ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2013

மிருகங்களுக்கு அதிக நோய்கள் வருவதில்லை, மனிதனுக்கு ஏன் வருகின்றது - விளக்கம்

1. நமக்கு நோய் வர முக்கியமான காரணம்
உதாரணமாக, நாம் குழம்பை வைக்கும் பொழுது,
அதில் எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிக் கொள்கிறோமோ
அதனின் சுவை கொண்டு
அந்தக் குழம்பின் தன்மையை மாற்றிவிடுகின்றது.

நாம் எல்லாவற்றையும் சமமாகப் போட்டு, சுவை கொண்டதாக மாற்றும் பொழுது அது அமிர்தமாக இருக்கின்றது. அதைப் போன்று, நாம் சுவை கொண்டு சுவையாகச் சமைக்கும் எண்ணத்தை உருவாக்கி, சுவை கொண்ட நிலைக்கு உருவாக்கும் உணர்வின் ஆற்றல்மிக்க இந்த மனித சரீரம் பெற்றுள்ளோம்.

இருந்தாலும், நம்மையறியாமல் உப்பு, காரம் புளிப்பை சம அளவில்லாமல் போட்டுக் குழம்பை வைத்தால், சாப்பிடும் பொழுது வேண்டாம் என்று ஒதுக்கிவிடும் நிலை வந்துவிடுகின்றது.

ஆகவே, மனித வாழக்கையில் தவறு செய்யும் பொழுது,
ஒவ்வொரு நிமிடமும், நாம் எண்ணிய எண்ணங்களில்
எதை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ,
அதன் வழிக் கொண்டு, நாம் நமது உடலிலே நோய்கள் வந்துவிடுகின்றது.

கைகால் குத்துவது, வாத நோய், சர்க்கரைச் சத்து, மற்ற இரத்தக் கொதிப்பு, காதில் செவிடு, கண் பார்வை மங்கல், சிந்தனை குறைவது, இருதய நோய், குடல் நோய், அதைப் போன்று, பலவீனமான நோய்கள் நமக்கு வருகின்றது.

குஷ்டரோகம் வரும் பொழுது, நாம் மனிதனாக வளர்வதற்கு எவையெல்லாம் இருந்ததோ, நம் உடலின் உறுப்புகள் அப்படியே தேய்ந்து கரைந்து போய்விடுகின்றது.

உறுப்புகள் இருக்கின்றன. அந்த உணர்வின் அலைகள் வந்தவுடன் அந்த உறுப்புகள் எப்படிக் குறைகின்றது? குறை நோய் வரும் பொழுது, அந்த நிலை மாறுகின்றது

நமது எலும்புக்குள் மற்ற உணர்வுகள் ஊடுருவும் பொழுது, எவ்வளவு திடப் பொருளாக இருந்தாலும், குறைகின்றது (T. B.).

இதைப் போன்று, நாம் எவ்வளவு வறுமையான நிலைகளில் இருந்தாலும் தசைகள் அப்படியே குறைந்து அப்படியே உருகச் செய்கின்றது. இதைப் போன்று,
நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை,
தசைகளை உருக்குவது போன்று
நம் உணர்வின் எண்ணங்களை குறையச் செய்து,
சிறுகச் சிறுக, பல நோய்கள் வருகின்றது.
2. மிருகங்களுக்கு இத்தனை வகையான நோய்கள் ஏன் வருவதில்லை?
நாம் எவ்வளவு பரிபக்குவ நிலைகள் கொண்ட மனித உடலைப் பெற்றாலும், கூடுமான வரை மற்ற மிருக இனங்களுக்கு, இத்தனை வகையான நோய்கள் அதிகமாகச் சாடுவதில்லை.

மற்ற உயிரினங்கள், தான் வாழ்வதற்கு உண்டான நினைவலைகளை அது எடுத்துக் கொள்கின்றது. தன் ஆகாரத்தை தேடிச் செல்கின்றது தேடிச் செல்லும் பொழுது
இடர்ப்படும் தடைகளிலிருந்து
“தன்னை மீட்டுக் கொள்ளும் உணர்வைத்தான்”
மிருகங்கள் சுவாசித்துக் கொள்ளும்.

அப்படி, தன்னை மட்டும் மீட்டுக் கொள்வதற்கும், பல உணர்வுகள் எடுத்துக் கொண்டு தனக்குள் வளர்த்துத்தான், அந்த அணுக்கள் விளைந்து அந்த விளைந்த உணர்வுகளுக்கொப்பத்தான் உடலின் மாற்றங்கள்

இப்படி நாம் மாறி வந்தாலும், இன்று மனிதனானபின், நாம் எடுததுக் கொண்ட குணங்களுக்கொப்ப, இந்த உணர்வுகள் (நோய்கள்) கூடிவிடுகின்றது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது, நமக்கு நலம் பயக்கும். எமது அருளாசிகள்.