ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2025

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”


நம் இந்திய நாட்டிலே அரசர்கள் ஆட்சி செய்யும் பொழுது எத்தனையோ போர் முறைகள் ஏற்பட்டது. அதிலே மதப் போர்களும் இனப் போர்களும் நடந்தது.
1.அதனால் எண்ணிலடங்காத கொலைகளும் தகாத செயல்களும் நடந்தது.
2.இது எல்லாமே அந்தந்த இடங்களிலே பதிவாகியுள்ளது
3.எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டது எரிந்த உணர்வின் அலைகளும் ங்காங்கு திவாகி உள்ளது.
 
மெய் ஞானத்தால் அந்த அணுக்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் உயிரினங்களில் ஜீவணுக்களாக வளர்ந்து விடுகின்றது.
 
அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரானிக் என்ற முறைப்படி (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) ந்த அலைகளைக் கவர முடியும்.
1.விஞ்ஞான அறிவால் அதை எல்லாம் அறிய முடிந்தாலும் அதனால் அவர்களுக்குப் பயனில்லை.
2.காரணம் அத்தகைய நிலை வருவதற்கு முன்னாடிகண்டுபிடிக்கக் கூடியவர்கள் அழிந்து விடுவார்கள்.
 
விஞ்ஞான அறிவுகள் (எலக்ட்ரானிக்) அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது.
 
இதைப் போன்று தான்
1.நமது உயிரும் எலக்ட்ரானிக்காக இருந்து ஒவ்வொரு நிலைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.
2.கரண்டை உற்பத்தி செய்கிறது எடுத்துக் கொண்ட உணர்வுகளை அலைகளாக இயக்குகின்றது.
 
இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் காடு மேடேல்லாம் எம்மை அலைய வைத்தார்.
 
அக்காலங்களில் தவம் இருக்கச் சென்றவர்களும்
1.கஸ்தியன் எவ்வாறு எல்லாம் தாவர இன மூலிகைகளைத் தனக்குள் நுகர்ந்தறிந்தான்…? என்ற நிலையும்
2.அதே வழியில் போகர் எவ்வாறு எடுத்தார்…? என்ற நிலைகளையும்
3.அவர்களைப் பின்பற்றிக் காட்டுப் பகுதியில் அரசர்கள் சென்ற நிலைகளையும்
4.அது எல்லாம் எப்படி ரெக்கார்டு (பதிவு) ஆகி இருக்கின்றது…? என்பதைக் காட்டுகின்றார்.
5.அந்த அலைகளை எடுத்துத்தான் எனக்கு அதையெல்லாம் குருநாதர் உணர்த்துகின்றார்.
5.அதை எல்லாம் தெரிந்து தான் உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.
 
நான் தெரிந்த மாதிரி நீங்களும் தெரிய வேண்டும் என்றால் சிறிது நாளாகும். ஆனால் தெரிய முடியும்…!
1.தெரிந்தாலும் நமது வாழ்க்கைக்கு இதை விக்கி விட்டு
2.மெய் ஞானிகள் உணர்வைப் பெறுவதாகவும் அதை வளர்ப்பதாகவும் வர வேண்டும்.
 
தெரிந்து கொண்டேன் என்ற நிலையில் “ஆசை…” உடலின் இச்சைக்கு அதிகமாகி இதிலே சிக்கிவிட்டால் “நான் பெரிய மகான்…!” என்ற நிலையில் உடல் பற்றுக்கே அழைத்து விடும்.
 
சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!
 
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை நீங்கள் பெற்று வளர்த்துக் கொண்டால் அங்கே செல்லலாம். காரணம் இதையெல்லாம் கண்டுபிடிக்கலாம் என்று வந்து விட்டால் இந்த உலக ஆசைகள் வளர்ந்து விடும்.
 
அன்றைக்கு காந்திஜி அவர் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும் போது “முதலில் அவரை உள்ளே விடமாட்டேன்…” என்கின்றார்கள்
 
இந்தியாவைப் பற்றிப் பேசப் போகும்போது அரை வேஷ்டியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்…” என்று உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க முடியும்
 
ஆனால்காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார் அப்பொழுது அங்கே அவர் பேசும் பொழுது அவருக்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.
 
இருந்தாலும் அவர்கள் ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்…? ஒரு டெலஸ்கோப்பைக் கையில் கொடுத்தார்கள்
 
இது எனக்குத் தெரியாது. ஆனால்குருநாதர் இதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றார்.
 
மாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பிக் கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்துக் கடலுக்குள் பார்க்கிறார் காந்திஜி.
 
அப்பொழுது ஆழ் கடலில் உள்ளுக்குள் மீன்கள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. …! அந்த மீன் போகிறது பார். ஆகா இங்கே இந்த மீன் போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.
 
இப்படிச் சொன்னவுடனே காந்திஜி கூட வந்த தேசாய் காந்திஅபுல்கலாம் ஆசாத் இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே எனக்குக் கொடு உனக்குக் கொடு…” என்று வாங்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்
 
கடலுக்குள் இருக்கும் அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் வெடுக்…என்று அதை வாங்குவது - தான் பார்ப்பது என்று கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும் அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது
 
காந்திஜி ஒரு மகான்…! எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும்அப்பொழுது அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.
 
அப்பொழுது  அவர் என்ன செய்தார்…?
 
இப்படிப்பட்ட ஆசைகள் உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால்
1.நாம் மூன்று பேரும் நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.
2.”பகைமையாகி விலகி விடுவோம்…” என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
3.இது நமக்கு வேண்டாம்…! என்று இப்படிச் செய்கிறார்.
 
