ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 23, 2013

விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் “உண்டாக்கப்படும்” தீய விளைவுகள்

1. இன்று செவ்வாய்க் கோள் மாசுபடும் நிலை வருகின்றது
நம் பூமிக்குச் சமீபம் மூன்றாவது நிலைகளில் இருக்கும் செவ்வாய்க் கோளில்; ஆற்றல்மிக்க நிலைகள்
உணர்வின் ஒலிகளாக, நாதங்களாக,
ஞானத்தை எடுக்கும்,
அந்த மணத்தை அறியச் செய்யும்
உணர்வு இயங்கச் செய்யும்
இந்த உணர்வின் ஆற்றல்
அந்த செவ்வாய்க் கோளில்தான் உண்டு.

ஆகையினால் தான், மனிதனின் ஆறாவது அறிவுக்குள் செவ்வாய் முக்கியத்துவம் பெற்று, அதனுடைய தன்மையை முருகனின் ஆறாவது அறிவாக, அதாவது, “எதையும் உணர்ந்தறிந்து தனக்குள் மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்றவன்” என்ற நிலை பெற்றது.

விஞ்ஞான அறிவாலே, இன்று செவ்வாய்க் கோளில் இவன் எடுக்கும் அணு ஒலிகளாலே செயல்படுத்தப்பட்ட விஞ்ஞானக் கருவிகளை அங்கே பாய்ச்சினால், அது வெளிப்படுத்தும் ஆற்றல் பிரபஞ்சத்தில் பரவப்படும் பொழுது, மனிதனின் சிந்தனை நிலைகள் அஸ்தமிக்கும் நிலைகளில், மனிதனுடைய சிந்தனைகள் அனைத்துமே இருண்ட நிலைகளாகப் போய்விடுகின்றது.

ஆகவே, இப்படி ஆகிவிட்டால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்தும் இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு, பல நிலைகள் ஆகப் போகின்றன.
2. விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் “உண்டாக்கப்படும்” தீய விளைவுகள்
(i) கதிர் வீச்சுகள் பிரபஞ்சத்திற்குள்ளும், பூமிக்குள்ளும் அதிகமாகப் பரவிவிட்டது
இன்று பிரபஞ்சத்தில் விஞ்ஞானத்தினால் ஏற்படுத்தப்பட்ட அணு உலைகளின் நிலையும், கதிரியக்கச் சக்திகளும், நச்சுத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானி இன்று பிரபஞ்சத்துக்குள்ளும் அணுவலைகளை அனுப்பி வைத்தான். பூமியில் மின்சாரம் உற்பத்தி செய்து, தன் நிலையில் செயல்படும் பொழுது, இந்தப் பிரபஞ்சத்துக்குள்ளும் கதிரியக்கம் வருகின்றது.

அதைப் போல, நமது பூமிக்குள்ளும் அதை வெடிக்கச் செய்து, கதிரியக்கங்களை அதிகமாகக் குவிக்கச் செய்துவிட்டான். ஆகையினால்,
இன்று நச்சுத்தன்மைகள்
காற்று மண்டலம் முழுவதும் பரவிவிட்டது.
நாம் இதிலிருந்து தப்புவதற்கு இல்லை.
(ii) பூச்சிக் கொல்லி மருந்துகளும், இரசாயணங்களும், மனிதனை புழு பூச்சியாக மாற்றும் நிலையாக வந்துவிட்டது
இதைப் போன்று, பூமிக்குள் பூச்சிக்கொல்லி மருந்துகளும், மற்றும் இயந்திரங்களால் செயல்படுத்தும் இந்த விஷத்தின் தன்மைகள், புவி ஈர்ப்புக்குள் சுழன்று அது நச்சுத்தன்மையாக மாறி உள்ளது.

ஆரம்பத்தில் நாம் மிருக நிலையிலிருந்து விஷத்தைத் தன் உடலாக ஏற்று, இன்று விஷத்தைக் காண்பித்து, (அதிலிருந்து மீண்டு) நாம் நல்லது எடுத்துக் கொள்ளக்கூடிய நிலையைப் பெற்று, மனித எண்ணத்துக்குள் நாம் எப்படிச் செயல்படுத்தி வந்தோமோ,
இந்த உணர்வின் தன்மை,
இன்று அழியும் தன்மைக்கு வந்துவிட்டது.

இன்றுள்ள மனிதனாக இருப்பவர்கள் அனைவருமே இறந்தபின், மிருக உடலைப் பெற்றுத்தான் தீரவேண்டும். ஆகவே, இந்த உடலின் தன்மை கொண்டு, இதைப் பல காலம், பல நிலைகள் உணர வேண்டியது வரும்.

