ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2016

பொருள்களை வரவழைக்கும் சாமியார்களின் உண்மை நிலை

ஒரு சமயம் நான் சேலத்திற்குப் போயிருக்கும் பொழுது காயத்ரி சாமிகள் என்று ஒருவர் வந்தார். அவருக்கு நண்பராக நம் தியானவழி அன்பர் ஒருவர் இருந்தார்.

அப்பொழுது நானும் அங்கிருந்தேன். அங்கே அவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.

காயத்ரி சாமிகள் வந்தவுடனே அவர் சில பேரைக் கூப்பிட்டு கலசம் வைக்கின்றார். எல்லோருடைய கையிலும் குங்குமத்தைக் கொடுத்து அவர் சொல்வதைச் சொல்ல வைக்கின்றார்.

அதைக் கொடுத்து அவர் சொல்வதைச் சொல்லச் சொன்னவுடனே, எலுமிச்சம்பழம் மேலிருந்து குதித்து மறுபடியும் கீழே விழும்.

அப்புறம் என்ன செய்வார்?

ஒரு குடத்தில் தண்ணீர் இருக்கும். இவர் அலசுவார். அதிலிருந்து சங்கு வரும்.

“ஆகா!, வந்துவிட்டது வலம்புரிச்சங்கு என்ற நிலையில் அதை எடுத்துக் கொள்வார்.

ஏற்கனவே, அந்தச் சங்குகளை ஒர் வீட்டில் எடுத்து வைத்திருப்பார். அதுதான் அங்கே வருகின்றது. (மற்றவர்களுக்குத் தெரியாது)

அப்புறம் அந்தச் சங்கை எடுத்துக் கொண்டு, அதை இரண்டாயிரம் ரூபாய், மூவாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் என்று அதை விற்றுவிடுவார்

அந்த காயத்ரி சாமிகள். இப்படி அவர் ஊரையெல்லாம் சுற்றிவருவார். அவரை அங்கே சந்திக்கும்படி நேர்ந்தது.

அப்பொழுது என்ன சொல்லிவிட்டார்? சாமி கையில் குங்குமம் கொடுக்காதீர்கள். அவர் சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கட்டும் என்று “என்னை”ச் சொல்கிறார்.

அப்புறம் அவர் வழக்கம் போல் செய்தவுடன் தண்ணீரிலிருந்து அது வருகின்றது. அப்பொழுது ஒருவர் ஆப்பிள் பழம் அவரிடம் கொடுக்கிறார்

கையில் கொடுத்தவுடன் இவர் திருப்பிக் கொடுக்கிறார்.

பழத்தை அறுத்துப் பார்த்தால் அதில் கிருஷ்ணன் பொம்மை  இருக்கின்றது. அடுத்த பழம் கொடுத்தவுடன், அறுத்துப் பார்த்தால் அதில் சிவன் போம்மை இருக்கும்.

இப்படியெல்லாம் பார்த்தவுடன், “ஆகா! பெரிய மகான் என்கிறார்கள்.

இதை வாங்கிக் கொண்டவர்கள் எல்லொரும் அதை வீட்டில் வைத்து பூஜை செய்துவிடுங்கள் என்று அந்த காயத்ரி சாமிகள் சொல்கிறார்.

அப்பொழுது அங்கிருந்த ஒரு கணக்கப்பிள்ளை இதே மாதிரி ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து அந்த பொம்மையானவுடனே அதை வீட்டில் வைத்து பூஜை செய்து வந்திருக்கின்றார்.

அப்பொழுது என்ன ஆகிவிட்டது?

அவர் வீட்டில் கல்யாணம் ஆகி ஆறு மாதமோ, மூன்று மாதமோ கர்ப்பமாக இருந்த பெண் இதை வீட்டில் வைத்துக் கும்பிட்டவுடன் கர்ப்பம் கலைந்துவிட்டது.

ஏனென்றால், அந்த விஷத்தின் தன்மை கருவைக் கலைத்து இந்த உணர்வின் தன்மை என்ன செய்யும்? அதை ஆவியின் தன்மை அடையச் செய்யும்.

இதே மாதிரி இன்னொரு இடத்தில் கல்யாணமாகி, மூன்று மாதம் கர்ப்பமாக ஒரு பெண் இருந்தது. காயத்ரி சாமிகள் கொடுத்த இந்த பொம்மை இருக்கின்ற வீட்டிற்குள் போகமாட்டேன் என்கிறது.