இது நடந்த நிகழ்ச்சி.
 
காங்கிரஸில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால் குருநாதர் இதைக் காண்பிக்கின்றார். அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.
 
குருநாதர் இதைத் தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால்
1.இயற்கையின் பேருண்மை நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.
2.நான் உனக்குக் காண்பித்த நிலைகளை மற்றவர்களுக்கும் நீ சொல்வாய்…
3.எல்லோரும் பார்க்க வேண்டும்…” என்று ஆசைப்படுவார்கள் என்று இதை எச்சரிக்கை செய்கிறார்
 
பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையில் “எல்லாம் தெரிய ஆரம்பித்தவுடன்…”
1.அவர்கள் அதிலேயே ஆசைப்பட்டு இந்தப் பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும்…” என்று எண்ணுவார்கள்.
2.வந்தவர்கள் அனைவரும் இந்தப் புவியின் பற்றின் உணர்வைப் பெருக்கி விட்டார்கள் என்றால்
3.அப்புறம் - நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு அவர்கள் போக மாட்டார்கள்.
 
நான் அதைப் பார்த்தேன்…! இதைப் பார்த்தேன்…! என்ற இந்த உணர்வு ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.
 
ஆகவே அதை விடுத்து விட்டு…
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால்உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்
1.இந்த உடல் பற்றை அகற்றி உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
2.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழ வேண்டும்
3.அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.
 
குருநாதர் இப்படித்தான் அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.

சிதம்பரத்தில் வைத்து… யாம் உபதேசித்ததன் நோக்கம்

சிதம்பரத்தில் வைத்து… யாம் உபதேசித்ததன் நோக்கம்


1.ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
2.எப்பொழுதுமே நம் நினைவைப் புருவ மத்திக்கே கொண்டு போய்ப் பழக வேண்டும்.
 
நம் உயிரே குருவாகவும் நாம் எண்ணியது ஈசனாகவும் அது உருவாக்கக்கூடிய நிலையை நாம் உணர முடியும். இந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது எதை எண்ணுகின்றோமோ…” உடலுக்குள் இந்த உணர்வுகள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.
 
சாதாரணமாக மூக்கின் வழி கூடித்தான் சுவாசிக்கின்றோம். கண்கள் பார்க்கின்றது மற்ற உணர்வுகளை எடுக்கின்றோம் ஆன்மாவாக மாறுகின்றது. மூக்கு வழி கூடிச் சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளைப் பின்னாடி அறிகின்றோம்.
 
நாம் ஓம் ஈஸ்வரா என்று அடிக்கடி சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணிப் புருவ மத்தி வழி கூடி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் வழி கூடித் தான் நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி மூக்கு வழி சுவாசிப்பதும் என்று அதை அறிந்து கொண்டாலும் கூட
1.தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
2.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.
 
நாம் எவ்வளவு நல்லதைப் பேசினாலும் கூட பிறிதொருவருடைய நிலைகள் குடும்பக் கஷ்டமோ அல்லது நோயோ அதனுடன் கலந்த சொல்லாக வெளி வரும்.
 
அவரைக் கண்ணுற்றுப் பார்த்துக் கவரும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசிக்க நேரும். எனக்கு இந்த மாதிரிக் கஷ்டமாக இருக்கின்றது என்று சொல்லும் பொழுது இந்த உணர்வு கலந்து விடுகின்றது.
 
இத்தகைய உணர்வுகள் வந்தாலும் கூட
1.ஈஸ்வரா…! என்று இடைமறித்து அதைப் பலவீனப்படுத்தி
2.மகரிஷியின் உணர்வுகளை உயிர் வழி கூடி எடுத்து வலுப்பெறும் போது அவரிடமிருந்து கேட்டறிந்த தீமையை மாற்றுகின்றது.
 
அவர் பலவீனமான நிலையில் வெளிப்படுத்தும் போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர் நலம் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுக்க வேண்டும்
 
ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் சமைத்து அதற்கப்புறம் அதை எடுத்துப் போட்டால் தான் ருசியாக இருக்கும்.
 
அதைப் போல மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது அடடாஉங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்ற நாம் எண்ணினால் அதைத்தான் சமைத்து அதையே தான் அவர்களுக்கு மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம்.
1.ஆகவே இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2.அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதைக் கலந்து தான் நாம் வெளிப்படுத்த வேண்டும்.
 
தியானத்தில் 27 நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் நவக் கோள்களின் சக்தி பெற வேண்டும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தி பெற வேண்டும் சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்று சொல்கின்றோம்.
 
ஏன்…?
 
அவைகளில் இருந்து விளைந்தது அந்தச் சக்திகளை எல்லாம் நாம் பெற்றவர்கள்.
 
27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் எல்லாவற்றிலும் உண்டு. அதில் எந்த நட்சத்திரத்தினுடைய சக்தி கூட்டல் கழித்தல் என்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளைத் தூண்டுவதும் எண்ணங்கள் இயக்குவதும் எல்லாமே அமைந்திருக்கின்றது.
 
1.எல்லாவற்றையும் நாம் ஐக்கியப்படுத்தி நமக்குள் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது பிரிவு இல்லை.
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.
 
ஆகநமது குருநாதர் காட்டிய வழியில் தியானத்தில் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
 
1.முதலில் அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
2.எல்லோருடைய எண்ணங்கள் நமக்குள் பிரதிபலித்து ஒன்றாகிறது…”
 
அடுத்துநவக்கோளின் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதனுடன் சப்தரிஷி மண்டலங்கள் மனிதனான அந்த உணர்வுகளை இதனுடன் கலக்கின்றோம். பார்வையால் எடுக்கின்றோம் எண்ணத்தால் எடுத்து இங்கே கொண்டு வருகின்றோம்.
 
