ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2019

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்க வேண்டிய முறை


ஒரு அழுக்குத் தண்ணீரில் நந்நீரை விட்டது போல் உங்கள் கண்ணின் நினைவினை எல்லா உறுப்புகளிலும் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்யுங்கள்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.சிறுகச் சிறுக உடல் உறுப்புகள் அனைத்திற்கும் உணவாகக் கொடுக்கும் அந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் எலும்புக்குள் இருக்கும் எலும்பை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்ற நினைவினை எங்கிச் செலுத்துங்கள்.
1.இப்பொழுது எலும்புகளில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் வரும்.
2.கூச்சப்படுவது போன்ற உணர்ச்சிகள் தோன்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர்ந்து ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் உணர்வினைச் செலுத்துங்கள்.

எக்ஸ்ரே கருவிகளில் அனுப்பப்படும் பொழுது எப்படி அது ஊடுருவி எலும்புக்குள் இருக்கக்கூடிய நிலைகளைப் பிளந்து கொடுக்கின்றதோ இதைப் போல எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி கொண்ட அணுக்களாகப் பதிவாக்குங்கள்.

1.செல்ஃபோன்களில் நமக்கு வேண்டியதைப் பதிவாக்கிக் கொண்டு
2.எப்படி அவ்வப்பொழுது அதை எடுக்கின்றோமோ
3.அதைப் போல நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் செல்களைப் பதிவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்படிப் பதிவாக்கிக் கொண்டால் அந்த நினைவுகள் நமக்குள் ஆகி
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நம்மை நுகரச் செய்து
2.அந்த ஞானத்தின் வழி நாம் செயல்படுத்த இந்தத் தியானம் உதவும்.