ஆனால், அந்தப் பெண் யார் என்றால் நம் தியானவழி அன்பர். அந்த பொம்மையை எடுத்தால்தான் நான் வீட்டுக்குள் போவேன் என்று சொல்கிறது. அதை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பெண் என்ன செய்தது. நேராக நம் தியானவழி அன்பர் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தைச் சொல்கின்றது. வீட்டுக்குள் சென்றால் என் கரு கலைந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என்கிறது.

பிறகு எம்மிடம் தொடர்பு கொண்டவுடன், நான் சரி அங்கே போக வேண்டாம், இங்கேயே இரு அம்மா என்றேன்.

பின் அந்தப் பெண்ணின் மாப்பிள்ளை, அவர்கள் வீட்டார் எல்லாம் எம்மைத் தேடிவந்தார்கள். கல்யாணம் ஆகி இந்தப் பெண் எங்கள் வீட்டிற்குள் வர மறுக்கின்றது என்றார்கள். இந்தப் பெண்ணுக்கு பேயோ, பிசாசோ பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

நீ தான் பேயைக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கிறாய். அது அங்கே இருந்தால், உன் மனைவியின் கரு கலைந்துவிடும். அந்த பொம்மையை அப்புறப்படுத்து. அப்புறம் உன் மனைவி உன் வீட்டுக்குள் வரும் என்றேன்.

இதையெல்லாம் அங்கே இருந்த Ex. MLA  பார்த்துக் கொண்டிருந்தார். பெரிய மகான் பெரிய மகான் என்று சொல்லி ஆப்பிளைக் கொடுக்கின்றார். பார்த்தால் அதற்குள் ஆவி இத்தனை வேலை செய்கிறது என்றார். இது நடந்த நிகழ்ச்சி.

அதே மாதிரி ஒரு ஐயப்பன் பாடல்களை பிரபலமாகப் பாடுபவர் ஒருவர் என்ன செய்தார்? இந்த காயத்ரி சாமிகள் புகழ் பாடுகிறார். நிறைய கவிஞர்களும் அங்கே கூடி அவரோடு சேர்ந்து அற்புதங்களைப் பாடுகின்றார்கள். அந்த காயத்ரி சாமியும் அங்கே இருக்கின்றார்.

நானும் அங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்ன நடந்தது? அவர் அங்கே பாட பாட, இரண்டொருவருக்கு அருள் மாதிரி வந்து ஆட ஆரம்பித்துவிட்டார்கள். “தையா., தக்கா என்று ஒரே ஆட்டமாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பாடகர் என்ன செய்தார்? அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காயத்ரி சாமியும் இதையெல்லாம் பார்த்து முழித்துக் கொண்டிருக்கின்றார்.

நான் மண்ணை அள்ளி, ஆடிக் கொண்டிருந்தவர்கள் மேல் போட்டேன். “டொப் என்று கீழே விழுந்தார்கள். அவர் அப்படியே பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருக்கின்றார்.

இவர் வேறு என்ன செய்தார்? ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார். இவர் கொடுத்ததை வைத்து பூஜித்தபின் பார்த்தால் பெண் குழந்தை பிறக்கின்றது. ஆக, இவர் கொடுத்த பொருள்களை வாங்கி வைத்திருந்த வீடுகளிலெல்லாம் தொல்லைகள் அவர்களை அறியாமலே வருகின்றது.

அற்புதம் என்று எண்ணினாலும்,
அந்த ஆவியின் உணர்வுகள் அங்கே என்ன செய்கிறது?
என்று அதைத் தெரிந்து கொள்வதற்காக நான் அனுபவபூர்வமாகக் கண்ட நடந்த நிகழ்ச்சிகள் தான் இது..

அப்புறம் இவர் என்ன செய்தார். சாமி உங்களை வந்து பார்க்கின்றேன் என்றார். அவர் பிறகு எம்மை வந்து சந்திக்கவே இல்லை. ஒரு சமயம் நான் சேலம் ரயில்வே ஸ்டேசனில் சென்னைக்குப் போவதற்காக நின்று கொண்டிருக்கும் பொழுது, எம்மைப் பார்த்துவிட்டார்.

பார்த்தவுடன் ஒரே ஓட்டமாக ஓடினார். ஓடி ஒளிந்து கொண்டார். இதெல்லாம் நடந்த நிகழ்ச்சி.