நம் ஆன்மாவிலே அதைக் கலந்து கொண்டே வருகின்றோம். சப்தரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம். இது எல்லாமே கலக்கின்றது.
 
அவர்கள் உடலில் விளைந்ததும் கோள்தான் அவர்கள் எண்ணமும் நட்சத்திரம்தான்.
1.முதலிலே அவர்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெறும் தகுதி பெற்ற உணர்வுகள் உண்டு.
2.இதை எல்லாம் ஐக்கியப்படுத்தித் தான் அந்த உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்காக… 27 நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்வது.
 
குருநாதர் இதையெல்லாம் காண்பித்தார். அதைப் பதிவு செய்யும்போது அந்த எண்ணங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தியானிக்கும் போது இந்த எண்ண அலைகள் பரவும்.
 
அப்பொழுது ஐக்கிய உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.
 
இதற்கு முன்பும் இதைப் பற்றிச் சொல்லி இருக்கின்றேன். ஆனால் அர்த்தங்கள் உங்களுக்குச் சரியாக ஆகியிருக்காது. இப்பொழுது அதை விளக்கிக் கொடுக்கின்றேன்.
 
27 நட்சத்திரத்தின் நிலைகள் அது எது எதில் கலந்திருக்கின்றதோ செடியில் கலந்தாலும் அந்தச் சக்தி கலக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்குத் தக்கவாறு தாவர இனத்தை உருவாக்குகின்றது.
 
பூமியில் செடி கொடிகள் இருந்த இடத்திலிருந்து எப்படி அதனுடைய சக்திகளைப் பெறுகின்றதோ இதே போன்று நாம் சுவாசித்து உடலில் உருபெற்ற அணுக்கள் அந்தந்த இடத்திலிருந்து விளைகின்றது.
 
உதாரணமாக மலைப் பகுதியில் விளையும் செடிகள் கீழே தரையில் விளைவது இல்லை. அதே போல் தரையில் விளைவதை மலையில் வைத்தால் அங்கே அது விளைவது இல்லை.
 
இதைப் போன்று தான் நம் உடலில் அந்தந்தக் காலப் பருவம் அதனுடைய நிலைகள் வரப்படும் பொழுது அணுக்கள் விளைகின்றது. அது அது அதற்குத் தக்கவாறு சுவாசத்தை எடுத்து வளர்கின்றது. இருந்த இடத்திலிருந்தே அது பெறுகிறது.
1.இத்தனைக்கும் சாப்பாடு கொடுப்பது நமது உயிர் தான் உருவாக்குவதும் உயிர் தான்.
2.பிரபஞ்சத்தில் சூரியனும் இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு வித்தை உருவாக்குகின்றது.
 
விளைந்த பின் எதை எதை எடுத்து அது வித்தாக உருப்பெற்றதோ புவியின் ஈர்ப்பின் துணையை வைத்து அதற்குண்டான சத்தைக் கொடுத்து அதைச் செடியாக வளர்க்கின்றது. அது சந்தர்ப்பம்.
 
நாம் நல்ல குணங்களுடன் இருந்தாலும் பிறருடைய உணர்வுகளைக் கவர்ந்து அவர்களுக்கு உதவி செய்கின்றோம். அவர்கள் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு நம்முடைய எண்ணங்களுடன் கலந்து உயிரணுக்களாக மாறும் பொழுது புதுப் புது குணங்களாக உருவாகின்றது.
 
ஒருவரைப் பார்த்துஇவர் நேற்று நன்றாகப் பேசினார் இன்று மோசமாகப் பேசுகின்றார் என்போம். அதே போல் நேற்று மோசமாக இருந்தார் இன்று நன்றாகப் பேசுகிறார் என்று சொல்வோம்.
 
ஏனென்றால் அவர் அடிக்கடி யாரிடத்தில் அதிகமாகப் பழகுகின்றாரோ அந்த உணர்வின் இயக்கங்கள் அவருக்குள் வளர்ச்சி பெறுகின்றது. அத்தகைய அணுக்கள் வளரப்படும் போது அதற்குத் தக்கவாறு தான் அவருடைய மணங்கள் மாறிச் சொல்களும் வெளி வருகின்றது.
 
ஆரம்பத்தில் எல்லாவற்றையும் யாம் பொதுவாகச் சொல்லிக் கொண்டு வந்திருந்தாலும்
1.அதை எப்படி உங்களுக்குள் இணைத்துக் கொடுப்பது…? என்கிற வகையில் முதலிலே சொல்லவில்லை.
2.பொது இடத்திலே (PUBLIC) அதைப் பெற முடியாது அப்படிக் கொடுக்க முடியாது.
3.குருநாதர் உடலில் விளைந்த அந்த அருள் உணர்வுகள் எனக்குள் இருக்கிறது.
4.அதைப் பெற்று விளைவித்து உங்களிடம் திரும்பச் சொல்லும் போது உங்களுக்குள் அதை இணைத்துக் கொண்டு வர முடிகிறது.
5.அதற்குத் தான் இங்கே சிதம்பரத்திற்கு உங்களை எல்லாம் வரச் சொல்லித் தெளிவாக்குகிறோம்.
 
அப்பொழுது… குருவால் பெற்ற உணர்வுகள் எனக்குள் விளைவதும்… அடுத்து அது உங்களுக்குள்ளும் விளையத் தொடங்கும்.

