
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் இரத்தத்தில் வலுவாக்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியிலும் தியானம் என்பது பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால் “அதை நாம் திரும்ப எண்ணுவது தியானம் தான்…”
ஆனால் அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று அதை ஏங்கித் திரும்பத் திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.
பிறர் கஷ்டப்படும் உணர்வை நமக்குள் வராமல் தடுக்கலாம்.
வேதனைப்படுவோரைக் கேட்டு
உணர்ந்தபின் நமக்குள் வராது தடுக்க வேண்டுமென்றால் இதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை இதே போல முறைப்படுத்தி நம்
உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
செலுத்தி விட்டால் “உண்மையான தியானம் இது தான்...”
1.வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும்
2.தீமையைப் புகாது தடுத்தல் வேண்டும்
3.தீமையை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் செலுத்திப் பழகுதல்
வேண்டும்
4.நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அதைப் பெறும்படி நாம் செய்ய முடியும்.
காரணம் ஒருவர் கோபப்படுகிறார்
என்ற உணர்வை நாம் அடிக்கடி நுகர்ந்தால் நமது உடலிலே இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது.
இரத்தக் கொதிப்பு ஆவதற்குக்
காரணமே
சந்தர்ப்பத்திலே
நாம் நுகர்ந்த உணர்வுகள்… அந்தக் காரமான உணர்வுகளை உணவாக உட்கொள்ளும்
அணுவாக உருவாகி விடுகின்றது.
ஒரு அணு உருவாகி விட்டால் அது மீண்டும் தன் உடலிலே பல
அணுக்களை உருவாக்கி நமக்குள் இரத்தக் கொதிப்பின் தன்மையைக் கொண்டு வந்து விடுகின்றது.
இப்படி ஆகாதபடி ஒருவர் கோபப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பெரருளும்
பேரொளியும் பெற வேண்டும் என்றும் எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்
அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினை
உடலுக்குள் செலுத்த வேண்டும்.
நாம் நுகர்ந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தத்திற்குள் காரமான உணர்ச்சியை இயக்கும் அணுவாக உருவாவதற்கு முன்
1.நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முந்திச் செலுத்தி விட்டால்
2.நம் இரத்தத்தில் உள்ள அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்கிறது
3.அந்தக் காரமான
உணர்வுகள் வந்தாலும் அதைத் தணித்து விடுகின்றது.
உதாரணமாக மிளகாய் காரமாக
இருக்கின்றது. அதை நாம் குழம்பிலே கலக்கப்படும் பொழுது அது எல்லாவற்றுடன் கலந்து
சுவையாக மாற்றுகின்றது.
இதைப் போல நமது வாழ்க்கையில் வெறுப்போ
வேதனையோ கோபமோ குரோதமோ போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிந்து கொண்டாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுத்துப் பழகுதல் வேண்டும்.
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி இத்தனையும் விஷத்தை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய அதனின்று வரும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமது இரத்தங்களில் கலக்கச் செய்யும் பொழுது அது வீரியமடைகின்றது… தீமைகள் வராது தடுக்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்தத் தியானத்தின் அருளை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் பெற முடியும். உங்கள்
வாழ்க்கையில் இதையே தியானமாக்கிக் கொள்ளுங்கள்.
1.உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகளை
நுகர்ந்து அறிய நேர்ந்தாலும்
2.அந்தக் கொடிய
உணர்வுகள் உங்களிலே வளராது தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களை அந்த வலுவான அணுக்களாக மாற்றி அமைக்க முடியும்.
மனிதன் ஒருவனால்தான் இதைச் செய்ய
முடியும்…!