ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2014

பூமி உறைபனியாக மாறினால் திரும்பிவிடும்

1. யுரேனியம் எப்படி உருவாகின்றது?
சூரியன் தனது இயக்கத்தால், விஷத்தின் தன்மையை, தனது பாதரசத்தால் தாக்கி, வெப்பம், காந்தம் என்ற நிலைகளை உருவாக்கி, கடைசி நிலைகளில் உள்ள விஷத்தைத் தனக்குள் கவர்ந்து, அந்த விஷம் ஒரு இயக்க அணுவாக மாறி, அது எதிலே போய் இணைகின்றதோ, அந்த உணர்வை அது இயக்கும். 

27 நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களை அமைத்து, அதிலே வருவதைத் தன் உணவாக உட்கொண்டாலும், அவை சூரியன் அருகிலே வரப்படும்போது, தனது பாதரசத்தால் மோதுவதனால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

ஆனாலும் சூரியன் கவரும்போது, பூமி இடைமறித்தால், பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வருவது மோதி, மின்னலாகி, கடலிலே பட்டால், யுரேனியமாக மாறுகின்றது.
மரத்தில் பட்டால் கருகுகின்றது. பூமியின் பரப்பில் பட்டால், ஊடுருவி நடு மையம் அடைகின்றது.

இவ்வாறு, 27 நட்சத்திரங்களும் கலந்து, கொதிகலனாகி, இயக்கச் சக்தி வருகின்றது. இந்தக் கலவைகள், பலவிதமான வித்தியாசமான நிலைகள் வரப்படும்போது, உணர்வுக்கொப்ப பாறைகளும், மண்களும் மற்றும் பலவிதமான நிலைகள் மாற்றமாகிக் கொண்டேயுள்ளது.

இதையெல்லாம் பார்ப்பதற்கு, இரண்டு வருடம், மின்னல் அதிகம் உள்ள இடங்களுக்கு குருநாதர் கூட்டிச் சென்று, சாப்பாடு இல்லாமல் பார்க்கச் சொன்னார். ஒரு நிமிடம் மாறிவிட்டால், பார்க்க முடியாது.
இப்படி, கடலில் மின்னல் அலைகளில் தாக்கப்படும்போது, மணலாக உருவாவதை, விஞ்ஞானிகள் யுரேனியமாக மாற்றி, கதிரியக்கப் பொறிகளாக மாற்றி, அணுகுண்டுகளாக வெடிக்கச் செய்து, இது வெடித்த பின்,
அதே இயக்க அணு தனக்குள் எடுத்து, பூமியில் பரவியிருந்தாலும், 
அதிலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள் பிரபஞ்சத்தில் படர்ந்து,
அருகில் இருக்கும் புதனுக்குச் சென்று, உலோகங்களாக மாறி,
புதனில் வெளிப்பட்டு, சூரியனில் பாதரசமாக மாறுவதை, 
விழித்திருந்தே பார்க்கச் செய்தார்.

பிரபஞ்சத்தில் நம் பூமி ஒன்றில்தான், தாவர இனங்களின் வளர்ச்சி உள்ளது. தாவர இனங்களின் மணத்தை உயிரணு நுகர்ந்து, இயக்கச் சக்தியாக மாறுகின்றது. தாவர இனத்தின் சத்து உயிரிலே மோதி, ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது. இதுதான் பிரணவம்.

மற்ற கோள்களில் விஷத்தின் தன்மை இருப்பதினால், அது உயிரில் மோதும்போது பிரணவம். அங்கு விஷத்தின் ஆற்றலே வரும், வளர்ச்சியும் குன்றி இருக்கும். 

நம் பூமியில் மட்டும்தான், இதன் உணர்வுகள் வளர்ச்சியாகி, மனிதனாக வளரச் செய்கின்றது. இதைத் தெளிவாக தெரிந்துகொள்தல் வேண்டும்.

ஆக, அணுகுண்டுகளை வெடித்து இங்கு பரப்பச் செய்யும்போது, இதன் துணை கொண்ட கோள்களிலும், இது சேர்கின்றது. நமது பூமியில் கதிரியக்கம் எங்கெல்லாம் அதிகமாகின்றதோ, அங்கெல்லாம் உணர்வுகள் கரைகின்றது.
கரைந்த உணர்வுகள், பூமி சுற்றப்படும்போது,
அது பூமிக்குள் போகும் பக்கமெல்லாம்,
மோதல் ஏற்படுகின்றது.

