ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2025

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது


ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம். ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.
 
ஒவ்வொரு கோவிலிலும் ஓ..ம் போட்டு வைத்திருக்கின்றார்கள்… அங்கே பிரசாதம் வைத்திருக்கின்றார்கள். மற்ற எத்தனையோ நிலைகளைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
 
கூடுமான வரையிலும் அங்கே சென்று தெய்வத்தை வணங்குகின்றோம். ஏன் வணங்குகின்றோம்…? எதற்காக வணங்குகின்றோம்…? எப்படி வணங்குகின்றோம்…? அப்படி வணங்குவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கிறது…? என்பதை யாரும் சொல்லித் தரவில்லை.
1.உனக்குக் கஷ்டம் வந்தால் தெய்வத்திடம் உன் குறையை எல்லாம் முழுவதையும் சொல்லிவிடு.
2.அதைச் சொல்லி மனம் உருகி அழுகும் பொழுது அந்தத் தெய்வம் உதவி செய்யும் என்று தான் சொல்லி வைத்திருக்கின்றனர்.
3.எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.
 
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் என்றால் எங்கேயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். எங்கேயோ இருந்து நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்கின்றதே தவிர அந்த ஈஸ்வரன் யார்…? என்று அறியவில்லை.
 
ஓம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம் அது தான் ஜீவன் ஜீவன் உள்ளது…” என்று எல்லோரும் வாதிடுகிறார்கள்.
 
உதாரணமாக ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். நான் பாசமாக இருக்கின்றேன் என்னிடம் இருக்கும் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது அவன் படக்கூடிய துன்பத்தைக் கண் பார்க்கின்றது
1.அதே சமயத்தில் அவன் வேதனைப்பட்டு வெளிப்படுத்துவதை என் கண் இழுக்கின்றது.
2.அதைச் சுவாசித்த உடனே உயிரிலேட்டு எனக்கும் வேதனை தெரிகின்றது.
 
அவன் கீழே விழுந்தான் உடலில் வேதனையாகின்றது. அவன் வேதனை தாங்காது வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய காந்த சக்திகள் அதைத் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.
 
அந்தப் பையனை எண்ணி அவன் வேதனைப்படுகின்றானே…” என்று கண்ணிலே பார்த்தவுடனே அந்தக் கண் அதே உணர்வலைகளை எனக்குள் இழுக்கின்றது.
 
நான் இப்பொழுது பேசுகிறேன் என்றால் இந்த மைக்..” நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுக்கின்றது. அதே போல் அந்தப் பையன் இடக்கூடிய சப்தத்தை என் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கின்றது… அந்த உணர்வின் ஒலியைத் தட்டுகிறது.
 
கண் பார்க்கின்றது கரு விழி பார்த்தாலும் அந்த அலைகளை இழுக்கின்றது. கரு விழியில் படம் தெரிகின்றது கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த அலைகளைழுக்கின்றது. அதை ழுத்த உடனே நான் சுவாசிக்கிறேன்.
 
நல்ல குணம் கொண்டு நான் போகும் பொழுது இந்தப் பையன் கீழே விழுகின்றான். பார்த்தவுடனே அவன் வேதனைப்படுவது எனக்குத் தெரிகின்றது. வேதனையால் வெளிப்படுத்தும் ஒலியைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து எனக்குள் கொண்டு வந்து வைக்கின்றது.
 
ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்புச் செய்கின்றார்கள் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்கின்றது. இங்கே நாம் வீட்டிலே அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அங்கே வெளிப்படுத்தக்கூடிய ஒலி அலைகளை பாடல்களை இங்கே ரேடியோவில் பாடுகின்றது… நாம் கேட்கின்றோம்.
 
இது விஞ்ஞானம் செயற்கையில் செய்தது. அதற்கு ஜீவன் இல்லை ஒலி அலைகளை மட்டும் எடுத்துக் கொள்கின்றது.
 
1.ஆனால் நான் பார்த்த அந்த வேதனையான உணர்வலைகள் உயிரிலே படுகின்றது.
2.சுவாசித்து இழுத்து உயிரிலே பட்ட பின் அவனிடமிருந்து வெளிப்பட்ட
3.வேதனையானணர்வின் சக்தி என் உயிரிலே பட்ட பின் ஜீவன்…” பெறுகின்றது.
4.அதற்குப் பெயர் தான் ஓ என்று சொல்வது.
 
ஒரு பாத்திரத்தில் நீரை ற்றி அடுப்பை மூட்டி வைத்தால் தண்ணீர் சூடாகிக் கொதித்து த… புதா…” என்று சத்தம் போட ஆரம்பிக்கின்றது.
 
காரணம் அது கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியிலே படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் அதிலே பட்ட பின் ழுத்து அந்தச் சப்தத்தைக் கொண்டு வருகின்றது. இது இயற்கை…!
 
தண்ணீர் தான்… ஆனால் “தத புதா…” என்று சத்தம் போடுகின்றது. அப்படிக் கொதிக்கும் நேரத்தில் நாம் எந்தப் பொருளை (பலசரக்கை) அதனுடன் இணைக்கின்றோமோ அந்த வாசனை வெளி வருகின்றது.
 
