ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2019

ஜாதகமும் யாகமும் திருமணமான தம்பதியர்களை ஒற்றுமையாக… மகிழ்ச்சியாக வாழச் செய்கிறதா…?


யாகங்கள் செய்த வீடெல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். “நன்றாக இருக்க வேண்டும்..!” என்று தானே புதுமனை புகும் பொழுது யாகத்தைச் செய்கிறோம்.

அதே மாதிரி ஜாதகம் பார்த்த பின் தானே கல்யாணம் செய்கின்றோம். அவர்களும் நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்து நாம் பார்க்கப்படும் பொழுது கணவன் மனைவி நன்றாகத் தானே இருக்க வேண்டும்.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்தாலும் எத்தனை பேர் எத்தனை குடும்பங்கள் பிரிந்திருக்கின்றது…?

திருமணமானாலும் முழுமையாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்று தானே ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்கிறார்கள். இடைவெளியில் ஏன் மடிந்துவிடுகின்றார்கள்…? இதற்கு எங்கே போவது…?

மனச் சாந்திக்கு வேண்டுமானால் பார்க்கலாம். அவன் சொன்ன உணர்வை எடுத்து நாம் என்ன செய்வோம்…? ஐயோ.. ஜாதகம் பார்க்கவில்லை என்றால் தப்பு வந்துவிடும்..! என்ற பய உணர்வு வந்துவிடும்.

அப்படி எண்ணவில்லை என்றாலும்
1.ஜாதகப்படி எடுத்துக் கொண்டால் இரண்டு எதிர்ப்பு நிலையும் ஒன்றாகும்.
2.அப்பொழுது எதிர்மறை இரண்டும் ஒன்றாகும் பொழுது
3.எதிரியின் நிலையாக ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருந்தால் இரண்டும் ஒத்துப் போகும்.
4.ஆனால் ஒருவர் சாந்தமாக இருப்பார்.. ஜாதகப்படி சாந்தம் என்றும் இருக்கும். இவரோ கோபக்காரராக இருப்பார். இது இரண்டும் ஒத்து வராது என்பான்.
5.அடிக்கடி வேதனைப்படுத்தக்கூடியவர் அதே மாதிரி இன்னொருவர் வேதனைப்படுபவர் இவர்கள் இரண்டும் வந்தால் ஜாதகப்படி பொருந்தும் என்பான்.
6.கல்யாணம் செய்த பின் அங்கே வேதனைப்படுத்தும் நிலைகள் தான் மிஞ்சும்.

ஆக ஜாதகப் பொருத்தம் எதிலே இருக்கிறது…?
1.இந்த உணர்வின் நினைவு வரப்படும் பொழுது அதுவும் விஷத் தன்மை இதுவும் விஷத் தன்மை.
2.இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளும். இப்படித் தான்  பொருத்தம் பார்ப்பது இருக்கிறது.

பொருத்தம் பார்த்துச் செய்த வீடுகளில் எல்லாம் எப்படி இருக்கிறது…?

அதுவும் அங்கே திருமணம் செய்யும் பொழுது இத்தனை மணிக்கு.. இந்த நிமிடத்திற்குள் செய்ய வேண்டும்…! என்று சொல்லிவிடுவான்.

இங்கே அலங்காரம் செய்து உட்கார்ந்து யாகம் எல்லாம் முடிக்கும் பொழுது தாலி கட்டும் முன்னாடி இன்னும் இரண்டு நிமிடம் தான் இருக்கின்றது… ஒரு நிமிடம் தான் இருக்கின்றது…! என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

நேரமாகி விட்டது என்ற இந்த நினைவுடனே தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டிலும் பெண் வீட்டிலும் பாருங்கள்… அலங்காரம் செய்து வருவதற்கு முன்னாடி அந்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…?

ஒரு நிமிடம் தான் இருக்கிறது.. அதற்குள் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றார்களே…! என்ற வேகத்தில் கொட்டு மேளம் வாசிப்பவர்களைப் பார்த்துக் “கொட்டுய்யா… கொட்டுய்யா…! மேளத்தைத் தட்டுய்யா.. தட்டு…!” என்று சப்தம் போடுவார்கள்.