October 12, 2025

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்


காசி கங்கைக் கரையின் எதிர்த் திசையில் இருக்கும் கரைக்கு குருநாதர் என்னைப் போகச் சொன்னார். அங்கிருக்கக்கூடிய அரண்மனைக்கு அருகில் தான் ஆதிசங்கரருக்கும் துவைதவாதிகளுக்கும் அத்வைதத்திற்கும் வாக்குவாதம் நடந்து.
 
ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து வயிற்று வலியை வரவழைத்தார்கள். யாக வேள்விகளை எல்லாம் செய்தால்தான் இந்த வயிற்று வலி போகும் நீ தைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
 
ஆதிசங்கரர் அதற்கு விளக்கம் கொடுத்து
1.மெய் ஞானிகள் காட்டிணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் உயிரான நெருப்பிலே இட்டு இந்த உணர்வினைப் பரப்பி
2.நீ ஏவல் செய்ததை என்னால் சுட முடியும் என்று அதை எடுத்துச் சேர்த்துத் தன் வயிற்று வலியை நீக்குகின்றார்.
 
ஏவல் செய்ததை நீக்கிய பின்பு தான் இவரை இப்படியே விட்டு விட்டால் மீண்டும் நமக்குத் தொல்லைகள் வரும் என்று எண்ணி… ஆதிசங்கரரை ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விடுகிறோம் என்று படகிலே அழைத்துச் செல்லும் பொழுது கங்கையிலே கவிழ்த்து அவரை நீர் சமாதி வைத்து விடுகின்றார்கள்.
 
அதிலிருந்து ஆதிசங்கரருடைய (சரித்திரம்) உண்மை நிலைகள் தெரியாது. போனார் வந்தார் என்று இருக்கும். சங்கரர் உடலை விட்டு எப்படிப் பிரிந்தார்…? என்று இருக்காது.
 
இந்த உண்மையைச் சொல்லி அவர் எடுத்துக் கொண்ட ஆற்றலை எனக்கு உணர்த்துகிறார் குருநாதர்.
 
சாங்கிய சாஸ்திரத்திலே மூழ்கிய நிலைகள் கொண்டு துவைதத்தின் படி உருவத்தைக் காட்டிச் சாங்கியம் செய்து கடவுளிடம் வரம் கேட்பதும் அத்வைதப்படி உண்மையின் உணர்வின் சக்தியை நினைவில் கொண்டு கவர்ந்து தனக்குள் அந்த உணர்வின் தன்மை உறையச் செய்வதும் உணர்வின் நினைவாற்றல் நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்ற அந்த வாக்குவாதத்தன்மை அங்கே நடந்ததைக் குருநாதர் உணர்த்துகின்றார்.
 
அத்வைதம் துவைதம் என்று சொல்கிற பொழுது
1.சூட்சம நிலைகளில் நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை உடலாக்குகின்றது.
2.அந்த உணர்வின் அணுவாக இயக்கப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.தனக்குள் இந்த உணர்வின் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு இந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்று…!
 
ஆனால் ஆதிசங்கரருக்கு ஏன் கடைசியில் அந்தக் கதி…? என்று வரும் பொழுது
1.அவருக்கு உடல் பற்று இல்லை விண்ணின் பற்றைத் தன் குருவான கோலமாமகரிஷியின் உணர்வுகளைப் பெற்றவர்.
2.அவரோ கோள்களின் தன்மைகளை அறிந்தவர்.
3.தைணர்ந்த நிலையில் தனக்குள் விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணியர்.
4.இந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கியவர்.
5.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையை உணர்ந்தவர்.
6.விண்வெளியின் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைப் பற்றுடன் பற்றியவர் என்று
7.அந்த இடத்திலே வைத்து குருநாதர் எனக்கு இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றார்கள்.
 
கோலமாமகரிஷி… தான் வாழ்ந்த காலத்தில் அவர் பெற முடியாத இந்தச் சக்தியை ஆதிசங்கர் உடலுக்குள் புகுந்து அத்வைதத்தின் தத்துவத்தைப் பரப்பியவர். அதன் வழி தனக்குள் விண்ண்ணின் ஆற்றலைப் பெருக்கியவர். அதன் துணை கொண்டு ஆதிசங்கரருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்தவர்.
 
ஆதிசங்கர் என்ன செய்தார்…? கோலமாமகரிஷி என்ன செய்தார்…? என்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். இந்த உண்மைகளை எல்லாம் அங்கே குரு உணர்த்துகின்றார்.
 
அவர் உடலைப் பற்றவில்லை. அந்த அருள் ஞான உணர்வை எடுத்து ஏவலால் உண்டான வயிற்று வலியை நீக்குகின்றார். பின் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் செல்கிறார்.
1.அவர்கள் இருவருமே சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆதிசங்கரருடைய அருள் உணர்வுகளை நாமும் பெற முடியும்.
3.அவர் கண்ட மெய் ஒளியையும் நாம் பெற முடியும்.
 
தாய் வழியில் தான் அவருக்கு அந்தச் சக்தி கிடைத்தது. கங்கைக் கரையில் வைத்து குருநாதர் இதை எல்லாம் எனக்கு உணர்த்துகின்றார்.

October 11, 2025

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்


1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது…
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும்…! என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.
 
அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த வலிமையான உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சி அடைகின்றது…
 
ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்
1.தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்... தீமை செய்வோரையே எண்ணி...
2.அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.
 
அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.
 
ஏனென்றால்...
1.நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது...
2.அணுவாக உருவாக்குகின்றது உணர்வின் சத்தைத் தனக்குள் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.
 
ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை... மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது.
 
அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா...!
 
