ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2013

ஞானிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய்க் கோளைப் பற்றி வெளிப்படுத்திய உண்மைகள்

செவ்வாய்க் கோள், நாதகாரகர் – ஞானகாரகர். ஒரு உணர்வின் தன்மை எதனுடன் எது கலக்கின்றதோ, அப்பொழுது வெப்ப காந்தத்துடன் கலக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் ஒலியின் தன்மையை, தன் ஞானத்தின் தன்மையை அறிந்துணரச் செய்யக்கூடிய ஆற்றல் செவ்வாய்க்கு உண்டு.

நமது பூமி ஞானத்தின் நிலைகளில் உயிரினங்களை வளர்ப்பது போன்று, உயிரினங்களுக்கு ஆற்றல் ஊட்டும் ஊக்கத்தின் சக்தி நிலைகள் செவ்வாய்க் கோளிலே உண்டு. அந்த உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும் பொழுது, இணைக்கும் சக்தி இருக்கிறது என்று அன்று மெய்ஞானிகள் காட்டினார்கள்.

செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் உண்டு. ஆனால்,
உணர்வுக்கொப்ப உடலின் தன்மை சிறுத்த நிலைகள் உண்டு.
இதைப் போன்று மழைக்காலங்களிலே உரு பெறுவது உண்டு.
தாவர இனச் சத்துக்கள், அங்கே சிறிதளவு மாற்றங்கள் உண்டு.

ஆனால், அது வெளிப்படுத்தும் நிலைகள், இங்கே நம் பூமிக்கு அது தொடர்ச்சியாகச் செயல்படும் நிலைகளுக்கு, ஞானத்தை ஒத்த நிலைகள் இங்கே இயக்கக்கூடிய நிலையாக வருகின்றது.

இன்றல்ல, அந்த மெய்ஞானிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இதை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இன்று விஞ்ஞானிகள் அதை எடுத்து நாம் செயல்படுத்தலாம் என்று சொல்கின்றனர்.