ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2026

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்


எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு இராமாயணத்தில் வாலியைக்காட்டுகின்றனர்.
 
வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார் நேரடியாகப் போர் செய்தாலும் அவர்களிடமிருந்து பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான்…! என்று காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.
 
உதாரணமாகஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவர்களை நேரடியாகப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டறிந்தால்
1.அந்த வேதனை உணர்வுகள் நமது நல்ல உணர்வுக்குள் இணைந்து நமக்குள்ளும் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.
2.நம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
3.பாதி நல்ல குணம்வலு இழக்கப்படுகின்றது.
 
வாலி என்ற நஞ்சான செயல்களை நாம் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும். அதை அடக்க என்ன செய்ய வேண்டும்…?
 
மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று இன்றும் ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து நுகர்ந்து அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
 
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
பிறகுமகரிஷிகளின் அருள் சக்தி அந்த வேதனைப்பட்டவர்கள் பெற வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று நாம் மறைமுகமாக நம் எண்ணத்தின் வலுவின் தன்மை கொண்டு அலைகளைப் பரப்பவேண்டும்.
 
இதைத்தான்
1.சீதாராமன் வாலியை நேரடியாகப் பார்க்காதபடி
2.அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த கணையை மறைந்திருந்து ஏவினான்…”
3.வாலியின் செயலைத் தடுத்தான்…! என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.