ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2016

கூட்டுத் தியானத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் பாதுகாப்புக் கவசம்

இன்றைய உலகில் கதிரியக்கப் பொறிகளை (LASER) விண்ணிலே செலுத்தியதால் அந்தக் கதிரியக்கப் பொறியால் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் விஷத்தைத் தடுத்து நிறுத்தும் ஓசான் திரை கிழிந்துவிட்டது.

அதனால் விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களை நம் பூமி இழுக்கும் பொழுது அது வடிகட்டாமல் நேரடியாக இங்கே வருவதனால் காற்று மண்டலத்தில் கடுமையான விஷத் தன்மைகள் படர்கின்றது.

அது எந்தெந்தப் பகுதிகளில் படர்கின்றதோ அந்த விஷத் தன்மை கொண்ட எண்ணங்கள் கொண்டு உணர்வுகளில் துரித நிலைகள் பெறுகின்றது. ஆகவே மனிதனின் உடல்களில் அந்தப் பாதிப்புகள் வருகின்றது.

நாம் இதைப் போல கூட்டுத் தியானங்கள் இருந்து மகரிஷிகளின் உணர்வுகளைப் பரப்பி விட்டால் ஓசான் திரை கிழிந்தாலும் நம் உணர்வுகள் வலுப் பெறும் பொழுது ஒதுக்கித் தள்ளி தீமைகள் வராது தடுக்கும் தன்மை வரும்.

ஒரு மனிதனால் இது முடியாது.

நாம் பலரும் சேர்த்து இந்த உணர்வின் தன்மை எண்ணத்தின் தன்மைகள் கொண்டு ஆங்காங்கு நாம் இந்தக் கூட்டுத் தியானங்களை நடத்தி அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பரப்பிக் கொண்டால் நமக்குப் பாதுகாப்புக் கவசமாக மாறுகின்றது.

இந்த நஞ்சின் தன்மை மடிந்தால் நமக்குள் அந்த உணர்வின் ஒளியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம். அதைப் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் சொல்வது.

விஞ்ஞான அறிவு கொண்டு செய்தாலும் சரி மெய்ஞான அறிவு கொண்டு அதை வெல்லலாம்.

மெய்ஞான அறிவினை உங்களுக்குள் வளர்க்கலாம் என்ற நிலையைத்தான் நமது குரு அருள் உங்களுக்குள் விளைந்து அதைப் பெறும் தகுதியை உருவாக்குகின்றோம்.

நாம் எண்ணிய உணர்வுகளை “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்” என்று நமக்குள் உருவாக்கும் உயிரான ஈசனை மதிப்போம். அவன் நாமத்தைச் சொல்வோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா, அவனே நமக்குள் நின்று இயக்குகின்றான். எண்ணிய உணர்வுகள் நமக்குள் கடவுளாக நின்று இயக்குகின்றது.

அருள் ஒளியை நாம் எண்ணும் பொழுது ஓ என்று ஜீவ அணுவாக மாற்றும் பொழுது நமக்குள் கடவுளாக இருந்து தீமைகளை அகற்றும் சக்தியாக விளைகின்றது.

ஆகவே, நாம் இடும் மூச்சலைகள் அனைத்தும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பெருகுகின்றது. உங்களால் முடியும்.