ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2023

அருள் வழியில்… இப்பொழுது வருபவர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் தான்…!

பாம்பினங்கள் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவுக்காக மற்ற உயிரினங்களை எடுத்தாலும் மற்ற உடலில் உள்ள விஷங்கள் எல்லாம் தன் உடலில் கலந்து கலந்து

1.பல விதமான வர்ணங்களாக… நாகரத்தினமாக விளைகின்றது…. “கல் மயமாகின்றது…!”
2.ஆனால் மனிதனான பின் உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றப்படும் போது இது “மின் மயமாகின்றது…”

அதாவது… இயக்கம் உயிர் துடிப்பு எப்படி ஆகின்றதோ நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து… ஒளியின் சேர்க்கை ஆகிறது.

தேனீக்கள் ஒன்றாகச் சேர்ந்து தேனை உருவாக்கி ஒரு கூடாகக் கட்டி அதிலே எப்படி அமைத்துக் கொள்கின்றதோ இதைப் போன்று நமது உயிரும் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகளை… தேனீயைப் போன்று ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றுகிறது.

துருவ நட்சத்திரம் திடப்பொருள் அல்ல… உயிரின் இயக்கத்தைப் போல ஈர்க்கும் ஒன்றுடன் இணைந்து அது வாழும் தன்மையும் பெற்றது திடப்பொருள் ஆகிவிட்டால் வைரமாக… கல்லாக… கோள்களைப் போன்று பாறை ஆகிவிடும்.

மின் இயக்கத்துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும் பொழுது கோள்கள் தன் சுழற்சியின் மையத்தில் வெப்பமாகி அதன் உணர்வைக் கவர்ந்து கொண்டு வருகின்றது

ஆனால் உயிரணு தோன்றி நட்சத்திரமாக வளர்ச்சி ஆக்கப்படும் பொழுது தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து “ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது….”

தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனை நாம் உட்கொள்ளும் பொழுது அது எப்படி சுவையாக இருக்கின்றதோ அதைப்போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகச் செலுத்தி அதனை வளர்ச்சியாக்கும் போது
3.விஷத்தை மாற்றி இனிமை என்ற உணர்வை ஊட்டி அதை வளர்த்துக் கொள்வதே ஆறாவது அறிவின் சிறப்பு.

எல்லாமே… சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தான் பரிணாம வளர்ச்சிக்கே காரணமானது.

மனிதனாகி ஆறாவது அறிவு பெற்றபின்…
1.தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி
2.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை உயிரணுக்களாக மாற்றி
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு அனைத்து உலகிலும் வரும் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருக்கிணைந்த இயக்கமாகப் பெறச் செய்வது தான் நம்முடைய நோக்கமாக இருத்தல் வேண்டும்.

உயிர் உடலான இருளுக்குள் இருந்து தான் உணர்வின் அறிவாக இயக்குகின்றது. ஆனால் மகரிஷிகள் என்பவர்கள்… உயிரைப் போல ஒளியின் உடலாக மாற்றி இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் “சூரியனே அழிந்தாலும்” அதிலிருந்து வெளிப்படும் விஷத்தின் தன்மையைக் கூட ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள்.

அத்தகைய ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
1.நுகர்ந்த உணர்வு உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள ஜீவ அணுக்களின் முகப்பில் இணைந்து
2.ஒவ்வொரு நோடியிலும் சுவாசிப்பது… புருவ மத்தியில் உயிரிலே மோதுவது போன்று
3.அந்த ஜீவ அணுக்களும் இந்த உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றது.

உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அத்தகைய தகுதி பெறச் செய்வது தான் எம்முடைய (ஞானகுரு) இந்த உபதேசத்தின் நோக்கம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னுடைய நினைவை துருவ நட்சத்திரத்திற்கு எப்படி அழைத்துச் சென்றாரோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வுகளைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.உங்கள் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்களின் முகப்பில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும்படி செய்கின்றேன்.

விஷத்தை ஒளியாக மாற்றும் அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் பெறுவதற்கு… அதற்குண்டான சரியான காலப்பருவங்களை இப்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

குருநாதர் எந்தெந்தப் பருவங்களில் எதனெதன் சந்தர்ப்பத்தில் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதே போல்
1.உங்களுக்குள் அந்த மனப்பக்குவம் வளர்ச்சி பெறுவதற்குத் தக்க
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

அப்படி மனப்பக்குவமாகி விளைந்த பின் உங்களில் விளைந்த உணர்வுகள்… உங்களுடன் பழகும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.

ஆகவே “பிந்தி வருபவருக்கு…” உங்கள் மூலமாக உயர்ந்த சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய முடிகின்றது ஏனென்றால் வளர்ச்சி பெற்ற பருவம் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு அது விளைகின்றது என்பதை நீங்கள் உணர்தல் வேண்டும்.

1.குருவுடன் தொடர்பு கொண்ட உங்களில் விளைந்த அந்த உணர்வுகள் தான்
2.இனி வருவோருக்கு அந்த மகரிஷிகளின் உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது.