடையே, களைகள் உருவாகி ஓங்கி வளர்வது போன்றுதான், பாச உணர்வுகள் உள்ள இடத்தில், சிறிதளவு, வெறுப்பிற்கு இடமளிக்கும் பொழுது, அங்கே வெறுப்பான உணர்வுகளே அதிகமாகி, பாச உணர்வுகளை, மங்கச் செய்துவிடுகின்றன. இவ்வாறு, நம் குடும்ப வாழ்க்கையில் வேதனையுறச் செய்யும் சந்தர்ப்பங்களை அறிந்துஅவற்றை விலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

      நம் முன்னோர்களின் உயிரான்மா, நம் குலத்தெய்வமான, அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து, என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணிய பிறகு, “அருள் ஞானிகளின் சக்தி, நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா” “எங்களை அறியாது சேர்ந்த, இருள் நீங்க வேண்டும்ஈஸ்வரா” “நாங்கள் பார்ப்பவரெல்லாம்நலம் பெறவேண்டும்ஈஸ்வரா…” என்று நாம் எண்ணி, இந்த உணர்வின் சக்தியை, நம்மிடத்தில் வளர்க்க வேண்டும். 

எங்கள் குலத்தெய்வமான மூதாதையர்களின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெறவேண்டும் என்றும், சப்தரிஷிகளின் அருள் சக்தி, சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தி, எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்என்று நமது சரீரத்தில், உயிரில் இந்த உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால், எங்கள் அன்னை தந்தை காட்டிய, நல்வழி அனைத்தையும் செயலாக்கி, அவர்கள் எண்ணிய நல் உணர்வுகள், எங்களுக்குள் விளைந்து, நாங்கள் பார்ப்பதெல்லாம் நலமும், ஆக்கமான எண்ணங்கள் எங்களுக்குள் விளைந்து, எங்கள் சொல்லிலும், செயலிலும் புனிதம் பெறும் தன்மையாகவும், அவர்கள் காண்பித்த நல்வழியின் நிலைகள் எங்களுக்குள் ஆளவும், வளரவும் வேண்டுமென நாம் தியானிக்க வேண்டும்.

நம்முடைய முன்னோர்களின் நினைவு நாட்களைக் கொண்டாடி விட்டோம். அவர்களுடைய உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையவேண்டும், என்று தியானித்து விட்டோம். அதன் மூலம், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை, நிறைவேற்றி விட்டோம், என்று கருதுவோமேயானால், அதன் பிறகு, நாம் வளர்வதே இல்லை.

பதிலாக, நம்மிடத்தில்,  முன்னோர்களின் உயிராத்மாக்களை,  விண் செலுத்திய நினைவுகளும், அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்  என்ற ஏக்கமும்  நம்மிடம், என்றும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.