ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 17, 2019

நம் மூச்சுக் காற்று வழியாக உருவாகும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


உதாரணமாக ஒரு பக்கம் காற்று மண்டலத்தில் ஒரு விஷம் கலந்த பொருளை விஞ்ஞானத்தால் உருவாக்குகின்றனர்.

ஒரு பேட்டரி செல் தனக்குள் காந்தத்தை உருவாக்கும் சக்தி பெற்றது. அதை எலெக்ட்ரான் (மின்சாரம்) ஆக மாற்றக்கூடிய சக்தி பெற்றது. அதிலே கலந்த இந்த விஷத் தன்மை கொண்ட பொருளை நீக்குவதற்காக நெருப்பிலே இட்டுப் புகையாக மாற்றுகின்றார்கள்.

இந்தப் புகையின் தன்மை வெளி வரும் பொழுது சூரியனின் காந்தப் புலன் அறிவு அதைக் கவர்கின்றது.
1.அது எந்தத் திசை நோக்கிச் செல்கிறதோ அந்தத் திசையில் நாம் செல்வோம் என்றால்
2.அந்த உணர்வை நாம் சுவாசிக்கப்படும் பொழுது நம் சுவாசப் பைக்குள் சென்று
3.அந்தக் கெமிக்கல் நமக்குள் இருக்கும் உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது.
4.அப்படி மடிந்து விட்டால் அந்த உறுப்புகளின் திறன் இழக்கப்படுகின்றது.

இது நம்மை அறியாமலேயே சுவாசத்தின் வழி வரக்கூடிய தீமைகள்.

நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் நமக்குள் மூச்சுத் திணறலும் கடும் நோய்களும் உருவாகின்றது.

ஆனால் நாம் சுவாசித்த கெமிக்கலின் உணர்வுகள் இரத்த நாளங்களுக்குள் சென்று இரத்தத்தில் கலந்து விட்டால்
1.இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னிக்குள் இந்த இரத்தம் புகுந்து வடிகட்டப்படும் பொழுது
2.அதிலிருந்து வெளியே வரும் பொழுது அந்த வடிகட்டும் திறன் இழந்து கிட்னியைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது
3.நாம் சந்தர்ப்பத்தால் சுவாசித்த கெமிக்கல்.

இப்படி இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை தவறி விட்டால் நம் இரத்த நாளங்களில் தெளிவாக்கும் நிலைகள் இழந்து விடுகின்றது. இதைப் போல் நம் உடலில் நம்மை அறியாமலே வாழ்க்கையில் நுகரும் சக்திகளால் தீமைகள் உருவாகின்றது.

நமக்குள் உருவான இந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது இது நம் சிறு மூளை பாகம் வரையிலும் சுழன்று கொண்டேயிருக்கும்.

இதனின் உணர்வின் தன்மை வளர்ச்சி அடைந்த பின் இந்த வளர்ச்சி நம் உடல்களிலே ஒவ்வொரு நிமிடமும் தன் பசிக்காக ஏங்கும்.. எப்படி ஒரு கோழி கருவுற்ற பின் கேறுகின்றதோ இதைப் போல தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

ஒரு மனிதன் தனக்கு வேண்டிய காரியம் நடக்கவில்லை என்றால் திரும்பத் திரும்ப அந்த வேதனை உணர்வுகளை நுகர்கின்றார். இந்த உணர்வின் தன்மை 48 நாள் ஆகிவிட்டால்
1.கோழி கருவுற்று தனக்குள் முட்டையாக மாறுவது போல்
2.நாம் நுகர்ந்த உணர்வு கருவுற்று அதனின் முட்டையாக உடலுக்குள் மாறுகின்றது.

முட்டையாக ஆன பின் அதனின் செயலாக்கங்கள் அது உள்ளுக்கே அடைபட்டிருக்கின்றது. நம் இரத்த நாளங்களிலே அது சுழலப்படும் பொழுது அது சிறுகச் சிறுக நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஊடுருவி இரத்தத்தின் வழியாக எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கும் நிலை பெறுகின்றது.

