ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 18, 2016

தீமையை நீக்கும் “தியானப் பயிற்சியும் ஆத்ம சுத்தி பயிற்சியும்” கொடுக்கின்றோம்

உங்கள் முந்தைய வாழ்க்கையில் உங்களை அறியாமல் தீமையான உணர்வுகள் பதிவாகியிருந்தால் அதை மாற்றிட தியானப் பயிற்சியாகவும் ஆத்ம சுத்தி பயிற்சியாகவும் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

ஏற்கனேவே, துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப் பழகிக் கொண்டீர்கள். பழகாதவர்களும் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

பழகிக் கொண்ட உணர்வுகளுக்கு அதை இயக்கப் பயிற்சியாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆத்ம சுத்தியை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்? அதை வைத்து நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்?

அதே சமயத்தில் தீய அணுக்கள் நம் உடலுக்குள் வராது தடுக்கும் சக்தியாக ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உடலிலுள்ள ஜீவ அணுக்களை நாம் எப்படிப் பெருக்க வேண்டும்? என்று தான் உங்களுக்குப் பயிற்சி கொடுடுத்து கொண்டிருக்கின்றேன்.

இந்தப் பயிற்சியைக் கொடுத்தும் உங்களுக்கு உடல் ஆசை வந்தால் இராவணனாக மாறிவிடுகின்றது. இராவணனாக மாறிவிட்டது என்றால் உங்கள் நல்ல குணங்களை எல்லாம் அது எடுத்துச் சாப்பிட்டுவிடும்.

அப்படிச் சாப்பிட்டுவிட்டால் அசுர குணம் கொண்ட உடலைத்தான் இந்த உயிர் உருவாக்கிவிடும். அடுத்து மனித உரு இல்லை.

ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உயிரைப் போல ஜீவ அணுக்களை ஒளியாக மாற்றி இந்த உடலுக்குப் பின் ஒளி உடல் பெறலாம்.

இனி வரும் யுத்த நிலைகளில் கடுமையான விஷத்தன்மையாகி இந்த உலகமே அழிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் இணைந்து வாழலாம்.

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை. நெருப்பிலே பட்டாலும் இந்த உயிர் அழிவதில்லை. ஆனால், உடல்கள் கருகுகின்றது. உடலிலிருந்து வெளி வந்த கருகிய உணர்வுகள் பரவுகின்றது. எவர் உடலில் படர்கின்றதோ அங்கே அந்த உணர்வின் இயக்கமாக இயக்குகின்றது.

அடுத்து இந்த உயிர் இதே வேதனைப்படுத்தும் உடலில் ஈர்த்து அதற்குள் வந்து உடலைப் பெறுகின்றது. உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும் பகுதி புழுவாகவும் பாம்பாகவும் பூச்சியாகவும் தான் பிறக்க நேருகின்றது.

இந்த விஷ அணுக்களே இங்கே இப்படிப் பரவப்படும் பொழுது மனித உடலில் இது பிறந்து விட்டால் உடலுக்குப் பின் இந்தக் கிருமிகளின் நிலை அதிகமாகும். பின், பூச்சிகளை உருவாக்கும் நிலை அதிகமாகும்.

இனிமேல் மனித உடல் பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

ஆகவே, இன்றைய நிலைகளில் கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் விட்டுத் துரத்துங்கள். கவலையும் சஞ்சலமும் சோர்வும் உங்களை அது பெரும் பிசாசாக மாற்றி உங்கள் நல்ல குணங்களை அழித்து உங்களை அழிவிற்கே கொண்டு செல்கின்றது.

கவலையும் சஞ்சலமும் சோர்வும் கொண்டு வரப்படும் பொழுது “தாங்க முடியவில்லை..,” என்ற கோபமும் பழி தீர்க்கும் உணர்வையும் இது இரண்டையும் கூட்டி வெறுப்பின் உணர்வாகி இந்த உடலையே வெறுக்கும் நிலையாகி வெறுத்து “மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகள்” கொண்டு வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். எமது குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் திரும்பத் திரும்ப அவர் உணர்த்திய நிலைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டுள்ளோம்.

நீங்கள் எல்லாம் எந்த அளவிற்குத் தெளிந்து வருகின்றீர்களோ அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்.

ஆனால், வீட்டுக் கவலைகளையோ சஞ்சலங்களையும் சலிப்பையும் எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்லும் நிலைகள் பதிவாகாது.

சாமி சொன்னார், நாம் அவர் சொன்ன வழியில் தியானிப்போம். எல்லோருக்கும் என் மேல் அந்தப் பேரன்பு வர வேண்டும். எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நல்லராக வரவேண்டும்.

எல்லோருக்கும் நல்ல உணர்வுகள் கிடைக்க வேண்டும். ஒன்றுபட்டு வாழும் தன்மை வளரவேண்டும் என்ற எண்ணங்களை எண்ணித் தியானியுங்கள்.

என்னைப் பார்க்க வேண்டும். சாமியைப் பார்த்தால் தான் நல்லது என்ற நிலை வேண்டியதில்லை. “சாமி சொன்ன வழியில்” நீங்கள் எண்ணித் தியானித்தாலே போதுமானது.

சாமி சொன்ன சக்தி இங்கே இருக்கின்றது. சாமி உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு இருக்கின்றது.

யாம் சுமார் 30 வருட காலமாக உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது. உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. அதை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எல்லோரும் அந்த அருள் வழியில் உயர்ந்தீர்கள் என்றால் அதைக் கண்டு நான் சந்தோஷப்படுவேன். அந்தச் சந்தோஷமான உணர்வை எடுத்துச் சந்தோஷமான உலகிற்குச் செல்கின்றேன்.

அதே மாதிரி சந்தோஷத்தை உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.