ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2023

உங்களுடைய ஏக்கம் தான் என்னைப் பேச வைக்கிறது - ஞானகுரு

எம்முடைய உபதேசங்களை எல்லோரும் கேட்கின்றீர்கள் ஆனால் அடுத்தாற்போல் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள். அதை எல்லாம் முதலிலே நீக்கிப் பழக வேண்டும்… மாற்றி அமைக்க வேண்டும்

மணிக்கணக்காக யாம் (ஞானகுரு) உபதேசிப்பதன் நோக்கமே அந்த ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று நன்மை பெறும் சக்தியாக உங்களுக்குள் மாற்றுவதற்குத் தான்.
1.யாம் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் அது உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது
2.தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றது… தீமை அகற்றும் சக்தி பெறுகின்றீர்கள்

அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

ஆனால் மணிக்கணக்கில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எடுத்து விடுகின்றீர்கள். குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும் பொழுது பல வேதனையான நிலைகளைச் சந்திக்கும்படி செய்கின்றார்.
1.அதை எப்படி மாற்றுவது…? என்ற நிலையில் மாற்றுவதற்குண்டான உபாயத்தைக் காட்டினார்
2.அவர் சொன்ன முறைப்படி செய்து எனக்குள் வந்த வேதனைகளை மாற்றி அதிலிருந்து மீண்டேன்
3.அதைத்தான் உங்களுக்கும் இப்பொழுது வாக்காகக் கொடுக்கின்றேன்

இதற்கு முன் இதை எல்லாம் அதிகமாக வெளிப்படுத்தியதில்லை இங்கே தான் வெளிப்படுத்துகின்றேன். ஏனென்றால்
1.எங்கெங்கு… யார் யார்… ஏங்கி இதைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கெல்லாம் இந்த உணர்வுகள்
2.உங்களுடைய ஏக்கம் தான் அருள் உணர்வுகளை என்னை வெளிப்படுத்தும்படி செய்கின்றது
3.நானாக இப்படிப் பேச (உபதேசம்) முடியாது.

ஏக்கத்தின் உணர்வு கொண்டு அந்தத் தொடர் வரப்படும் பொழுது… அந்த உணர்வுக்கொப்பத்தான் நான் பேச முடியும். அப்படி அல்லாதபடி… நானாக எடுத்துச் சொல்வது என்றால் அது வராது.

உணர்வின் தன்மை மோதலாகும் பொழுது.. மின்னல் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் பொழுது அந்த உணர்வுகள் பிளந்து அதனுடைய அலைகள் படர்கின்றது.

இதைப் போன்று தான்
1.நீங்கள் ஏங்கும் பொழுது அந்த உணர்வை நுகர்ந்துதான் நான் பேசுகின்றேன்
2.தீமைகள் எப்படி இயக்குகின்றது… அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்று
3.அந்த அருள் ஞானி உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சித் தீமையைப் பிளக்கும் உணர்வுகளை நுகரச் செய்து
4.அந்த அருள் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும்படி செய்கின்றேன்.

அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் உருவாக்கி தீமைகளையும் பகைமைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் சக்தியாக “கல்யாணராமனாக” நீங்கள் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய உபதேசத்தின் நோக்கம்.

இதனைப் பின்பற்றி நீங்கள் வளர்ந்து வந்தீர்கள் என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் என்னிடம் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் காற்றிலே விட்டு விட்டுச் செல்வதாக இருந்தால்
1.சாமி சொன்னார் என்று சாதாரணமாகத் தான் தெரியும்
2.சாமி எனக்கு என்ன செய்தார்…? என்று தான் பேசுவீர்கள்.

குருநாதர் எனக்குக் காட்டிய பேருண்மைகளை அவர் எனக்கு கொடுத்ததைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன் இதற்கு மேல் நான் என்ன உதவி செய்ய வேண்டும்…?

1.நீங்கள் எல்லாம் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்
2.என்னைச் சந்தித்தவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
3.சதா உங்கள் உயிரை எண்ணி நான் தியானம் இருக்கின்றேன்

அந்த உணர்வினை நீங்கள் தான் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞானிகள் உணர்வை யாம் கொடுத்தால் அதை நுகரும் பருவத்தை நீங்கள் இழந்து விடக்கூடாது. நல்ல சாப்பாடு போட்டால் அதை நீங்கள் உட்கொள்ள வேண்டும் அல்லவா…!

ஒரு விவசாயம் செய்யும் இடத்தில் உயர்ந்த வித்தினைக் கொடுக்கின்றார்கள். அதைச் சீராக விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும் ஆனால் அப்படி விதைக்காதபடி மண்ணிலே வீசிவிட்டுச் சென்றால் எது எப்படி முளைக்கும்…?

எறும்போ பூச்சியோ மற்ற பறவைகளோ அந்த விதைகளைத் தின்றுவிடும்… அது எப்படி முளைக்கும்...?

அதே சமயத்தில் விதைத்தது சீராக முளைத்து வந்தாலும் அந்தந்தக் கால பருவத்திற்கு அதைப் பண்படுத்தும் நிலைகளையும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

அது போன்று தான்
1.நாம் கொடுத்த உபதேச வாயிலாகக் கொடுக்கும் பதிவை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்று அந்த அருள் உணர்வுகளைக் கூட்டினால்
3.அறியாது வந்த இருளைப் போக்கும்… அருள் வழி வாழவும் முடியும்
4.பிறவி இல்லா நிலையும் நீங்கள் அடைய முடியும்.

இது உங்கள் கையில் தான் இருக்கின்றது…!