ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2023

உடல் பயிற்சியைக் காட்டிலும் “மனதை அமைதிப்படுத்தும் பயிற்சி கட்டாயமானது”

சர்க்கஸில் விளையாடுபவர்கள் உடம்பை எத்தனை வகைகளில் வளைக்கின்றார்கள்…! நம்மால் அவர்களைப் போல் வளைக்க முடிகிறதா…? முடியாது.

ஆனால் அப்படி வளைத்துப் பழகியவர்கள் ஒரு மாதத்திற்கு அதைச் செய்யாமல் “சும்மா இருக்கட்டும்…!” அடுத்து அந்த உடலை வளைக்க முடியாது.

பல ஆட்டங்கள் ஆடலாம்... ஆனால் ஒரு மாதம் சும்மா இருக்கட்டும். அதைத் திரும்ப பழைய மாதிரிக் கொண்டு வர வேண்டும் என்றால் அவ்வளவு எளிதானதல்ல.

அதே போன்றுதான் ஆசனப் பயிற்சி செய்து பழகியவர்கள்… நான் அந்த ஆசனம் போடுவேன்… இந்த ஆசனம் போடுவேன்…! என்றெல்லாம் சொல்வார்கள். கொஞ்சம் சோர்வடைந்து இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் போதும். அடுத்து அந்தப் பயிற்சிக்கே போக விடாது.

அந்தச் சோர்வு “இப்பொழுது செய்யலாம்… சரி அப்புறம் செய்யலாம்…! என்று அப்படியே ஒரு ஐந்து நாள் சென்றால் அப்புறம் அவ்வளவு தான்… செய்ய முடியாது.

ஆசனப் பயிற்சி தொடர்ந்து செய்து வருபவர்களும் மனச் சலிப்போ… சஞ்சலமோ… மற்றவர்கள் உணர்வுகளைக் கேட்டால் அவர்களையும் இந்த உணர்வுகள் அது தடைப்படுத்தி விடும்.

ஆசனத்தால் நான் உடலைத் திருத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து விடுவேன் என்று சொல்வார்கள் ஆனால்
1.வேதனையான உணர்வை எடுத்தார்கள் என்றால்
2.அந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆசனப் பயிற்சி செய்யப்படும் பொழுது
3.நரம்பு மண்டலங்கள் முறுக்கப்படும் பொழுது சிலருக்குப் புத்தி பேதமே ஆகிவிடும்.
4.அல்லது வெறுப்பின் காழ்ப்புணர்ச்சி வரும் அல்லது பிரஷர்…!
5.அந்த அழுத்தத்தின் தன்மை வந்து… நரம்பு மண்டலங்கள் செயலிழந்து விடும் தளர்ச்சி அடைந்து விடும்.

ஆசனத்தைச் செய்து இரத்தக் கொதிப்பை மாற்றலாம் உடல் உபாதைகளைப் போக்கலாம் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறுப்புகளின் படங்களையும் போட்டுக் காட்டுவார்கள் இன்னென்ன பயிற்சியால் இப்படி நன்மைகள் பெறலாம் என்றும் சொல்வார்கள். [ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) எனக்கு ஒரு குருவை வைத்து இந்த ஆசனப் பயிற்சிகளை செய்து கொண்டிருந்தேன்}.

ஆக… ஆசனம் நமக்கு உதவி செய்கின்றது. ஆனாலும் ஒவ்வொரு நாளும்
1.கவலையோ வெறுப்போ கோபமோ அன்றன்றைக்குச் சந்திக்கும் சந்தர்ப்பம்
2.எதன் உணர்ச்சியின் வேகமோ… அதற்குத் தக்க (அந்த எண்ணங்களுடன்) பயிற்சிகளைச் செய்யப்படும் பொழுது
3.உணர்ச்சியின் வேகத்தால் மூளையைக் கூடப் பாதிக்கக்கூடிய நிலை வந்து விடுகிறது.
4.அதாவது சிரசாசனம் சர்வங்காசனம் இதைப் போன்ற நிலைகள் நம்மை ரொம்பவும் பாதிக்கின்றது

காரணம்… மக்கள் மத்தியில் பல பல உணர்ச்சிப் போராட்டங்களில் வாழும் பொழுது குடும்பத்தில் வெறுப்பின் தன்மை ஏற்பட்டால் அதனுடைய அழுத்தம்
1.நம் உடலில் அழுத்தங்கள் அதிகமாகப்படும் பொழுது
2.சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் வெடித்து விடும்… ஆள் அவுட்…!

இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் சலிப்பு சஞ்சலம் கோபம் கவலை வேதனை இது போன்ற உணர்வுகளை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்கு அதை உணவாகக் கொடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்த ஓட்டமாகப் பெருக்கிக் கொண்டால்
3.தீமையான உணர்வின் இயக்கங்களை நாம் சமப்படுத்திக் கொள்ள முடியும்
4.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒன்றுக்கொன்று பகைமையாகாதபடி எதிர்ப்பாகாதபடி
5.எதிர்மறையான இயக்கங்களுக்குக் கொண்டு செல்லாதபடி இணைந்து செயல்பட்டு
6.மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெற முடியும்.