ஏனென்றால்
1.கொதிக்கும் பொழுது கலந்து ஆவியாக வெளியே அனுப்பும்போது அதைச் சூரியனின் காந்த சக்தி தனக்குள்வர்ந்து கொண்டு வருகின்றது.
2.என் கண்ணிலே பார்த்தவுடனே… சத்தியபாமா உண்மையை எடுத்து இழுத்து எனக்குள் உணர்த்துகின்றது.
3.என் உயிருக்குள் பட்ட உடனே அது பிரணவம் ஜீவன் பெறுகின்றது.
4.ஆக… உயிர் அங்கே எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உயிர் நெருப்பு.
 
விஞ்ஞானம் எப்படி இருக்கிறது…? மெய் ஞானம் எப்படி இருக்கின்றது…? இயற்கை எப்படி விளைகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

October 30, 2025

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை


மரத்திற்கு வேண்டிய உரத்தைப் போடுகின்றோம். அதை ஏற்றுக் கொண்டு நல்ல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது.
 
அதே சமயத்தில் சில நச்சுத்தன்மைகள் அந்த மரத்தினுடைய வேரிலே பட்டு அது ஊடுருவி விட்டால் அந்த விழுதிலே நஞ்சு கலந்து மரம் கெட்டு விடுகிறது.
 
இதைப் போல
1.நம்மை அறியாமல் இருளான உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது
2.அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இட்ட அந்த உணர்வின் சத்தான நிலைகள் உண்டு.
3.அந்தச் சத்தைத்தான் உங்கள் உணர்வுகளுக்குள் ஏற்றிக் கொடுக்கின்றோம்.
 
உங்கள் வாழ்க்கையில் எது எல்லாம் உங்களுக்குள் தேய்மானம் ஆகிச் சிந்திக்க முடியாமல் இருந்ததோ சிந்தித்துச் செயல்பட முடியாமல் இருந்ததோ
1.அதை மாற்றியமைக்க மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
2.செவிப்புலன் கொண்டு கேட்கச் செய்கின்றோம்.
 
எனக்கு என் குருநாதர் எப்படி உண்மைகளைக் காட்டினாரோ தைப் போன்று தான் உங்களுக்கும் சொல்கிறோம்.
 
எந்தெந்த நல்ல மனதுடன் எல்லோருக்கும் நன்மைகளைச் செய்தீர்களோ பிறருடைய துன்பத்தை இழுத்து உங்கள் நல்ல குணத்தைச் செயல்பட முடியாதபடி உங்கள் உடலுக்குள் தொல்லையும் துன்பமும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ
1.அந்தத் துன்பத்தை நீக்க நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி உங்களை இந்த அருள் உணர்வைக் கேட்கும்படி செய்து
2.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற உணர்ச்சியின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.அந்த உணர்வாலே சுழன்று கொண்டிருந்த விஷத்தின் தன்மை நீங்கி
4.மெய் ஒளியின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து நீங்கள் இழுத்துச் சுவாசித்து
5.அந்தச் சத்தான நிலைகள் பெற்று உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றி
6.குருநாதர் எப்படி ஒளியின் சரீரமாகச் சென்று விஷம் தனக்குள் எதுவும் அணுகாத நிலை பெற்றாரோ
7.எனக்கு குருநாதர் காட்டிய அந்த நிலையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.
 
காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்து கொள்கின்றோமோ நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் நாம் அறியாதபடி அந்த உணர்வுக்குள் விஷம் பட்டு விஷத்திலிருந்து எழ முடியாத நிலைகள் வந்து விடுகின்றது.
 
அந்த விஷத்தை நீக்கும் ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆவலில் தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.
 
அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்வதற்குத் தியானத்தின் முறையை குருநாதர் எனக்கு எப்படி வழி காட்டினாரோ அதே வழியில் நீங்களும் தியானத்தைச் செய்து கொண்டால் இந்த காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும்.
 
மரத்திற்கு உரமான சத்தைக் காட்டிய பின் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றில் மறைந்திருக்கும் தன் சத்தினை எடுத்துத் தான் எப்படி வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றே
1.உங்கள் நல்ல உணர்வின் தன்மையைக் காக்க மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நீங்கள் சுவாசித்து
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காத்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் மூச்சுக்குள் உடலுக்குள் நலமும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும் நிலையும் ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெறும் நிலையும்
4.இந்த உடலிலிருந்தே உயிரின் தன்மை உணர்வுகள் ஒளியாக மாறி
5.என்றும் பதினாறு என்ற ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை நீங்களும் பெற முடியும்.
 
அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு விண் சென்றார்களோ அதே போன்று நீங்களும் அந்த மெய் ஒளியின் சுடரின் நிலைகள் கொண்டு அந்த மெய் வழியில் செல்லக்கூடிய தகுதியைப் பெறுவீர்கள்.
 
குருநாதர் காட்டிய வழியில் தான் யாம் உங்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

October 29, 2025

உடலில் எடுக்கக்கூடிய “மெய் ஒளியைத் தான் நான் சிந்தித்தேன்…” என்றார் குருநாதர்

உடலில் எடுக்கக்கூடிய “மெய் ஒளியைத் தான் நான் சிந்தித்தேன்…” என்றார் குருநாதர்


வைகுண்ட ஏகாதசி அன்றுதான் என் குருநாதர் உடலை விட்டு வெளியே சென்று ஒளியாகப் போனார். குருநாதர் எனக்குக் காட்டி உணர்த்தியது…
1.இந்த உடலிலே நான் எப்படி ஒளியாக மாறி வெளியே செல்கின்றேன்…?
2.வெளியில் சென்றபின் மற்ற மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி எல்லாம் கவருகின்றது…?
3.அப்படிக் கவரும் பொழுது உயிரான்மா அதனுடைய சுழற்சியின் நிலைகள் என்ன செய்கின்றது…?
4.தன்னை அணுக விடாதபடி சுழற்சியின் நிலைகள் கொண்டு விலகுகின்றது…!
 
விஷத்தைக் கழித்து விட்டு நல்ல உடலாக மாற்றிக் கெட்டதை நீக்கக்கூடிய எண்ணத்தின் நிலைகள் சிருஷ்டிக்கும் தன்மை கொடுத்த இந்த மனித உடலில் அதைப் பெறுவதற்கு குருநாதர் காட்டிய நிலைகள் இது.
 
குருநாதர் அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் வெறும் துண்டைத்தான் கட்டியிருப்பார். “டிச்சியின்…” அருகில் தான் படுத்திருப்பார்.
 
குளிர்காலம் என்று நல்ல வேஷ்டியை கொடுத்துக் கட்டச் சொன்னால் அதை எல்லாம் கிழித்து கையிலும் காலிலும் கட்டிக்கொண்டு பாருடா எவனோ கிழித்து விட்டுச் சென்றான்…! என்பார்.
 
என்ன சாமி…? இப்படிச் சொல்கிறீர்கள்…! என்றால் கிழித்து விட்டுச் சென்றான் நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டுச் சென்றான் என்பார்.
 
1.அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை.
2.இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் அவர் சிந்தித்தார்.
 
பைத்தியக்காரர் போன்ற நிலையில் நான் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அய்யய்யோ பெரிய தொல்லையாக இருக்கின்றது இவரிடம் சிக்கிவிட்டோமே…!” என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
 
ஏனென்றால் அவருடைய செயல்களைப் பார்க்கும் பொழுது அப்படித்தான் என்னால் எண்ண முடிந்தது.
 
ஆனால் உடலை விட்டுச் செல்லும் போது… குருநாதர்… நான் எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது பளீர்.ர்ர்பளீர்.ர்என்று மற்ற எல்லாவற்றையும் தள்ளி விட்டு விண்ணுக்கு எப்படிப் போகின்றது…? அப்படிச் சென்றாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் அந்த உயிரான்மா என்ன செய்கின்றது…? பார்…!
 
அதற்கு முன்பே எனக்கு அதைச் சொல்லிக் கொடுத்துவிட்டார்.
 
உயிராத்மா இங்கேயிருந்தாலும் அன்று வாழ்ந்த மகரிஷிகள் ஞானிகள் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியிலே போனாலும் பிறிதொரு ஈர்ப்புக்கு வராது தடுத்தாலும்
1.இந்த உணர்வுக்கு ஒத்த விழுது இந்தப் பூமியிலிருந்து உந்தி ஆன்மாவை மேலே தள்ள வேண்டும்.
2.அதனால் தான் எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனிடத்தில் வருகின்றார்கள்.
3.அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு உடலுக்குள் மகிழ்ச்சியை ஊட்டி
4.அவனிடமிருந்து வரக்கூடிய மூச்சைத் தன் உடலுக்குள் சேர்த்து அந்தச் சந்தோசமான உணர்வை நுகர்ந்து தான் விண் சென்றார்கள்.
 
குருநாதர் அதை எல்லாம் காட்டும் பொழுது
1.உயிராத்மா வெளியிலே சென்ற பின் எவ்வாறு…? எதன் நிலை கொண்டு என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் அதிலே வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று காட்டினார்.
அவர் காட்டிய உண்மையைத் தான் உங்களுக்குச் சொல்லி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற இந்த உணர்வினை உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்…”
 
மெய் ஒளியின் தன்மைஇயற்கையில் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் இயக்கமாக மாறி மனிதன் வரை ஏப்படி வந்தது…? என்று எனது குருநாதர் காட்டினார்.
 
மனிதனிலிருந்து அவன் ஒளியின் சரீரமாகப் பெற்றுச் சப்தரிஷி சிருஷ்டிக்கும் தன்மையாகப்
1.பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷம் வந்தாலும் அதை தனக்குள் ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை மகிழ்ச்சியாக நின்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
 
ஆனால் நமது சாஸ்திர விதிகள் அம்மி மிதித்து அருந்ததியைப் பார்..!” என்று கல்யாணக் காலங்களில் சொல்லிக் காட்டுகின்றார்கள். ஆனால் எதற்காகப் பார்க்கச் சொன்னார்கள்..,? ஏன் பார்க்கச் சொல்கின்றார்கள்…? என்று தெரியாது.
 
கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த நிலையில் தனக்குள் எடுத்துக் கொண்டதை உருவாக்கச் செய்யும்.
 
கணவன் மனைவி என்பதே
1.உயிர் கணவன் ஆகின்றது
2.தான் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மை தான் அது மனைவியாகின்றது.
 
எந்தச் சக்தியின் தன்மை கொண்டு இந்த உயிர் தாவர இனச் சத்தைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை அணுத் திசுக்களாக மாற்றி அந்தச் சத்திற்குள் இருந்த உயிரின் துடிப்புஅந்த உணர்வின் மலமாகித் தான் அது உடல் பெறுகின்றது.
 
அதைப் போல கடந்த கால ஞானிகள் சொன்ன முறைப்படி கணவன் மனைவி இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு
1.ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் மெய் ஒளியை எடுத்துக் கொண்டால்
2.அந்த இரு சக்தியும் ஒன்று சேர்ந்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக அது உருப் பெறுகின்றது.

