ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2014

உயர்ந்த சக்திகளை எளிதில் பெறச் செய்கிறோம் - பதிவு செய்து கொள்ளுங்கள்

1. மகரிஷிகளினுடைய நிலை என்ன?
விண் வெளியின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து,
ஆற்றல்மிக்க சக்தியாக தன் உடலில் சேர்த்து, உயிரின் தன்மையில்
உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றார்கள்.

அவர்கள் எதை எண்ணினாலும், அந்த உணர்வின் சக்தியைக் கவர்ந்து, திடீரென்று மழையை வரவழைக்க வேண்டுமென்றாலும், மழை வர வைப்பார்கள்.

எந்த எண்ணங்கள் கொண்டு, அந்த உணர்வின் தன்மையைக் கண் ஒளியாலே பாய்ச்சி, இந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சினாலும், ஒன்றை உருமாற்றக் கூடிய சக்தியும் அவர்களுக்கு உண்டு.

அவர்கள் எந்த எணணத்தைக் குவித்தாலும், மகரிஷிகள் எதையுமே சிருஷ்டிக்க வல்ல சக்தி பெற்றவர்கள். அவர்கள் இந்தப் புவியின் ஈர்ப்பில் இல்லாதபடி, அதனின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, விண்ணிலே வரும் பேராற்றல் மிக்க விஷத்தின் தன்மையையும் ஒளியாக மாற்றி, ஒளிச் சரீரமாக இருக்கின்றார்கள்.

ஆக, அந்த ஒளி சரீரத்திற்குள் நின்று இன்றும் ஜீவித்துக் கொண்டு, விண்ணிலே தோன்றக் கூடிய, உணர்வின் சத்துக்களை இன்றைக்கும், நம் குருநாதர் முதற்கொண்டு பெற்று, வளர்த்து வருகிறார்கள். 

நமது குருநாதர், இன்று இந்தச் சரீரத்தில் கொடுத்தது வேறு, ஆனால், அதற்கு முன், அந்த ஒளியின் சக்திதான் அந்தக் குருநாதர் உடலிலிருந்து இயக்கியதே தவிர அவர் அதற்கும் முன் சென்று, சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்தவர்.

அங்கிருந்து இயங்கி, அந்த ஒளியின் ஆற்றல்தான்
இன்று நாம் ஈஸ்வரபட்டர் என்ற நமது குருநாதர்
உடலுக்குள், உணர்வுக்குள் அது சென்று,
அதன் தொடர் கொண்ட நிலைகளில்,
அந்த உணர்வின் ஆற்றல்களேதான் இயங்கியது.

அதன் வழியில் பல உண்மையினுடைய நிலைகளை அறிந்துணர்ந்து, அந்த உடலில் நின்று வெளிப்பட்ட நிலைகள்தான் குருநாதர், இன்று இந்த உடலில் நின்று நமக்கு வெளிப்படுத்தினார்.
2. உங்களுக்குள் பதிவுகள் ஏற்படுத்தத்தான் உபதேசிக்கின்றோம்
அவர் வெளிப்படுத்திய அந்த உணர்வின் ஆற்றல் கொண்டுதான் யாம் மெய்யை எடுத்து, உங்களுக்குள்ளும் இந்த நிலைகளை பரவச் செய்கின்றோம்.

விஞ்ஞான உலகத்திலே இன்று விஷத்தின் நிலைகள் பரவிக் கொண்டிருக்கக் கூடிய நிலைகளை முறியடிக்கக்கூடிய சக்தியாக, உங்கள் உணர்வின் தன்மையைக் கூட்டச் செய்வதற்குத்தான் இதைப் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால், இதிலே தொட்டு, அதிலே தொட்டு, யாம் பேசுவது அர்த்தம் புரியவில்லை என்று எண்ண வேண்டாம்.

அர்த்தம் புரிவதற்காக வேண்டி, இதைச் செய்யவில்லை உங்களுக்குள் பதிவுகள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்குத்தான், இதைச் செயல்படுத்துகின்றோம்.
நீங்கள் தெரிந்து,
திரும்பி எதையுமே எடுக்க முடியாது.

ஆகவே, யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கூர்மையாக உற்று நோக்கி பதிவாக்கிக் கொண்டால், 
நீங்கள் அதை நினைவுபடுத்தும் பொழுதெல்லாம்,
காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் 
ஆற்றல் மிக்க சக்திகளை எளிதில் பெறமுடியும்.

அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். எமது அருளாசிகள்.