ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2021

நம் எண்ணத்தைத் தான் நிறைவேற்றுகின்றோம்… ஆனால் கடைசியில் தெய்வம் சோதிக்கிறது என்று சொல்லி விடுகின்றோம்…!

வீட்டில் ஒரு நல்ல காரியமோ அல்லது திருமணமோ நடக்க வேண்டும் என்றால் சாமி மேல் மலரை வைத்து ஜோதிடம் கேட்கப் போவார்கள்.
 
சாமி வரம் கொடுத்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகும்…! என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வு என்ன செய்யும்..? இது தாக்கப்பட்டுச் சிவப்புப் பூ வந்தது என்றால் ஆகாது…!
 
பூ போட்டுக் கேட்கும் அந்த நேரத்தில் மாப்பிள்ளையைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள். மோசமான ஆளாக இருக்கின்றான்… என்று அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள்… என்ற மனதில் ஓடிக்கொண்டிருந்தால்
1.எனக்கு நீ சிவப்புப் பூவைக் கொடுத்துவிடு
2.நான் என் பெண்ணைக் கொடுக்கவில்லை என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.
 
ஆனால் முதலிலே ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்… ஜாதகத்தையும் பார்ப்பார்கள்.. கடைசியில் “சாமி மீது பூ போட்டுப் பார்க்கும்…” இந்த ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்.
 
ஜாதகம் பார்த்துச் செய்தால் தான் எல்லாம் நல்லது என்று சொல்வார்கள். இருந்தாலும் இங்கே பார்க்கும் போது பூ விழுந்து விட்டது என்றால் “நான் நினைத்தேன் நடந்து விட்டது…!” என்பார்கள்.
 
அதே போல் இந்த மாப்பிள்ளையை எப்படியும் முடிக்க வேண்டும்… வெண்மை நிறப் பூ விழுந்தால் மனதுக்கு நல்லது…! என்று நினைப்பார்கள்.
 
இவர்கள் மாப்பிள்ளையை நல்லவன் என்று கருதிக் கொண்டு போனால் இந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு கண்ணிலிருந்து பாயும் அலைகள் கீழே விழுத்தாட்டும்.
 
இது தான் நாம் பார்க்கும் ஜோதிடங்கள். நாம் எல்லோரும் தான் இதை எல்லாம் செய்து பார்க்கின்றோம்.
 
வெள்ளைப் பூ விழுகின்றது.
 
ஆனால் மாப்பிள்ளையிடம் அழுக்கு இருக்கும். இருந்தாலும் அவர்கள் மீது பற்றிருக்கும். இந்த எண்ணத்துடன் வரும் போது கண்ணில் பார்க்கும் போது இந்தப் பூ தான் விழுக வேண்டும் என்று நினைபபார்கள். அதன்படி அங்கே இயக்குகிறது.
 
எல்லாம் ஒத்துக் கொண்டு இவர்கள் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி திருமணம் ஆன பின் கடைசியில் என்ன ஆகிறது…?
 
என் பெண்ணைக் கட்டிக் கொடுத்ததிலிருந்து ஒரே தொல்லையாக இருக்கின்றது… சங்கடமாக இருக்கிறது… வேதனையாக இருக்கின்றது…! தெய்வம் வரம் கொடுத்த பின் கூட இந்த மாதிரிச் சோதிக்கின்றது என்பார்கள்.
 
1.ஆக மொத்தம் இவர்கள் எண்ணத்தைத் தான் அங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
2.இருந்தாலும் “சாமி சோதிக்கின்றது…” என்று சொல்லும் இந்த நிலை தான் வருகிறது.
 
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்தில் வழி நடந்து அதை மதித்து நாம் நடத்தல் வேண்டும்.
 
ஏனென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருளைப் போக்கும் இடம் தான் அந்த ஆலயம். உயர்ந்த உணர்வுகளையும் தெய்வீகப் பண்புகளையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்.
 
1.நாம் கண்ணுற்றுச் சிலையைப் பார்க்கும் போது துவைதம்...
2.அதில் காட்டிய தெய்வ குணத்தை எண்ணி எடுத்தால் அத்வைதம்...
3.தெய்வ குணத்தை நுகர்ந்தறிந்து தனக்குள் அது உருவாக வேண்டும் என்றால் விசிஷ்டாத்வைதம்...
4.அங்கே காட்டப்பட்ட தெய்வ குணங்கள் உடலுக்குள் உறைந்தால் துவைதம்
5.நாம் தெய்வமாகின்றோம்...!
 
அதைப் போல் அங்கே அபிஷேகம் செய்யும் பாலையும் கனிகளையும் சந்தனத்தையும் பார்க்கும் போதும் துவைதம். அந்த நறுமணங்களை எண்ணி எடுத்தால் அத்வைதம் நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம். உணர்வின் தன்மை உடலாகும் பொழுது துவைதம்.
 
உயர்ந்த குணங்களை உன் உடலில் நறுமணங்களாக்கும் சக்தியாக நற்குணங்களை உருவாக்கும் அந்த உணர்வை நீ பயன்படுத்து… என்று தான் ஞானிகள் ஆலயத்தை அமைத்தனர்.
 
மலரைப் போல் மணம் நாங்கள் பெறவேண்டும்… மகிழ்ந்து வாழும்  அருள் சக்தி பெற வேண்டும்.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.. இந்த ஆலயம் வருவோர் அனைவருக்கும் இந்த அருள் சக்தி கிடைத்து அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்…! என்று எண்ணினால் இது தான் உண்மையான பக்தி…!

ஆகவே அருள் உணர்வை நமக்குள் பெருக்கிப் பேரருளைக் கூட்டிக் கொள்ளும் பழக்கம் வர வேண்டும்.