
மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது
பிற மண்டலங்களில்
இருந்து வால் நட்சத்திரமாக நகர்ந்து வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் அதைக்
கணக்கிட்ட முறை கொண்டு அதனின் ஓடு பாதையில் நம் வியாழன் கோள் வருகின்றது. அதனுடைய ஈர்ப்பின் சுழற்சிக்குள் சிக்கி இணைந்து
விட்டது என்று விஞ்ஞானிகள் காட்டினார்கள்.
இதே போன்று தான்
1.விஞ்ஞான
அறிவு உலகில் பரவினாலும் அது அனைத்தும்
மனிதனின் உணர்வுக்குள் பரவி…
2.மனிதனுடைய
சிந்தனைகள் சீர்குலையும் நிலையாக வந்துவிட்டது.
சில நாடுகளில்
பார்க்கலாம்… அங்கே மனிதருக்குள் பல பல
இனங்களாகப் பெருகி வெறி கொண்ட உணர்வு
கொண்டு அழித்திடும் உணர்வாக மற்றவர்களை அழித்துக்
கொண்டுள்ளார்கள். உகண்டாவில் இதெல்லாம் அன்று நடந்தது.
இங்கே நம் நாட்டிலும் இனத்திற்கு இனம் மோதிக் கொண்டார்கள். ஒரு நொடிக்குள் மனிதனை அழித்திடும் உணர்வே வெளி வருகின்றது. இந்த உணர்வுகள் அதிகமாகப் பெருகி விட்டால்
1.மனிதனுக்கு
மனிதன் அழிக்கும் உணர்வே பெறுகின்றது.
2.மனிதனாக
வாழும் நிலைகள் அறுத்து விடுகின்றது.
இன பேதங்கள்
கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலைகள் வரும் பொழுது… அதை நேரடியாகக் கண்டுணர்ந்து நுகர்ந்தால் நம்முடைய நிலைகளும் “அஞ்சிடும் உணர்வாக…” விளைந்து விடுகின்றது.
தன்னைப்
பாதுகாத்துக் கொள்ள அவன் எந்தச் செயல்களைச் செய்தானோ அதே செயல்கள் கொண்டு “அவனைக் கொன்றால்தான் நாம் மீள முடியும்…” என்ற உணர்வுகள் வளர்ந்து விடுகின்றது.
இந்த
உணர்வுகள் வளர்ந்து விட்டால் மனிதன் எங்கே வாழ்வது…? மனிதனுக்கு மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது.
அப்படிப்பட்ட தீமைகள் வரப்படும் பொழுது மனிதன் என்ற உலகத்திற்குள்
தீமை அகற்றிடும் நிலைகள் அழிந்து விட்டால் என்ன ஆகும்…? இது போன்ற நிலைகளை நாம்
தெரிந்து கொள்ள வேண்டும்.
1.அருள்
ஞானிகள் உணர்வை நமக்குள் புகுத்தி எந்தத் தீமையும் நம்மை அழித்திடாது
2.உயிருடன்
ஒன்றிய ஒளியின் நிலைகளில் இந்த உலகை விட்டு எப்பொழுது அகன்றாலும்
3.மெய்
ஒளியாக வீசிக் கொண்டிருக்கும் அந்தச்
சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய வேண்டும்.
இது இல்லை
என்றால் மீண்டும் இங்கே வந்தால் பாம்பாகவோ தேளாகவோ பிறக்க நேரும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதனின் உணர்வுகள்
அழிந்திடாத நிலைகளில் நம்மைக் காத்திடல் வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை உபதேசிக்கின்றோம்.
இனிமேல் இந்த
உலகில் தீமைகள் அதிகமாக ஊடுருவும். அதனால் நமக்குள் அஞ்சிடும் நிலையையே உருவாக்கும்.
பாலிலே பாதாமைப்
போட்டாலும் நஞ்சு கலந்தால் எவ்வாறு நஞ்சின் செயலாக்கமாக அது
மாறுவது போன்று
1.எவ்வளவு
திடகாத்திரமாக இருப்பினும்
2.எவ்வளவு
உயர்ந்த குணங்கள் இருப்பினும்
3.எவ்வளவு
திறமையாக இருப்பினும்
5.தீமை செய்வோரின் உணர்வுகள் நமக்குள் புகுந்தால்… மனிதனின் சிந்தனைகளை அழித்திடும் நிலையே வருகின்றது.
ரஷ்யா எவ்வளவோ கட்டுப்பாட்டுடன் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் அங்கேயும் மனிதனுக்கு
மனிதன் கொன்று தின்னும் நிலை வருகின்றது.
உணவு உற்பத்தி
செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மனிதன் இறந்தாலும் அந்த உடலை அறுத்து உணவாக
உட்கொள்ளும் நிலை வந்து விடுகின்றது.
