
ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்
ஞானிகள் மகரிஷிகள்
நஞ்சினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் விளைய வைத்துத் தீமைகளைப் பிளந்திடும் சக்தியாக இந்த மனித உடலில் இருந்து தான் அவன் பெற்றான். அந்த நிலை நமக்குள்ளும் உண்டு.
நமது
குருநாதர் காட்டிய அருள்
வழிப்படி உங்கள் குணங்களுக்குள் அதைக் கலந்து இணைக்கச்
செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.
சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கண்டுணர்ந்து தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக விளைந்து அதனின்
செயலாக்கமாக வருவது போல்
1.மகரிஷிகளின்
உணர்வின் சத்தை உங்களுடன் இணைத்து
2.அந்த இணைத்த
சக்தி கொண்டு சப்தரிஷிகளின் இயக்கமாக அதை மாற்றும்.
3.உருப்பெற்ற நிலையாக உங்களைச் சப்தரிஷிகளாக
ஆக்குவது.
4.சப்தரிஷி மண்டலங்களாக அவர்களுடன் இணையும் பொழுது எதனையும்
வென்றிடும் நிலைகள் வருகின்றது.
நாம் வாழும் பிரபஞ்சத்தில்
உள்ள சூரியன் அதுவும் மடிந்திடும் சமயம் வரும்… அத்தகைய நிலை அதற்கு உண்டு. அதனுடைய வயது
முதிர்ச்சி அடையும் பொழுது மடிந்திடும் நிலையே வருகின்றது.
காரணம் இதற்கு
உறுதுணையாக இருந்த நட்சத்திரங்கள் தனது தனது நிலைகள் விளையச்
செய்யும் பொழுது இதற்குக் கிடைக்கும் உணவு தடைப்பட்டால்
சூரியன் ஒளி மங்கும்… பின் இருள் சூழும்.
இது கரைந்து இதனின் உணர்வுகள் திக்கற்று
இதனுடன் விளைந்த கோள்கள் அனைத்தும் திசை மாறிச் சென்று விடும்.
அப்படிக் கரைந்து வந்த
ஒரு கோள்… அது ஓடிவரும் பாதையில் ஊடுருவி நம்
வியாழன் கோளில் கோளுக்குள் பாய்ந்து அதனின் சுழற்சி
வட்டத்தில் கரைந்தது (சுமார் 30 வருடங்களுக்கு முன்).
இதைப் போல பேரண்டத்தில் விளைந்த மற்ற கோள்கள் திசை
மாறி வந்து விட்டால் சூரியன் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பூமியை இடைப்பட்டால் இந்தப்
பாறைகள் பூமியில் விழுந்து விடும்…. விழுந்தால் பூமி சுக்கு நூறாக ஆகிவிடும்.
இருப்பினும்…
பூமியின் சுழற்சி வேகத்திற்குள் கரைந்த வெப்பம் போக மிச்சங்கள்
அதற்குள் கரைந்து விடும். கரைந்தது போல மீதி இருக்கும்
நிலைகள் பூமியிலே சாற்றிவிடும்.
1.இதைப்
போன்று பிற சூரிய குடும்பங்களில் ஏற்படும் விபத்துக்கள்
ஏராளம் ஏராளம்.
2.பேரண்டம்
2000 சூரியக் குடும்பம் என்றால் அதில்
வீழ்ச்சி அடையும் பல சூரியன்களும் உண்டு.
3.அதிலிருந்து
திசை மாறி வரும் கோள்கள் எதனின் பிடிப்பும் இல்லாது நகர்ந்து
வரும் போது அதனின் வேகத் துடிப்புகள் இருக்கும்.
4.எதனின் ஈர்ப்பின் துணையிலிருந்ததோ அந்தக் காந்தப் புலனறிவு இல்லை என்றால்
அது தன் சக்தியை இழந்து விடும்.
இதைக்
கண்டுணர்ந்துதான் ஞானிகள் ஓசோன் திரை என்ற நிலையில் எந்தத் தீமையும் தன்னைத் தாக்கிடாத நிலைகள் கொண்டு பாதுகாப்புக் கவசமாக அமைத்தார்கள்.
அது தான் விநாயகர் சதுர்த்தி…!
நாம் கேட்டுணர்ந்த மற்ற
மனிதர்களின் நஞ்சின் உணர்வுகள் பதிவானாலும்
அந்தப் பதிவின் ஈர்ப்பைத் தடைப்படுத்திட வேண்டும்.
மனிதரிலிருந்து வெளிப்பட்ட பிறரை அழிக்க வேண்டும் என்று எண்ணிய
உணர்வுகளோ… பழி தீர்க்கும் உணர்வுகளாக ஒருவருக்கொருவர் விளைந்து வந்ததோ… அதையெல்லாம்
அகற்றிடும் நிலையாகத் தடைப்படுத்தும் நந்நாள் தான் விநாயகர் சதுர்த்தி.
ஆகவே… மற்ற
மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பின் நிலைகளைத் தடைப்படுத்திட வேண்டும்.
அவ்வாறு எல்லோரும்
நிறுத்திவிட்டால்…
1.அத்தகைய உணர்வலைகள் இங்கிருந்து
விலகி… திக்கற்றுச் சென்று…
2.பூமியின்
சுழற்சி வட்டத்தில் இருக்கக்கூடிய கடலின் ஈர்ப்புக்குள்
சிக்கி
3.நமக்குள்
பதிவான பகைமை உணர்வுகளை மனிதனை வீழ்த்திடச் செய்யும் அந்தச்
சக்திகள் கடலுக்குள் அமிழ்த்தி அங்கே
பொசுங்கிவிடும்.
நாமும்… நாம் வாழும் இந்தப்
பூமியும் பரிசுத்தம் ஆகும்.