1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும்…? இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்...!
2.அது போல் தான் தியானம் இருந்தோம்... ஆத்ம சுத்தியும் செய்தோம்...
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்...? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.
 
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
 
நாம் எண்ணியதை உயிர் அணுக்களாக மாற்றும் பொழுது
1.அதைக் காக்கும் காவல்காரனாக இருப்பதும் உயிரே
2.அந்த உணர்வுக்கு உணவு கொடுப்பதும் உயிரே
3.அந்த உணர்வை இயக்கிக் கொண்டிருப்பதும் உயிர்தான்…!
 
ஆறாவது அறிவு கொண்டவர்கள் நாம் இதைத் தெரிந்து கொள்கின்றோம். அந்த மெய்ஞானிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது அதையும் காப்பது ஆண்டவனாக இருப்பதும் உயிர் தான்.
 
ஆகவே…
1.எண்ணியதை இறையாக்கி இறைவனாக இருப்பதும் உயிரே.
2.இறையின் உணர்வே செயலாக்கும் பொழுது தெய்வமாக ஆக்கிக் கொண்டிருப்பதும் உயிரே.
3.ஆண்டவனாக இருப்பதும் ஈசனாக இருப்பதும் உயிரே.
 
இதனால் தான்
1.முதலிலேயே உயிரே கடவுள் என்பதைச் சுருக்கமாகக் காட்டி உணர்வின் செயலாக்கங்களை
2.உயிரே கடவுள்…! என்ற நிலைகளைக் குருநாதர் எம்மிடம் சொல்லி வந்தது.
 
உயிர் கடவுளாக இருக்கின்றான் ஆண்டவனாக இருக்கின்றான் எண்ணியதை இறையாக்குகின்றான் இறையின் உணர்வைச் செயலாக்கும் பொழுது தெய்வமாக இருக்கின்றான்.
 
உறையும் உணர்வின் தன்மையைச் சிவமாக உடலாக்குகின்றான். எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை வினையாக்கி
1.வினைக்கு நாயகனாக இயக்கிக் கொண்டிருக்கின்றான்அது தான் விநாயகா…!
2.இவ்வளவு பெரிய பேருண்மையை நமது குருநாதர் அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வை நேரடி அனுபவத்தில் எனக்குக் கொடுத்துக் காட்டினார்.
 
ஆனால் இதை எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன்… அதைப் பெற்றேன்.
 
நம் குருநாதர் அவர் உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரம் பெற்றார். இருந்தாலும் அவர் உடலில் விளைந்த உணர்வலைகள் எப்படி இருக்கின்றது…? அவர் எதை எதை எல்லாம் தன் உடலில் விளைவித்தாரோ இந்த உணர்வலைகள் அனைத்துமே இங்கே உண்டு.
 
ஏனென்றால்… சில பேருக்குக் காட்சிகள் கிடைத்த உடனே குருநாதர் எனக்கு வந்து சொல்கின்றார்…” என்று சொல்வார்கள். உனக்கு இதையெல்லாம் செய்கின்றேன் எனக்கு இதைக் கொடு…! என்று சிலர் கேட்கின்றார்கள்.
 
அந்த ஆசையால் நுகர முடிகிறது. அவர் உருவத்தைக் காண முடிகிறது. அவர் பைத்தியக்காரராக எப்படிச் செயல்பட்டாரோ இந்த உணர்வுகளை எல்லாம் அது இயக்கும். அதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்
 
அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்று சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்.
1.அதாவது… உடலிலே உணர்வை ஒளியாக மாற்றி உணர்வின் அறிவாக மாற்றிய அலைகளும் உண்டு.
2.நாம் தைத் தான் பிரித்து எடுக்க வேண்டும்…?

October 10, 2025

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்


உங்கள் எல்லோருக்கும் சக்தி கொடுத்திருக்கின்றேன். ஓரளவுக்கு அதை எல்லாம் செய்து வந்தாலும்… வீட்டிலேயோ நண்பர்கள் மத்தியிலோ தொழில் செய்யும் இடத்திலோ சிறிதளவு சோர்வு வந்தால் இதை விட்டு விடுகின்றீர்கள்.
 
அப்புறம் என்ன செய்கின்றீர்கள்…?
 
1.சோர்வான அணுக்களாக விளைந்த பின் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு ஆன்மாவிலே அதிகமான பின்
2.மகரிஷிகள் அருள் சக்திகளை எடுப்பதை இது தடைப்படுத்துகின்றது.
 
அதனால்தான் அடிக்கடி ஆத்ம சக்தி செய்ய வேண்டும் என்று சொல்லித் துரிதமாக உங்களுக்கு அதற்குப் பயிற்சி கொடுப்பது.
 
1.வாழ்க்கையில் எது வந்தாலும் அல்லது எதைக் கேட்டாலும்
2.ஒரு நிமிடம் ஆத்ம சுத்தி செய்வதற்குண்டான நேரத்தை ஒதுக்குங்கள்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது டர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
கையிலே மண்ணை எடுத்து வேலை செய்கின்றோம். ஆனால் அடுத்து உணவு உட்கொள்ளச் செல்கிறோம் என்றால் கை கழுவாமல் செல்வோமா…?
 
அல்லது கையிலே அழுக்குப் பட்டு விட்டது. ஒரு நோட்டில் எழுத வேண்டி இருக்கின்றது என்றால் கையைக் கழுவாமல் நோட்டில் எழுதுவோமா…? தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தினாலும் கையைத் துணியில் துடைத்து விட்டுத் தானே எழுதுகின்றோம். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஆகிறதல்லவா…!
 