அதாவது, சாதாரணமாக மிருகங்கள் விஷத்தின் தன்மையைத் தன் உடல்களில் தனக்குச் சாதகாமாக ஏற்றுக் கொண்டு, தன் நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றது.

அதைப் போன்று, (இன்று) காற்று மண்டலம் நச்சாக இருப்பதால்,
மனிதனுடைய நிலைகளிலும் இந்த நச்சுத்தன்மை அதிகமாகக் கூடி,
இந்த உணர்வின் அலைகள்,
நம் உடலில் நஞ்சான அணுக்கள் விளைந்தபின்,
நம் உயிராத்மாவின் நிலைகள் சேர்கின்றது.

அவ்வாறு சேர்ந்தபின், நாம் இறந்தோர் அனைவருமே மீண்டும் மனிதனாகப் பிறப்பதில்லை. பூச்சியாகவோ, புழுவாகவோ, மற்ற நிலைகள் பெற்றுவிடுகின்றனர்.
(iii) இயற்கையிலிருந்து மாறிவிட்டோம்
புழு, பூச்சிகளின் மேல் நாம் எந்த விஷத்தின் தன்மை தெளித்தாலும் அந்த விஷத்தின் தன்மை கொண்டு, அந்தப் புழு, பூச்சிகள் இறந்துவிடுகின்றது.

அது சுவாசித்த அந்த உண்ர்வின் தன்மை (நச்சுத்தன்மை) அந்தப் புழுவின் உடலுக்குள் சேர்த்தபின், அதே நச்சுத்தன்மையான மருந்தைத் தெளித்தாலும் அது சட்டை பண்ணுவதில்லை. இதை நாம் விஞ்ஞானத்தின் நிலைகளில் பார்க்கின்றோம்.

இதே போன்று விஷத்தின் தன்மை அதிகமாகச் சேர்ந்துவிட்ட்டால், மனிதனுடைய நிலைகளுக்கு அப்பாற்பட்ட அந்தச் சக்தியின் தன்மை, அந்த நச்ச்சுத் தன்மையாக நமக்குள் வளர்ந்துவிடுகின்றது.

ஒவ்வொரு நச்சுத்தன்மையும் மனிதனால் சிருஷ்டிக்கப்பட்டு,
இந்த உணர்வின் தன்மை மாறுபடும் பொழுது
இயற்கையிலிருந்து மாறுபடும் நிலை அற்றுப் போய்விடுகின்றது. (இயற்கையின் வளர்ச்சி தடைபடுகின்றது)
3. நம்மைத் தட்டியெழுப்பும் -- துருவ நட்சத்திர, சப்தரிஷி மண்டல ஒளி அலைகள்
இந்த விஞ்ஞான அறிவின் உலகில் கலி என்ற நிலைகளில், மனிதர்களாகிய நாம் அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு, நாம் எடுக்கும் இந்தத் தியானத்தாலே, நச்சுத்தன்மைகளை மாற்றியமைக்க இப்பொழுது உபதேசித்து வருகின்றோம்.

அதிகாலையில் உங்களைத் தட்டியெழுப்பும் துருவ நட்சத்திரமும், 
அந்த உணர்வின் நிலைகள் கொண்டு,
சப்தரிஷி மண்டலங்களில் தொடர்பு கொண்டு
இந்த உணர்வின் தன்மைய உங்களுக்கு இயக்கி,
ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம தியானம் எடுத்து,
உங்களைத் தப்புவிக்க இதைச் செய்கின்றோம்.

மெய்ஞானிகள் கொடுத்த இந்த மெய் ஒளியின் தன்மை, காலங்கள் குறுகி இருக்கும் இந்த நேரத்திலே, ஒன்றும் அறியாத மூடனாக யாம் இருப்பினும் அந்த மெய்ஞானிகள் எம் மூலம் ஒலிபரப்பு செய்கின்றார்கள். ஆக, இது எமக்கும் சாதகமாகக் கிடைக்கின்றது.

நீங்களும் இதை எடுக்க வேண்டும். நாம் அனைவருமே அந்த மெய் ஒளியில் சுழல வேண்டும். ஆக, யாரும் தனித்து செயல்படுத்த முடியாது. இதை மெய் உணர்வாக எடுத்து,
அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழி கொண்டு,
விஞ்ஞான உலகத்திலிருந்து மீள்வோம்.
அனைவரையும் மீட்டிட தவமிருப்போம்.
எமது அருளாசிகள்.