ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2014

தை பிறந்தால் வழி பிறக்கும் - பொங்கல் திருநாள்

1. சூரியன் பூமியில் உள்ள அனைத்தையும் பொங்கி வளர்க்கச் செய்கின்றது
சந்திரன் சிறுகச் சிறுக தேய்ந்து தன் முழு ஒளியும் மறைந்து, பின் அக்கோளின் ஜீவ பிடிப்புக் கொண்டு, சூரியனின் ஒளியைச் சிறுகச் சிறுகப் பெற்று பௌர்ணமி ஆகின்றது. இதைப் போல், மனிதனாக வந்த நாம் சர்வத்தையும் அறிந்திடும் நிலை பெற்றவர்கள்.

ஒளி பெற்றால் எவ்வாறு பிற பொருள்கள்
நம் கண்களுக்கு புலன் ஆகின்றதோ
இதை போல் மனிதனான உணர்வின் நிலைகள் கொண்டு, நல்ல உணர்வின் ஒளியை உயிரின் ஒளியாக மாற்றி, ஒளியின் சுடரில் இருந்து மறைக்கும் தீய உணர்வுகளில் இருந்து நம்மை காக்க அம்மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் சுவாசித்து நஞ்சினை நீக்க வேண்டும் என்ற நிலை உணர்த்தவே தை பிறந்தவுடன்பொங்கல்பண்டிகையை ஏற்படுத்திக் காட்டினார்கள்.

சூரியனின் பொங்கல் எப்படி? என்று மெய்ஞானிகள் உணர்த்தியதை பார்ப்போம். சூரியன் தன் உணர்வின் ஆற்றல் கொண்டு வெப்ப காந்தங்களாகப் பரவச் செய்து, எதை எதையெல்லாம் தனக்குள் எடுத்து உயர்ந்த நிலைகள் பெற்றதோ, அதை போல நாமும் பெறவே பொங்கல் பண்டிகை.

சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் ஒரு ரோஜாப் பூ வெளிப்படுத்தும் மணத்தை தான் கவர்ந்து கொண்டால், அந்த ரோஜாப் பூ மணத்தின் அலைகளாலும் ரோஜாப் பூ செடியின் மேல் சூரியனின் காந்த சக்தி படும்போது, அதற்குள் இருக்கும் உணர்வை தனக்குள் கவர்ந்து, ரோஜாப் பூ செடியைப் பொங்க வைக்கின்றது.

அதே மாதிரி நாம் நெல் பயிரிட்டு சுவைமிக்க நிலைகளாக உணவாக உட்கொண்டலும், இதனின்று வெளிப்படும் சத்தை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்தாலும், அதே சூரியனின் காந்த சக்தி இதற்குள் இருக்கக்கூடிய காந்தத்திற்குள் மோதப்பட்டு, இது இயக்கப்பட்டு, எதனின் இயக்கமோ அதனின் உணர்வை தனக்குள் கவர்ந்து பொங்கி வழிகின்றது. வையெல்லாம் சூரியனால் படைக்கப்பட்ட நிலைகள்.
2. மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்வதுதான் பொங்கல் திருநாள்
நம் உடலான பிரபஞ்சத்திற்குள் நம் உயிர் சூரியனாக இருந்து, உயர்ந்த எண்ணங்களை (மகரிஷிகளின் அருள் உணர்வுகளை) நமக்குள் செலுத்தி,
நாம் நம் உடலிலே
பொங்கச் செய்வதுதான் பொங்கல் நன்னாள்.

சூரியன் அனைத்து சக்திகளையும் பொங்க வைக்கின்றது. நம் உடலிலே இருக்கக்கூடிய சக்தி, நமக்குள் நன்றாக இருந்தாலும் இன்று நாம் பொங்கல் வைக்கும்பொழுது, எவ்வாறு அறுசுவையாகப் படைக்கின்றோமோ அதைப்போல் மனித வாழ்க்கையில் நாம் பொங்க வைக்க வேண்டும்.