அந்த மாதிரி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின்ருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெற்ற பின் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய நிலைகளைப் பார்த்தாலும் கூட… கேட்டு நுகர்ந்தாலும் கூட
1.அதற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து
2.அந்தத் தீமையின் உணர்வுகளை அடக்கும் உணர்வோடு நமக்குள் கலக்க வேண்டும். கலந்தால் தான் அதைத் தடைப்படுத்த முடியும்.
 
ஏனென்றால்… எப்படித்தான் இருந்தாலும் வாழ்க்கையில் பிறிதொரு தீமையை நீங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா.
 
நானே இருக்கின்றேன் எல்லோருக்கும் நல்லதைச் செய்கிறேன். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் எனக்கு உடல் முடியவில்லை என்றால் சாமிக்கு என்ன ஆனது…?” என்று தான் மிகவும் ஆர்வமாகக் கேட்பீர்கள்.
 
எனக்குள் விளைந்தது பல நிலைகள் அந்த வேதனை. என் மீது உள்ள பாசத்தில் எடுக்கப்படும் பொழுது வேதனையைத்தான் நுகர்வீர்கள். வேதனை நீங்க வேண்டும் ன்ற எண்ணம் வராது.
 
சாமி சொன்ன வாக்கு உங்களுக்கு நல்லதாகின்றது ஆனால் சாமிக்குள் பல நிலைகள் சந்தர்ப்பத்திலே அது முந்தைய நிலைகள் விளைந்து வந்தாலும் இந்த உடலின் கடைசி முடிவு அது தான்.
1.அந்தக் கடைசி முடிவு வரப்படும் பொழுது பாசத்தால் வேதனையை நுகர்ந்து விடக்கூடாது.
2.நுகர்ந்தால் அடுத்த கணமே மகரிஷிகளின்ருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து…
3.சாமிக்கும் அந்த மகரிஷியின் அருள் உணர்வு வளர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார். நாம் எப்படி அவருக்குச் சொல்வது…? என்று எண்ணக்கூடாது.
 
தபோவனத்தில் இப்பொழுது தைலம் காய்ச்சிக் கொடுக்கின்றோம். ஆரம்பத்தில் எல்லாம் நான் என்ன செய்வேன்…?
 
உடலில் குறைபாடுகளைச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தால் அந்தத் தைல பாட்டிலை அவருக்குக் கொடுப்பேன். அதற்குள் குருநாதர் இருப்பார்.
 
பாட்டிலில் யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்பேன். குருநாதர் இருக்கின்றார் என்பார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்…? காளி வந்திருக்கின்றார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்கள்…? முருகன் வந்திருக்கின்றார்.
 
1.போ…! ன்னிடம் இருக்கும் கெட்டது எல்லாம் காளி மாய்த்து விடும்
2.குரு அருளால் எல்லாம் நல்லதாகிவிடும் என்று சொல்லிக் கொடுப்பேன்.
3.முந்தி அனைவருக்கும் இப்படித்தான் கொடுத்தேன். வாங்கிச் செல்வார்கள் எல்லாம் நன்றாகிவிடும்.
 
வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கோ இரத்தக் கட்டுகளுக்கோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் இதைக் கொடுத்து யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்று காண்பிப்பேன். பாட்டிலில் எல்லாமே தெரியும்.
 
இப்பொழுதும் அப்படிக் காண்பிக்க முடியும். ஆனால் அந்த ஆசையைத் தூண்டி விட்டால் எல்லாம் போய்விடும். உங்கள் எண்ணம் எல்லாம் உடல் பற்றுக்கு வந்துவிடும்…”
 
கையினால் இப்பொழுது அதை எல்லாம் சுத்தமாக நிறுத்தி விட்டேன்.
 
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
3.இந்த உணர்வை மட்டும் எடுத்து நீங்கள் ஆத்ம சக்தி செய்து கொண்டே வந்தால் போதுமானது. எல்லாம் நன்றாகும்.

October 9, 2025

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்


எனக்குக் காட்சி கொடுத்தார் வந்தார் நல்லதானது…! என்று சொல்வார்கள். காட்சி கொடுத்தார் நல்லதாகும் என்ற நிலை அது சில நாளைக்குத் தான் இருக்கும். மீண்டும் காட்சி கொடுத்தார் என்று நிறையப் பேர் சொல்லலாம்.
 
நானும் ஆரம்பத்தில் இவ்வாறு தான் நிறையக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
1.இவைகள் எல்லாம் கூடாது…! என்று நிறுத்தி விட்டேன்
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர இந்த உடலில் விளைந்த உணர்வை நீங்கள் தேடாதீர்கள் நாடாதீர்கள்…!
 
நமது குருநாதர் காட்டிய வழிகளை எடுத்து இங்கே வளர வேண்டுமே தவிர இந்த உடல் என்றுமே மடிவது என்று அறிதல் வேண்டும்.
 
இந்த உடலில் மெய் ஞானியின் உணர்வைப் பெற்றதை வலுப்படுத்தி அதை எடுக்கத் தொடர வேண்டுமே தவிர… “இவர் தான்…” என்ற நிலைகளுக்கு இந்த உடலின் உணர்வை எடுக்கக் கூடாது. இந்த உடலில் வரக்கூடியது அனைத்துமே வரும்புவியின் ஆசைதான் வரும்.
 
உருவங்களைக் காட்சியாகக் கொடுத்தாலும்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்
2.அந்த ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்று அந்த மெய் ஒளியுடன் இணைத்து அந்த வலுவைப் பெற வேண்டுமே தவிர
3.சாமி வந்தார் எனக்குக் காட்சி கொடுத்தார்…!
4.எனக்கு உடல் நலமானது அது நல்லதானது இது நல்லதானது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும்.
 
