ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2025

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்


சில உடல்களில் சில ஆன்மாக்கள் இருக்கும் எதிர் நிலையாக அது இயங்கும். தியானத்தில் அமர்ந்தால் செய்ய விடாது. இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அந்த ஆன்மாக்களுக்கு இணைக்கப்படும் பொழுது நன்மை செய்யும் சக்தியாக மாறும்.
 
ஆனால்
1.அப்படியே விட்டுவிட்டால் குடும்பப் பற்றை இழக்கச் செய்து விடும்… பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.
2.குடும்பப் பற்றை இழந்த ஆன்மாக்கள் தான் இன்னொரு உடலுக்குள் வந்தால் அதே உணர்வை இயக்கும்.
 
எந்த உடலிலிருந்து இயக்கியதோ அவர்களைக் குற்றவாளியாக ஆக்கிடாது குற்றத்திலிருந்து மாற்றிட அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தொடர்ந்து எடுக்க எடுக்க அந்த ஆன்மாக்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்க ந்தத் தீமைகளிலிருந்து நாம் விடுபடலாம்.
 
அந்த ஒரு பக்குவத்திற்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
 
அருள் வாழ்க்கை வாழ்வீர்கள். அனைவரையும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தி உங்களிடம் பெருகும். உங்கள் பார்வையால் அனைவரும் நலம் பெறுவார்கள்.
1.அனைவரும் ஆனந்தப்படும் அந்த நிலையை நீங்களும் கண்டு உங்கள் உடலில் ஆனந்தம் என்ற பேரானந்த நிலையைப் பெறுங்கள்.
2.பல நிலையில் ஆனந்தப்படும் பொழுது பேரானந்தம் வருகின்றது.
3.ஒருவர் என்ற நிலையில் ஆனந்தம் வருகின்றதுஅவர் சொன்னார் இவர் சொன்னார் என்றால் பேரானந்தமாகின்றது
4.உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெற வேண்டும்
5.அதை கண்டு நீங்கள் பேரானந்தப்படும் நிலைக்கு வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
 
நோயாக இருக்கிறது என்று என்னிடம் கேட்காதீர்கள். என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் அந்த அருள் வேண்டும் தொழில்கள் வம் பெற வேண்டும் எங்களுக்கு வரவேண்டிய பாக்கி வர வேண்டும் அதற்கு அந்த அருள் வேண்டும் என்று இப்படிக் கேட்டுப் பாருங்கள்.
 
இந்த உயர்ந்த நிலைகள் வர வர தன்னாலே அந்தப்ணங்கள் வந்து சேரும். பார்க்கலாம். உங்கள் எண்ணம் அவர்களை உயர்த்தும்… வருவாயை உயர்த்தும். பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஊட்டும்.
 
சிறிது கால தாமதமாகும்.
 
ஆனால் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டோம் என்றால் வருவதையும் தடுத்து நிறுத்திவிடும். ங்கடப்பட்டால் அவர்களுக்கும் அதே நிலையினை இயக்கி விடும். அவர்களுக்கும் வருமானம் வராது நமக்கும் வராது.
 
ஏனென்றால் கொடுக்க முடியவில்லை என்று எண்ணும் போது அங்கே சங்கடம்
 
தைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு வரவு வரும் நமக்கு கொடுப்பார்கள் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
ஒவ்வொரு நொடியிலும் பிறருடைய குறைகளை எண்ணாது அவர்கள் நிறைவு பெறுவர் நமக்கு வருமானம் வரும் என்று
1.நிறைவான உணர்வை எடுத்தால் நிறைவான உணர்வாக வழி அமைக்கின்றது.
2.நம் சொல்லைக் கேட்போர் நிலைகள் நிறைவான மனங்களாக வருகின்றது.
3.வாழ்க்கையில் மகிழும் உணர்வுகளே அங்கே இயக்கத் தொடங்குகிறது.
 
ஆகவே அருள் வாழ்க்கை வாழ்வோம். பேரானந்தம் பெற்று ஏகாந்த நிலை என்று ஏகாதசி என்ற பத்தாவது நிலைகளை நாம் அடைவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான் சிஷ்யன்”

ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான் சிஷ்யன்”


மனிதனின் நெற்றியும்... நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்... சிருஷ்டியையே... சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு "அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்...!"
 
"மகரிஷிகளின் சர்வோதய சக்தி" வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்... தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது... உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் "கர்ம தியாகம்" என்ற சூட்சமம் உள்ளது.
 
சூரியனை எண்ணி ஈர்த்திடும்... "ஓர் ஜெப மந்திரம் - கர்ண முறை வழி" என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.
3.இருந்தாலும் "இதை வெளியில் உரைத்திடாதே...!" என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.
 
ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை "உலகறிய உரைத்தான்..."
 
ஆசான் கனன்று எழுந்து... அடா... என்ன காரியம் செய்தாய்...! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே... ஏன்...? என்று கேட்கின்றார்.
 
சீடனோ... "கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்" என உரைத்த ஆசானே...!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்...
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் "ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்..." என்ற எண்ணத்தை
3.இதோ...! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் "கர்ம தியாகம்" உள்ளன்புடன் உவந்த எனக்கு "என் நிலை செய்வதாகிலும் ஆகுக...! என்றே உரைத்திட்டான்.
 
அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.
 
அதே சமயத்தில்... மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே...!
 
நுணுகி ஆய்வு செய்திடும் சிந்தனையின் வளர்ச்சி... பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு "மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்..."
 
நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் "கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே...!" என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்... வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்... பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.
 
1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.

February 27, 2025

பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்

பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்


அகஸ்தியன் தன் வாழ்நாளில் தாய் கருவிலே வளரும் பொழுதே நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பெற்று பிறந்து வளரும் பொழுது அதே ஆற்றலை வளர்த்து அவன் வாழ்நாளில் அனைத்து அறிவினையும் அறிந்திடும் உணர்வு பெற்றவன்.
 
1.கஸ்தியன் அவனது வாழ்க்கையில் சர்வ ஞானமும் பெற்று
2.அதன் வழி கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் துருவனாகி துருவ மகரிஷியான அந்த உணர்வுகள் அனைத்தும் எதை உற்று நோக்கியதோ
3.அந்த உணர்வின் துணை கொண்டு அங்கே நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்த்தும் வளர்ந்து கொண்டுள்ளான்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் உணர்வுகளை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
 
நாம் நமது வாழ்க்கையில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த உணர்வுகள் நம் உடலில் கலந்து இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உடலுக்குள் செலுத்தி அந்த நஞ்சான உணர்வை மாற்றி
2.அனைத்தையும் அறிந்திடும் அறிவென்ற உணர்வினை நமக்குள் வளர்த்து
3.இந்த வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வந்தாலும் அதனைச் சமப்படுத்தி
4.நமது உடலில் ஒளி உணர்வைக் கூட்டும் சக்தி பெறச் செய்யும் நிலையே நாம் எடுக்கும் தியானம்.
 
27 நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் சக்திகள்… ஒரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறையாக மோதும் பொழுது தான் மின்னல்கள் வருகின்றது.
 
இந்த மின்னல் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த மின் அலைகள் வெகு தூரம் பரவுகின்றது.
1.ப்படி வரக்கூடிய உணர்வுகளை அகஸ்தியன் நுகர்ந்தறிந்து தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஒளிமயமாக ஆக்கிக் கொண்டான்.
2.அதன் வழி தான் விண்ணுலகை உற்று நோக்கி உணர்வை ஒளியாக மாற்றி
3.துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது.
 
ந்த உணர்வை நமக்குள் பெற்றால் இந்த 27 நட்சத்திரங்களும் எதிர்நிலை கொண்டு அது மின்னலாக மாறும்பொழுது ஒளிக் கற்றைகள் பரவுவதை
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் இருப்பதனால்
2.அதை எளிதில் நம் உடலுக்குள் கலந்து எல்லா அணுக்களுக்கும் அதைக் கொடுக்க முடிகின்றது.
 
உதாரணமாக... வேதனைப்பட்ட ஒரு மனிதனின் உணர்வை நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் அவன் நினைவு வரும் பொழுதெல்லாம் அதே வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
 
இதைப் போன்று 27 நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பல உணர்வுகளை இயக்கக்கூடிய சக்தி பெற்றது. 27 நட்சத்திரங்களின் இணை சேர்த்த உணர்வு கொண்டுதான் ஒவ்வொரு உயிரும் அந்த உணர்வினை அணுக்களுக்குள் சேர்த்தது தான் அணுத் துகள்களும்.
 
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு நமது வாழ்நாளில் அதைத் தியானித்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த வலுவை நமக்குள் பெற்ற பின்
1.உடலை விட்டுச் சென்றால் அங்கே அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் நமது உயிரான்மா நிலைகொள்ளும்.
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விட்டு என்றும் நிலையான சரீரமாக முழுமை பெறும்.
 
இந்தச் சூரிய குடும்பமே சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் அனைத்தும் என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு வேகா நிலை அடைந்தது.
 
1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றி அகண்ட பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உணர்வின் சக்தி வருகின்றது
2.சூரியன் அழிந்து விட்டால் அதனின் பிடிப்பை அறுத்து ஏகாந்த நிலை கொண்டு
3.எதனையும் இருந்த இடத்திலிருந்து கவர்வதும் பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மையும் பெற முடியும்.
 
இப்படிப்பட்ட சூரியக் குடும்பங்கள் பேரண்டத்தில் எண்ணிலடங்காது உண்டு.

புருவ மத்தியில் உயர்ஞான நற்குணங்கள் மோதினால் “மனிதன் சிருஷ்டிக்கும் பிரம்மன்”

புருவ மத்தியில் உயர்ஞான நற்குணங்கள் மோதினால் “மனிதன் சிருஷ்டிக்கும் பிரம்மன்”


சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்
1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்...
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.
 
உலகோதய நிலை நாடிடும் மனிதன்... நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து... சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது... சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் "ஓம்" பொருள் என்னும்... ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் "தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை..."
 
வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்... அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் "சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்..." தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.
 
பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்... "பிரம்மாவைச் சிறை பிடித்தான்...!" என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.
 
நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்... அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட... அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.
 
1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி "உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்..."
 
அத்தகைய சிருஷ்டி அன்றி "சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட..." உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே "நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்..."
 
1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்...!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட "நீல வண்ணம்" காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.
 
பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.
 
சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு "சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக"
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.
 
பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை... சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி... உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.
 
அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2."சூல்" என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.
 
ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்... "அறுகோணங்கள்" உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் "பிறப்பின் இரகசியங்கள்" எனவும்... அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.
 
அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு... வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்... அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்... பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்... உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.
 
ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே... உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் "அதுவும் தியானம் கொண்டே..."
 
சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் "இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு... பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்... முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என..." - சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் "சித்தர்களால் கட்டப்பட்டதே..."
 
ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்... ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு "சோமாஸ் ஸ்கந்தன்" (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.
 
சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி... அருகோணக்  கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை... ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது...
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி... சுடர்தலால் "மனிதனே சிருஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்..."

February 26, 2025

நம் குலதெய்வங்கள் “சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து விட்டார்களா…?” என்று சந்தேகப்பட வேண்டியதில்லை

நம் குலதெய்வங்கள் “சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து விட்டார்களா…?” என்று சந்தேகப்பட வேண்டியதில்லை


கூட்டுத் தியானத்தின் மூலம் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த குலதெய்வங்களை உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை இன்று விண் செலுத்தினோம்
1.அவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆனால் இணைந்து விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டாம்.
 
துருவ தியானம் முடிந்தபின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
1.அந்த ஆன்மாக்கள் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததை நீங்களும் காணலாம்.
2.ஒரு 48 நாட்களுக்குத் தொடர்ந்து இதைச் சீராகச் செய்து வாருங்கள்.
3.சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
 
அவர்கள் முன் செல்ல அந்த உணர்வின் தன்மை நமக்குள் இணைந்து வருகின்றது.
 
சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. கரைந்து விட்டால் சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மாற்றிவிடும்.
 
உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவுகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைந்ததால்
1.அதிலிருந்து வரும் உணர்வினை உணவாக உட்கொண்டு
2.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் வாழத் தொடங்குகின்றனர் நம் முன்னோர்கள்.
 
ஆகவே நாம் இதை முழுமைப்படுத்தி உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும். நம்முடைய முன்னோர்களை இப்படி அனுப்பினால் நமக்கும் நலம் பெறும் சக்தி கிடைக்கும்.
 
நண்பர்கள் உடலைப் விட்டுப் பிரிந்திருந்தால் துருவ தியானத்தில் இருந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
அவர் உடலில் நோயோ மற்ற துன்பங்கள் இருப்பினும் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் அது நமக்குள் வளராது தடுக்கக் காலை துருவ தியானங்களில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட வேண்டும் என்று எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது அவர்களும் சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றனர்.
3.அவர்களும் பிறவி இல்லாத நிலை அடைகின்றனர்.
 
மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த வேண்டும்.

உயிராத்மாவில் பேதங்கள் நீங்கிட வேண்டும்

உயிராத்மாவில் பேதங்கள் நீங்கிட வேண்டும்


"சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்" வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்... சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் "காளியின் தாசன்" ஆயினர்.
1."ஓர் தாயின் இரு குழந்தைகள்" என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.
 
எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று... அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.
 
மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்...
1."சுவாச கதியினால்"
2.இந்த பூமியில் மாத்திரமன்று...! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.
 
தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது... ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்... தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.
 
வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை... அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.
 
வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட... மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.
 
வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்... கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட... பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.
 
பின் அவன் வினா எழுப்பினான்...
1.அம்மணி...! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று... தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட "அகப்பொருளைக் காக்கின்றது..."
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்... தன் உணர்வும் கொண்டு... "மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது..."
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் "இடை புகுவோர் பெறுவது என்ன...?"
 
திரை மறைவில் "...!" என்ற குரல் எழுந்தது.
 
வேதாந்த நாதன்... தோழிப் பெண்ணே...! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்... ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.
 
நிலைமையின் நிகழ்வு... விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து... பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.
 
ஒரு பொருள் நிறைந்த அங்காடி... அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக... அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்... அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்... "செயல் ஒன்றே..."
 
1.அங்காடியே - இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் - ஆத்ம நிலை...
3.உணர்வுகளின் வழி - உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் - செயல் கொண்டிடும் குணங்கள்.
 
ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்...! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.
 
வேதாந்த நாதன்...
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் "ஆத்மாவும்... உயிரும்" சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு "தாய் என்று கூறுவது - பேரருள் சூட்சமம்" என்றான்.
 
உடனே விசாலவதி தேவி... மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ... அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.
 
ஞானம் இடை புகுந்தவர் யார்...? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.
 
அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி... ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு - உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.
 
இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். "மங்கள நாண்" பூட்டிடும் விழா எழுந்தது.
 
தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.
 
அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி... நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே "காளிதாசனாக" வழி காட்டினான்.