
புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்
அன்று… ஆதிசங்கரரும் கோலமாமகரிஷியும் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு தங்களுக்குள் விளைய வைத்ததைத் தன் சீடர்களுக்குள் பதிவு செய்தார்கள்.
அவர் மீது பற்று கொண்ட சீடர்கள்…
1.அவர்கள் எதை உணர்த்தினார்களோ அதைக் கொண்டு அந்த
ஆன்மாவை உந்தித் தள்ளுகின்றார்கள்…
2.இருவரும் சப்தரிஷி மண்டலம் அடைந்தார்கள்.
நமது குருநாதர் எத்தனையோ கோடி நிலைகள்
பெற்றிருந்தாலும்… “எனக்கு அந்தக் குருவின் ஆசி இருந்தால்…” மாட மாளிகைகளை…
கூட கோபுரங்களைக் கட்டி விடுவேன்
1.”அவருடைய நாமத்தை உலகமெல்லாம் பரப்புவேன்…!” என்ற பக்தர்கள் தான் சிஷ்யர்கள் தான் இன்று
பெரும்பகுதி உண்டு.
2.அதனால் பலன் இல்லை…!
அறிந்து கொள்ளும் ஆற்றல்கள்…. இந்த வாழ்க்கையில் அவர் எப்படி மந்திரம்
செய்கிறார்…? இவர் என்ன செய்கிறார்…? அவர் என்ன செய்கிறார்…? என்ற நிலைகளை அறிய உங்கள் நாட்டத்தைச் செலுத்த வேண்டாம்.
காரணம்… எம்மை நாடி வருவோரின் ஏக்கம்
எதுவோ அதன் வழி தான் அவருக்குள் உணர்வுகள் பதிவாகின்றது.
மந்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால் அதிலே தான்
நோக்கம் இருக்கும்… மந்திரத்தின்
செயலைக் கேட்க வேண்டும் என்றால் அது ஆழமாகப்
பதிந்திருக்கிறது என்று தான் பொருள்.
அதன் மேல் எண்ணம் கொண்டு விவரங்களைத் தெரிந்து கொண்டால் அது
தான் வளரும். இதிலிருந்து விடுபடும்
வழிமுறைகள் எப்படி…? என்று கேட்டால் விடுபடும் உணர்வுகள் வளரும்.
அதாவது…
1.என்னிடம் கேட்ட உணர்வு கொண்டு தான் உங்களுக்குள் அது பதிவாகும்.
2.“கஷ்டமாக இருக்கிறது…” என்று சொல்லிக் கேட்டால் அந்தக் கஷ்டத்தையே
வளர்க்க உதவும்.
3.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டறிந்தால் “கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் விளையும்…”
கேட்டறிவோர் உணர்வின் தன்மை அது எதுவோ அதுதான் வளரும்.
அதனால் தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய் என்று சொன்னது.
என் கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்றால்… அது வந்து விடும்.
1.இந்த மனித வாழ்க்கையில் இருந்து “நான்
நல்ல நிலை பெற முடியுமா… மீள முடியுமா…? சந்தேகம்…!
2.மீள முடியாது என்ற நிலைகளில் “வலு இழந்து
விட்டால்…” மீள முடியும் என்ற நிலை வராது.
ஆனால் மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெற்றுக் கொண்டால் அந்த
எண்ணம்… கொடுக்கும் வாக்கின் தன்மையைப் பதிவு
செய்தால் அதன் வளர்ச்சிக்கு நிச்சயம் வரும்.
பெரும்பகுதியானவர்கள் இன்று கஷ்டத்தைப் பற்றித் தான் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்
என்று விரும்புகிறார்கள். இது எப்படி ஆனது…? என்ன ஆனது…? என்று கேட்கிறார்கள்.
உணர்வின் தன்மை இயக்கம் எப்படி ஆகிறது…! என்பதைப் பற்றி பல
விளக்கவுரைகளை… பல முறைகளில்
கொடுத்துள்ளேன். இது அவர்களுக்குள் பதிவாகவில்லை என்று தான்
பொருள்.
1.இதிலிருந்து விடுபட்டு… நாம் மேற்கொண்டு விண் செல்லும் மார்க்கங்களை எண்ணி
ஏங்கி… அதைப் பெற்று
2.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் அது
பதிவாகும்.
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான்
உடலுக்குள் அந்த நற்சக்திகள் விளையும்
தன்மை வரும்.