அங்கே அந்த மந்திரம் சொல்வது முழுமையாகச் சொனனர்களா…? இல்லை. அந்தப் பரபரப்பு தான் வருகிறது. தாலி எடுத்துக் கொடுத்துக் கட்டச் சொல்லும் பொழுது என்ன செய்கிறார்கள்…?

இங்கே பணம் எவ்வளவு கொடுப்பார்கள் என்று நினைப்பான். ஏழ்மையான வீட்டில் இப்படி நினைப்பான். பணக்கார வீட்டில் நிறையக் கொடுப்பார்கள் என்பதால் அதைப் பற்றி எண்ணுவதில்லை.

தாலி எடுத்துக் கொடுக்கும் முன் அவனுக்கு ஒரு நூறு ரூபாய்த் தாளைக் கொடுங்கள். உடனே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி வரும். அதற்காக வேண்டித் தான் தாலியை மற்றவர்கள் எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் இவனே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பான்.

அதே சமயத்தில் கட்டும் பொழுது அந்த உணர்வுகள் ஒலியாகப் பாய்ச்சப்பட்டு அவன் கையில் தான் கொடுக்கின்றோம். இந்த மந்திர ஒலியைப் பாய்ச்சிய பின் இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் கைவல்யப்படுத்திக் கொள்ளத் தான் இந்த மந்திரம் உதவும்.

நல்லதானாலும் சரி கெட்டதுக்குப் பயன்படுத்தினாலும் சரி. இந்த உணர்வுகளைப் பதியச் செய்து இந்த நிலை ஆக்கப்படுகின்றது.
1.ஆனால் இதைத் தானே நம்புகிறோம்
2.ஜாதகம் பார்த்து மந்திரம் சொல்லிக் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று தானே விரும்புகிறோம்.
3.அதன் வழி இப்படித்தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கம் இந்த எண்ணங்களைப் பற்றி சீதாராமா…! எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? எண்ணத்தின் உணர்வுகள் எப்படி ஆகிறது…? எந்தக் குணமோ அந்தச் சக்தி எப்படி இயக்குகின்றது…?

இராமனைப் பற்றியும் ஒற்றுமையைப் பற்றியும் கல்யாணராமனையும் எங்கே பார்ப்பது…? அதற்கு மாறான எண்ணங்களைத் தான் அங்கே (யாகத்திலும் சரி ஜாதகக் குறிப்பிலும் சரி) உருவாக்குகின்றான்.

தாலி கட்டும் முன் ஒவ்வொருவரும் பரபரப்பாகப் பார்ப்பார்கள். நேரம் ஆகிவிட்டது ஆகிவிட்டது என்றே எண்ணுவார்கள்.

ஏனென்றால் இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும். இருந்தாலும் அவருடைய சொல்லின் நிலைகளே இங்கே மாற்றம் ஏற்படும்.
1.இதிலேயும் பகைமை…
2.நல்ல உணர்வுகளைச் சேர்த்து இன்னொரு உணர்வையும் சேர்த்தவுடன் இப்படிப் போராட்டம்.

இந்தப் பகைமை உணர்வுகள் தனக்குள் வந்த பின் இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…! என்று இதற்குள் கச..கச…கச..கச….! என்று அந்த உணர்ச்சிகள் மாறிவிடும்.

ஒரு நான்கு பேர் அந்தப் பற்றுடன் எண்ணினால் போதும். அந்தக் கசகசப்பு வரும். அப்படியானால் திருப்பூட்டும் பொழுது எந்த உணர்வை ஊட்டுகிறோம்…?

ஆனால் திருப்பூட்டும் பொழுது எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருடைய உணர்வுகளையும் ஏகோபித்த நிலைகள் கொண்டு வரச் செய்து
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வைக்க வேண்டும்.