எப்படி கடல் அமைதியாக இருப்பினும், அதில் உள்ள பாறைகள் மோதும்போது, சப்தங்கள் வருகின்றதோ,  அதைப்போல கூழாக பூமிக்கு அடியில் மோதும்போது, பாறைகளில் உள்ள இடைச் சந்தில் மோதி, வேகமாக ஓடும்போது,  அதிர்வு வருகின்றது. ஆகவே, இது மோதலில் வெப்பம் அதிகமாகும் பொழுது பூமி பிளக்கின்றது.
2. லேசர் கதிரியக்கங்களால் நம் பூமிக்குள் ஏற்படும் தீய விளைவுகள்
இதே மனிதன் லேசர் கதிரியக்கங்களை உருவாக்கினான். எப்படி மின்னல் ஊடுருவி ஓடுகின்றதோ, அந்த லேசர் இயக்கத்தை தனக்குள் எடுத்து, மின்னலைப் போல லேசரை உருவாக்கிவிட்டான்

மனிதனால்  இப்படி ஏற்படுத்தப்பட்ட உணர்வுகள் அனைத்தும், சூரியனையே சாடுகின்றது, சூரியனே அழியும்  நிலைகள் உருவாகிவிட்டது. அதற்குப் பின், உணர்வுகள் சிறுத்துவிடும். 

அதற்குமுன், இதை எப்படி மாற்ற வேண்டும் என்பதுதான், நமது குருநாதர் காட்டிய இந்த அருள்வழிகள். அதைத்தான் இப்பொழுது, யாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கின்றோம்.
3. நம் பூமி உறைபனியானால் திரும்பிவிடும்
இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் அழியப் போகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிர் இயக்கங்கள், எந்தப் பக்கம் குண்டுகளைப் போடுகின்றார்களோ, அங்கே சூரியனின் ஒளிக்கதிர்கள் விழாது, உறைபனியாகி, பூமி திரும்பப் போகின்றது.

அது உறைபனியாகி விட்டால், சூரியனின் இயக்கம் இல்லை என்றால், பூமி நகர்ந்து செல்லும் பொழுது குளிர்ச்சி அதிகமாகி, இந்த உணர்வுகள் உறையும் பருவம் வருகின்றது. அதிலிருந்து தப்ப முடியுமா என்றால் முடியாது?

இன்று உள்ளது நாளை இல்லை. என்றும் நிலையானது உயிர். தீயிலே குதித்தாலும் உயிர் வேகாது.

உடலில் உள்ள உணர்வின் தன்மை, உடலில் உள்ள அணுக்களை,
உயிரைப் போல உருவாக்கிவிட்டால்
என்றும் அழியாது, இதுதான் வேகாநிலை.
               
அந்த வேகாநிலையை இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், வட துருவத்தின் வழி கவரும் பொழுது, பூமி உறைபனியாகி எடை கூடி குடை சாயும் நிலையில் இருந்தது.
அகஸ்தியன், பூமியை தென்பக்கமாக திசை திருப்பி
அதாவது சூரியன் பக்கமாகத் திருப்பி வைத்து,
சூரியனின் கதிர்கள் தென் துருவத்தின் வழியாகக் கவரப்பட்டு,
உறைபனிகளை உருகச் செய்து,
கடல் நீராகப் பெருக்கச் செய்து
இன்று வரை சீராக இயங்கிக் கொண்டுள்ளது.

அதைத்தான் சிவன் அகஸ்தியனைத் தெற்கே அனுப்பி பூமியைச் சமப்படுத்தச் செய்தான் என்று காவியத் தொகுப்புகள் உண்டு.

அதில் உள்ள மூலத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதைப் படிப்போர் அனைவரும் அந்த அகஸ்தியனைப் போன்று உலகைக் காத்திடும் அருள் சக்தி பெறவேண்டும். அருள் ஞானிகளாக வரவேண்டும் என்பதுதான் நமது குரு காட்டிய அருள் நெறிகள்.