ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2023

மனிதன் வெளிப்படுத்தும் “எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்கள்” (கண்ணுக்குத் தெரியாதது)

கேள்வி:-
சாப அலைகள் பாவ அலைகளின் இயக்கம் என்பது முற்பிறவியில் நாம் செய்ததா…? எத்தனையோ கோடிப் பிறவிகளில் நாம் எடுத்தது நம் ஆன்மாவிலேயே கலந்திருப்பதால் அதன் இயக்கமாக எதிர்பாராது விபத்துகள் ஏற்படுகின்றதா…? அல்லது விபத்து நடக்கும் இடத்தில் அங்கே பதிவான உணர்வின் செயலா…? ஒரே இடத்தில் எனக்கு ஏன் இரண்டு முறை விபத்து ஏற்பட்டது…? அந்த இடத்திலே சாப அலைகள் இருக்கிறதா…? விபத்து ஏற்பட்ட அதே பாதை வழியாக மீண்டும் செல்லலாமா…? அல்லது வேறு பாதையில் மாற்றிச் செல்ல வேண்டுமா…?

குரு இதற்குண்டான விளக்கத்தைக் கொடுத்து உணர்த்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பதில்:-
அதாவது “இன்ன இடத்தில் விபத்து ஏற்படும்” என்று மற்றவர்கள் சொன்ன உணர்வு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி இருக்கிறது.
1.”அந்தக் குறிப்பிட்ட இடம்” வந்தவுடன் அது உங்களுக்குள் நினைவுக்கு வருகின்றது
2.அது தான் அந்த இடத்தில் இயங்கியது (விபத்தாகிறது)
3.அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கின்றது… அதை இழுத்துக் கொண்டு வருகின்றது.

மற்றவர்கள் “இங்கே விபத்தாகும்…” என்று சொன்னாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை மறைத்து விட்டால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.

ஏனென்றால்… பிறர் சொல்லும் உணர்வுகள் ஆழமாக நமக்குள் பதிவாகி விட்டால் அந்த இடத்திற்கு வந்தவுடன் “டக்…” என்று நினைவுக்கு வரும் அந்த சமயத்தில்
1.நீங்கள் வாகனத்தில் சென்றால்….பிரேக் இடாதபடி உங்களை அந்த வண்டிப் பக்கமே அழைத்துச் செல்லும்.
2.மற்றவர்கள் வந்து உங்களை இடிப்பது அல்ல
3.இதிலே தான் இந்த விஷயம் இருக்கின்றது… அதாவது நீங்கள் தான் அதிலே போய் விழுகின்றீர்கள்
4.காரணம் சந்தர்ப்பங்கள் நம்முடைய நினைவாற்றல்கள் அந்த மாதிரி இயக்குகின்றது
(5.ஒரு மனிதனுடைய உணர்வுகள்… சந்தர்ப்பம் இப்படியெல்லாம் இயக்கிவிடும்)

உதாரணமாக வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் கஷ்டங்கள் இருக்கின்றது என்று சொல்வார்கள். சொன்னதற்குப் பிற்பாடு என்னதான் வீட்டின் சுவரை இடித்து அதை நீங்கள் மாற்றி வைத்தாலும் “அவன் சொன்ன இடி தான் இங்கே வரும்… குடும்பத்தில் குறைகளும் சங்கடங்களும் தான் வரும்…!”

இது எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வுகள் அதே இடம் வந்தவுடன் மீண்டும் அந்த ஞாபகத்திற்கு வரும்.

ஒரு பனை மரத்தில் அருகிலே நாங்கள் சென்றோம்… அதைப் பார்த்தோம்… அதில் ஒரு பூதம் பார்த்தேன்…! என்று வெறுமனே சொன்னால் கூட போதும்

எங்கெங்கே…? என்று கேட்பார்கள்.

அங்கே… அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறது அல்லவா என்று சொன்னால் போதும்…! ஆ... அப்படியா… என்பார்கள்…!
1.அங்கே பேயும் இல்லை பூதமும் இல்லை…!
2.ஆனால் அந்தப் பக்கம் நாம் செல்லும் பொழுது அன்றைக்கு அவர் சொன்னாரே…! பூதம் இருக்கிறது என்று.
3.இந்த ஒற்றைப் பனை மரத்தில் தானே… என்று எண்ணினால் போதும்.
4.உடனே அந்த இடத்திலே பேயாக அது காட்சி கொடுக்கும்.

இதெல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்

ஏனென்றால் அத்தகைய மனிதனுடைய உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் போது “நம்முடைய எண்ணம்… அது இழுத்துக் குவித்துக் கொடுக்கும்…”

ரேடியோ டிவி அலைகள் இயங்குவது போன்று தான் மனிதனுடைய எண்ண உணர்வின் இயக்கங்களும்.

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வலுவாக்கி
1.நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்று
2.நாம் கட்டாயப்படுத்தி இந்த எண்ணத்தை எடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜோதிடம் ஜாதகம் பார்த்தாலும் அதிலே கஷ்ட நஷ்டங்களைத் தான் முதலிலே சொல்கிறார்கள். நல்லதை ஏதாவது முதலில் சொல்கிறார்களா…?
1.அந்த கஷ்டத்தைத் தான் நாம் பதிவு செய்கின்றோம்… ஏற்றுக் கொள்கிறோம்.
2.அப்புறம் அதிலே மீளக்கூடிய உணர்வு எங்கிருந்து வரும்…?

காசுக்காக வேண்டி சாங்கியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்வான். காசைச் செலவழித்துத்தான் போக்க வேண்டும் என்று சொல்வான்.

இது எல்லாமே மனிதனின் பதிவின் இயக்கம் தான். நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து… குருநாதர் காட்டிய வழியில் அதை மாற்றி அமைக்கக்கூடிய வழி முறையைத் தான் மீண்டும் மீண்டும் உணர்வுபூர்வமாகச் சொல்லி “உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவாக்குகின்றோம்…”

1.தீமையை நீக்கும் அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தால்
2.வாழ்க்கையில் அறியாமல் வரும் எத்தனையோ கொடுமைகளிலிருந்து
2.எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்ப முடியும்..!