பின் இந்த இரு மனமும் ஒரு மனதாகும் இந்தத் தம்பதியர்கள்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் மணமக்கள் ஒன்றி வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
5.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
6.அவர்கள் அன்னை தந்தையரின் அரவணைப்பில் அவர்கள் இருவரும் வாழ வேண்டும்
7.அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் மெய்ப் பொருள் காணும் சக்தி பெறவேண்டும்
8.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இருவருக்குள்ளும் விளைய வேண்டும்
9.இருவரது எண்ணமும் இரண்டற ஒன்றி அவர்கள் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
10.இந்த உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும்
11.அந்தப் பண்பு கொண்ட அருள் ஞானக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும் என்று
12.திருமணத்திற்கு வந்த உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோருடைய வாக்கையும் இப்படிப் பதியச் செய்ய வேண்டும்.

இப்படி நடக்கும் இந்தத் திருமண நாளை அந்தத் தம்பதிகள் எண்ணினாலே முப்பத்தி முக்கோடி தேவாதி தேவர்கள் வாழ்த்தினார்கள்…! என்ற நிலைக்கு வரும்…! எப்படி…?

நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் என்ன செய்கிறது..? இதற்குள் ஒடுங்கிவிடுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் எல்லோருடைய வாழ்த்தும் அங்கே சேர்க்கப்படும் பொழுது அந்த வாழ்த்தின் தன்மை அங்கே பதிவாகி அந்த மகிழ்ச்சியின் தன்மை அங்கே உருவாகின்றது.

இந்த மாதிரி வாழ்த்துகளின் உணர்வு பதிவான பின் அங்கே “குழந்தை இல்லை…” என்ற சொல்லே வராது…!

இதே மாதிரி திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இதைப் போன்று தியானவழி நண்பர்களைக் கூப்பிட்டு சிறிது நேரம் தியானம் இருக்கச் செய்யுங்கள்.

தியானம் இருந்தபிறகு அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போல இந்த மணமக்கள் வாழவேண்டும். அன்னை தந்தையரோடு அரவணைத்து வாழவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

தொழில் வளம் பெருக வேண்டும். அவர்கள் மற்றவரை மதித்து நடக்கும் அந்தச் சக்தி மணமக்களுக்குக் கிடைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் இருவரும் பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் இந்தெந்த வழிகளில் நடக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு பத்து பேர் சேர்ந்து அந்த இடத்தில் தியானமிருங்கள்.

நீங்கள் அக்னி குண்டம் வளர்த்து வேள்வி நடத்தித் திருமணம் செய்கிறீர்கள் அல்லவா. நீங்கள் ஒரு பத்துப் பேர் சேர்ந்து இந்த தியான முறைப்படி சொல்லி வாழ்த்துக் கூறுங்கள்.
1.தாய் தந்தையரிடம் தாலியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள்.
2.அந்த மணமக்களை (உங்கள் குழந்தைகளை) வாழ்த்துங்கள்.

பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் மற்றவர்களும் இணைந்து நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி வாழ்ந்தோம்.
1.எதிர்காலத்தில் மணமக்கள் நீங்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் குறைகளை நீக்கி வாழுங்கள். தெரிந்துணர்ந்து வாழுங்கள்.
3,உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இத்தகைய உயர்ந்த எண்ணத்தைச் செலுத்தித் திருப்பூட்டச் செய்யுங்கள்.

அதே நேரத்தில் தியானமிருந்தவர்கள் அனைவரும் யாகம் வளர்ப்பதற்குச் சமம். யாகம் வளர்க்க வேண்டும் என்றால் புற நிலை. ஆனால், நீங்கள் இதை அகத்திற்குள் இருந்து உயர்ந்த அலைகளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போல மணமக்கள் வாழவேண்டும். அவர்கள் இருவரும் என்றென்றும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும். அவர்கள் குழந்தைகள் ஞானக் குழந்தையாக எதிர்காலத்தில் வளரவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அந்த அலைகள் அங்கே படரும்.

இது தான் ஞானிகள் காட்டிய திருப்பூட்டும் முறை…!