ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 8, 2016

மரணமில்லா பெருவாழ்வு - கொடுமையான நோய்களையும் அருள் வழியில் நீக்கும் கூட்டுத் தியானப் பயிற்சி

நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளால் உருவாக்கப்பட்டு கடும் நோயால் பல வேதனைகளால் மன நோயாக மன வேதனையாக நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் தீய உணர்வுகளை விளைவிக்கும் அந்த அணுக்களின் தன்மையை மாற்ற இப்பொழுது நாம் தியானிப்போம்.

யாரை எண்ணி நாம் தியானிக்கப் போகின்றோம்?

நம் உயிரான ஈசனை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவோம். நம் உடலுக்குள் அதைப் பரப்புவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளைப் போக்குவோம்.

உயிரால் நாம் மனிதனாக உருவான பின் நம் உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய சேவை என்ன?

அருள் ஒளி பெறவேண்டும் என்ற உணர்வினை நாம் எண்ணினால் அதையே அணுவாக்கி அந்த உணர்வை உடலாக்கி நம்மை மகிழச் செய்யும் உடலாக ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது.

நாம் அனைவரும் நம்மையறியாது வந்த நோயினை நீக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை ஏங்கிப் பெறுவோம். ஏங்கிப் பெறும் பொழுது நம் உடலுக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் குறைவதைக் காணலாம்.

இதைப் போல நீங்கள் ஒவ்வொரு நாளும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து தியானித்தால் நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்கி நோயின் நிலைகளை அகற்றி அருள் ஒளியைப் பெருக்கும்.

நான்கு நாளைக்கு எண்ணிவிட்டு என் நோய் போகவில்லை என்று எண்ண வேண்டாம். நாள் தோறும் எடுக்க அந்த அணுக்கள் பெருகப் பெருக கடும் நோயின் தன்மை நீங்கும்.

அதே சமயத்தில் நம் பற்று சப்தரிஷி மண்டலங்களுடனும் அருள் மகரிஷிகளுடன் ஒன்ற அதன் வலுவின் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றி பிறவியில்லா நிலை அடையும் என்றும் பேரின்ப பெரு வாழ்வு என்று வாழ முடியும்.

நாம் எண்ணியதை உருவாக்குகின்றது உயிர். எண்ணியதை உருவாக்குவோம் என்று நாம் அனைவரும் நோய்களை நீக்க தியானிப்போம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா

மகரிஷிகளின் அருள் ஒளி பெற எனக்கருள்வாய் ஈஸ்வரா. என் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகள் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து கடும் நோய்கள் நீங்கி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

மகரிஷிகளின் அருள் ஒளி தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களிலும் படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் அகன்று அவர்களது குடும்பங்களில் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளில் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த சர்க்கரைச் சத்து நீங்கி அருள் சுரப்பிகள் உருவாகி அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் அணுக்கள் உருவாகி அவர்களது உடல்கள் நலம் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலை பெற்று அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

இந்த மாதிரி நாம் எண்ணும் பொழுதெல்லாம் உங்கள் உடலில் உள்ள நோய்கள் அது அகன்று செல்வதை உங்களால் உணர முடியும்.

கடும் நோய்களை நீக்க நாம் அனைவரது ஒலிகளும் கேட்டுணர்ந்தோர் உடல்களில் படர்ந்து சர்க்கரைச் சத்தும், இரத்தக் கொதிப்பும், வாத நோய்களும் விஷத்தால் தாக்கப்பட்டு விஷ உணர்வால் விளைந்த அணுக்களும் இப்பொழுது கூட்டமைப்பாக ஓதும் இந்த உணர்வுகள் அனைத்தும் எல்லோருடைய உடல்களிலும் படர்ந்து கடும் நோய்களையும் நீக்கும்.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளில் அருள் சக்தி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இரத்தக் கொதிப்பு அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் உடல்களில் சாந்த உணர்வும் மலரைப் போன்ற மணம் பெற்றிடும் அணுக்களை வளர்த்து அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இருதயங்களில் அடைப்பு நீங்கி அவர்களது இருதயங்கள் சீராக இயங்கி அருள் ஞான ஒளி படர்ந்து தெளிந்திடும் மனம் பெற்று மகிழ்ந்திடும் உணர்வு பெற்று அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த விஷத் தன்மைகள் அனைத்தும் அகன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து மகிழ்ச்சி பெறும் அணுக்கள் உருவாகி அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த வாத பித்த நோய்கள் அகன்று அருள் ஒளி அவர்கள் உடல்களில் படர்ந்து அருள் ஞான அணுக்கள் விளைந்து மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த முடக்குவாதம், முழங்கால் வாதம், செவி வாதம் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ்ந்து தெளிந்திடும் மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய அணுக்கள் மறைந்து அருள் ஞான அணுக்கள் வளர்ந்து அருள் வழியில் அருள் ஞானம் பெற்று வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் வந்த வயிற்று வலி நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் ஆற்றல் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.
               
தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி தீய வினைகள் நீங்கி அவர்கள் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள்ஞானக் குழந்தைகளாக வளர்ந்து கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானமும் உலகைக் காத்திடும் ஆற்றல் பெற்று, உலகில் வரும் தீமைகளை அகற்றிடும் அருள் ஞானக் குழந்தைகளாகவும் வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.

