ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2014

மெய்யை அறியச் செய்வான் நாரதன்


1. மெய்யை உணர்த்தக்கூடிய அணுவின் ஆற்றல் - நாரதன்
உலகை சிருஷ்டிக்க ஒரு அணுவின் தன்மை ஆகின்றது. அத்தகைய அணு தான் “நாரதன்’ என்பது.

ஆக, ஒரு கோளின் தன்மையானாலும், ஒரு உணர்வின் தன்மயானாலும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு உணர்வின் ஆற்றல் மற்ற பொருள்களில் பட்டவுடன், அது உருவாக்கும் மாற்றமும்,
பூமியிலேயோ, மற்றவைகளிலோ,
அதிசயப்படத்தக்க அந்த உணர்வின் ஆற்றல்கள்
இயங்குவதை நாம் பார்க்கலாம்.

இன்று நாம் சிறுநீரை டெஸ்ட் செய்யும் பொழுது, நாம் ஒரு திரவத்தை ஊற்றியவுடன், அதற்குத்தக்கவாறு அதனுடைய உணர்வுகள் எவ்வாறு பிரித்துக் காட்டுகின்றது. அதனுடைய சத்துக்கள் எவ்வாறு பிரித்து, இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான், அந்த மெய்ஞானிகளிடம் இருந்து வெளிப்படுவதை, மனிதன் சுவாசத்தில் ஈர்க்கப்பட்டால், மனிதனுக்குள் அந்த மெய்யை உணரக்கூடிய  ஆற்றல்கள் நமக்குள் வளர்கின்றது.
 
நாரதர் என்ற அலையைச் சுவாசிப்பதற்குத்தான், இன்று நாம் செய்யும் இந்தத் தியானத்தின் பலன். ஆக, நாரதன் கலகப்பிரியன். அந்தக் கலகமோ நன்மையில் முடியும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய, அந்த மெய் ஒளியின் தன்மையைத் தான் நாம் இந்த தியானத்தால் சுவாசித்து, அந்த உணர்வின் ஆற்றலை நம் உடலுக்குள் செலுத்திவிட்டால்,
அந்த மெய்ஞானிகள் எவ்வழிகளில் சென்றார்களோ,
அதைப் போன்று மெய் ஒளியின் தன்மையை
நம் எண்ணத்திலே தோற்றுவித்து, அந்த உணர்வுகளைச் சுவாசித்து,
நம் உடலுக்குள் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெறுகின்றோம்.

அப்படி சக்தி பெற்றபின், பேரண்டத்தின் பேருண்மையை, நமக்குள் உளமாற வளர்த்துக் கொள்ளும் ஆற்றலும், வருகின்றது. அந்த ஆற்றலை வளரச் செய்வதற்குத்தான், இந்த தியானத்தைச் செய்கின்றோம்.
2. இருளான பொருள்களை எரித்து வரும் வெளிச்சத்தால் - பொருளைக் காண்கின்றோம்
இன்று, இருளான பல பொருள்களைச் சேர்த்து ஒரு விளக்கை எரித்து, மற்ற பொருள்களைக் காண்கின்றோம். மற்ற பொருள்களைச் சேர்த்து, ஒன்றை உருவாக்கச் செய்கின்றோம்.

அந்த உணர்வின் நிலைகள் ஆக்குவது போன்று,
நமக்குள் நம் எண்ணத்தை ஒளியாக்கி,
நமக்குள் எண்ணும் நிலையினுடைய தன்மையை,
சிருஷ்டிக்கும் தன்மை பெற்ற நாம்
ஒவ்வொருவரும் செய்ய முடியும்.

அவ்வாறு செய்யும் தன்மைதான், அந்த மெய்ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படுத்தும், அந்த நாரதரான உணர்வின் அலைகளை நாம் சுவாசித்து, நம்மையறியாமல் இருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையிலிருந்து நம்மை மீட்டுத்தர, இந்த நாரதர் என்ற இந்த அணு, நமக்கு வழிகாட்டும்.

இன்று ஒருவன் நமக்குத் துன்பம் செய்தான் என்றால், இப்படிச் செய்தான் என்று நாம் ஆத்திரப்படுகின்றோம். “இரு நான் பார்க்கிறேன்” என்றும், “உன்னை அழித்துவிடுவேன்” என்று பயமுறுத்தி இருந்தால், அவனை நினைக்கும் பொழுதெல்லாம் “திடுக்… திடுக்…” என்று நமக்குள் பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்.

அந்த பய உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து, அப்பொழுது நாம் செயலிழக்கச் செய்யும் நிலையும், மேலும் பல நிலைகள் வருகின்றது. ஏனென்றால், அவன் பதித்த நிலைகள் நமக்குள் வேலை செய்கின்றது.

உங்களுக்குள் எத்தகைய பயம் வந்தாலும், மெய்ஞானியரின் அருள் சக்தியைப் பதிவு செய்து, யாம் சொன்ன முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டுமென்று ஏங்கி தியானியுங்கள்.

“ரிஷியின் மகன் நாரதன்” அவன் ஒரு முனிவன். ஏனென்றால், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக் கூடிய ஒளிதான், ரிஷியின் மகன். அந்த ஒளியிலிருந்து வந்ததுதான் அந்த அணு நாரதன். அந்த உணர்வின் செயலாக்கம்தான் நாரதன்.
அந்த உணர்வின் தன்மை வந்தவுடன், அதன் ஆணைப்படி அது நல்லதை வழிகாட்டி, இருளை மாய்க்கும் தன்மை – முனி என்ற நிலையை அன்று தெளிவாகக் காட்டி உணர்த்தியிருக்கிறார்கள். ஆகையினாலே, அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெற்று, இருளினை நீக்கி அருள் வழி வாழ்வோம்.

மெய்ஞானியர்களின் அருள் சக்தியை நம்முள் பெருக்கிக் கொள்ள வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலைதான் இந்த உபதேசம்.