ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2013

கம்ப்யூட்டருக்குள் இயக்கும் உணர்வுகள் - COMPUTER

இன்று நாம் விஞ்ஞான உலகத்தில் இருக்கின்றோம். ஆக, மெய் நிலைகள் மறந்துவிட்டது. T.V., Radio, Computer இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், இன்று எப்படி ஒலிகளை நாம் அனுப்பி
காந்த அலைகளைப் பூமியில் படரச் செய்யும் பொழுது
நாம் வீட்டிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கின்றோமோ,
அதைப் போன்று அந்த அலைவரிசைகளில்
நம் உடலில் அனைத்தையுமே
இன்று நாம் பதிய வைத்திருக்கிறோம்.

ஆனால், பதிவு செய்த அந்த மூச்சலையின் தன்மைதான், எந்த விஞ்ஞான அடிப்படையில் நாம் எடுத்துக் கொண்டோமோ, இந்த விஞ்ஞான அடிப்படை நிலைகள் வெளிப்படுத்திய நிலைகள்தான், இன்றைய “கம்ப்யூட்டர்”.

மனித எண்ணத்திற்குள், விஞ்ஞான அறிவின் நிலைகள்
நாம் புகழ்ந்து பேசி, அந்த உணர்வுக்குள்,
மற்ற ரேடியோவோ, T.V.யோ, தொலைபேசியோ,
இவைகளைப் புகழந்து பேசிய உணர்வின் தன்மை
தனக்குள் கலந்தபின், அலைவரிசையாக எடுத்து,
மனித எண்ணத்திற்குள் தோற்றுவித்த
இந்த உணர்வுகள் ”சிலிகனாக” வடிக்கப்பட்டது.
இந்த சிலிகன் நிலைகள் கொண்டு, ஒவ்வொரு நிலைகளும் மாறி மாறி, மனிதருடைய எண்ணத்திற்குள் வந்து, இன்று இருக்கக்கூடிய சூரிய வெப்ப காந்தம் எடுத்துக் கொண்ட, கெமிக்கலின் தன்மைகள் சுழற்சியாகி, கம்ப்யூட்டராகச் செயல்படுத்தினான்.