ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2022

உலகத்திலுள்ள “பொருள் என்ற பொக்கிஷத்தை...” நாடி நாம் செல்லக்கூடாது

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்... அகழிகளிலும்... சுரங்கப் பாதைகளிலும்.... மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்... பீடங்களுக்குள்ளும்... பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்...
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன...?

1.பிம்பப் பொருளை அடைந்தால்
2.நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்...
3.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..
4.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.

“நல்ல நிலை அடையும் வழி இல்லை...!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வக் கனி வளங்கள்... படிவக் குவியல்கள்... எங்கெங்கு உள்ளன...? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி...
1.எப்பொருளை அடைய வேண்டும்...? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் - ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் உருவாக்கினாலும் இந்தப் பேரண்டத்தில் வந்த உணர்வின் துணை கொண்டுதான் ஒரு பிரபஞ்சமாக உருவாகின்றது.

பிரபஞ்சத்தில் உருவானதை ஒரு உயிரணு நுகர்ந்து உணர்வின் எண்ணங்கள் கொண்டு இயக்கும் தன்மை வந்து அதன் வழி கொண்டு மனிதனாக உருவாகின்றது.
1.மனிதனான பின் அகண்ட அண்டத்தில் பரவிக் கிடந்த உணர்வை நுகர்ந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் அகண்டு சென்று எந்த அண்டத்திலிருந்து நுகர்ந்ததனரோ அதன் வழி வழி தொடர்ந்து
3.என்றும் அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தச் சூரியன் அழியலாம். ஆனால் மனித உயிர் இந்த உணர்வின் தன்மையைப் பெற்று விட்டால் என்றும் அழியா நிலைகள் பெறும் தகுதியைப் பெறுகின்றது.

அந்த நிலை பெறுவதற்காகத் தான் ஞானிகள் அனைவரும் சென்றார்கள்.

ஆகவே...
1.இந்த மனித வாழ்க்கையில் பல இன்னல்கள் எப்படிச் சேருகின்றது…?
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
3.இதிலிருந்து நீ விடுபடும் மார்க்கங்கள் என்ன…? என்று எம்மிடம் குருநாதர் வினா எழுப்பினார்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ ஏங்கு. அதன் வலிமையை உனக்குள் சேர்த்துக் கொள். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உனக்குள் வளர்த்து அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வை நீ செலுத்து.
1.அவர்கள் வளர நீ அதைக் கண்டு மகிழ்ச்சி பெறு… அதன் நிலைகளே உனக்குள் வளரும்.
2.அதை நீ பெறுவாய்… அனைவரையும் பெறச் செய்வாய் என்று குரு அருளை
3.எமக்குள் பாய்ச்சிய நிலைகளைத் தான் உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன்.

இன்றைய செயல் நாளைய சரீரம். இன்று எந்த உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அடுத்து ஒளிச் சரீரம் பெறலாம்.

அதே சமயத்தில் இன்று வேதனை என்றால் வேதனையை உருவாக்கி அதைக் கொண்டு வேதனையை உணவாக உட்கொள்ளும் அந்தச் சரீரத்தைப் பெறலாம்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு இன்று அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்ப்போம். நாளை ஒளியின் சரீரம் பெறுவோம்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால், இந்த உடலின் துணை கொண்டு தான் நாம் சப்தரிஷி மண்டலம் செல்ல முடியும்.

எனவே இந்த உடலில் இருக்கும் பொழுதே நம் நினைவின் ஆற்றலை மகரிஷிகளின் பால் செலுத்தி அதன் வலிமையை நமக்குள் வளர்ப்போம். தீமைகள் நம்மை நாடாது தடுத்துக் கொள்வோம். மெய் ஞானிகளுடன் ஒன்றுவோம்.
உலகத்திலுள்ள “பொருள் என்ற பொக்கிஷத்தை...” நாடி நாம் செல்லக்கூடாது

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்... அகழிகளிலும்... சுரங்கப் பாதைகளிலும்.... மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்... பீடங்களுக்குள்ளும்... பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்...
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன...?

1.பிம்பப் பொருளை அடைந்தால்
2.நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்...
3.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..
4.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.

“நல்ல நிலை அடையும் வழி இல்லை...!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வக் கனி வளங்கள்... படிவக் குவியல்கள்... எங்கெங்கு உள்ளன...? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி...
1.எப்பொருளை அடைய வேண்டும்...? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் - ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.