மனிதனைப் போன்று உருவாக்கப்பட்ட சிலையின் மகத்துவம்

மனிதனைப் போன்று உருவாக்கப்பட்ட சிலையின் மகத்துவம்


போகன் எதைக் கருத்தில் கொண்டு முருகன் சிலையைச் செய்தானோ மக்கள் யாரும் அதை நினைவில் கூடக் கொண்டு வரவில்லை.
 
பிரபஞ்சம் எவ்வாறு சூரியனால் ருப்பெறுகின்றது…? அது ஒவ்வொன்றிலும் கருவாகி எப்படி உருவாகின்றது…? நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் தன் ஒளிக் கதிர்ளை வீசி அது எவ்வாறு நட்சத்திரத்தின் தன்மை பெறுகின்றது…?
 
அது அது சுழலும் பாதையில் ஒவ்வொரு கோளும் அதற்குண்டான பாஷாணங்களை விஷத்தன்மைகளைத் தனக்குள் எப்படிச் சேமிக்கின்றது…? என்ற உண்மையை உணர்ந்தவன் போகன்.
 
அது உமிழ்த்தி வருவதைச் சூரியன் கவர்ந்து பிரிக்கின்றது… பாதரசமாக மாற்றுகின்றது. அதிலிருந்து தூவும் உணர்வுகள் தான் விந்து என்றும் அது எதைக் கவர்கின்றதோ அதன் வழி கொண்டு மற்றது உருவாகிறது என்று தெரிந்து மற்ற எத்தனையோ நிலைகள் ஆகி மனிதனாக இது உருவாக்கி இருக்கிறது என்ற நிலையைக் காட்டித்தான் முருகன் சிலையை வடிக்கின்றான்.
 
1.பாதரசத்தையும் நவக் கோள்களில் விளைந்த பாஷாணத்தையும்
2.நட்சத்திரங்களின் வைரக் கல்களையும் அது விளையும் பருவம் கொண்டு வெடிக்காது பிஞ்சின் தன்மை அடைந்த வைரங்களை இதனுடன் இணைத்து
3.தாவர இனத்தின் தன்மையும் பாதரசத்தையும் அவன் இடும் புடத்தால் இரண்டறக் கலந்து முருகன் சிலையை உருவாக்கினான்.
 
மனிதன் எந்தெந்த உணர்வை உட்கொண்டானோ தீமைகளை அகற்றினானோ அதை… அந்தத் தாவர இனங்களைச் சாரணையாக சிலைக்குள் கொடுத்தான். மனிதனைப் போன்று தண்டாயுதபாணி என்று உருவாக்கி வைத்தான்.
 
அக்காலங்களில் அந்தச் சிலை மீது பாத்திரத்தை வைத்து நீரை ஊற்றி வைத்திருப்பார்கள்.
1.சிலை மீது அந்த நீர் பட்டவுடன் அதிலே ஒரு விதமான வெப்பங்கள் வரும்
2.வியர்வை வரும் அதிலிருந்து ஆவிகள் வரும்…!
 
ஒரு மனிதன் கோபமாகப் பார்க்கும் பொழுது அவன் உடலில் இருந்து வெளிப்படும் மங்களை நுகரும் போது நமக்கு நோயாக மாறுகின்றது.
 
அதே போன்று மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளை எடுத்திருந்தாலும் “அதை அகற்றிடும் சக்தியைப் பெற…”
1.இங்கே முருகன் சிலையைப் பார்த்து “அதிலிருந்து வரும் மணங்களைச் சுவாசிக்க..”
2.விண்ணை நோக்கி (மலை மீது ஏறி)கும்படிச் செய்கின்றான். ஏனென்றால் மலை மீது முருகன் ஆலயம் இருக்கின்றது.
 
போகன் காட்டிய அந்த நெறிகளையும் அவன் வகுத்துக் கொண்ட நிலைகளை எண்ணத்தில் எண்ணி அந்த மகா மகரிஷி காட்டி அருள் வழியில் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தைத் தனக்குள் எடுத்து நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி ஏகும் பொழுது கதிரவனின் காந்த ஒளியலைகள் அங்கே பரவுவதும் அந்த நினைவுடன் விண்ணை நோக்கி எண்ணி எடுக்கும் பொழுது அது வருவதும் இந்த நினைவாற்றல் அந்த ஆற்றலைப் பருகுகின்றது.
 
1.அப்போது தன் உடலில் வந்த தீமைகளை மறக்கின்றான்.
2.விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளை உந்தும்படிச் செய்கின்றான்.
3.ஆறாவது அறிவின் உண்மையை உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்திகளை ஈஸ்வரா என்று ஏங்கி நுகரும்படிச் செய்கின்றான்.
 
சோர்வையோ அதனால் உடலில் வந்த வலிமைக் குறைவையோ அதை மாற்றி… அந்த மெய் ஞானிகளுடைய உணர்வுகளைச் செருகேற்றி அதை நுகரும்படிச் செய்து படி மீது ஏறி மேலே செல்லும்படிச் செய்கின்றான். மேலே ஏறி அங்கே கிரிவலம் வரும் பொழுது மகரிஷிகளை எண்ணத்தால் நாம் எண்ணி அதை நுகரும்படிச் செய்தான்.
அங்கே ஒரு தூப ஸ்தூபியும் உண்டு. அதிலே அக்கினியைப் போட்டு வைத்திருப்பார்கள்.
 
