ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 20, 2022

நம்மால் மற்றவர்கள் தீமைகள் அகல வேண்டுமே தவிர… அவர்கள் தீமைகள் நம்மை மாற்றிவிடக் கூடாது

கோடிக் கோடி சொத்துக்கள் தேடி வைத்தாலும் பொறாமை உணர்வு வந்து… “அவன் அப்படிச் செய்கின்றான்… இவன் இப்படிச் செய்கிறான்…!” என்று விரோதிகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்கிறோம்… பகைமைகளைத் தான் உருவாக்கிக் கொள்கின்றோம்.
1.பகைமை உணர்வுகளை உடலுக்குள் சேர்த்துப் பகைமை உணர்வோடு தான் வாழ்கின்றோம்
2.துடிப்பும் துயரமும் தொல்லையும் தான் நம் உடலுக்குள் வருகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.

வெளியிலே சென்றாலும் எத்தகைய துயரங்களைக் கேட்டாலும் தீமைகளைப் பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதனின் வலுவை வைத்து அவைகளை அடக்கிப் பழக வேண்டும்.

யார் மேல் பகைமை ஆனதோ… அறியாத இருள்களிலிருந்து அவர்கள் மீள வேண்டும்… பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலில் படர்ந்து அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் குற்றம் குறைகள் இருந்தாலும்
1.ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.அவர்களும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.உண்மையின் உணர்வை அறிய வேண்டும்
4.அவர்கள் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணி நாம் இதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் ஒருவருக்கொருவர் வரும் பகைமைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும் “ஈஸ்வரா…” என்று எண்ணி… துருவ நட்சத்திரத்தின் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தி அந்தக் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும் அது உடல் நலம் பெற வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

முதலில் அந்தச் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் அங்கே பாய்ச்ச வேண்டும்… நோய் அகலும்.
1.உங்களால் அவர்கள் நோய் போக வேண்டும்
2.அவர்கள் நோய் உங்களுக்கு வரக்கூடாது.

அதற்குத்தான் இந்த அருள் வாக்குகளைக் கொடுத்து ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குப் பாதுகாப்பான நிலைகள் கிடைக்கும்படி செய்கின்றோம் (ஞானகுரு). உலக விஷத்தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கும் இது உங்களுக்கு உதவும்.