ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2013

ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில், தீமையைப் பிரிக்கும் மின் பொறிகள்

மது குருநாதர் காண்பித்த உண்மையின் தன்மைகளை, “உயிரே கடவுள்எனும் புத்தகத்தில் எழுதியிருந்தோம்.

அதாவது,  குருநாதர் எம்மைப் பார்த்து, “மின்னலைப் பார் என்றார்”.

அதற்கு யாம், “மின்னலைப் பார்த்தால் கண் போய்விடுமே என்று பயந்தோம்.

அதற்கு,  அவர் உணர்வின் உணர்ச்சிகள் எடுக்கப்பட்டு,  எம் உடலுக்குள் இந்த உணர்வைப் பாய்ச்சி, “மின் கதிர் பரவப்படும்போது, நேரடியாகப் பார்க்காதபடி, ஒளிக்கற்றைகள் போவதை நீ சுவாசி”. நேரடியாக ஒளியைக் கண்டால், அதன் உணர்வின் தன்மையை நாம் ஈர்க்கும் தன்மை வந்துவிடும், உடலுக்குள் ஊடுருவிவிடும் என்றார்”.

அதே சமயம், “ஒளிக்கற்றைகள் பரவுவதை நுகர்ந்தால் அது உணவாக உட்கொள்ளுகின்றது, அந்த அணுவின் இயக்கமே நம் உடலில் இருப்பதுஎன்றார் குருநாதர்.

ஆகவே, உனக்குள் இருக்கும் அணுக்களுக்குச் சிறுகச் சிறுக அதன் உணர்வின் தன்மையை ஊட்டிவிட்டால்,  தனக்குள் எப்படி மின் பொறிகளை உருவாக்குகின்றதோ,  மற்ற தீமை என்ற எதிர்மறை இருந்தால் எர்த் (earth).

தீமையான உணர்வின் தன்மையைப் பிரித்துவிடும். உன் உடலுக்குள் இந்த நன்மை ஏற்படும் என்பதை குருநாதர் தெளிவாக எமக்கு உணர்த்தியருளினார்.
இன்று விஞ்ஞானிகளும் இதைத்தான் சோதிக்கின்றனர், இதைத் தான் பேசுகின்றனர். மெய்ஞானிகளோ, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இயக்கத்தின் தன்மையை அறிந்துணர்ந்தனர். அணுவின் தன்மையை அறிந்துணர்ந்ததால் அகஸ்தியர்என்று காரணப் பெயர் வைத்தார்கள்.

யாம் உங்களுக்கு விரிவாகச் சொல்ல வெண்டும் என்றால், ஆண்டுகள் பல ஆகும். ஆகவே, யாம் உங்களுக்கு சுருங்கச் சொல்கின்றோம்.

இதனுடைய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால், அகஸ்தியர் கண்டுணர்ந்த வழியில் நீங்கள் நுகர்ந்தால், உண்மையின் உணர்வை அறிய முடியும்.

இந்த  மனிதச் சரீரத்திற்குப் பிறகு, 
பிறவி இல்லா நிலைஎன்னும் நிலையை,
அகஸ்தியர் தம்முள் உணர்ந்து,
உணர்வை ஒளியாக மாற்றிய நிலையை

நீங்கள் பெற்று, ஒளியின் சரீரமாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்திடும் நிலையைப் பெற முடியும் எமது அருளாசிகள்.