அதைத்தான் யாம் வன்மையாகக் கண்டிப்பது. அந்த நிலையில் இருந்து நாம் மாறுபட வேண்டும். அந்த மெய் ஒளியை நாம் பெற வேண்டும். நம்முடைய பார்வையால் மற்றவர்கள் தீமைகள் நீங்க வேண்டும்.
 
சாமி செய்தார்…! என்பதற்குப் பதில்
1.சாமி பார்வை பிறருக்குப் பட்டு மற்றவருடைய தீமைகள் எப்படி அகன்றதோ…?
2.அதே உணர்வு உங்களால் நீங்கள் அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக பெற வேண்டும்.
3.அதைப் பெற்றால் தான் சாமி சக்தி பெற்றதாக அர்த்தம்…!
4.இல்லை என்றால் அதில் அர்த்தமே இல்லை. அந்த வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
 
ஏனென்றால் அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமைகளை அது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் அவருக்குள் நுழையப்படும் பொழுது அவருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.
 
நமது வாழ்க்கையில் பிறர்படும் துயரத்தைக் கேட்கும் பொழுது நமக்குள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதைத்தான் நாம் உருவாக்குகின்றோம்.
 
ஆனால் எதை உருவாக்க வேண்டும்…?
 
பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகள் நாம் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வுகள் நம் பார்வையால் அங்கே வித்தாகப் பதிய வேண்டும்.
 
யாராவது தீமைகளைச் செய்தார்கள் என்றால் அதை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே… ஈஸ்வரா என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.
1.என் பார்வை அவரைத் தீமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.
2.அவர்களும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் படைத்து அங்கே அனுப்ப வேண்டும்.
3.நமக்குள் அது வராதபடி அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்க்க வேண்டும்.
 
அந்தந்த நிமிடத்தில் எந்தத் தீமை வந்தாலும் அது வேலை செய்யாது. இந்த உணர்வை நம் பார்வையால் அங்கே செலுத்தும் பொழுது
1.நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றோம்.
 
இந்த இரு நிலையும் வேண்டும்.
 
துப்பாக்கியை எடுத்து அதிலே மருந்தினைக் கெட்டிக்கப்படும் பொழுது எங்கேயாவது உராய்ந்து விட்டால் வெடித்து விடும். அப்போது யார் அதைச் செய்கின்றாரோ அவரை அல்லவா அது காலி செய்து விடும்.
 
அப்பொழுது அதைப் பாதுகாப்பாகச் செயல்படுத்திக் குறி வைத்துத் தாக்கும் போது அங்கே வெடிக்கும் நிலை கொண்டாருகின்றார்கள்.
 
அதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.நம்முடைய எண்ணப் பார்வையில் அவருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்.
2.அவர்களைக் காக்கும் உணர்வு தான் நமக்குள் விளைய வேண்டும்.
 
நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் விளைந்தால் அவர்களைக் காக்கும் உணர்வு நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வு நமக்குள் வளரும்.
 
ஒவ்வொரு நொடியிலும் இதை நாம் செய்தாக வேண்டும்…!
 
கடலில் போகிறோம் என்றால் எத்தனையோ அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. நாம் எந்தத் தீவுக்குப் போக வேண்டுமா அதை எல்லையாக வைக்கின்றோம்.
 
இடைப்பட்ட அலைகள் அனைத்தையும் விலக்குகின்றோம். பெரிய அலை சிறிய அலை இதையெல்லாம் விலக்கிச் சென்று தான் அந்த எல்லையை அடைகின்றோம்.
 
இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நமது எல்லை எது…?
 
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான எல்லை தான்முடிவான நிலைகள் பேரானந்தப் பெரு நிலையான எல்லை.
2.அதை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.
 
வாழ்க்கையிலே பாச அலை வருகின்றது வெறுப்பு அலை வந்து மோதுகிறதுகோப அலைகள் வருகிறதுபகைமை அலைகள் வந்து தாக்குகிறது. இப்படி எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது.
 
இந்த மோதலில் பாசத்தினால் நாளைக்கு என் பையன் என்ன செய்யப் போகிறான்…? என்ற இந்த உணர்வு வந்தால் இந்த அலையிலேயே மூழ்கி விடுகின்றோம்.
 
பையனின் நினைவாற்றலே வருகின்றது. அவனுக்குள் சென்று விடுகின்றோம்.
 
ஒருவன் மீது வெறுப்படைந்து எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான் அவனை அப்படியே விடலாமா…? என்று எண்ணினால் நாம் போக வேண்டிய எல்லையை மறந்து விடுகின்றோம்.
 
இப்படியே இடைஞ்சல் செய்கின்றான் என்று அவனுடைய எண்ணத்திலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
1.அவனைத் திருத்தும் நிலைகளுக்கு நாம் அங்கே சென்றுவிட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்
2.அவனுடைய உணர்வு வளர்ந்த பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்கிறோம்.
 
வாழ்க்கையில் பல விதமான அலைகளில் சிக்குண்டு மீள முடியாத நிலை வருகிறது. ஆகவே அந்த அலைகள் வரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுத்து அந்த அலைகளைப் பிளக்க வேண்டும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும். அவன் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும்.. அவன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது அவன் பாச அலையைப் பிளக்கிறது.
1.இந்தப் பாசம் அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
2.உயர்ந்த எண்ணம் கொண்டு கண்ணிலே நாம் பார்க்கும் போது அவனை ஒழுக்கமாக்குகிறது.
 