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அது இரத்த நாளங்களில் செல்லும் பொழுது நல்ல அணுக்கள் இதை ஏற்க மறுக்கின்றது. அதனின் வட்டத்தில் சென்ற பின் நல்ல அணுக்களும் சோர்வடைகின்றது.
1.அவ்வாறு சோர்வடையத் தொடங்கிவிட்டால்
2.நம் உடலும் சோர்வடைகின்றது… நம் எண்ண வலுவும் குறைந்து விடுகின்றது.

எதனைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அந்த உணர்வை நுகர முடியாது சென்று விட்டால்… உடலுக்குள் நல்ல உணர்வுகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

சோர்வடைந்தால் மீண்டும் அது நலிவடைந்து கொண்டேயிருக்கும்.

சிலரை நீங்கள் பார்க்கலாம். சாப்பாடு நிறையச் சாப்பிடுவார்கள். இருந்தாலும் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது உறுப்புகளில் அஜீரணச் சக்தி ஏற்படும்.
1.இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உடல் நலியும் தன்மையே வரும்.
2.ஏனென்றால் நல்ல அணு செல்கள் அது வாடும் தன்மை வருகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள்.

ஆகவே இதைப் போன்று நாம் எடுக்கும் இந்த உணர்வுகள் அது வந்த பின் இது இடைமறித்துச் செல்லும் பொழுது நம் இருதய வாயில்களில் இது ஊடுருவுகிறது.

நம் இருதயமோ மற்ற இடங்களுக்கெல்லாம் அழுத்தம் கொடுத்து எல்லா உறுப்புகளுக்கும் இரத்தங்களை அனுப்புகின்றது.

1.வெறுப்படையும் உணர்வைக் கொண்ட ஒரு அணுக் கரு
2.அந்த இருதயத் துடிப்பிற்குள் சென்று அதனின் நுழைவாயிலில் அது புகுந்து விட்டால் போதும்.
3.அணுவாக மாறிய நிலையில் வெறுப்பான உணர்ச்சிகளை அதன் வழி கொண்டு பரப்பிக் கொண்டேயிருக்கும்.

இப்படிப் பரப்பும் பொழுது
1.சிறுமூளைக்குள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.தூண்டும் பொழுது (அந்த உணர்ச்சி) உயிரான காந்தப் புலன்களுக்குள் அந்த அறிவின் தன்மையை இயக்குகின்றது.
3.பின் கண்… காது… மூக்கு… உடல்.. என்ற நிலைகளில் இந்த உணர்ச்சிகளை நம் உயிர் ஒலி அலைகளாக மாற்றுகின்றது.

அதன் வழிக் கொண்டு நாம் இதை மூச்சாக வெளியிட்ட சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அதே இனமான சக்திகளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

ஆன்மாவாக மாற்றிய நிலைகளிலிருந்து எப்படி ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சுகளாக வந்த பின் அதற்குக் கூவி இரையை எடுக்கும்படிக் கற்றுக் கொடுக்கின்றதோ அதே போல்
1.நமக்குள் உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது
2.நம் உயிர் அதற்கு உணவை ஊட்டிச் சாந்தப்படுத்துகின்றது.

உதாரணமாக நாம் வேதனை கொண்ட உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்ட பின் நீங்கள் “இதெல்லாம் வேண்டாம்… மகிழ்ச்சி கொண்ட நிலைகள் பெறவேண்டும்…! என்று எண்ணினாலும் அதன் உணர்வின் தன்மை வேகத் துடிப்பு கூடும்.
1.அந்த வேதனை உணர்வின் வேகம் அதிகரிக்கும்.
2.எந்தப் பாகத்தில் அந்த உறுப்புகளுக்குள் அது தேங்குகின்றதோ
3.அந்த உறுப்புகளில் வேதனையான ஒலிகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.
4.அதனால் நாம் சிந்தனையும் இழந்துவிடுவோம்.
5.அங்கங்களை இயக்கக்கூடிய சக்தியும் குறைந்து விடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நாம் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து சுவாசிக்கும் உணர்வுகள் இப்படிப் பல நிலைகளையும் நோய்களையும் உருவாக்கிவிடுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டுமா இல்லையா…?