ஒளியின் சுடராக அங்கே வைத்து அந்த ஞானியின் ஒளிச் சுடரைப் பெறுவதற்காக விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வினை ஏங்கிப் பருகும்படி செய்து…
1.எந்த ஞானி காட்டினானோ இந்த உணர்வினைத் தனக்குள் செருகேற்றி
2.நினைவாற்றலை விண்ணிலே சேர்த்து ந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று காந்தப் புலனறிவைக் கூட்டும்படிச் செய்தான்.
 
தே க்க உணர்வுடன் நாம் உள்ளே செல்லும் பொழுது அந்தச் சிலை மீது நீர் படுவதை உற்றுப் பார்த்தால்
1.எந்த நல்லதை எண்ணி ஏங்கி வந்தோமோ அந்த உணர்வுடன் அதை நுகரப்படும் பொழுது
2.நம் உடலுக்குள் அந்த மணம் சென்று நம்மை அறியாத வந்த தீமைகளை அது பொசுக்குகின்றது.
 
ஆனால் அதை நாம் நுகர (சுவாசிக்க) வேண்டும்…!
 
அவன் சொன்ன முறைப்படி நுகர்ந்து நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்ற இந்தக்க உணர்வுடன் பார்த்து நாம் சுவாசித்தால் உடலில் வந்த கடுமையான பிணிகளும் நீங்குகின்றது.
 
போகன் அதைத் தனக்குள் நேசித்தான். இந்த உணர்வின் சக்தியைப் பருகினான். தன்னில் தன்னைத் தான் அறிந்தான். விண்ணின் நிலையை உணர்ந்தான் விண்ணின் ஆற்றலைத்க்குள் பருகினான்.
 
இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கிய உணர்வின் தன்மை கொண்டு மனிதன் உருவான நிலையை உணர்ந்தான். மனிதனுக்குள் அறியாத வந்த தீமைகளை எப்படி நீக்குவது…? என்று என்ற உபாயத்தை உணர்ந்தான். அதைச் சிலையாக வடித்து வைத்தான்.
1.அந்த அருள் ஞானம் பெறும் நிலையும் நமக்குள் மறைத்திருக்கும் நஞ்சினை கொல்லும் உணர்வினைச் சுவாசித்து
2.தீ அணுக்களைக் கொல்லும் மார்க்கங்களைக் கொடுத்தான்.
 
நாம் எப்படி வாழவேண்டும்…? தன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி அகற்ற வேண்டும் என்று நம் உடலைக் கோவிலாக மதித்தான் போகன். உயிரைக் கடவுளாக மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று எண்ணினான். அதற்குள் மனிதனாக உருவாகிய குணங்களை அரும்பெரும் சக்திகள் என்று எண்ணினான்.
 
அந்த மனிதன் மகிழ்ந்தான் என்றால் அந்த மகிழ்ச்சியைத் தான் பெற வேண்டும் என்றக்கத்தில் நான் கண்டறிந்த நிலையை உருவாக்கினான்.
1.இதைக் கண்டு எத்தனை பேர் மகிழ்கின்றார்களோ அந்த மகிழ்ச்சியின் தன்மையை ஏங்கி
2.மனிதனுக்குள் உருவான உணர்வின் சத்தை அன்று உணர்வாகப் பெறுகின்றான் போகன்.
 
அதைப் பெறுவதற்கு தாவர இனச் சத்தை இந்த உடலிலேயே மாற்றிக் காயகல்பாகப் பெறும் பாக்கியம் வரையிலும் இன்னொரு உடலுக்குள் புகாது இந்த உடலிலிருந்தே செயல்பட்டான்.
 
வன் காட்டிய உணர்வின் சத்தை மற்ற மக்கள் எடுக்கும் உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி அந்த மெய் ஞானியின்ணர்வைத் தனக்குள் ஒளியாக்கி அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உடலை விட்டு “விண் செல்லும் மார்க்கத்தைக் கண்டு கொண்டான்…”
 
இது தான் போகன் செய்த நிலைகள்.

October 28, 2025

இரத்தம் போகும் பாதையில் அடைப்புகளை அகற்றும் எளிய பயிற்சி

இரத்தம் போகும் பாதையில் அடைப்புகளை அகற்றும் எளிய பயிற்சி


நம்முடைய சுவாச நாளங்களில் ரத்தம் போகும் பாதைகளில் அடைப்புகள் இருக்கலாம் சந்தர்ப்பத்தில் நாம் சுவாசிக்கும் போது புகையிலை… அதாவது
1.சில புகை பிடிப்பருடைய அந்தப் புகையை நாம் சுவாசித்து இருந்தாலும்
2.நாம் புகை பிடிக்கவில்லை என்றாலும் கூட அவர்கள் பிடிக்கின்றார்கள் என்று எண்ணினால் போதும்
3.சுவாசத்தின் வழி கூடி சுவாசப் பையிற்குள் சென்று ரத்தம் போகும் அந்த நாளங்களிலே உறைந்து விடும்.
 
இப்படி உறைந்து விட்டால் அந்தப் பக்கம் ரத்தம் போகவில்லை என்றால் இன்னொரு பக்கம் போகும். அங்கேயும் அடைபட்டால் அடுத்த பக்கம் போகும்.
 
இப்படி மூன்று பாகமும் அடைபட்டால் நிரையீரலுக்கோ மற்ற உறுப்புகளுக்கோ இரத்தம் போகாதபடி இருதய வலி வருகின்றது நெஞ்சு வலி அதிகமாகின்றது மடியக் கூடச் செய்து விடுகின்றது.
 
