ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2021

நமது உயிருக்கும் அகஸ்தியன் உயிருக்கும் உண்டான இயக்க வித்தியாசம்

உயிரணு தோன்றி உலகின் நிலையில் பல பல பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தாலும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வின் தன்மை மனிதனால் உருவாக்கப்பட்டது தான்.
 
அப்படி ஒளியாக உருவாக்கிய முதல் மனிதன் அகஸ்தியன் தான்...! அகஸ்தியன் இனமாகத் தான் நாமும் வளர்ந்து வந்துள்ளோம்.
 
மனிதனில் உயர்ந்தவன்... உயர்ந்த ஒளியின் உணர்வைப் பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. மாற்றிய அந்த உணர்வுகளைத்தான்
1.குருநாதர் எனக்குள் இணைத்து அதை வளர்க்கும்படி செய்தார்
2.ஒளியின் உணர்வாக நீ மாற வேண்டும் என்றும் சொன்னார்.
 
அதன் துணை கொண்டு இருளை அகற்றிடும் உணர்வைப் பெற வேண்டும். இந்த உணர்வினை எல்லோருக்கும் ஓது...! என்றார்.
 
நீ உபதேசிக்கும் போது அதை உற்றுக் கேட்போர் உணர்வுகளில் அது பதிவாகி அவர்களும் அதைக் கவரும் சந்தர்ப்பம் வரும்.
1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அவர்களும் அருள் வழி செல்லட்டும்...
2.அதைக் கவரும் உணர்ச்சியை நீ தூண்டு... அவர்களுக்குள்ளும் இதைப் பதியச் செய்.
3.அருள் வாழ்க்கை வாழச் செய்... இருளை அகற்றச் செய்...!
4.உயிர் என்ற நிலை வரும் பொழுது ஈசன் என்ற நிலை வருகின்றது... ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்று நீ கருது...! என்றார் குருநாதர்.
5.மனிதன் என்று உருவாக்கிய நல்ல உணர்வுகள் உயர வேண்டும் என்று எண்ணு.
 
பிறரைக் காக்கும் உணர்வு கொண்டு அந்த உணர்வுகள் உனக்குள் விளைந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற்று அதன் உணர்வுகளை அவர்களும் பெற வேண்டும் என்று ஏங்கு.
 
ஏனென்றால் அவரால் வளர்க்கப்பட்ட அவர் உடலில் உருவான நோயின் தன்மையை நீ கேட்டறிந்து அந்த உணர்வுகள் உனக்குள் பதிந்தாலும்... அருள் உணர்வு என்ற நிலையை வைத்து உனக்குள் இதை மாற்றி...
1.அவர்களும் அதை பெற வேண்டும் என்று இவ்வாறு நீ எண்ணினால் அவர்களும் நலம் பெறுகின்றனர்
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உனக்குள் வராது தடுக்கப்படுகின்றது.
 
ஆகவே இம்முறையைக் கடைப்பிடித்து உனது வாழ்க்கையில் பிறிதொருவரின் நோய்களையோ தீமைகளையோ பார்த்தாலும் ஓ...ம் நமச்சிவாய...! என்று உன் உடலாக ஆனாலும் உடலில் வரும் அந்த அழுக்கினை நீக்க
1.நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ கவர்ந்து
2,அதனுடன் இணைத்து அந்த விஷத்தின் ஆற்றலை நீ பெருக்காது
3.அந்த அருள் என்ற உணர்வினை இணைத்து ஒளி என்ற உணர்வினை நுகரும் சக்தியாக
4.உன் உடலில் உள்ள அணுக்களை மாற்று... அதன் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்று...! என்றார் குருநாதர்.
 
வாழ் நாள் முழுவதும் இருளை அகற்றும் உணர்வுடன் வாழ்ந்தால் இது தான் விஷ்ணு தனுசு. ஆனால் பிறரின் நோயின் உணர்வை நுகர்ந்தால் அது சிவ தனுசு. அந்த உடலில் விளைந்த அதே நோய்கள் தான் வரும் எம்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார் குருநாதர்.
 
மிருகத்தின் உணர்வுகளை நுகர்ந்து அதனால் தாக்கப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் மிருகத்தின் நிலையை அடைகின்றோம்.
 
அப்படி அல்லாதபடி விஷ்ணு தனுசு என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிருடன் ஒன்றினால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.
 
ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இருளை அகற்றிடும் சக்தியாக உலகெங்கிலும் இருளை அகற்றிடும் உணர்வுகள் பெற்றது.
1.நமது உயிரும் நுகர்ந்த உணர்வைத்தான் இயக்குகின்றது
2.ஆனால் அகஸ்தியனின் உயிரோ இருளை அகற்றும் ஒளி என்ற உணர்வாக... முழுமையான விஷ்ணுவாக மாறுகின்றது.
 
நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணு என்று உயிராக ஆனாலும் இருளை அகற்றி அந்த ஒளி கொடுக்கும் சூரியனைப் போன்று உயிர் ஒளியாக ஆகும் தகுதி பெற்றது. அப்படிச் சூரியனைப் போன்று ஆனது தான் துருவ நட்சத்திரம்...!
 
ஆகவே துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வினை நாமும் பெற்றோம் என்றால் அந்த உணர்வின் தன்மை உண்டு பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்ததிந் உணர்வை நாம் நுகர்வோம்.
2.அருள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்
3.வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவோம்
4.மெய்ப் பொருளைக் காண்போம் என்று நமது குரு காட்டிய அருள் வழியில் ஏங்கித் தியானிப்போம்