இவ்வாறு மாறும் பொழுது இங்கே மனிதர்கள் மிஞ்சுவது எப்படி…?
உலகிலேயே
உயிரினங்கள் பெருகிப்
பெருகி ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் உணர்வு வரப்படும் பொழுதுதான் உலகில் தன் இனத்தையே தான் புசிக்கும் நிலைகள் வளர்ந்து அந்த இனங்களே (அன்று
வாழ்ந்த மிகப் பெரிய மிருகங்கள்) முழுமையாக அழிந்துவிட்டது.
தன் இனத்தையே
கொன்றிடும்
நிலை வரும் பொழுது அதே அசர உணர்வுகள்… மனித இனத்தைக் கொன்று புசிக்கும் உணர்வுகள் வளர்ந்து விட்டால் யாரும் மிஞ்ச முடியாது.
ஆகவே
சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இதையெல்லாம் நம்முடைய காலத்திற்குள்ளேயே உலகில் இன்று பார்க்கலாம்.
ஆனால் எப்படித்தான்
இருந்தாலும் உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. எப்பொழுது
வெளியேறினாலும் நஞ்சு கொண்டோர் உணர்வுகளால் நமக்குள் அஞ்சிடும் நிலை வந்தாலும் இந்த உணர்வே வெளிப்படும்.
1.எவர்
மேல் வெறுப்பு கொண்டோமோ அங்கே தான் நாம் சென்று இணைய முடியும். இந்தக் கணக்கு தான்
கூடும்.
2.ஆனால் சப்தரிஷிகளின் கணக்கை நமக்குள் கூட்டினால் அது
பெருகும்… இது சிறுத்துவிடும்.
விண்ணின் ஆற்றலைப் பெருக்கி உயிர் ஒளியாக உருப் பெற்றது. எதைக்
கவர்ந்ததோ அதன் அறிவால் அதைக்
காத்திட்டது. காத்திட்ட அறிவின் தன்மை விளைந்தது. விளைந்திட்ட உணர்வின்
தன்மை கொண்டுதான் மனிதனானது.
1.மனிதனான
பின் உயிருடன் ஒன்றிடும் ஒளியின் தன்மையாக ஒளியின் சிகரமாக மாற்றிவிட்டால்
2.என்றுமே ஒளியின் நிலையாக நிலை கொண்டு வாழ்ந்திட முடியும்.
அந்த மகரிஷிகள்
காட்டிய அருள் வழியில் சென்றால் அவன்
நிலை கொண்டு வாழ்வது போல… இனம் இனத்தைத் தான் காத்திடும். எத்தகைய
நிலையில் இருந்தாலும் தன் இனத்துடன் இணைந்தே தீரும்.
ஆகவே… எந்த
இனத்துடன் நாம் இணைய வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த இனத்துடன் நாம்
இணைகின்றோம்.
எந்தக் கோபத்தின் நிலைகள் எண்ணினானோ
அதன் உணர்வு கொண்டு மற்றொன்றைக் கொன்று
புசிக்கின்றதோ அதிலே இணைந்தால்… அதன் இனத்துடன் இணைந்து அதன்
ரூபமாக மாற்றிவிடும். அந்த ஈர்ப்புக்குள்
சென்று அத்தகைய உடலாக நம்மை உயிர் மாற்றிவிடும்.
ஆகவே நாம் ஒளியின்
சரீரமாக வாழ்ந்திடும் அந்த அருள் மகரிஷிகளுடன் இணைந்து கொண்டால் நாம்
அருள் வாழ்க்கை வாழ்ந்திட முடியும். இன்றைய உலகின் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து அதைப் பிளந்திட வேண்டும்.
மனிதர்கள்
இருப்போம்…
இருந்தாலும் இந்த உலகில் தினசரி எத்தனை
மாற்றங்கள் ஏற்படுகின்றது…? மாற்றங்கள் ஆகிக் கொண்டே இருக்கும் நிலையில் தன் இனம் என்று கொண்டு சென்றாலும் இருண்ட நிலையில் வாழும் நிலை தான் வருகிறது.
மனித உலகில்
அந்த மகிழ்ச்சி இருக்காது.
இருண்ட உலகில்
வாழ்ந்து கொன்று பசித்திடும் உணர்வாக வளரப்படும்போது மனித இனமே தன்
இனத்தைக் கொன்று புசிக்கும் நிலையாகச் சிறுகச் சிறுக உருமாறிக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து
நாம் விடுபட வேண்டும்.
1.நாம் உடலுடன்
வாழும் இந்த நல்ல நேரத்திலேயே மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து இருளைப் போக்கி
2.என்றும்
உயிருடன் ஒன்றி ஒளி சுடராக பேரருள் பேரொளியாக அடைவது தான்
நம் குருநாதர் காட்டிய அருள் வழி.
3.அதை
நாம் பெற வேண்டும்.