இப்பொழுது உபதேசித்த இந்த உணர்வை உயிருடன் ஒன்றி ஏங்கி இரண்டு நிமிடம் தியானியுங்கள். உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர்ந்து தியானிப்போர் உடல்களில் நோய்கள் நீங்கி வாழ்க்கையில் நலம் பெறும் சக்தியாக உங்களுக்குள் விளையும்.

எத்தகையை வேதனையுடன் நீங்கள் வந்தாலும் இங்கே இப்பொழுது தியானித்த இந்த அருள் உணர்வுகள் அனவருக்குள்ளும் கருவுற்று தீய வினைகள் அகன்று, நோய்கள் அகன்று அருள் ஞான சக்திகள் பெருகி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அந்தச் சக்தி பெறுவீர்கள். நோயற்ற வாழ்வு வாழும் அந்த அருள் ஞான சக்தி உங்களிலே விளையும்.

நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்பொழுது உணரலாம். கை கால் குடைச்சலோ, சர்க்கரைச் சத்தோ, இரத்தக் கொதிப்போ வாத சம்பந்தப்பட்ட நிலைகளோ அல்லது மன நோயோ அனைத்தும் இப்பொழுது அகலும். அருள் ஞான ஒளி உங்களுக்குள் இப்பொழுது பெருகும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலிலுள்ள சர்வ நோய்களும் நீங்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வுகள் உங்களிலே விளையும்.

உங்களுக்குள் மகிழச் செய்யும் அணுக்கள் வளரும். அருள் ஒளி வளரும். மெய்ப் பொருளைக் காணும் திறன் வளரும். உங்கள் பார்வையால் நினைவால் சொல்லால் பிறரின் துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

பிறரின் துன்பங்களைப் போக்கும் வலு நீங்கள் பெற்றால் பிறரின் துன்பங்கள் உங்களை அணுகாது தடைப்படுத்த உங்களால் முடியும். (உங்கள் உணர்வால்)

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர்ந்து உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாக வளர்ந்திட சகோதர உணர்வை வளர்த்திட மன பேதமின்றி, இன பேதமின்றி, மொழி பேதமின்றி, மத பேதமின்றி வாழ்ந்திட அருள் சக்திகள் உங்கள் மூச்சால் வளர்ந்து உலக மக்களைக் காக்கும் அருள் சக்தி உங்களிலே விளைந்திட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகி உங்கள் உயிரான ஈசன் அதைக் கவர்ந்து அந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலாக சிவமாக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் உங்கள் கண் பார்வையிலும் மகிழ்ச்சி பெறும் சொல்லாக உருவாக சீதாராமனாக எண்ணங்களைத் தோற்றுவிக்கவும் அருள் ஒளி படர்ந்து நல் வினையாக உங்களுக்குள் விளைந்து நல்ல அரண் உங்கள் உடலாக அமைந்திடப் பிரார்த்திக்கின்றேன்.

இந்தப் பிறவியிலேயே நீங்கள் அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு பெறுவீர்கள்.

நீங்கள் எண்ணியதை உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கி உங்கள் உடலைச் சொர்க்கலோகமாக்கி உங்கள் உயிரைச் சொர்க்கவாசலாக அமைத்திட மாமகரிஷியின் அருள் உங்களுக்குள் வளர எமது அருளாசிகள் உறுதுணையாக இருக்கும்.

உங்கள் பார்வை தீமைகளை அகற்றிட மெய் வழியினைப் பரப்பிடும் ஆற்றல்மிக்க தியான வழி அன்பராக வளர்ந்திட பேரின்ப வழியில் பேரின்ப வாழ்க்கை வாழ்ந்திட என்றும் அழிவில்லாத வாழ்க்கை நீங்கள் வாழ்ந்திடவும் மரணமில்லா பெரு வாழ்வு வாழ்ந்திடும் அருள் ஒளி உங்களில் படர்ந்திட அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்திட அது வளர்ந்திட வளர்த்திட குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அருள் வழி குரு அருள் ஞான குருவாக அருள் வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்திகள் உங்களுக்குள் வளர்ந்திட தியானிக்கின்றேன், பிரார்த்திக்கின்றேன்.

இதைப் படித்துணர்ந்தோர் உணர்வுகளில் கடும் நோய்கள் இப்பொழுது குறைந்திருப்பதைக் காணலாம், உணரலாம்.

இதைப் போன்று காலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல்களில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்.

எங்கள் உடலில் நல்ல இரத்தங்கள் உருவாக வேண்டும். எங்களுக்குள் ஞானங்கள் பெருக வேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் தியானியுங்கள்.

இப்பொழுது விளைய வைக்கும் அருள் ஞான வித்து உங்கள் நினைவால் நீங்கள் எண்ணும் பொழுது உங்கள் உயிர் அந்த அணுக்களை வளர்த்து உங்களை நலம் பெறச் செய்யும்.

மன பலம் பெருகும், மன வளம் பெருகும், அருள் ஞானம் பெருகும். அருள் ஞான வழியில் என்றும் பேரின்ப பெருவாழ்வு வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்.

ஆகவே, எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது, உயிர் ஈசன். எண்ணியதை உடலாக்குவதும் உயிரே. எண்ணியதைக் காத்தருள்வதும் உயிரே. ஆண்டவனாக இருப்பதும் உயிரே.

நம்மைக் காத்தருள்வதும் ஈசனாக இருந்து உருவாக்குவதும் நம்மை என்றென்றும் அரணாக நமக்குள் பாதுகாப்பு வைத்திருப்பதும் நம் உயிரே.

ஓம் ஈஸ்வரா குருதேவா.