ஆகவே… இருதய வலி இருந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது நேரம் பின்னுக்குச் சாய்ந்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவாற்றலுடன் மூச்சை எடுத்து… அடக்கி மீண்டும் அந்த மூச்சை விடுங்கள்.
2.மூச்சை இழுங்கள் ஒரு நொடி நிறுத்துங்கள்
3.பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சை வெளியில் விடுங்கள் மெதுவாக..”
 
 
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று சுவாசத்தை எடுத்து உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும். இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அதை நீக்கிவிடும்.
 
அதிகமான தொல்லையாக இருந்தால் ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் தியானம் செய்யக்கூடியவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். விபூதியையோ நீரையோ முன்னாடி வைத்துத் தியானித்து
1.அவருக்கு இருதய வலி நீங்கி இருதயம் சீராக இயங்கி அவர் நலம் பெற வேண்டும் என்று தைக் கொடுங்கள்.
2.தை அவர் குடிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
3.அவர் இருதயம் சீராக இயங்க வேண்டும் அவர் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும். ஏனென்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அது நல்லதாகும்.
 
இந்தப் பயிற்சிகளை ஒரு ஐந்து நிமிடம் செய்யலாம். பயிற்சி முடித்த பின் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண அலைகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்த வேண்டும்.
 
நம் உடல் அப்பொழுது தூய்மையாகும். பற்று மகரிஷிகள் பால் செல்கின்றது. உடல் நலம் பெறுவதற்கு இந்த முறைப்படி செய்து கொண்டோம் என்றால் அது நல்லதாகும். கூட்டுத் தியான்ங்களில் இதைச் செயல்படுத்துங்கள்; (ஆனால் கர்ப்பமாக இருப்பவர் ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.)
 
குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தால் அருள் ஞான நூல்களை எடுத்துதிலுள்ள கருத்துக்களைப் படியுங்கள். மகரிஷிகள் அருள் சக்தி கருவில் வளரும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
தாய் தந்தையரும் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களும் தியானம் செய்துவிட்டு
1.அந்தக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று ஆசி கொடுத்தால்
2.அந்த மகரிஷியின் உணர்வுகள் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.
3.குடும்பத்திலே அந்த அருள் ஞானி உருவாவான். இதை நாம் செயல்படுத்துவோம்.

October 27, 2025

சிதம்பரத்தைச் சாதாரணமாக நினைக்கின்றோம்…!

சிதம்பரத்தைச் சாதாரணமாக நினைக்கின்றோம்…!


தில்லைய,ம்பதி என்ற நிலையில்… சிதம்பரத்தில் ஆலயம் அமைத்திருக்கும் இடத்தைப் பற்றி உண்மையை (சரித்திரத்தை)” நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இதை உணர்த்தியவர் யார்…? திருமூலர்.
 
1.”மூலத்தின் உண்மைகளை…” ஒவ்வொரு அணுவின் இயக்கத்தின் உண்மைகளை அறிந்தவன் என்பதற்குத்தான் திருமூலர் என்று பெயர் வந்தது.
2.அண்டத்தின் இயக்கம் பிண்டத்தில் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்று அவர் கூறியுள்ளார்.
 
அது இந்த ஸ்தலத்திலே… தில்லையம்பதியிலே காட்டப்பட்டது.
 
பதஞ்சலியாக அரசாட்சி பரிந்து கொண்டிருக்கும் பொழுது யாகங்களையும் கேள்விகளையும் பல மந்திர நிலைகளையும் செய்து வரும் போது கூடுவிட்டு கூடுபாயும்…” உணர்வுகளைக் கற்றுக் கொண்டவன் அவன்.
 
பதஞ்சலி அரசனானக ஆட்சி செய்து வந்தாலும் அந்த உடலை மற்ற அரசர்கள் இறக்கும்படி செய்தால்…திலிருந்து தப்பி இன்னொரு உடலுக்குள் தாவிச் செல்லும் வித்தையை கற்றுக் கொண்டவன் அவன்.
 
“தன்னுடைய சுகத்தைதிலேயுமே மறையாது…” பல உடல்களில் தாவி மகிழ்ந்து வாழ முடியும்…! என்று பதஞ்சலி அதைச் செயலாக்கி அதன் வழி அவன் அரசாட்சி செய்து வந்தான்.
 
1.அவனுடைய மனைவி இன்னொரு அரசனுடைய மகள்தான்… அவளுக்கு அஞ்ச வேண்டும்
2.நாட்டைக் காக்கும் சேனாதிபதிகள் பலர் இருந்தாலும் அவன் உதவியை நாட வேண்டும்.
3.அரசன் இட்ட சட்டத்தை மக்களுக்குப் புகுத்தினாலும் போர் முறை வரும் பொழுது
4.சேனாதிபதி எதிராகத் திரும்பி விட்டால் அவனுக்கு அஞ்சி அவளிடம் நயந்தே செயல்பட வேண்டும்.
5.தான் சட்டத்திற்கு மாறாக நடந்தால் மக்கள் கொதித்து எழுவார்கள்… ஆக மக்களைக் காக்கும் எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படிப் பல நிலைகளிலிருந்து தன்னைக் காத்திடும் நிலைக்காகக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினான்.
 
அதிலே இரு வகை உண்டு.
 
உருவாக்கிக் கொண்ட மந்திர ஒலிகளை ஒருவர் சொல்வார் என்றால் உடலுக்குள் அவன் சொன்ன நிலையில் எடுக்கப்படும் பொழுது இந்த ஆன்மா அந்த உடலுக்குள் சென்று அந்த உடலைச் செயல்படுத்தும் இது ஒரு முறை.
 