இதைப் போல் பலர் பகைமை கொண்டு பேசுவார்கள். நாம் நல்லதைச் செய்தாலும் இன்னொரு கெடுதல் செய்த ஆவி அந்த உடலுக்குள் இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது. நம்மைக் கண்டாலே எதிரியாகக் கருதி இல்லாததை எல்லாம் சொல்வார்கள்.
 
தியானம் செய்கிறீர்கள்…! என்றாலே என்னை ஏதோ செய்கிறான்…!” என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் ஒன்றுமே சொல்லவில்லைஎன்னை இப்படிச் சொல்கிறான்…! என்று நீங்கள் நினைப்பீர்கள்.
 
ஒரு உடலுக்குள் ஆவி இருக்கப்படும் போது அது செயல்பட்டால்
1.நான் எதுவுமே சொல்லாதபடி என்னைக் குறையாகச் சொல்கிறான் பாவிப்பயல்…” என்ற இந்த அலையில் சிக்கிவிடுகிறோம்.
2.அந்த அலைகளிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.அவனுக்குள் இருக்கும் ஆவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அங்கிருந்தே நன்மை செய்யும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
இதிலே நமக்குத் துணிவு வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்பது.
 
சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா. அந்த இடத்தில் துணிவு இருந்தால் தான் செய்ய முடியும்.
 
குருநாதர் கொடுத்த நிலைகளில் ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்.
1.நன்மை செய்ய வேண்டும்
2.நன்மைகள் வளர வேண்டும் என்றால் அதற்குத் துணிவு வேண்டும்…”
 
நன்மைகள் செய்யப் போகும் நிலையில் அவருக்கு (உடலில் ஆவி உள்ளவருக்கு) உதவி செய்ய வேண்டும் என்று செல்லும் பொழுது ஐய்யய்யோ…! பாவிப் பயல் எனக்கு ஏதோ செய்கின்றான் மருந்து வைக்கின்றான் விஷம் வைக்கின்றான்…! என்று சொல்வார்கள் பார்க்கலாம்.
 
அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அவர் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவருக்குள் இருந்தே நன்மைகள் செய்யும் நிலை வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
 
ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து செயல்பட வேண்டும்.
 
நல்லது செய்கின்றோம்ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலிலே இன்னொரு ஆன்மா இருக்கும்.
 
ஆன்மா இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நம்மைக் கண்டவுடனே வெறுப்பாக இருக்கும். உடலிலே எரிச்சல் ஆகும்.
 
சிலருடைய வீடுகளுக்குள் சென்றால் அந்த எதிர்ப்பு நிலைகள் வரும். நம்முடைய மணம் பட்ட உடனே அங்கே எதிரியாக மாறுகின்றது.
1.அதற்குக் காரணம் அந்த மனிதன் அல்ல.
2.அந்த மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு இதைக் கண்ட பின் எரிச்சல் ஆகிறது.
 
நாம் இவ்வளவு தியானம் செய்கின்றோம் நம்மை ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள்…? என்று நினைக்கின்றோம்.
 
அந்த இடத்தில் தான் நமக்குத் துணிவு வேண்டும் என்று சொல்வது.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வினை அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
 
ஏனென்றால்
1.அவர் செயலைப் பார்த்த பின் இது வளர்ந்து விடுகின்றது.
2.ஆன்மாவிலே அது முன்னாடி அதிகமாகப் பெருகி விடும்.
3.இது பெருகி விட்டால் இதைச் சுவாசித்து அந்த உணர்வு இயக்க ஆரம்பித்து விடும்.
 
உயிரிலே பட்டவுடன் அதை வெளிப்படுத்துவது இந்த உயிர் தான். அது போன்ற நிலைகள் வந்தாலும் இடைமறித்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று இங்கே கொண்டு வர வேண்டும்.
 
எங்கே…?
 
1.நம் கண்ணின் நினைவைப் பல முறை உயிருடன் ஒன்றச் செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வராஎன்று இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
உடலில் இருக்கக்கூடிய ஆன்மாவிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைத்து அவர்களுக்கு அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும். இந்த இடத்திலே இதைச் செய்ய துணிவு ஜாஸ்தி வேண்டி இருக்கின்றது.
 
ஆனால் நாம் என்ன நினைப்போம்…? சாதாரணமாக நாம் ஒன்றுமே செய்யவில்லை…! ஆனால் நம்மை கண்டாலே அவர்களுக்கு எப்படித் தான் இருக்குமோ…? ஏன்னை இந்த மாதிரி எல்லாம் சொல்கின்றார்களே…!
 
ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாமலே அது இயக்கும்.
 
இந்தத் தியான வழியில் நாம் செல்லும் பொழுது இதையெல்லாம் தெரிந்து கொண்டால் தான் அவ்வப்போது கொடுத்த இந்தச் சக்திகளை வலுப்பெறச் பயன்ன்படுத்த முடியும்.
 
1.நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் இருக்கிறதுஅதனால் உருவான அணுக்களும் இருக்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்களுக்கு ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து விட வேண்டும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் செலுத்தினோம் என்றால் அதைத் தடைப்படுத்திவிடும். வளர்ந்த பின் இதை நீக்கிவிடும். அதற்குச் சத்து கிடைக்காதபடி மகரிஷிகள் உணர்வு வலுப்பெற்ற பின் தீமைகளைக் குறைக்கும்.
 
உங்கள் அனுபவத்தில் நன்றாக இதைத் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்.
 
1.முதலில் சிரமமாகத் தெரியும் சிறிது நாள் சென்றால் அதை நீக்கிவிடும்.
2.இப்படி நாம் வளர்க்க வளர்க்க நம்முடைய பார்வையே பிறருடைய தீமைகளை நீக்கும் சக்தியாக வரும்.