ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2014

நம்மைத் திட்டுபவர்களிடம் “திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் ரஎன்று சொல்லிவிடுங்கள்

ஒவ்வொரு நிமிடமும், நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும், “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி, உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி, உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு, உங்களைத் திட்டியவர்கள், அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது, நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் எதையெல்லாம் பேசி, எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ, அந்த சமயம், நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,
அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ,
அது அவர்களுக்கு நடந்து,
“அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும்”
என்று நீங்கள் எண்ணுங்கள்.

இப்பொழுது, உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால், நாம் சுத்தமாகக் கேட்டுக் கொண்டே இருந்தபின், என்று நாம் அவரிடம் சொல்லிவிட்டால், அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஆத்ம சுத்தியைச் செய்துவிட்டு, திட்டியவரிடம், “நீங்கள் எப்படியெல்லாம் திட்டினீர்களோ, அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம்” என்று
சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்
அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.

நாம் ஆத்மசுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன், “ஆ” என்று அவர்கள் இழுத்தால் போதும், அவர்கள் அறியாமல் செய்த தவறை, நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று, அவர்கள் செய்த தவறை உணர்த்தும். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.