அதே சமயம் யாருடைய தயவும் இல்லாதபடி நஞ்சு கொண்ட பாம்பின் உடலுக்குள் புகுந்து நகர்ந்து சென்று வேறு ஒரு உடலின் மீது இந்த விஷத்தைப் பாய்ச்சி அந்த உடலைச் சுருங்கச் செய்து அதன் வழி கொண்டு அந்த உடலை ஆட்சி புரியும் நிலை… இது ஒரு முறை.
 
இப்படித்தான் பதஞ்சலி செய்து கொண்டான்.
 
எதிரிகள் வரும் பொழுது எதிரிகளிடமிருந்து மீள்வதற்காகப் பதஞ்சலி தன் சேனாதிபதியிடம் விவரத்தைச் சொல்கின்றான்.
 
போர்ப்பயிற்சியாக நான் செல்கிறேன்… என்னுடைய சரீரத்தை ஒளித்து வைத்துவிடு. இந்த உடலை விட்டு நான் பாம்பின் உடலுக்குள் ஏவி வெளியில் செல்கின்றேன்.
 
இந்த உடலை நீ பாதுகாத்து வைத்திருப்பாய் என்றால் நான் மீண்டும் இந்த உடலுக்குள் வர உதவும். இன்னென்ன பக்குவத்தில் நீ வைத்துக் கொள்…! என்று சேனாதிபதியிடம் பதஞ்சலி சொல்கின்றான்.
 
சரி… என்று சொன்னவுடன்… பதஞ்சலி அந்த உடலை விட்டு வெளிவந்து பாம்பின் உடலுக்குள் செல்கிறான். ஆனால் அவ்வாறு சென்ற பின் சேனாதிபதி அரசனின் உடலைப் பொசுக்கி விடுகின்றான்.
 
இப்படி… பதஞ்சலி மீண்டும் தன் உடலுக்குள் வர முடியாத நிலை ஆன பின்பு தான் நாடு முழுவதும் அவன் சுழன்று வந்து தில்லைம்பதியில் சிதம்பரத்தில் வந்து சேர்கின்றான்…!
 
இங்கிருக்கக்கூடிய ஆலயத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அந்த ஆலயத்திற்குள் அங்கே பாம்பின் உடல் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தான்.
 
இப்பகுதியில் அக்காலத்தில் நந்தவனம் என்றும் உண்டு. பதஞ்சலி அவைகளைச் சுற்றி வருவதும் காடு மேடுகளில் அலைவதும் மற்றவர் கண்களுக்குச் சிக்காது அலைந்து கொண்டிருந்தது.
 
எப்படியும் மனித ரூபம் பெற வேண்டும் என்று அதற்குண்டான சந்தர்ப்பத்தை எடுத்து ஒரு மாடு மேய்ப்பவனைத் தீண்டி இந்த விஷத்தின் துணை கொண்டு அந்த உடலுக்குள் புகுகின்றது.
 
அப்பொழுது மாடு மேய்ப்பனுடைய உணர்வுகள் பலவீனம் அடைகின்றது இவனுடைய உணர்வு அந்த உடலை ஆட்சி புரியத் தொடங்குகிறது.
 
ஆட்சி புரிந்தாலும் இதன் நிலையில் கொண்டு மாடு மேய்ப்பவனுடைய வீட்டுக்குச் சென்ற பின் அவனுடைய மனைவி இவனுக்கு வேண்டிய உபகாரங்களையும்… சுடு தண்ணீர் வைத்துப் பணிவிடைகளையும் செய்கின்றது.
 
அதைப் பார்க்கும் பொழுது தான் அவன் திகைக்கின்றான்…!
 
அரசு வாழ்க்கையில் தான் அரசனாக இருக்கும் பொழுது அரசிக்கு அஞ்சியும் சேனாதிபதிக்கு அஞ்சியும் தான் இட்ட சட்டத்திற்கு மக்களுக்காக வேண்டி அஞ்சியும் எதிரியான அரசனிடமிருந்து தப்ப அஞ்சி வாழ வேண்டிய சூழ்நிலைகளே ந்தது.
 
1.ஞானிகள் காட்டிய விண்ணுலக ஆற்றலை தன் சுயநலங்களுக்காக மாற்றிய உணர்வுகள் எவ்வாறு ஆனது…? என்று
2.இங்கே மாடு மேய்ப்பவனின் உடலிலிருக்கும் போது… அவன் மனைவி பணிவிடை செய்யும் பொழுது இவனுக்கு அந்தச் சிந்தனைகள் வருகிறது.
 
அவன் கற்றுணர்ந்தணர்வின் தன்மை தில்லை நடராஜா…! தில்லை என்பது நமது பூமி. அது நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது.
 
இந்தப் பூமியின் செயலாக்கங்களில் அந்தச் சுழற்சியின் வேகத்தினால் இங்கே மற்ற உயிரினங்களும் தாவர இனங்களும் எவ்வாறு விளைந்தது…? என்று கற்றுணர்ந்தது தான் தில்லை நடராஜா.
 
