ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2025

“பால் கடல் அமுது” எனும் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

“பால் கடல் அமுது” எனும் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி


உஜ்ஜயினி மாகாளியம்மன் கும்பேஸ்வரி பிரதிஷ்டைக்குப் பின் பிருகு மகரிஷி கதிரி” (மங்களூர்) சென்று செயல் கொள்ளும் முன்
1.தன்னுடைய படைப்பின் வித்து செயல் கொள்ளப் போகும் காலத்தின் நியதியை ஞான நோக்கால் அறிந்து கொண்டு
2.தீர்க்கதரிசன வாக்குகள் என்றே மூன்று குறிப்புகள் பதிப்பித்து அவற்றை ஓரிடத்தில் இட்டு வாய்ப்பாகம் சிலை செய்து
3.உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம் உருக் கொள்ளும் எல்லைக்குள் அந்தப் பெட்டகத்தின் காப்பென பூமியினுள் புதைத்து வைத்து
4.நல் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அது பிற்காலத்தில் பயன்பட வேண்டும் மானசீக ஆசி அருளி
5.தெற்கு திசை நோக்கி நிர்விகல்ப சமாதி எனும் செயல் கொண்டிடும் கதிரி எனும் இடத்தில்
6.செவ்வேள் எனும் சூட்சும ஆன்ம நேய வளர்ப்பு என்றே பக்குவம் கொண்டு
7.மண்டல சூட்சும செயலுக்குத் தன்னைத்தான் தெளிவுபடப் பொருந்திக் கொண்ட இடம் மூடுபத்திரி (கர்நாடகா).
 
பிருகு மகரிஷியின் அருள் சக்தி பெறுவோம்பெற்று அவர் பதித்த வாக்குகளை அனைவரையும் பெறச் செய்வோம்.
 
மூவிரண்டு நிலை (ஆறு குணங்கள்) என்னும் நற்குண செயல்பாட்டையே மனமெனும் ஆழ்கிணறு அதனுள் சுவை நீர் தண்ணமாய் (ஒரு பக்கம் உள்ள பறை) ஒலிக்கும் அகப்பொருள் தின்மையாகக் (வலிமை) கொண்டிடும் உறுதி என்பார் வேதாள மாமகரிஷி.
 
மனக்கிணற்றின் நீர் எண்ணத்திற்கொப்ப சுவை மாறு கொண்டிடும் இயல்பு கொண்டிட்டது. ஆழம் கண்டிட முடியாத அந்த மனக்கிணற்றினுள் வண்ணமாய் அழகிய ஒரு பொருளும் உண்டு.
1.அதுவேபால் கடல் அமுது எனும் நிலையாம் ஆத்ம பொக்கிஷம்..”
2.அதனைப் பெற்றிடும் உறுதி மூவிரண்டு முனை கொண்டிட்ட பொருள் பற்றிக் கொண்டிடல் வேண்டும்அதுவே நற்குணங்கள்.
 
அதாவதுநற்குணங்கள் கொண்டு தான் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்க முடியும். கிணற்றில் விழுந்துவிட்ட வாளியைப்பாதாள குறடு (கரண்டி)” கொண்டு எடுக்கின்றோம் அல்லவா.
1.அதுவே தன்மையாக ஒலிக்கின்ற அகப்பொருள்
2.அகப்பொருளைப் பற்றினால் ஒளி நிலை பெறுவது தன்னுள் சாஸ்வதம்.
3.“தனது உடலின் வால் தனைக் கண்டு மிரண்டு ஓடி இடம் தேடி அலைகின்ற பூனை போல்
4.நம் மனதின் நிலை செயல் கொள்ளல் தகாது
5.அறிந்துணர்தல் என்ற ஞானத்தைக் கொண்டு நிலை நிற்றலே விவேகம்…!