ந்த மகரிஷிகள் நஞ்சைப் பிளந்து உணர்வின் தன்மை தனக்குள் விளைய வைத்து, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி விண்ணுலகில் இன்றும் நிலை கொண்டுள்ளார்கள்.

அவர்கள் படைத்த உணர்வுகள், விண்ணிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை முறித்து தான் உணவாக எடுத்துக் கொண்டு, அதனின்று வெளிப்படும் உணர்வின் அலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது நமது பூமிக்குள் வந்து கொண்டிருக்கின்றது.

அவ்வாறு வரும் ந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்து, நமக்குள் அந்நிலையைச் சேர்க்கும் நிலையாக, ஒரு வித்தாக “தை பிறந்தால் வழி பிறக்கும்என்று அமைகின்றது. அந்த ஞானியின் அருள் சக்தியான அந்த வித்தை நமக்குள் விளையச் செய்ய வேண்டும்.

நம்முடன் பகைமை கொண்டவர்களின் உணர்வு அலைகளில் மகரிஷிகள் அருள் ஒளி படரவேண்டும், அவர்கள் பொருளறிந்து செயயல்படும் திறன் பெற வேண்டும், அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை பெறவேண்டும் என்று எண்ணத்தை நாம் எண்ணி
நம் உயிரான நெருப்புக்குள்
நம் உடலான பாத்திரத்திற்குள் செலுத்தி,
இதைப் பொங்க வைக்க வேண்டும் என்ற நிலை கொண்டுதான்,
பொங்கல்” திருநாளை உருவாக்கினார்கள் மெய்ஞானிகள்.

தைப் பொங்கல்அன்று வீட்டை மட்டும் சுத்தப்படுத்தி வெள்ளை அடித்து அழகு செய்தால் போதாது. நம் ண்ங்களையும் உணர்வுகளையும் சுத்தம் செய்து நல் உணர்வலைகளை நமக்குள் கூட்ட வேண்டும்.
3. அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற “மூச்சலைகளை” உலகம் முழுவதும் பரவச் செய்வோம்
நாம் அனைவரும் ஒரே மகிழ்ச்சி கொண்டு,
வ்வொரு உள்ளங்களில் அறியாது சேர்ந்த அழுக்குகள் நீங்கி
மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் வளரவேண்டும் என்று
எல்லோரும் எண்ணினால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்படுகின்றது. கவரப்பட்டு பரவுகின்றது.

நாம் அனைவரும் இத்தகைய உணர்வலைகளை நமக்குள் மைத்து, நாம் வெளியிடும் மூச்லைகளை சூரியனின் காந்த சக்தி கவந்து நமது வீட்டிற்குள்ளும், தெருவிற்குள்ளும், நாடு முழுவதும் படரச் செய்கின்றது. நமது உடலுக்குள்ளும் படர விடுகின்றது.

மகரிஷிகள் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் விடும் மூச்சலைகள், அந்த உணர்வை அனைவரும் கூட்டாக எடுக்கும்போது,
பகைமை மறைகின்றது.
சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட வேதனையான நிலைகள் மறைகின்றன.

இந்த உர்வின் அலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் நஞ்சின் தன்மையை செயலிழக்கச் செய்கின்றது.

வாழ்க்கையில் வந்த நஞ்சினை நீக்கி, உயிரினை ஒளியாக மாற்றி, உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நிலையான சரீரம் கொண்டு இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் நுகர்ந்து,
நம்மைச் செயலற்றதாக்கச் செய்யும்
எத்தகைய தீய உணர்வுகளையும் மாற்றி மைக்கும்
நன்னாள்தான் பொங்கல் திருநாள்.

இப்படிச் செய்வதற்குத்தான் மெய்ஞானிகள் வருடத்திற்கு ஒரு நாளாக இதைத் தேர்ந்து எடுத்து, நாம் எண்ண வேண்டிய நல் உணர்வை உணர்த்தினார்கள்.