தில்லையம்பலத்தாண்டவா…!
1.இந்த உடலான தில்லையை ஆண்டு கொண்டிருப்பவன் உயிர் என்றும்
2.தில்லை அம்பலம் என்ற இந்த உடலின் தன்மையை உணர்வின் குணங்களால் இயக்கும் நிலைகளும்
3.குணங்களுக்கொப்ப உடலின் இயக்கம் நடனம்… என்று இந்த நடனக் கலையைக் காட்டியவன் திருமூலர்
4.உணர்வுக்கொப்ப உடலின் இசையும் இசைக்கொப்ப உடலின் இயக்கம் என்றும் தெளிவாகத் தெரிந்து மக்களுக்கு வெளிப்படுத்தினார் திருமூலர்.
 
அவன் சொன்ன தத்துவம்நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது என்பது.
 
தியிலே பேரண்டத்தில் விஷத்தின் தாக்குதல் விஷமற்றதைத் தாக்கப்படும்போது வெப்பமாகின்றது. வெப்பம் தாங்காது அணுக்களாகச் சிதறுண்டு ஓடுகின்றது. அந்த ஓடும் நிலைகள் ஈர்க்கும் நிலையில் தான் காந்தம் வருகின்றது.
 
இது தான் திருமூலம் ஆதியிலே உருப் பெற்ற உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றான்.
 
ந்த இடம்… தில்லையைப் பற்றிச் சாதாரணமாக நினைக்கின்றோம்…! ஆனால் எவ்வளவு பெரிய சரித்திரத்தைப் படைத்த இடம்…! என்று உணர்ந்தால் சிதம்பரத்தில் இந்த ஆலயத்தில் வணங்கும் முறைகளை நாம் பார்க்கலாம்.
1.தன்னை உணர்தல் என்றும்
2.தான் எடுக்கும் (சுவாசிக்கும்) உணர்வின் இயக்கம் என்றும்
3.வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? என்றும் காட்டிய நிலைகள் தான்
4.தில்லை நடராஜா என்றும் தில்லை அம்பலத்தாண்டவா என்றும் காட்டினார்.
 
பேரண்டத்தில் இத்தகைய நிலைகள் வரும் பொழுது ஆதி சக்தி என்பது விஷம் அதனால் தாக்குண்டு வெப்பமாக உருவாகும் பொழுது ஆதி பராசக்தி… வெப்பத்தின் தணலால் தான் நகர்ந்து செல்லும் பொழுது ஈர்க்கும் காந்தமாக விளையும் நிலை ஆதிலட்சுமி…!
 
திருமூலர் காட்டிய இந்த நிலைகளை…
1.காரணப் பெயரும் காரணத்துடன் இயற்றப்பட்டதையும் நாம் உணர்ந்தால்
2.அந்த மகா ஞானி அமர்ந்த இந்த இடத்திலிருந்து அவருடைய ஆற்றல்களைப் பெற முடியும்.
 
தன் வாழ்க்கையில் அரசனாக இருக்கும் பொழுது ஆசையுடன் வாழ்ந்த நிலைகளை உணரப்படும் போது… எவ்வாறு அது இழக்கப்பட்டது…? என்றும் நாம் அந்த மெய்யை எதனால் இழந்தோம்…? அதை மீண்டும் எப்படிப் பெற வேண்டும்…? என்று தன்னில் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வைத் தான் அவன் அங்கே வெளிப்படுத்துகின்றான்..
 
மெய்ப்பொருளைக் கண்டறிந்த அந்தத் திருமூல மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் எடுத்தால் வாழ்க்கையில் வரும் தீமைகளை…” நீக்க முடியும்.
 
அதே சமயத்தில்
1.அந்த மகரிஷியின் உணர்வுகளை அனைவரும் பெற வேண்டும் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
3.சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது இந்த முறைப்படி தியானியுங்கள்.
4.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தவம் இருங்கள்.
 
ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.
 
வெறுமனே ஆண்டவனை அடையப் போகின்றேன் அவன் அருளைப் பெறப் போகின்றேன் என்று அவனையே எண்ணுவதற்குப் பெயர் தவமல்ல...!
 
ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருப்பது உயிர். ஆண்டவனாக இயக்கிக் கொண்டிருப்பதும் எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டிருப்பதும் உணர்வின் சக்தியை அணுவாக உடலாகச் சிவமாக மாற்றிக் கொண்டிருப்பதும் சிவத்திற்குள் சக்தியாக இயக்கிக் கொண்டிருப்பதும் உயிரே…”
 
இந்த உடலை ஆள்பவன் யார்…? ஆண்டவன் (உயிர்).
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ந்திடும் உணர்வை நாம் ஊட்டி
2.மகிழச் செய்யும் பொழுது அந்த ஆண்டவன் அருளை நாம் பெற முடியும்.
3.அதன் வழியில் அனைவரும் மகிழ வேண்டும் என்று நாம் எண்ணினால் அது தவம்.
4.அந்த மகிழ்ச்சி நமக்குள் போற்றும் நிலையாக வந்தால் அந்தத் தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம்.
 
ஆலயத்தில் இந்த முறைப்படி நீங்கள் செயல்படுத்துங்கள். ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம். காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவோம்.
 
நமக்குள் உள்ள அறியாது புகுந்த நஞ்சின் தன்மையை வளராது தடுப்போம் உலக மக்களைக் காப்போம்…!
 
1.அடுத்து வரும் சந்ததியினரின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அருள் ஞானிகள் உணர்வைப் போதிப்போம்.
2.அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்பிறந்த பின் உலகைக் காக்கும் ஞானிகளாக வளர்ப்போம்.
 
தை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். அதே போல நாம் பார்ப்பவருக்கெல்லாம்தைப் பெற வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு இதைச் செயலாக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கின்றேன்.