
ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை
ஒவ்வொருவரும் சிவ சக்தியாகத் தான் இயங்குகின்றார்கள்.
1.உடல் சிவமாகின்றது
2.உடலுக்குள் இயங்குவது சக்தியாக இருக்கின்றது… இப்படித்
தான் சிவ சக்தி.
உருவம் சிவம் தனக்குள் இயங்குவது சக்தி. இந்த
உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிச் சக்தியாக
இயக்க முடியும். உணர்வின் தன்மை எந்தச்
சக்தியாக இயக்குகின்றோமோ மறு உருவைக்
கொடுக்கும்.
1.உருவமல்லாது சக்தியை நாம் சேர்ப்போம்
என்றால் உயிருடன் ஒன்றி என்றும் சிவ சக்தியாக ஒளியின்
சரீரமாகும்.
2.அது தான் எண்ணத்தால் வருவது… எண்ணத்தால்
உருமாற்றிய நிலைகள் இராமலிங்கம்… உயிருடன்
ஒன்றிய நிலைகள்…!
சீவலிங்கம்… உறைந்த உடல் கொண்டு தான் நாம் இப்பொழுது இயக்குகின்றோம். எண்ணத்தால் இருளைப்
போக்கி ஒளியாக உயிருடன் ஒன்றினால் இராமலிங்கம்.
எங்கே சென்றாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம்
இல்லையேல் சக்தி இல்லை. பெருக்கும்
சக்தியின் நிலைகள் கொண்டுதான்… அந்தச் சக்தியின் துணை கொண்டு தான் எண்ணத்தால் சீவலிங்கமாக
இந்த உடல் ஆகிறது.
எண்ணத்தால் இராமலிங்கமாக உருவாக்க வேண்டும். ஒளியின் சரீரம்…! இது தான்
சிவசக்தி என்பது. கணவன் மனைவி அல்ல.
நாம் கவர்ந்து கொண்ட சக்தி வசிஷ்டர். கவர்ந்தது எதுவோ அதனுடன் இணைந்தே வேலை செய்யும். எண்ணிய எண்ணங்கள் எதிர்நிலை
ஆகிவிட்டால் என்ன செய்யும்…? அதனால் தான் சிவ சக்தி என்பது. சக்தி தான் சிவம் ஆகிறது.
சிவம் தான் சக்தியாகிறது.
1.சக்தியான நிலைகள் மறைமுகமானது.
2.உறைந்துவிட்டால் சிவம் ஆகின்றது…
சிவசக்தி என்று பொருள்
ஒன்றுக்குள் ஒன்று ஜீவன் பெற்று ஒன்றின் அணைப்பில தான்
இயங்குகின்றது. முதலில் ஓ… என்று
பிரணவம் ஆகின்றது… மற்றொன்று அதற்குள் இருந்து ஒவ்வொரு
உணர்வும் தன் தன் நிலைகளை இயக்கும்.
ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம். இதைப் போன்று பல
கோடி உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று
இணைந்து ஓ …என்று பிரணவமாகி ம்… என்ற உடல் ஆகிறது.
உயிரணுவின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது எத்தனையோ கோடி உணர்வு
கொண்டுதான் எண்ணத்தின் தன்மை வருகின்றது.
உயிர் ஓ என்று இயக்கினாலும் நாம் எண்ணிய உணர்வுகள் ஓமுக்குள் ஓம்… அந்த
உணர்வின் இயக்கமாகத்தான் இயக்கும். எதிலேயும்
ஓ என்ற பிரணவம் இயக்கம் இல்லை என்றால் உடல் உருவாகாது.
1.ஜீவன் ஆனால் தான் மலம் உடலாகின்றது. உறைந்திடும் நிலைகள் உடல்.
2.அதாவது திரேதா யுகம்… உடலுக்குள் உயிரணுவின் தோற்றமான பின்
3.எண்ணத்தின் உணர்வு கொண்டு ஓ… என்று இயக்குகின்றது. உணர்வின் தன்மை ம்…
என்று மலமாகிறது.
அதே போல செடிகளில் ஒன்று இணைந்த பின் ஓ என்று குவித்த
நிலையில் இயக்குகின்றது ம்… என்று உணர்வின் சத்து உறைகின்றது… சிவமாகிறது.
சக்தியாக இருப்பது செடியாக்கப்படும் பொழுது துவைதம். அதனின்
மணம் வெளி வரப்படும் போது சக்தி ஆகின்றது. அதற்குள்ளும் எந்தெந்த உணர்வுகள் உள்ளதோ அதனின் ஜீவன் இயக்கவில்லை
என்றால் வளர்ச்சி ஆகாது.
ஒரு கசப்பின் தன்மை வரவேண்டும் என்றால் பல உணர்வுகள் சேர்த்துத் தான் அது உருவாகின்றது. அந்தப் பல உணர்வுகள்
ஒன்றுக்குள் ஒன்றாகி ஒன்றின் உணர்வு
கொண்டு இணைந்து அது ஓ என்று ஜீவனாகி ம் என்று உடலாகிறது.
இதைத்தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள்
ஓம். ஒன்றுடன் இணைந்து இயக்கவில்லை என்றால் அது இல்லை என்றே பொருள்.
1.ஆக மொத்தம் எதிலுமே ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு அது இயக்கச்சக்தியாக மாறினால் தான் “ஓம் ஓம் ஓம் ஓம்…”
2.நாம் எதை எண்ணி “ஓம்…” என்று இப்பொழுது தனக்குள் சேர்க்க வேண்டும்…?
3.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள்
சேர்த்து அதை ஜீவன் பெறச் செய்து ஒளியாக மாற்ற
வேண்டும்.
அதைத் தான் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.